Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிணையில் விடுவிக்கப்பட்டார் சம்பிக்க ரணவக்க

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

champika-arrest-3-720x450-1.jpg

பிணையில் விடுவிக்கப்பட்டார் சம்பிக்க ரணவக்க

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டாலி சம்பிக்க ரணவக்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

Update – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார் சம்பிக்க

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சற்று முன்னர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

Update – சம்பிக்க பிணையில் விடுவிக்கப்படுவாரா? – முடிவு இன்று

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவிற்கு பிணை வழங்குவது தொடர்பான முடிவு அறிவிக்கப்படவுள்ளது.

அதற்கமைய குறித்த முடிவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) அறிவிக்கவுள்ளது.

கடந்த 19ஆம் அமைச்சர் சம்பிக்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, அவருக்கு பிணை வழங்குமாறு கோரியிருந்தார். பிணை கோரிக்கை தொடர்பான முடிவை இன்று அறிவிப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. அதற்கமையவே பிணை வழங்குவது தொடர்பான முடிவு அறிவிக்கப்படவுள்ளது.

இராஜகிரியவில் இடம்பெற்ற மோட்டார் வாகன விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சம்பிக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/சம்பிக்க-பிணையில்-விடுவி/

பல பிக்குகளும் ஆதரவை தந்து வருகிறார்கள். நாளை இது பிக்குகளுக்கு இடையிலான கைகலப்பில் முடியக்கூடாது  😄

image_38aa923ca7.jpg

நீதிமன்றம் தமது சுயாதீன தன்மையை பாதுகாத்தமைக்கு நன்றி- சம்பிக்க ரணவக்க

2016 ஆம் ஆண்டு வாகன விபத்தை ஏற்படுத்தி குற்றசசாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் இன்று கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவர் 25 ஆயிரம் ரூபா ரொக்க பிணையிலும் தலா ஐந்து லட்சம் வீதம் இரண்டு சரீர பிணைகளிலும் செல்ல அனுமதிக்கபபட்டுள்ளார்.

இதுதவிர, மாதாந்தம் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முன்னிலையாக வேண்டும் என்றும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் முறைப்பாட்டாளருக்கு அச்சுறுத்தல் விடுக்க முடியாது எனவும் மேலதிக நீதவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு வாகன விபத்தை ஏற்படுத்தி குற்றசசாட்டு தொடர்பில், நாடாளுமன்று உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, கடந்த 18ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

பின்னர், 19 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை இன்றைய தினம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா டி சில்வா உத்தரவிட்டிருந்தார்.

இதேநேரம், பாட்டலி சம்பிக்க ரணவக்க சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிக்கையை இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகவும் நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நிலையில், இன்றைய தினம் பிணை விண்ணப்பம் ஆராயப்பட்டபோது, கொழும்பு பிரதான நீதவான நீதிமன்ற வளாகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சமபிக்க ரணவக்க இன்று முற்பகல் 9.30 அளவில் நீதிமன்ற வளாகத்தில் பிரசன்னமானார்.

இந்த நிலையில், குறித்த பிணை விண்ணப்பத்தை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நெரஞ்சனா, நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க பிணையில் செல்ல அனுமதியளித்தார்.

வழக்கு விசாரணைகள் நிறைவடைந்தது, பிணை அனுமதி கிடைக்கப்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், நீதிமன்றம் தமது சுயாதீன தன்மையை பாதுகாத்தமைக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் தொடர்பான போராட்டத்தை எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசியல் பழிவாங்கல்கள் கவலைக்குரிய விடயமாக அமைவதாக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ இதன்போது ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

பலமிக்க எதிர்கட்சி என்ற ரீதியில் ஜனநாயக மற்றும் சட்டத்திற்கு மதிப்பளித்து தமது தரப்பிற்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற அனைத்து விடயங்களையும் எதிர்நோக்க தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு முகங்கொடுத்தவர்களுக்கு ஆதரவாக முன்னின்று செயற்பட தயாராகவுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
 

http://www.hirunews.lk/tamil/230891/நீதிமன்றம்-தமது-சுயாதீன-தன்மையை-பாதுகாத்தமைக்கு-நன்றி-சம்பிக்க-ரணவக்க

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நன்மைக்கே 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.