Jump to content

நரேந்திர மோதி தன் மன் கி பாத் உரையில் குறிப்பிட்ட பர்வீன் காஷ்மீரிலிருந்து திருப்பூர் வந்தது ஏன்?


Recommended Posts

நரேந்திர மோதி தன் மன் கி பாத் உரையில் குறிப்பிட்ட பர்வீன் காஷ்மீரிலிருந்து திருப்பூர் வந்தது ஏன்?

 
காஷ்மீரில் இருந்து திருப்பூர் வரை

இந்தியா முழுவதும் வேலை வாய்ப்பிருந்தாலும் நான் விருப்பப்பட்டுத்தான் தமிழ்நாட்டிற்கு வந்தேன் என்கிறார் காஷ்மீரிலிருந்து வந்து திருப்பூரில் வேலை செய்யும் பர்வீன் பாத்திமா.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2019ஆம் ஆண்டு உரையாற்றிய கடைசி 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் வேலைவாய்ப்புக்காக தமிழகம் வந்துள்ள காஷ்மீர் பெண்கள் பற்றி குறிப்பிட்டிருந்தார்.

அவர்களில் ஒருவர்தான் பர்வீன் ஃபாத்திமா.

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட கார்கில் பகுதியில் இருக்கும் கிராமம் ஒன்றைச் சேர்ந்த பர்வீன் ஃபாத்திமா தற்போது பின்னலாடை நிறுவனம் ஒன்றில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மேற்பார்வையாளராக இருக்கிறார்.

நரேந்திர மோதிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

பிபிசி தமிழுடன் அவர் நடத்திய தொலைபேசி உரையாடலில் இருந்து..

தமிழ் தெரியாமல் எப்படி சமாளிக்கிறீர்கள்?

இந்தி மற்றும் காஷ்மீரி என இரு மொழிகள் மட்டுமே தெரிந்த எனக்கு தொழிற்சாலையில் வேலை செய்யும் சக தமிழ் ஊழியர்கள் மிகுந்த ஒத்துழைப்பு கொடுக்கிறார்கள். வேலை செய்யும் நிறைய பேர் வட மாநிலத்தவர்கள்தான். அதனால் மொழி தெரியாதது சிரமமாக இல்லை.

இமயமலைப் பிரதேசத்தைச் சேர்ந்த உங்களுக்குத் தமிழ் நாடு பிடித்துள்ளதா?

வேறு மாநிலங்களுக்கு வேலைக்கு செல்லவும் வாய்ப்பு இருந்தது. எனினும் இருப்பதிலேயே தூரமாக இருக்கும் தமிழகத்தை தேர்வு செய்தேன்.

தமிழ்நாட்டுக்கு வந்த புதிதில் இங்குள்ள உணவு சிறிது வேறுபாடாகத் தெரிந்தாலும், இப்போது எங்களுக்கு எல்லாம் பிடித்துள்ளது.

இங்கே வந்து ஆறு மாதம் ஆகிறது ஆனால் வானிலை எங்களுக்கு சிறிது கடினமாக இருக்கிறது அதனால் நிறையப் பேர் இப்போது விடுமுறையில் சென்றுள்ளனர்.

சிக்கிமில் ஆறு மாத காலம் பயிற்சியை நான் நன்றாக பயன்படுத்திக் கொண்டதால், இங்கே உள்ள பிற பெண்களை பார்த்து கொள்ளும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டுள்ளது.

தமிழ் நாட்டின் சாப்பாடு, சினிமா பற்றி....

தமிழ்நாடு மிகவும் பிடித்துள்ளது. தமிழ்நாட்டு மக்களையும் பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் வேறு விதமான உணவு உண்கிறார்கள். அவற்றை நாங்கள் இதற்கு முன்னாள் பார்த்ததே இல்லை. எங்களுக்கு நிறுவனம் கொடுத்திருக்கும் தங்குமிடத்தில் எங்களுக்கென்று தனியாக காஷ்மீரின் உணவு தயாரிக்கப்படும்.

தொழில்துறை
Image captionதிருப்பூர் பின்னலாடைத் தொழிலில் பெண்கள் அதிக அளவில் பணிபுரிகின்றனர்

கொஞ்சமாகத் தமிழ் கற்றுக்கொண்டுள்ளேன். தமிழ் திரைப்படங்களின் நடிகர்கள் பெயர்கள் அவ்வளவாகத் தெரியாது. தமிழ் சினிமாவின் நகைச்சுவை காட்சிகள் பிடித்துள்ளன.

காஷ்மீரில் தொலைபேசி மற்றும் இணைய சேவைகள் முடக்கப்பட்டது உங்களை எப்படி பாதித்தது?

சமீபத்தில் தொலைபேசி சேவை மற்றும் இணைய சேவை காஷ்மீரில் முற்றிலுமாக முடுக்கப்பட்டபோது என்னுடைய குடும்பத்தினரிடம் பேச மிகுந்த சிரமப்பட்டேன். இப்போது நிலமை சற்று சீரடைந்து வருகிறது.

நரேந்திர மோதி உங்களைக் குறிப்பிட்டுப் பேசியதை எப்படி நினைக்கிறீர்கள்?

பிரதமர் மோதி என்னைப் போன்றோரைக் குறித்து நாட்டு மக்களிடம் பேசியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு சிறு கிராமத்திலிருந்த என்னைப்போன்ற ஏழைகளுக்கு இப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்ததற்காகத் தான் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன்.

நரேந்திர மோதி குறிப்பிட்ட ஹிமாயத் திட்டம் குறித்து எப்படி அறிந்தீர்கள்?

உள்ளூரில் இருக்கும் ஒருவர் மூலம் ஹிமாயத் திட்டம் குறித்து அறிந்து சிக்கிமிற்கு பயிற்சி பெறச் சென்றேன். 2019 ஜூன் மாதம் பயிற்சி முடிந்ததும் ஜூன் கடைசியில் வேலை கிடைத்தது. ஜூலை மாதக் கடைசியில் திருப்பூரில் வேலைக்கு சேர்ந்தேன்.

வேலைவாய்ப்புக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகமாக வரும் தென்னிந்திய நகரங்களில் ஒன்றாக திருப்பூர் உள்ளது.
Image captionவேலைவாய்ப்புக்காக வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகமாக வரும் தென்னிந்திய நகரங்களில் ஒன்றாக திருப்பூர் உள்ளது.

12வது வரை படித்த பர்வீனுக்கு ஆடை வடிவமைப்பாளர் ஆக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக கூறினார். ஆனால் வீட்டில் கட்டுப்பாடு இருப்பதால் தன்னால் வெளியே வர இயலவில்லை. வெளியே வருவதற்கான ஒரு வாய்ப்பை இந்த ஹிமாயத் திட்டம் ஏற்படுத்தி தந்துள்ளதது.

தமிழகம் வர உங்கள் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனரா?

தமிழ்நாட்டில் வேலை கிடைத்தபிறகும் இங்கே அனுப்ப முதலில் என்னுடைய வீட்டில் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் பயிற்சியளித்த இடத்திலிருந்து சிலர் வந்து பெற்றோரிடம் பேசி அவர்களை ஒப்புக்கொள்ள செய்தனர்.

உங்கள் குடும்பத்தின் பின்னணி என்ன?

தந்தை சிறு சிறு வேலைகள் பார்ப்பவர். தந்தை , தாய், ஒரு சகோதரன் மற்றும் ஒரு சகோதரி , தாத்தா, பாட்டி என குடும்பத்தில் பலர் உள்ளனர். வீட்டுக்கு மூத்த பெண்ணான பர்வீன் தற்போது வேலை செய்து குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறேன்.

நரேந்திர மோதியின் உரை

ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஹிமாயத் என்னும் திட்டம் உள்ளது.

அந்தத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற பர்வீன் ஃபாத்திமா இன்று திருப்பூரில் இருக்கும் ஒரு ஆடை தொழிற்சாலையில் பணிபுரிகிறார் என்று நரேந்திர மோதி குறிப்பிட்டிருந்தார்.

லே, லடாக்கில் பகுதிகளை சேர்ந்த பல காஷ்மீரி பெண்கள் ஹிமாயத் திட்டத்தின் மூலம் தமிழகத்தின் அதே ஆடை தொழிற்சாலையில் வேலை செய்கின்றனர்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில் வாழும் இளைஞர்களுக்கு ஹிமாயத் திட்டத்தின் மூலம் 77 வெவ்வேறு விதமான தொழில்களில் பயிற்சியளிக்கப்பட்டது. இதில் 18000 இளைஞர்கள் பலனடைந்தனர் எனக் கூறினார்.

https://www.bbc.com/tamil/india-50965528

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தற்போதைய தேசிய வலைப்பந்தாட்ட வீராங்கனையும் முன்னாள் தலைவருமான செமினி அல்விஸ் ( Semini Alwis ) தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகளை பயன்படுத்தியுள்ளதாக,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் (SLADA) தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி நடத்தப்பட்ட சோதனைகளின்போது, சிறுநீர் மாதிரிகளில் தடைசெய்யப்பட்ட ஊக்கமருந்துகள் இருப்பதாக உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) அதிகாரபூர்வமாக செமினிக்கும்,  இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனத்துக்கும் தெரிவித்துள்ளது.   வலைப்பந்தாட்ட போட்டி இந்நிலையில், இலங்கை ஊக்கமருந்து எதிர்ப்பு முகவர் நிறுவனம் மற்றும் உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் ஆகிய அமைப்புகளால் நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் இலங்கை வலைப்பந்து வீரர் ஒருவர் தோல்வியடைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆனால், குறித்த வீராங்கனை தாம் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க ‘பி’ மாதிரி சோதனையைத் தொடரலாம் எனவும் அதுவரை அவர் தேசிய பயிற்சி அமர்வுகளில் பங்கேற்பதில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனவும் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஷிரோமி பிலப்பிட்டிய தெரிவித்துள்ளார்.   செமினி 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண வலைப்பந்தாட்ட போட்டிகளிலும், சில ஆசிய செம்பியன்சிப்களிலும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு மூத்த வீராங்கனை ஆவார். 2015ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற சிட்னி உலகக் கிண்ணப்போட்டியின்போது  இலங்கை அணியின் தலைவியாகவும் அவர் செயற்பட்டுள்ளார்.  இந்நிலையில், சவூதி அரேபியாவில் எதிர்வரும் செப்டம்பர் 26ஆம் திகதி முதல் ஒக்டோபர் 06ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 13ஆவது ஆசிய வலைப்பந்து செம்பியன்சிப் போட்டிக்கு தயாராகும்  இலங்கை வலைப்பந்து சம்மேளனக் குழுவில் செமினி அல்விஸ் உள்ளடக்கப்பட்டுள்ளார். https://tamilwin.com/article/sri-lankan-player-failed-doping-test-1715314992?itm_source=parsely-special
    • வெற்றிலை மென்றதற்கு வழக்கா? பழுதடைந்த மரக்கறிகளை விற்றதற்கு வழக்கா ? வெற்றிலை மெல்லுவது யாழ்பாணத்தானின் சுய விருப்பம் அல்லவா ?  ( காவிக் கறையும் வாய்ப்பு ற்றையும் கொண்டு  வரும் ) தற்போது அதிகமாக பாவிக்கிறார்கள்  .😢
    • தமிழனுக்கு ஒரு பிடி உரிமையும் கொடுக்க முடியாது என்ற இனத்துவேசம் இன்று இலங்கை இந்தியாவின் மாகாணம் போல் ஏர்போர்ட் முதல் அனைத்திலும் தாரை வார்த்து கொடுத்துள்ளார்கள்  இந்தக்கால சிங்கள மதன முத்தாக்கள் . பகிடி என்னவென்றால் அதானி குழுமம் 20 வருடத்துக்கு ஒப்பந்தம் ஆம் அவ்வளவு காலம் இந்தியாவை சைனா காரன் விட்டு வைப்பானா ? மேலே கொச்சி தூள் கொட்டப்பட்டு உள்ளது அவரவர் அதை எடுத்து கொள்ளும் முறையில் உள்ளது .😃
    • என்னப்பனே எல்லோருக்கும் நல்ல அறிவையும் வாழ்க்கையும் கொடு...🙏🏼 அவர்கள் தெரியாமல் செய்யும் பிழைகளை மன்னித்தருள்வாயாக....🙏🏼
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.