Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சம்பிக - ராஜித ஆகியோருக்கு எதிரான அரசின்சதி ; எதிரணியினர் மீதான அடக்குமுறைகளின் ஆரம்பம் - ஐ.தே.க

Featured Replies

(நா.தனுஜா)

சம்பிக ரணவக மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு எதிராக ஆளுந்தரப்பினால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் எம்மீது அடக்குமுறைகளையும், அரசியல் பழிவாங்கல்களையும் பிரயோகிப்பதற்கான ஆரம்ப அறி குறிகளாகும். இத்தகைய செயற்பாடுகளால் ஒருபோதும் எம்மை முடக்கிவிடமுடியாது. மாறாக நாம் ஜனநாயகத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் தொடர்ந்தும் வலுவாகப் போராடுவோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.

DSC_0068.jpg

எதிரணியைச் சேர்ந்த பாட்டலி சம்பிக ரணவக மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு எதிராக ஆளுந்தரப்பினால் மேற்கொள்ளப்படும் அடக்குமுறைகள், அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் தமது கண்டனத்தை வெளிப்படுத்தும் அதேவேளை மேற்படி தமது தரப்பு உறுப்பினர்களுக்கான ஆதரவையும் வெளிப்படுத்தும் விதமாக ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் ஒன்றிணைந்து இன்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள சோலிஸ் ஹோட்டலில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

அச்சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம், ரஞ்சித் மத்தும பண்டார, அஜித் பி பெரேரா, ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, ஆசுமாரசிங்க, சந்திராணி பண்டார, எஸ்.எம்.மரிக்கார், ஹர்ஷன ராஜகருணா மற்றும் கருணாரத்ன பரணவிதாரன ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

அவர்கள் தற்போது சம்பிக ரணவக மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோரை இலக்குவைத்து ஆளுந்தரப்பினால் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் எதிர்கட்சியினர் மீது அடக்குமுறைகளைப் பிரயோகிப்பதற்கான ஆரம்பகட்டம் என்று சுட்டிக்காட்டியதுடன், ஏற்கனவே விசாரணைகள் நடைபெற்று நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கை உரிய சட்ட நியமங்களுக்குப் புறம்பாக மீண்டும் ஆரம்பித்திருப்பது அரசியல் பழிவாங்கல் நோக்கத்தின் அடிப்படையிலானதே என்றும் குறிப்பிட்டனர்.

https://www.virakesari.lk/article/71167

  • தொடங்கியவர்

பொதுத்தேர்தலின் பின்னர் படுமோசமான ஊடக அடக்குமுறை உருவாகும் - ஐ.தே.க

(நா.தனுஜா)

தற்போது ஊடகநிறுவனங்கள் மீது பிரயோகிப்படும் அழுத்தங்களை விடவும் பொதுத்தேர்தலின் பின்னரே படுமோசமான நிலையொன்று உருவாகும் என ஐக்கிய தேசியக்  கட்சி தெரிவித்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் இன்று கொழும்பிலுள்ள சோலிஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வாவும், எஸ்.எம். மரிக்காரும் மேற்கண்டவாறு கூறினர்.

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளை நோக்குகையில், அவர்கள் விரும்பும் வகையிலேயே நாட்டின் சட்டம் வரையறுக்கப்பட்டிருப்பது போன்று தெரிகிறது. 

இவ்வரசாங்கம் ஆட்சிபீடமேறிய பின்னர் சில நாட்களிலேயே ஊடகவியலாளர்கள் மீதும், ஊடக நிறுவனங்களின் மீதும் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் செயற்பாடுகள் ஆரம்பமாகியிருக்கின்றன.

நாட்டின் தேசியத்துவத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் ஊடகவியலாளர்கள் முறையாக செயற்பட்டால் தாமும் எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கப் போவதில்லை என்றும், ஊடக சுதந்திரத்தை உறுதி செய்வதாகவும் ஜனாதிபதி கூறுகின்றார். ஆனால் கடந்த ஒருமாதகாலத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான ஊடகவியலாளர்கள் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

https://www.virakesari.lk/article/71173

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.