Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிநாடுகளுக்கு காட்டிக் கொடுக்கும் கைங்காரியத்தில் எதிர்க்கட்சித் தலைவர்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளுக்கு காட்டிக் கொடுக்கும் கைங்காரியத்தில் எதிர்க்கட்சித் தலைவர்.

ஜ செவ்வாய்கிழமைஇ 15 மே 2007 ஸ ஜ லக்ஸ்மன் ஸ

ஜனநாயக அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கும் பயங்கரவாதத்துக்கும் வித்தியாசம் தெரியாத அரசியல் தலைவர்கள் நாட்டில் காணப்படுவது கவலையளிப்பதாக தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்க் கட்சித் தலைவர் வெளிநாடுகளுக்குச் சென்று நாட்டையும் மக்களையும் காட்டிக் கொடுத்துள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார். அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு எவருக்கும் உரிமை இருக்கின்ற போதிலும் அதைக் காரணமாக வைத்து தனது பிறந்த நாட்டைக் காட்டிக் கொடுப்பதை எவராலும் மன்னிக்க முடியாதெனவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டியுள்ளார். நேற்று திங்கட்கிழமை அலரிமாளிகையில் இடம்பெற்ற அரந்தலாவ படுகொலையின்போது கொல்லப்பட்ட மகாசங்கத்தினரின் 20 ஆவது நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்த நிகழ்வின்போது படுகொலை செய்யப்பட்ட 31 புத்த பிக்குகளின் நினைவாக 31 சிறுவர்கள் புத்த பிக்குகளாக மாற்றப்பட்டதோடு வடக்கு- கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட விகாரைகளுக்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது. இங்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது; இன்று நாம் இளம் சந்ததியை சிறுவர்களை சமுதாயத்துக்குப் பயன்படத்தக்க விதத்தில் உருவாக்குவதற்காக நடவடிக்கை எடுத்துவருகின்றோம். ஒழுக்கசீலர்களாக இளைய சந்ததியை உருவாக்குவதில் அரசு பொறுப்புடன் செயற்படும் போது புலிப் பயங்கரவாதிகள் வடக்கு, கிழக்கில் பால்மனம் மாறாத பாலர்களைக் கூட யுத்தம் செய்யத்தூண்டி ரி.-56 துப்பாக்கிகளையும் கத்தி, வாள்களையும் கைகளில் கொடுத்து தமது மக்களையே கொலை செய்யத் தூண்டுகின்றனர். நாம் ஆத்மீக நெறிகளை புகட்ட முனைகின்றோம். அவர்கள் கொலைவெறியை இளம் உள்ளங்களில் உருவாக்குகின்றனர். இந்த வித்தியாசத்தை எம்மில் பலருக்குப் புரிந்துகொள்ள முடியவில்லை. அரசியல் நலனுக்காக எதனையும் செய்ய இவர்கள் தயாராகிவிட்டனர். எமது நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் வெளிநாடுகளுக்குச் சென்று தாய் நாட்டையும் நாட்டு மக்களையும் காட்டிக் கொடுத்து வருகின்றார். தாய் நாட்டைப் பற்றிய சிந்தனை அவரின் உள்ளத்தில் துளியளவும் இருப்பதாக தெரியவில்லை. அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு எவருக்கும் உரிமை உண்டு. அதனை நாம் ஒருபோதும் மறுக்கப்போவதில்லை. அந்த விமர்சனம் கசப்பாக இருந்தாலும் நாம் ஜீரணித்துக் கொள்ளத்தயாராக இருக்கின்றோம். ஆனால், நாட்டையும் மக்களையும் காட்டிக்கொடுக்க எவருக்கும் உரிமை கிடையாது.

அப்படி காட்டிக் கொடுப்பவர்களை நாடு ஒரு போதும் மன்னிக்காது. எனது அரசாங்கம் இன்று பயங்கரவாதத்தையே எதிர்கொண்டுள்ளது. பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காகவே அரசு முனைப்புக்காட்டுகின்றது. தமிழ் மக்களுக்கு எதிராக அரசு ஒருபோதும் செயற்பட முன்வரவில்லை. தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க அரசு தயாராக உள்ளது. புலிப் பயங்கரவாதிகளின் இலட்சியத்தை ஒரு போதும் நிறைவேற்ற இடமளிக்கப் போவதில்லை. நாட்டை நேசித்த சகல மக்களினதும் உள்ளங்களை வென்ற, தமிழ்மக்களாலும் நேசிக்கப்பட்ட ஹந்துன்கமுவே நந்தரதன தேரோவைக்கூட புலிகள் நேற்று முன்தினம் படுகொலை செய்துள்ளனர். இவற்றையெல்லாம் எவ்வளவு காலத்துக்கு விட்டு வைக்கலாம், முடிவு தேவைப்படுகின்றது. எனவேதான் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளிவைக்கும் திடமான உறுதியை அரசு எடுத்துள்ளது. இதனை எதிர்க்கட்சி தவறாக அர்த்தம் கற்பிக்க முயற்சிக்கின்றது. அவர்களின் முயற்சி ஒரு போதும் வெற்றியளிக்கப் போவதில்லை. நாட்டை பாதுகாப்பதற்காக எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கு நான் தயங்கப் போவதில்லை. நாம் ஒரு போதும் நாட்டை காட்டிக் கொடுக்கப் போவதில்லை. பலருக்கு இன்னமும் கூட பயங்கரவாதம் பற்றியோ, பயங்கரவாதிகள் பற்றியோ, புரிந்து கொள்ள முடியவில்லை. நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் கடப்பாடு ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனக்குண்டு. வடக்கு கிழக்கு, தெற்கு என்று என்னால் பிரித்துப்பார்க்க முடியாது. அனைவரையும் எனது நாட்டு மக்களாகவே நோக்குகின்றேன். நான் கோருவது ஒன்றைத்தான், நாட்டைக் காட்டிக் கொடுக்காமல் சேறு பூசாமல் நாட்டை மீட்டெடுப்பதற்கு எம்மோடு ஒன்று சேருங்கள். நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் பொறுப்புடன் செயற்பட முன்வாருங்கள் என்பதுதான். இந்த வைபவத்தில் ஹெல உறுமய தலைவர் எல்லாவல மேதானந்த தேரோ, களனி பல்கலைக்கழக வேந்தர் வெல மிட்டியாவ குசல தம்ம தேரோ, அமெரிக்காவின் பிரதம சங்க நாயக்கா வல்பொல பியனந்த தேரோ உட்பட மகாசங்கத்தினர்களும் பௌத்த பீடாதிபதிகள், சமூகத்தலைவர்களும் கலந்து கொண்டனர்.

http://www.nitharsanam.com/?art=22900

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.