Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்? காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்.. டிஆர் பாலு விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திமுக புறக்கணிப்பு

திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல்? காங்கிரஸ் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்.. டிஆர் பாலு விளக்கம்

திமுக எம்பி டி.ஆர்.பாலு சொல்வதை பார்த்தால் திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது உறுதியாகி உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் சீட் பங்கீட்டில் கூட்டணி தர்மத்தை திமுக காப்பாற்றவில்லை என்று கேஎஸ் அழகிரி சொன்னது பெரிய அளவில் திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.இதற்கு திமுக தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

அதேநேரம் டெல்லியில் குடியுரிமை காங்கிரஸ் கமிட்டியின் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நேற்று நடந்தது. குடியுரிமை திருத்த சட்டம், என்ஆர்சி, ஜேஎன்யூ மாணவர்கள் தாக்கப்பட்டது, நாடு முழுக்க நடக்கும் போராட்டம் ஆகியவை குறித்து இதில் ஆலோசனை செய்யப்பட்டது.

எதிர்க்கட்சிகள் எல்லாம் கலந்து கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் தலைமை இதற்கு அழைப்பு விடுத்தது. ஆனால் மொத்தம் 20 கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். எனினும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கூட்டணி கட்சியான திமுக பங்கேற்கவில்லை.

இதனால் திமுக காங்கிரஸ் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டதோ என்று தகவல்கள் பரவியது. ஏனெனில் நேற்று டெல்லியில் தான் திமுக எம்பி டிஆர் பாலு இருந்தார். விசிக உள்ளிட்ட மற்ற கட்சிகள் பங்கேற்றபோதும் திமுக சார்பில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடத்திய கூட்டத்தில் யாரும் பங்கேற்காதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை.ஒன்றியத்திற்கு, மாவட்டத்திற்கு தலைவர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். திமுகவின் செயல்பாடுகள் கூட்டணி தர்மத்திற்கு புறம்பாக இருந்தது என்று கே.எஸ் அழகிரி அறிக்கைவிட்டதே இந்த பிரச்சனைக்கு காரணம்.

காங்கிரஸ் இப்படி பொதுவில் பேசி இருக்க கூடாது. ஏதாவது மனக்கசப்பு இருந்திருந்தால் தனியாக பேசி இருக்கலாம். மாறாக காங்கிரஸ் பொதுவில் அறிக்கை வெளியிட்டு, திமுக குறித்து பேசி இருக்க கூடாது என்று ஸ்டாலின் கருதினாராம். அதனால் தான் நேற்றைய கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லையாம்.

இது தொடர்பாக திமுக எம்பி டிஆர்பாலு கூறுகையில், கூட்டணி தர்மத்தை திமுக மதிக்கவில்லையென கே.எஸ்.அழகிரி கூறிய பின் காங்கிரஸ் கூட்டத்தில் எப்படி பங்கேற்க முடியும்? கூட்டணியில் பிரச்னை இருந்தால் கே.எஸ்.அழகிரி, ஸ்டாலினிடம் நேரில் தெரிவித்திருக்க வேண்டும் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

இதனிடையே கேஎஸ் அழகிரி நேற்று மாலையே திமுகவை சமாதானம் செய்யும் விதமாக அறிக்கை வெளியிட்டார். ப சிதம்பரமும் ஸ்டாலினை சமாதானம் செய்யும் வகையில் கேஎஸ் அழகிரியின் அறிக்கைக்கு புதிய விளக்கம் கொடுத்தார். எனினும் இதுவரை சமரசம் ஏற்பட்டதாக தெரியவில்லை.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/dmk-congress-alliance-cracks-dmk-mp-tr-balu-says-if-any-problem-to-told-to-mk-stalin-374059.html

  • கருத்துக்கள உறவுகள்

0.jpg

ஓம்.. உலக மகா விரிசல் .. இயக்குனர் சங்கர் மனது வைத்தால் அடைப்பை சரி செய்ய வாய்ப்பு உள்ளது..😢

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு அரசியல்: திமுக - காங்கிரஸ் விரிசல் பெரிதாகிறதா?

தி.மு.க. - காங்கிரஸ் விரிசல் பெரிதாகிறதா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்குப் போதிய இடங்கள் ஒதுக்கப்படாதது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி விடுத்த அறிக்கையை அடுத்து தமிழக காங்கிரஸ் கட்சிக்கும் தி.மு.கவுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குப் போதுமான இடங்களை ஒதுக்கீடு செய்யவில்லையெனக் கூறி, மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரியும் சட்டமன்ற கட்சித் தலைவர் கே.ஆர். ராமசாமியும் இணைந்து அறிக்கை ஒன்றை ஜனவரி பத்தாம் தேதியன்று வெளியிட்டனர்.

அந்த அறிக்கையில், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் மாவட்ட அளவில் பேசி இடங்களைப் பெற்றுக்கொள்வதாக முடிவெடுக்கப்பட்டதாகவும் அந்த முயற்சிகளுக்கு எந்தவித ஒத்துழைப்பும் இதுவரை கிடைக்கவில்லையென குற்றம்சாட்டிய அந்த அறிக்கை, 303 ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிகளில் தங்களுக்கு இரண்டு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டதாகக் கூறியது.

மேலும் 27 மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளில் ஒரு பதவிகூட காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படவில்லையென்றும் இது கூட்டணி தர்மத்திற்கு முரணானது புறம்பானது என்றும் அந்த அறிக்கை கூறியது.

தி.மு.க. - காங்கிரஸ் விரிசல் பெரிதாகிறதா?

இது எதிர்பார்த்ததைப் போலவே தி.மு.க. தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு, ஊடகங்களிடம் பேசிய அழகிரி, அந்த விவகாரம் முடிந்துபோன ஒன்று எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜனவரி 13ஆம் தேதியன்று தில்லியில் காங்கிரஸ் தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

இதனால், உள்ளாட்சித் தேர்தலையடுத்து தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட விரிசல் தொடர்ந்து பெரிதாகிறது என்ற விவாதங்கள் ஏற்பட்டன.

இந்த நிலையில், செவ்வாய்க் கிழமையன்று தில்லி சென்ற மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் கே,எஸ். அழகிரி சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார்.

அதே நேரத்தில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான டி.ஆர். பாலு, தி.மு.க. அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணத்தை விளக்கினார்.

தி.மு.க. - காங்கிரஸ் விரிசல் பெரிதாகிறதா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

"அந்த அறிக்கையைப் பார்த்த கழகத் தோழர்கள், நேரில் பார்க்கும்போதும் போனில் பேசும்போதும் சங்கடமாக இருக்கிறது. அவர்கள் நம் கூட்டணியில்தான் இருக்கிறார்களா என்று கேட்டார்கள். இதைத் தவிர்த்திருக்கலாம் என்று கூறினேன். அந்த அறிக்கையில் கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார்கள். அதனை எங்கள் தலைவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டாகக் கருதினோம். அதனால், சிஏஏ எதிர்ப்புக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மற்றபடி, கூட்டணி குறித்து காலம் பதில்சொல்லும்," என்று கூறினார்.

இதற்குப் பிறகு, தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ். அழகிரியிடம் டி.ஆர். பாலுவின் கருத்து குறித்து கேட்டபோது, "அவரது கருத்துக்கு பதில் கருத்து சொல்ல விரும்பவில்லை. ஒரு குடும்பம் இருந்தால், ஊடலும் கூடலும் இருக்கத்தான் செய்யும். வருத்தமும் கோபமும் கிடையாது. கூட்டணியில் சலசலப்பே இல்லை," என்று தெரிவித்தார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு தி.மு.க. ஏன் வரவில்லை என்பது குறித்து டி.ஆர். பாலுதான் கூறவேண்டும் என்று கூறிய கே.எஸ். அழகிரி, இந்தப் பஞ்சாயத்துத் தேர்தல் விவகாரம் எந்த காலத்திலும் எங்களுக்கும் தி.மு.கவுக்கும் உள்ள உறவை எப்போதும் பாதிக்காது என்றும் தங்கள் இணைப்புக்குக் காரணம், இதன் பின்னாலிருக்கும் கொள்கைதான் என்றும் தெரிவித்தார். ஆகவே, கூட்டணி தொடருமென்றும் கூறினார்.

2004ஆம் ஆண்டிலிருந்து 2013ஆம் ஆண்டு வரையிலும் தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியாகச் செயல்பட்டன. ஈழப் பிரச்சனையை அடுத்த, அந்தக் கூட்டணியில் இருந்து தி.மு.க. வெளியேறியது. இதற்குப் பிறகு, 2014ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தே போட்டியிட்டன. பிறகு மீண்டும் 2016ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 2019ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டு 39 இடங்களில் 38 இடங்களைக் கைப்பற்றின.

தி.மு.க. - காங்கிரஸ் விரிசல் பெரிதாகிறதா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

2019ல் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்றபோது, தொகுதி பங்கீடு குறித்து மாவட்ட மட்டத்தில் பேசிப் பிரித்துக்கொள்ளும்படி தி.மு.க. தலைமை கூறியது. ஆனால், மாவட்ட மட்டத்தில் தங்களுக்குப் போதுமான ஒத்துழைப்பில்லையென காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இந்த விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் பா.ஜ.கவின் மூத்த தலைவர் இல. கணேசன், காங்கிரஸ் கூட்டணியைவிட்டு தி.மு.க. விலகுவதே அக்கட்சிக்கு நல்லது எனக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

"இந்திய அளவில் ஒரு மாநிலக் கட்சியாக தி.மு.க. விமர்சித்ததைப் போல வேறு எந்தக் கட்சியும் பிரதமர் மோதியை விமர்சித்ததில்லை. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி பெற்ற இடங்களில் குறிப்பிடத்தக்க இடங்களை தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பெற்றது. இந்தப் பின்னணியில்தான் இந்த விவகாரத்தைப் பார்க்க வேண்டும். கூட்டணி குறித்து காலம்தான் பதில் சொல்லும் என்கிறார் டி.ஆர். பாலு. இதற்கு நடுவில் ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஆக, தி.மு.க. மீதான அழுத்தத்தை பா.ஜ.க. அதிகரித்து வருகிறது. தி.மு.க. என்ன செய்யும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்," என்கிறார் மூத்த பத்திரிகையாளரான மணி.

https://www.bbc.com/tamil/india-51105696

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணி எப்படி

திமுக கூட்டணியிலிருந்து காங். விலகினாலும் கவலையில்லை.. உங்களுத்தான் நஷ்டம்.. துரைமுருகன் பரபரப்பு!

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை, அது காங்கிரசுக்கு தான் நஷ்டம் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் காரணமாக திமுக காங்கிரஸ் இடையே பெரிய சண்டை ஏற்ப்பட்டுள்ளது. இந்த சண்டைக்கு கூட்டணி தர்மம்தான் காரணம் என்று காங்கிரஸ் கூறுகிறது.

உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை. திமுக கூட்டணி ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின் திமுகவை சமாதானப்படுத்தும் விதமான கே.எஸ் அழகிரி இரண்டு அறிக்கை வெளியிட்டார். ஆனால் திமுக இன்னும் காங்கிரஸ் தலைவர் மீதம், தமிழக காங்கிரஸ் கமிட்டி மீதும் கோபத்தில்தான் இருக்கிறது.

இந்த பிரச்சனை தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். அதில், காங்கிரஸ் எங்களைவிட்டு விலகிப்போனால் போயிட்டு போறாங்க. எங்களுக்கு என்ன வந்தது. எங்களுக்கு அதனால் துளி அளவு கூட பிரச்சனை கிடையாது.

கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை. குறிப்பா நான் துளி கூட கூட கவலைப்பட மாட்டேன். அவர்களுக்குத்தான் சிக்கலாக முடியும். அது காங்கிரசுக்கு தான் நஷ்டம்.

எங்களுக்கு காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருந்து விலகினாலும், வாக்கு வங்கி பாதிக்காது. அவர்களுக்கு வாக்கு வங்கி இருந்தால்தானே, நாங்கள் பாதிக்கப்படுவோம். எங்கள் கட்சியில் வேறு சிலர் வேறு மாதிரி சொல்லலாம். நான் நேரடியாக என்னுடைய பதிலை சொல்லிவிட்டேன், என்று துரைமுருகன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

துரைமுருகன் கொடுத்த இந்த அதிரடி பேட்டியால் காங்கிரஸ் தரப்பு ஆடிப்போய் இருக்கிறது. திமுக காங்கிரஸ் கூட்டணி இடையிலான விரிசல் இதனால் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிக் கொண்டே செல்கிறது. இது தொடர்பாக இதுவரை ஸ்டாலின் கருத்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/it-won-t-be-a-problem-for-dmk-if-congress-alliance-says-duraimurgan-374167.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று என்ன

வேலூர் தேர்தலின் போது ஏன் இந்த ஞானம் வரவில்லை.. திமுகவிற்கு கார்த்தி சிதம்பரம் கேள்வி.. பரபரப்பு!

வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் ஏன் திமுகவிற்கு இந்த ஞானம் வரவில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகனுக்கு காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக காங்கிரஸ் இடையிலான பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டு கட்சிகளின் கூட்டணி எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்று கூறுகிறார்கள். இரண்டு கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்களும் மாறி மாறி அறிக்கை வெளியிட்டு சண்டை போட்டு வருகிறார்கள்.

உள்ளாட்சி தேர்தலில் போதிய இடங்களை திமுக எங்களுக்கு அளிக்கவில்லை. திமுக கூட்டணி ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி குறிப்பிட்டுள்ளார். இதுதான் சண்டைக்கு தொடக்கமாக அமைந்தது.

இந்த பிரச்சனை தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி அளித்துள்ளார். அதில், காங்கிரஸ் எங்களைவிட்டு விலகிப்போனால் போயிட்டு போறாங்க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினாலும் கவலையில்லை. குறிப்பா நான் துளி கூட கூட கவலைப்பட மாட்டேன். அவர்களுக்குத்தான் சிக்கலாக முடியும். அது காங்கிரசுக்கு தான் நஷ்டம்,என்றார் .

இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தற்போது கேள்வி எழுப்பி உள்ளார். அதில், வேலூர் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் ஏன் இந்த ஞானம் வரவில்லை?. அப்போது மட்டும் காங்கிரஸ் கட்சியின் உதவி திமுக கவிற்கு தேவைப்பட்டதோ. இப்போது மட்டும் நாங்கள் தேவை இல்லை என்று திமுக எப்படி சொல்லலாம் என்று கார்த்தி சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.

வேலூர் லோக்சபா தேர்தலில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அங்கு திமுக கூட்டணி மிகப்பெரிய இழுபறிக்கு பின்தான் வென்றது. கதிர் ஆனந்த் தோல்விக்கு அருகே சென்று 8141 வாக்குகள் வித்தியாசத்தில்தான் கதிர் ஆனந்த் வென்றார்.

இதைத்தான் கார்த்தி சிதம்பரம் தற்போது சுட்டிக் காட்டியுள்ளார் என்று கூறுகிறார்கள். இதனால் திமுக காங்கிரஸ் கூட்டணி மொத்தமாக உடையும் நிலையில் உள்ளது. இது தொடர்பாக இன்னும் திமுக தலைவர் ஸ்டாலின் எந்த விதமான கருத்தும் தெரிவிக்கவில்லை.

Read more at: https://tamil.oneindia.com/news/vellore/karthi-chidambaram-replies-to-duraimurgan-comment-on-dmk-congress-alliance-374172.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.