Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சட்ட விரோத மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

Featured Replies

சித்தாண்டியின் சந்தனமடு ஆற்றுப் பிரதேசத்தில் நடைபெறுகின்ற சட்ட விரோத மண் அகழ்வினால் மக்கள் பல்வேறு வகையான பிரச்சனைகளை எதிர் நோக்குக்கின்றனர்.

79542298_2522866904706478_10474248757502

பாதை மோசமாக பாதிக்கப்படுத்தல், ஆறு அகலமாக்கப்படுத்தல் , வெள்ள நீரினால் மக்கள் உயிர் ஆபத்தினை எதிர் கொள்ளுதல், உள்ளக மண் வளத்தினை உள்ளக தேவைக்குப்  பயன்படுத்த முடியாதென்று பல விதமான சவால்களுக்கு மக்கள் முகம் கொடுக்கின்றனர்.

79328461_2207613266005898_64104504526425

இதனை எதிர்த்து பிரதேச சபை உறுப்பினர் முரளிதரன் தலைமையில் இன்று விவசாயிகள் , பொதுமக்கள் என்று பலர் கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதன் போது மக்களால் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.

https://www.virakesari.lk/article/71223

  • தொடங்கியவர்

சட்டவிரோத மணல் கொள்ளையை கண்டித்து மக்கள் போராட்டம் 

கிளிநொச்சி மாவட்டத்தில் சோரன்பற்று கிளாலி மற்றும் அரத்திநகர் அல்லிப்பளை  பகுதிகளில்  சட்டவிரோத மணல் கொள்ளை நடவடிக்கையினை கண்டித்து பளை பகுதியில் இன்று காலை மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

IMG-20191217-WA0067.jpg

கோத்தாபாஷய ராஜபக்‌ஷ ஐனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் வடமாகாணத்தில் தொ டர்ச்சியாக மணல், கிரவல், கல் மிதமிஞ்சி கொள்ளையிடப்பட்டு வருகிறது. இதனை தடுத்து நிறுத்துமாறு மக்கள் கேட்டுவருகின்றனர்.

எனினும் பொறுப்புவாய்ந்தவர்கள் நடவடிக்கை எதனையும் எடுக்காத நிலையே தொடர்ந்து வருகிறது. 

குறித்த மண் அகழ்வினை தடுக்கும் மக்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்  கொலை அச்சுறுத்தலும் விடுக்கப்படிகிறது. இதனை கண்டித்தும் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தகோரியும் இன்று காலை 10 மணி யளவில் பளை நகரில் கூடிய மக்கள்,

யாழ்ப்பணம்- கண்டி வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

IMG-20191217-WA0054.jpg

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்  ஏ9 வீதியூடாக பயணித்த டிப்பர் வாகனங்களையும் மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன் போரட்டக்களத்தில்   மக்களுக்கும் பொலிசாருக்கும் இடையில் முரண்பாடுகளும் ஏற்பட்டது.

அதன் பின் பளை சம்பவ இடத்திற்கு விரைந்த பளை பொலிசார் மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மண் அகழ்வினை தடுப்பதற்கு நடவடிக்கையை மேற்கொள்வாதக கூறி மக்களுடன் கலந்துரையாடினார்.

கலந்துரையாடும் போது நாம்  பளை பகுதிகளில் மண் அகழ்வை தடுப்பதற்கு கடும் முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றோம் பொலிஸ் நிலையத்தில் பல டிப்பர் வாகனங்களை மண்ணுடன் பிடித்து வைத்துள்ளோம் அவர்களுக்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் பளை பகுதியில் இடம்பெறுகின்ற மண் அகழ்வை தடுப்பதற்கு நாங்கள் பல முயற்சிகளை முன் எடுக்கின்றோம்.

 எங்களுக்கு ஊர்மக்கள் ஆதரவுதாருங்கள் நாம் இருவரும் சேர்ந்தே சட்ட விரோத மண் அகழ்வை நிறுத்துவோம் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபடுவோர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்று கூறினர்.

IMG-20191217-WA0052.jpg

பளை பொலிசாரின் வாக்குறுதியை அடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டதுடன் பச்சிளைப்பள்ளி பிரதேசசெயலாளர் பரமோதயன்  ஜெயராணிக்கு மக்கள் மகஜர் ஒன்றையும் கையளித்தனர் 

அத்துடன் மக்கள் மண் அகழ்வுகள் மீண்டும் இடம்பெறும் பட்சத்தில் நாம் மீண்டும் போராடுவோம் என்று கூறினார்.

இந்த போராட்டத்தில் பொதுமக்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/71257

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.