Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தியாவில் வெடித்தது போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் மிக மிக கடுமையான போராட்டங்கள் நடந்து வருகின்றது.

குறிப்பாக அசாம், திரிபுரா, மணிப்பூர், மேகாலயா போன்ற மாநிலங்களில் இதோடு சேர்ந்து தற்போது தனி நாட்டு கோரிக்கையையும் இந்த மாநிலங்கள் வலுவாக எழுப்பி வருகின்றன.

காரணம் அவர்கள் சர்வ சாதாரணமாக பர்மா, வங்கதேசம் மற்றும் நேபாளத்துடன் தொடர்பில் இருப்பவர்கள். இவரது மூதாதையர்கள் அங்கேயும் இங்கேயும் மாறி மாறி இருக்கக்கூடிய சூழல் பூகோள ரீதியாகவே இவர்கள் இந்த நாடுகளுடன் ஒன்றிணைந்து இருக்கின்றனர் என சமூக ஆய்வாளர் எம்.எம்.எம் நிலம்டீன் தெரிவித்துள்ளார். .

தற்போது அங்கு மிகப்பெரும் போராட்டங்களை நடத்துவது முஸ்லிம்கள் அல்ல. இந்துக்கள் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

மேலும் பங்களாதேஷில் இருந்து முஸ்லிம்களை நாங்கள் தடுக்கின்றோம் என்பது போன்ற பொய்யான காரணங்கள் கூறப்படுகின்றது. இதுகுறித்து பங்களாதேசின் வெளியுறவுத்துறை அமைச்சர், எங்களது நாட்டு மக்கள் இந்தியாவிற்குச் சென்று பிழைக்கும் நிலையில் இல்லை. அது போன்ற ஒரு நிலை வந்தால் எங்கள் மக்கள் கடலில் குதித்து சாவுவார்களே தவிர இந்தியாவிற்கு செல்ல மாட்டார்கள் என்று காட்டமாக கூறியுள்ளார்.

எனவே தேன்கூட்டில் கை வைத்த கதையாக தேவையற்ற இந்த மசோதாவை நிறைவேற்ற துடிக்கின்றது மத்திய பாஜக அரசு.

இதன் முக்கிய காரணம் தற்போது அனைத்து துறைகளிலும் வீழ்ச்சியடைந்து பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கி இந்தநாட்டில் அன்றாட வாழ்க்கையை நடத்துவதே சிரமம் என்ற சூழல் நிலவி வருகின்றது.

இது இந்தியா முழுவதும் இன்று இருக்கக்கூடிய சூழல். இதை திசை திருப்பவே இதுபோன்ற சட்டங்களை இயற்றுவதாக கூறி நாட்டை பதற்றத்தில் லேயே வைத்திருக்கின்றது பாஜக அரசு.

உண்மையிலேயே இந்த சட்டத்தின் மூலமாக அனைவரையும் சோதித்து அறிய பத்து வருடத்திற்கு மேல் ஆகும் என்கிறார்கள். அப்படி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் இந்த சட்டத்தை வைத்து எதையுமே செயல்படுத்த முடியாது.

நிச்சயமாக அடுத்த முறை பதவியில் இவர்கள் இருக்க போவதில்லை. இருக்கும் வரை மக்களை மத ரீதியாக திசைதிருப்பி அதில் குளிர் காய்ந்து விட்டு போகலாம் என நினைக்கின்றார் அமித்ஷா.

இப்போது நாட்டை ஆள்வது மோடியா அல்லது அமித்ஷாவா என்ற சந்தேகம் மக்களுக்கு வந்திருக்கின்றது. மேலும் இது எல்லாம் மிகவும் ஓல்டு ஸ்டைல் ஹிட்லர் அந்த காலத்திலேயே இதையெல்லாம் செய்து காட்டிவிட்டார்.

https://www.tamilwin.com/politics/01/233784?ref=home-imp-parsely

  • கருத்துக்கள உறவுகள்

குடியுரிமை சட்டம்: டெல்லியும் போர்க்களமானது- 3 பேருந்துகளுக்கு தீ வைப்பு.. பெரும் கலவரம்!

cab-protest-delhi3342343434-1576420849.j

டெல்லி: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் 3 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது. பேருந்துகள் தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நாடு முழுக்க பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியில் நடக்கும் போராட்டம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.இப்போராட்டத்தை போலீசார் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் கலைந்து செல்ல போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி தடியடி நடத்தினர்.

போலீசார் அத்துமீறுகின்றனர்..

தினமும் போலீஸ் தடியடியும் மீறி மாணவர்களின் போராட்டம் நாள்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் இன்றும் போராட்டம் நடத்தினர். ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற மாணவர்களின் இப்போராட்டத்தில் பொதுமக்களும் பெரும் எண்ணிக்கையில் திரண்டனர்.

 இதையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்புகை குண்டுகளை போலீசார் வீசி தடியடி நடத்தினர். இந்நிலையில் திடீரென பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டன. இதில் 3 பேருந்துகள் தீக்கிரையாகின. மாணவர்கள் மறுப்பு இருப்பினும் பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் எதுவும் செய்யவில்லை. எங்கள் போராட்டத்தை திசை திருப்ப போலீசார் இப்படி புகார் அளிக்கிறார்கள் என ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இன்னொரு பக்கம் டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தி உள்ளனர். லத்திகளை கொண்டு அங்கிருந்த மாணவர்களை மோசமாக தாக்கியுள்ளனர். பெண் மாணவிகள் பலரும் இந்த தாக்குதலில் மோசமாக காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதில் சில மாணவிகள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோசமான நிலை அதேபோல் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் போலீசார் தாக்குதல் நடத்தினார்கள். 

அங்கு இருக்கும் வகுப்பறைகள், நூலகம் ஆகிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டு, கண்ணீர் புகை குண்டுகளை வைத்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

https://tamil.oneindia.com/news/india/protest-against-cab-escalate-in-delhi-3-buses-set-ablaze-by-protesters/articlecontent-pf422325-371444.html

டிஸ்கி:

யார் பெரியவா..அடிச்சு காட்டு ..👍

hqdefault.jpg

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகம் முசுலீம் மத பல்கலைக் கழகம் Jamia Millia Islamia university.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.