Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடைசி ஒருநாள் போட்டி: மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி

Featured Replies

மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 315 ரன்களை எடுத்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் சார்பில் பூரான் 89, பொல்லார்ட் 74 ரன்கள் எடுத்தனர்.

இதனையடுத்து 316 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் அதிரடியாக விளையாடினர். இருவரும் இணைந்து 122 ரன்கள் அடித்தனர். இதில் ரோகித் சர்மா 63 ரன்களும், கே.எல்.ராகுல் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனை தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி 85 ரன்கள் எடுத்தார். இறுதியாக 48.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 316 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.

இதனையடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=550763

  • தொடங்கியவர்

ரோகித் சர்மா சாதனை

ரோஹித் ஷர்மாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்கவீரர் ரோகித் சர்மா 2019ஆம் ஆண்டு அதிக ரன் எடுத்த தொடக்க ஆட்டகாரர் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலம் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியாவின் சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூரியா 1997ல் தன்னுடைய 22 வயதில் 2387 ரன்கள் எடுத்து ஒரே ஆண்டில் அதிக ரன்கள் எடுத்த தொடக்க வீரர் என்ற பெருமையை கொண்டிருந்தார்.

இப்போது கட்டகில் உள்ள பாரபதி மைதானத்தில் நடந்து கொண்டிருக்கும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் சர்மா ஜயசூரியாவின் சாதனையை முறியடித்தார்.

அவர் 9 ரன்கள் எடுத்தபோது இந்த ஆண்டில் அவர் எடுத்த ரன்கள் மொத்தம் 2388 ஆக இருந்தது. இதன்மூலம் 2019ல் அதிக ரன் எடுத்த தொடக்க ஆட்டக்காரரானார் ரோகித் சர்மா. இந்தப் போட்டி இந்திய அணிக்கு இந்த ஆண்டு நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டி ஆகும். இந்த போட்டியில் 63 ரன்கள் எடுத்து ஒரே வருடத்தில் 2442 ரன்களை இவர் எடுத்துள்ளார்.

இந்த ஆண்டு அனைத்து ரக போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 10 முறை ரோகித் சர்மா சதம் அடித்துள்ளார்.

கட்டக்கில் உள்ள பாரபதி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 315 ரன்கள் எடுத்தது. மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் அதிகபட்சமாக பூரன் 89 ரன்களும் பொல்லார்டு 74 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளும் ஷர்துல் தாகூர், முகமது ஷமி மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

https://www.bbc.com/tamil/sport-50886229

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.