Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மணல் வாகன வழித்தட அனுமதி நீக்கப்பட்டதையடுத்து தீவிரமடையும் மணல் கொள்ளை!

Featured Replies

மணல் வாகன வழித்தட அனுமதி நீக்கப்பட்டதையடுத்து தீவிரமடையும்  மணல் கொள்ளை!

மணல் வாகன வழித்தட அனுமதி அண்மையில் நீக்கப்பட்டிருந்தது .அதாவது மணலை ஏற்றிக் கொண்டு செல்வதற்கான அனுமதி பத்திரம் தேவையில்லை என்ற அறிவிப்பு அரசாங்கத்தால் வெளியிடப்பட்டிருந்தது. 

IMG_0968.jpg

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் கொள்ளையர்களால் மணல் அகழ்வு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறிப்பாக இரவு நேரங்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கடற்கரையோரங்களில் பல்வேறு பகுதிகளில் மணல் கொள்ளையர்களால் உழவு இயந்திரங்கள் மூலம் மணல் ஏற்றப்பட்டு களவாக கொண்டு செல்லப்படுகின்றது .

 அளம்பில் பகுதியில் உப்புமாவெளி பிரதேசம் அதனை அண்டிய கடற்கரையோரமாக உள்ள மணல் திட்டுகள் இரவோடு இரவாக கனரக இயந்திரங்கள்  மூலம் அகழப்பட்டு கடத்தப்படுவதாக பிரதேச மக்கள் பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

மணலைக் கொண்டு செல்வதற்கு வழித்தட அனுமதி தேவையில்லை என்ற நிலை ஏற்பட்ட பின்னரே இந்த மணல் அகழ்வு நடவடிக்கை தீவிரம் பெற்றுள்ளதாகவும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர் .

இந்த கொள்ளையர்களுடைய நடவடிக்கையை பொலிஸார் அறிந்திருந்தும் அவர்கள் மணல் கொள்ளையர்களிடம் இருந்து கையூட்டு பெற்றுக் கொண்டு இந்த நடவடிக்கையை கண்டும் காணாமல் விட்டு இருப்பதாகவும் பிரதேச மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர் .

அத்தோடு இலங்கை ஜனாதிபதி தற்போது நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு முப்படையினருக்கும் அதிகாரம் வழங்கி இருக்கின்ற நிலையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் கடற்படையினரும் இந்த மணல் கொள்ளையர்கள் குறித்து எந்தவிதமான அக்கறையும் கொண்டிருப்பதாக தெரியவில்லை எனவும் பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். 

இந்த மணல் அகழ்வு தொடருமேயானால் குறித்த உப்புமாவெளி உடுப்புக்குளம் கிராமங்களுக்கு அரணாக கடல் உட் புகாதவாறு காத்துக்கொண்டு காப்பாற்றி வைத்திருக்கும் இந்த மண் திட்டுகள் விரைவாக அழிந்துபோகும் அபாயம் எழுந்துள்ளதாக மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

IMG_0989.jpg

IMG_0986.jpg

https://www.virakesari.lk/article/71176

 

  • தொடங்கியவர்

மணல் கொள்ளையில் ஈடுபட்ட ஐவர் அரியாலையில் கைது

அரியாலை பூம்புகார் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஐவர் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

01.jpg

அரியாலை பூம்புகார் பகுதியில் உள்ள கடற்கரை ஓரமாக பெக்கோ இயந்திரத்தின் மூலம் மணல் அகழ்வில் ஈடுபட்ட போது 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவர்களை கைது செய்து விசாரணை செய்தபோது சுரங்க அகழ்வு பணியகத்தின் அனுமதியின்றி அந்தப் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட கண்டறியப்பட்டது .

அத்துடன் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து ஒரு டிப்பர் வாகனம் 3 உழவு இயந்திரங்கள் என்பன கைப்பற்றப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபர்கள் மேலதிக விசாரணைக்காக  யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/71159

  • தொடங்கியவர்

மணல் கொள்ளையில் ஈடுபட்ட நால்வருக்கு தலா ஒரு இலட்சம் ரூபா தண்டம்

அரியாலை பூம்புகார் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வருக்கு தலா ஒரு லட்சம் ரூபா தண்டப் பணம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் உத்தரவிட்டார்.

“உரிய அனுமதிப்பத்திரம் பெறப்படாமல் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவதால் சுற்றுச்சூழலுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்படுகிறது. அதனை அனுமதிக்க முடியாது” என்று நீதிவான் ஏ.பீற்றர் போல் சுட்டிக்காட்டினார்.

அரியாலை பூம்புகார் கடற்கரை பகுதியில் நேற்றிரவு பெக்கோ வாகனத்தின் மூலம் மணல் அகழ்வில் ஈடுபட்ட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் மணல் அகழ்வுக்கான சுரங்க அகழ்வு பணியகத்தின் இருக்கவில்லை. அதனால் அவர்கள் ஐந்து பேரும் விசாரணைகளின் பின்னர் இன்று திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

ஐந்து பேருக்கும் எதிராக தனித்தனியே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. முதலாவது எதிரி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்கமறுத்து சுற்றவாளி என்று மன்றுரைத்தார். அதனால் அவரை இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

ஏனைய நால்வரும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு குற்றவாளி என மன்றுரைத்தனர்.

அதனால் நால்வரும் தலா ஒரு லட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து விடுவிக்கப்பட்டனர்.

அத்துடன் கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து மீட்கப்பட்ட ஒரு டிப்பர் வாகனம் 3 உழவு இயந்திரங்களையும் விடுவிக்க நீதிமன்று உத்தரவிட்டது.

https://www.virakesari.lk/article/71181

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.