Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவிற்கான மிலேனியம் சலஞ் கணக்கு நிதியை அமெரிக்கா இடைநிறுத்தியது.

Featured Replies

சிறிலங்காவிற்கான மிலேனியம் சலஞ் கணக்கு நிதியை அமெரிக்கா இடைநிறுத்தியது.

சிறிலங்காவிற்கான மிலேனியம் சலஞ் கணக்கு நிதியை இடை நிறுவத்துவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சிறீலங்காவிற்கான மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்ட அமெரிக்க தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான துணை வெளியுறவுச் செயலர் றிச்சட் ஏ பௌச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சிறீலங்காவில் நிகழும் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் மீறல்கள் காரணமாக இவ் நிதியுதவியை வழங்கமுடியாது உள்ளதால் இதனை இடைநிறுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் விமான சேவைகளின் இடைநிறுத்தம், சுற்றுலாப் பயணிகளின் வருகையின் குறைவும், வெளிநாட்டு உதவிகள் இடைநிறுத்தப்படுவதும் நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பு எனத் தெரிவித்தார்.

வான்புலிகளின் தாக்குதல்களை தமது அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனத் தெரிவித்த பெளச்சர் அதனை முறியடிக்கும் பொறுப்பு சிறீலங்காவுக்கு உண்டு எனவும் ரிச்சாட் பெளச்சர் மேலும்தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரித்தானி அரசாங்கமும் மூன்று மில்லியன் டொலர் பெறுமதியான பணஉதவிகளை நிறுத்தி வைத்திருந்தது தெரிந்ததே.

-Pathivu-

மகிந்தாவும் தனது வீரதாபங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு வரவேண்டிய காலம் நெருங்கிவிட்டது.

விரைவில் மகிந்தா குடும்பத்தின் ஆட்சிக்கு ஆப்பு அடிக்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் கொழும்புப் பத்திரிகையாளர் மாநாட்டில் கதை வேறு மாதிரியல்லவா இருந்திருக்கிறது? இதை எப்போது சொன்னாராம் அவர்?

இலங்கைக்கான நிதி உதவியை

அமெரிக்காவும் இடை நிறுத்தியது

மனித உரிமை மீறல்கள், பாதுகாப்பு

நிலைமைகளை கருதியே இந்நடவடிக்கை

`

சென்னை, மே 12

மனித உரிமை மீறல்கள், பாதுகாப்பு நிலைவரம் காரணமாக ""மிலேனியம் சலஞ் நிதி உதவித் திட்டம்'' (Millennium Challenge Corporation) கீழான நிதி உத வியை இலங்கைக்கு வழங்குவதை அமெரிக்கா இடைநிறுத்தியுள்ளது.

இவ்வாறு அமெரிக்க ராஜாங்க உதவி அமைச்சர் ரிச்சார்ட் பௌச்சர் தகவல் வெளியிட்டார்.

""நாங்களும் எங்கள் உதவித் திட்டங்களை மிகக் கவன மாக மதிப்பீடு செய்கிறோம். இலங்கை மக்களுக்கு உத வும் மிகப் பல திட்டங்களை நாம் செயற்படுத்தி வருகிறோம் என்பதில் எமக்குப் பெரும் திருப்தி. அவற்றில் பலவும் இடம்பெயர்ந்த மக்களுக்கு உதவும் திட்டங்களாகும்

""மிலேனியம் சலஞ் கோர்பரேஷன்' திட்டத்தின் கீழான உதவிச் செயற்றிட்டத்தை முன்னெடுக்காது இடை நிறுத்தி உள்ளோம். அந்தச் செயற்றிட்டத்தை நடைமுறைப்படுத்து வதற்கு சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள பாது காப்பு மற்றும் மனித உரிமை நிலைமைகள் உகந்ததாக இல்லை என்று கருதப்படுகிறது. அவற்றில் நாம் அக்கறையுடைய வர்களாக உள்ளோம். அதனாலே உதவித் திட்டத்தை இப்போ தைக்கு முன்னெடுக்காது இடைநிறுத்தியுள்ளோம்'' என்று உதவி அமைச்சர் பௌச்சர் கூறியதாக ரொய்ட்டரின் செய்தியாளர் சைமன் கார்டினர் தெரிவிக்கிறார்.

பிரிட்டனைத் தொடர்ந்து ஒரு வாரத்தில்...

மனித உரிமை மீறல்கள், அதிகரித்த பாதுகாப்புச் செல வீனம் ஆகிய இரண்டையும் காரணங் காட்டி முன் வைத்து 3 மில்லியன் டொலர் நிதி உதவியை பிரிட்டன் முடக்கிய ஒரு வாரத்தில், அமெரிக்காவின் நிதி உதவி இடைநிறுத்தம் பற்றிய தகவல் வெளிவந்திருப்பதாகவும் ரொய்ட்டர் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருகிறத

ஞாயிறு 13-05-2007 04:26 மணி தமிழீழம் [சிறீதரன்]

அமெரிக்காவின் சிறீலங்காவிற்கான ஆயுதவிற்பனை 60.8 மில்லியன் டொலர்

சிறீலங்காவிற்கான அமெரிக்காவின் இவ்ஆண்டுக்கான ஆயுதவிற்பனை 1.4 மில்லியன் டொலரில் இருந்து 60.8 மில்லியன் டொலராக உயர்ந்துள்ளதாக வோசிங்ரனை தளமாக கொண்டு இயங்கும் 'பாதுகாப்பு தகவல் நிலையம்' (CID) எனும் சுதந்திர சிந்தனை மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தேசியபாதுகாப்பு, மற்றும் அனைத்துலக பாதுகாப்பு, பாதுகாப்பு கொள்கை ஆகியவற்றில் சிறப்பு ஆய்வு அறிக்கைகளை மேற்படி பாதுகாப்பு தகவல் நிலையம் வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

சிறீலங்கா அரசபடைகள் சிறுவர்களை படைக்கு இணைத்தல் தொடர்பான செய்திகளையும் நிலையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் உயர் மட்ட பாதுகாப்பு புலனாய்வு குழு விஜயம்!

சிறீலங்காவிற் எதிர்வரும் வாரம் அமெரிக்காவின் உயர்மட்ட புலனாய்வு குழுவினர் விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகிறது.

இக்குழுவினர் சிறீலங்கா அரசாங்கத்திற்கு விடுதலைப்புலிகளின் வான்படையினரது தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எவ்வாறு முறியடிப்பது போன்ற விடயங்களில் ஆலோசனை வழங்கவுள்ளதாக மேலும் தெரியவருகிறது.

இவர்கள் சிறீலங்கா அரசாங்கத்தினது அழைப்பின்பேரில் ஹவாய் தீவில் இருந்து செல்லவுள்ளதாக அறியமுடிகிறது.

என்னதான் அறிவுரை கொடுத்தாலும் போராளிகளின் தக்குதலுக்கு முகம் கொடுக்க முடியாத ஒரு படைதான் இலங்கை படை இதற்கு ஆனையிறவு ஒரு சாட்சி

அமெரிக்காவின் உயர் மட்ட பாதுகாப்பு புலனாய்வு குழு விஜயம்!

சிறீலங்காவிற் எதிர்வரும் வாரம் அமெரிக்காவின் உயர்மட்ட புலனாய்வு குழுவினர் விஜயம் செய்யவுள்ளதாக தெரியவருகிறது.

இக்குழுவினர் சிறீலங்கா அரசாங்கத்திற்கு விடுதலைப்புலிகளின் வான்படையினரது தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எவ்வாறு முறியடிப்பது போன்ற விடயங்களில் ஆலோசனை வழங்கவுள்ளதாக மேலும் தெரியவருகிறது.

இவர்கள் சிறீலங்கா அரசாங்கத்தினது அழைப்பின்பேரில் ஹவாய் தீவில் இருந்து செல்லவுள்ளதாக அறியமுடிகிறது

http://www.pathivu.com/

பித்தலாட்டக்காரர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.