Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது ஆரம்பம் மட்டுமே – எச்சரிக்கிறார் சரத் பொன்சேகா!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது ஆரம்பம் மட்டுமே – எச்சரிக்கிறார் சரத் பொன்சேகா!

“ஐ.தே.கட்சிக்குள் இருக்கும் சிலர், கட்சியினதோ அல்லது நாட்டினதோ எதிர்காலம் பற்றி அக்கறை கொள்ளாது கட்சிக்குள் தமது இருப்பையும், அதிகாரத்தையும் நிலை நிறுத்திக்கொள்வதிலேயே அக்கறைப் படுகிறார்கள். கட்சி மறு சீரமைக்கப்படுவதோ அல்லது தலைமைப் பீடம் மாறுவதயோ அவர்கள் எதிர்க்கிறார்கள். தங்கள் நன்மையை அட்டும் முன்வைத்து கட்சியை இப்படியே தொடர்ந்தும் வைத்துக்கொள்ள முனைகிறார்கள்” என சரத் பொன்சேகாதெரிவித்தார்.

ஹொரணவில் நடைபெற்ற கூட்டமொன்றின் பின்னர் ஊடகவியலாளர் மத்தியில் பேசும்போது அவர் இப்படித் தெரிவித்தார்.

தலைமைப் பதவி விடயத்தில் ஐ.தே.கட்சியில் ஒரு பாரிய அபிப்பிராய பேதம் இருக்கிறது. மக்களின் நம்பிக்கையைப் பெற்று எதிர்காலத்தில் நான் வெற்றிகளை அடையவேண்டுமானால் கட்சி மறுசீரமைக்கப்பட்டு அதன் வடிவம் முற்றிலும் மாற்றம் செய்யப்படவேண்டும்.

உண்மையில், கட்சியின் அத்தனை தலைமைப் பதவிகளும் மாற்றப்பட வேண்டும். அப்பதவிகளில் உள்ளவர்கள் தகமையானவர்கள் இல்லை. மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க இவர்களால் முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க விடயத்தில், அவர் தான் வரப்போகும் தேர்தலில் போட்டியிட மாட்டேன் எனத் தன்னிடம் இரண்டு தடவைகள் கூறியிருப்பதாகவும் அதனால் சஜித் பிரேமதாசாவிடம் கட்சித் தலைமையை ஒப்படைப்பதில் தனக்குப் பிரச்சினை ஏதுமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் கைது பற்றிக் குறிப்பிடும்போது, 2010 இல் அவரைக் கைது செய்த கும்பல் தான் இப்போதும் அவரைக் கைது செய்திருக்கிறது. “இது தான் ராஜபக்ச ஆட்சியின் அடையாளம்” என அவர் கூறினார்.

“ராஜபக்சக்களைப் பற்றி நாம் தொடர்ச்சியாகத் தேர்தல் மேடைகளில் எடுத்துரைத்தோம். இருப்பினும் மக்கள் எங்களை நம்பவில்லை. இந்த நாட்டில் மக்கள் குறுகிய நினைவுகளைக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன நடைபெற்றது என்பதை அவர்கள் விரைவில் மறந்துவிட்டார்கள். இது ஆரம்பம் மட்டுமே. இன்னுமொரு வருடத்தில் முன்னர் நடந்தவை எல்லாம் மீண்டும் ஆரம்பிக்கும்” என அவர் எச்சரித்தார்.

https://marumoli.com/இது-ஆரம்பம்-மட்டுமே-எச்ச/

  • கருத்துக்கள உறவுகள்

 இவருக்கு  பட்டும் குளிர்  விடேல்லைப்போல் இருக்கு.  லிஸ்ட்டில்  அடுத்தது    இவர் பெயராம். எல்லாம்  எதையோ  நோக்கி  நகருவதுபோல்  தெரிகிறது.  இவர்களே  தங்கள் வாயால் போர்க்   குற்றவாளி  யார்  என்பதை  தெரிவிக்கும்  காலம்  நெருங்குகிறது.

4 hours ago, satan said:

 இவருக்கு  பட்டும் குளிர்  விடேல்லைப்போல் இருக்கு.  லிஸ்ட்டில்  அடுத்தது    இவர் பெயராம். எல்லாம்  எதையோ  நோக்கி  நகருவதுபோல்  தெரிகிறது.  இவர்களே  தங்கள் வாயால் போர்க்   குற்றவாளி  யார்  என்பதை  தெரிவிக்கும்  காலம்  நெருங்குகிறது.

நடக்கலாம். சஜித் வென்றிருந்தால் இது நடந்திருக்காது. 

"“ராஜபக்சக்களைப் பற்றி நாம் தொடர்ச்சியாகத் தேர்தல் மேடைகளில் எடுத்துரைத்தோம். இருப்பினும் மக்கள் எங்களை நம்பவில்லை. இந்த நாட்டில் மக்கள் குறுகிய நினைவுகளைக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன நடைபெற்றது என்பதை அவர்கள் விரைவில் மறந்துவிட்டார்கள். இது ஆரம்பம் மட்டுமே. இன்னுமொரு வருடத்தில் முன்னர் நடந்தவை எல்லாம் மீண்டும் ஆரம்பிக்கும்”

மக்களுக்கு தேவையான சில வியங்களை நல்லாட்சி தரவும் இல்லை என்பது சிங்கள மக்களின் கருத்தாக உள்ளது : குறைவான விலைவாசி, வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு ( குறிப்பாக இஸ்லாமியம்) 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.