Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல்போன எமது உறவுகளைத் தேடும் போராட்டங்களை மேலும் வலுப்படுத்துவோம் : வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல்போன எமது உறவுகளைத் தேடும் போராட்டங்களை மேலும் வலுப்படுத்துவோம் : வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கம்

(நா.தனுஜா)

காணாமல்போனோர் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் இருப்பவர்களே தற்போது மீண்டும் ஆட்சிபீடம் ஏறியிருக்கின்றார்கள்.

missing.jpg

எனவே இத்தகையதொரு சூழ்நிலையில் காணாமல்போன எமது உறவுகளைத் தேடும் போராட்டங்களை மேலும் வலிமைப்படுத்துவோமே தவிர, அதனை மலினப்படுத்த மாட்டோம் என்று வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தலைவி மதியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்தார்.

அதேவேளை ஆட்சிமாற்றம் ஏற்பட்டு இதுவரையில் எமது அலுவலகத்தின் மீது எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை.

நாங்கள் தொடர்ந்தும் காணாமல்போனோர் பற்றிய விபரங்களைக் கண்டறியும் எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம் என்று காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட கோத்தபய ராஜபக்ஷவிடம் இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு நானோ அல்லது எனது சகோதரனோ போரை வழிநடத்தவில்லை என்றும் இராணுவத்தளபதியே போருக்குத் தலைமை தாங்கினார் என்றும் பதிலளித்த கோத்தபய ராஜபக்ஷ, சரணடைந்தவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அவ்வாறு பதிலளித்த கோத்தாபய ராஜபக்ஷ புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகள் எவ்வாறு அமைந்துள்ளன என்று அதன் தவிசாளர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலியய பீரிஸிடம் வினவியபோது பின்வருமாறு பதிலளித்தார்:

'காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் என்பது ஒரு சுயாதீன ஆணைக்குழுவாகும். அதற்குரிய தனிச்சட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட இவ்வலுவலகம், சுயாதீனமாகவே செயற்பட்டு வருகின்றது. 

எனவே ஆட்சிமாற்றம் ஏற்பட்டு இதுவரையில் எமது அலுவலகத்தின் மீது எவ்வித அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை. நாங்கள் தொடர்ந்தும் காணாமல்போனோர் பற்றிய விபரங்களைக் கண்டறியும் எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றோம்' என்றார்.

அதேவேளை காணாமல்போன தமது உறவுகளைத்தேடி சுமார் இரண்டரை வருடங்களுக்கும் அதிகமான காலம் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்துவரும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான தலைவி மதியசுரேஷ் ஈஸ்வரி, மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகவும் அவருடைய சகோதரன் கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராகவும் பதவி வகித்த ஆட்சிக்காலத்திலேயே தமது உறவுகள் காணாமல் போனதாகவும், எனவே அவர்களே பொறுப்புக்கூற வேண்டிய நிலையில் இருப்பவர்கள் என்றும் சுட்டிக்காட்டினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

தற்போது நாட்டில் ஆட்சிமாற்றமொன்று ஏற்பட்டிருந்தாலும் காணாமல்போன எமது உறவுகளைத் தேடி நாங்கள் முன்னெடுத்துவந்த போராட்டங்களை ஒருபோதும் நிறுத்த மாட்டோம்.

தற்போது அரசாங்கம் அமைத்திருப்பவர்கள் முன்னர் ஆட்சிபீடத்திலிருந்த போதே எமது உறவுகள் காணாமல் போனார்கள். தற்போது அவர்களே மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கின்றார்கள். அவர்களே காணாமல்போன எமது உறவுகள் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டிய நிலையிலிருப்பவர்களாவர்.

எனவே இத்தகையதொரு சூழ்நிலையில் எமது போராட்டங்களை மேலும் வலிமைப்படுத்துவோமே தவிர, அதனை மலினப்படுத்த மாட்டோம் என அவர் தெரிவித்தார்.

 

https://www.virakesari.lk/article/70654

 

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு தயாராகும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் உறவுகள் 

(ஆர்.ராம்)

வடக்கு கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறலை இலங்கை அரசாங்கம் செய்வதற்காக அந்த விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் ஒப்படைப்பதற்குரிய நடவடிக்கைகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையும், சர்வதேச நாடுகளும் கூட்டிணைந்து எடுக்க வேண்டும்

protest.jpg

என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாரிய கவயீர்ப்பு போராட்டமொன்றை முல்லைத்தீவில் முன்னெடுக்கவுள்ளனர்.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும், முல்லைத்தீவு காணமாலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டத்தின் 1008ஆவது நாளையும் பிரதிபலிக்கும் முகமாக நடைபெறவுள்ள இந்தக்  கவனயீர்ப்பு போராட்டம்  எதிர்வரும் செவ்வாய்கிழமை காலை 10மணிக்கு முல்லைத்தீவு நகரத்தில் உள்ள தேவாலயத்திற்கு அருகாமையில் ஆரம்பமாகவுள்ளது.

அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் வரையில் பேரணியாக செல்லவுள்ளதோடு செயலகத்திற்கு முன்னால் தமது வலியுறுத்தல்களை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அத்துடன் வலிந்துகாணாமலாக்கப்பட்ட உறவினர்களின் கோரிக்கைள் உள்ளடங்கிய மகஜரொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அனுப்பி வைப்பதற்காக ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் கையளிக்கப்படவுள்ளது.

இந்தக்கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் சங்கத்தின் தலைவி ஈஸ்வரி மரியசுரேஸ் கூறுகையில், 

அசாதாரண சூழலில் காணாமலாக்கப்பட்ட உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறு கோரி நாம் வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் தொடர்ச்சியான முன்னெடுத்து வருகின்றோம்.

கிளிநொச்சி, முல்லைத்தீவு உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆயிரம் நாட்களைக் கடந்து தொடர்ச்சியாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான சூழலில் கடந்த ஆட்சியாளர்கள் எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துவொம் என்று கூறி ஆட்சியில் அமர்ந்தபோதும் பின்னர் அவர்கள் அதுகுறித்து எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கால அவகாசத்தினை நீட்டித்துக் கொண்டார்களே தவிரவும் உள்நாட்டில் எவ்விதமான செயற்பாடுகளையும் முன்னெடுத்திருக்கவில்லை.

இந்நிலையில் தற்போது ஆட்சிமாற்றமொன்று நடைபெற்றுள்ளது. தற்போது ஆட்சிஅதிகாரத்தில் உள்ளவர்களே காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பிலான நேரடியான பொறுப்புக்கூறலைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளார்கள். மேலும் காணாமலாக்கப்பட்ட உறவுகள் தொடர்பில் உள்நாட்டில் எவ்விதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பாடத நிலைமையே தொடர்ந்தும் நீடிக்கின்றது.

ஆகவே தான் ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையும், சர்வதேச நாடுகளும் தற்போதைய ஆட்சியாளர்கள் பொறுப்புக்கூறும் வகையில் காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கோருகின்றோம். இந்த விடயத்தில் எவ்விதமான  தாமதங்களுமின்றி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/70677

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.