Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் நோக்கங்களுக்காக அவசர மீள் குடியேற்றம்

Featured Replies

அரசியல் நோக்கங்களுக்காக அவசர மீள் குடியேற்றம்

கிழக்கில் பெரும் இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு, லட்சக்கணக்கானோரை நாட்டுக்குள்ளேயே இடம்பெயரவைத்து, மனிதப் பேரவல அனர்த்தத்தை ஏற்படுத்திய கொழும்பு அரசு, அந்தச் செயற்பாட்டின் மூலோபாயமாக இருக்கும் தனது தந்திரத் திட்டத்தின் அடுத்த கட்ட செயற்பாடுகளை காய்நகர்த்தல்களை உடனடியாகவே ஆரம்பித்துவிட்டது.

அண்மைக்காலத்தில் கிழக்கிலங்கையில் அரசுப் படைகள் மேற்கொண்ட பெரும் தொடர் இராணுவ நடவடிக்கைகளினால் சுமார் இரண்டு லட்சம் தமிழர்கள் தமது வீடு,வாசல்கள், நிலபுலன்கள், உடைமைகள், சொத்துக்களைக் கைவிட்டு ஏதிலிகளாக இடம்பெயர்ந்தனர்.

நலனோம்பு மையங்கள் என்ற பெயரில் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் கூட்டம் கூட்டமாகத் தங்கவைக்கப்பட்டிருக்கும் இந்த மக்களை மீண்டும் அவர்களது இடங்களுக்கு "விரட்டியடிக்கும் பணி ' ஆரம்பமாகிவிட்டது.

கிழக்கில் படையினரால் அண்மையில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவில்லை என்று ஐ. நா. அமைப்புகள் உட்பட உதவி நிறுவனங்கள் விடுத்த எச்சரிக்கையையும் புறக்கணித்துவிட்டு மீறி மீள்குடியமர்வு நடவடிக்கையை அரசு ஆரம்பித்து விட்டது.

இந்தப் பகுதியில் சுமார் ஒரு லட்சம் மக்கள் தமது பாதுகாப்புத் தொடர்பான அச்சத்தை எதிர்கொண்டுள்ளதாக உதவி நிறுவனங்கள் தமது அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

""பாதுகாப்பும், கண்ணியமும், கௌரவ வாழ்வும் உறுதிப்படுத்தப்படாத சூழ்நிலையில் மக்களை மீளக்குடியமர்த்தத் திட்டமிடப்படுவது மனிதாபிமான சமூகத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது'' என்று ஐ. நா. அமைப்புகளையும் உள்ளடக்கிய உதவி நிறுவனங்களின் குழு தனது அறிக்கையில் கவலை தெரிவித்திருக்கின்றது.

மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பக்கூடியளவுக்கு நிலைமை முன்னேற்றமடையவில்லை என்பதையும் அது கவலையோடும், விசனத்தோடும் சுட்டிக்காட்டியுமிருக்கின்

ஆனால் நீண்ட காலமாக உயர்பாதுகாப்பு வலயங்கள் என்று கூறப்பட்ட பகுதியிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதில் அரசு அக்கறையேதும் செலுத்தவில்லையே! தேவைப்படும் போது துரத்துவதற்கும், தேவைப்படும்போது அழைப்பதற்கும் சிறீ லங்கா பயங்கரவாத அரசுக்கு தமிழ் மக்கள் வெறும் பொம்மைகள் மட்டுமே!

  • தொடங்கியவர்

மீளக்குடியேறுவோர் பாதுகாப்பு உத்தரவாதத்துக்கு வலியுறுத்தல் -இளம் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து பெரும் அச்சம்

மட்டக்களப்பு படுவான்கரைப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தும் அதேநேரம் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சமும் பீதியும் அடைந்துள்ளனர்.

தாங்கள் மீள்குடியேறும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டுமெனக் கோரும் இவர்கள் தங்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.

படுவான்கரைப் பகுதியில் கடந்த மார்ச் மாத முற்பகுதியில் இடம்பெற்ற பாரிய இராணுவ நடவடிக்கையால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றும் நடவடிக்கை நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆரம்பமானது.

நேற்று இரண்டாவது நாளாக வெல்லாவெளிப் பிரதேசத்திற்கு 975 குடும்பங்களைச் சேர்ந்த 3,729 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர். வெல்லாவெளிப் பிரதேசத்தைச் சேர்ந்த முனைத்தீவு பட்டாபுரத்தைச் சேர்ந்த இந்த மக்கள் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்திற்கு அண்மையில் விச் தோட்டத்திற்கு அழைக்கப்பட்டு பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரினால் உடற் சோதனை மற்றும் பொதிகள் சோதனை இடப்பட்ட பின்னர் பதிவினை மேற்கொண்டு பஸ்கள் மூலம் பட்டிருப்புப் பாலம் ஊடாக அனுப்பிவைக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் கோயில்போரதீவு தெற்கு, கோயில்போரதீவு மேற்கு,போரதீவு வடக்கு பகுதியைச் சேர்ந்த 937 குடும்பங்களைச் சேர்ந்த 3,520 பேர் குடியமர்த்த திட்டமிட்டு இருந்த போதும் 817 குடும்பங்களைச் சேர்ந்த 2,502 பேரே குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

தற்போது மீள்குடியமர்த்தப்படும் மக்கள் தங்களது சொந்த மண்ணிற்கு சென்று வாழ வேண்டும் என ஆதங்கப்பட்டுச் சென்றாலும் அச்சத்துடனும் பீதியுடனுமே அங்கு செல்கின்றனர்.

அகதி வாழ்க்கையில் பட்ட துன்ப துயரத்திலிருந்து விடுபட வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ள மக்கள் மீள்குடியமர்த்தப்பட்ட பின்னர் தங்கள் சொந்த இடங்களில் மரநிழலிலாவது நிம்மதியாக வாழலாம் என்பதில் சந்தோஷப்படும் அதேவேளை எவ்வாறான இராணுவ நெருக்கடிகளுக்கு உள்ளாக்கப்படவுள்ளோமோ என்பது குறித்து பெரும் அச்சத்துடனும் பீதியுடனுமே செல்கின்றனர்.

1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் இளைஞர் யுவதிகளுக்கும் ஆண்களுக்கும் நிகழ்ந்த சம்பவங்கள் தற்போதும் ஏற்படுமோ என்பதே இவர்களது அச்சமாக உள்ளது.

படுவான்கரையில் பல இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்படும். அதேவேளை, விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்குமிடையில் மோதலேற்பட்டால் சுற்றிவளைத்து இளைஞர்களையும், ஆண்களையும் கைது செய்வதுடன் 1990 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நிகழ்ந்த கொடூரங்கள் இடம் பெறலாமென்றும் அஞ்சுகின்றனர்.

முகாம்களுக்கு வேலைக்குச் செல்லல், கையொப்பம் வைக்க அழைத்தல் போன்ற சம்பவங்கள் இடம் பெறுமோ என்பது குறித்தே தமக்கு அச்சமும் பீதியுமாய் உள்ளதாக இந்த மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மீள் குடியமர்த்தப்படும் மக்கள் தெரிவிக்கையில்;

நாங்கள் எமது சொந்த இடத்துக்குச் செல்ல வேண்டும் அங்கு சென்று நிம்மதியாக எமது மண்ணிலே சாக வேண்டும் இங்கு பாலை வனத்தில் வாழ்வதுபோன்று சாக முடியாது. தொற்று நோய் அதிகரித்து வருகிறது. எமது இடத்தில் எமது கிணற்றில் இருந்து தண்ணீர் அள்ளிக் குடித்தாலே போதும்.

படையினர் எம்மைத் துன்பப்படுத்தக் கூடாது. அவர்களது பாதுகாப்பிற்கு எங்களை பயன்படுத்தக் கூடாது. புலிகளுக்கும் அவர்களுக்கும் இடையில் பிரச்சினைவந்தால் எமக்கு ஒன்றும் செய்யக் கூடாது. அவ்வாறு ஏதாவது நடக்குமோ என்பது குறித்தே அச்சப்படுகின்றோம். இளைஞர் யுவதிகளை வைத்திருப்பது குறித்தே பயமாக உள்ளது.

எமது சொந்த இடத்துக்கு போய்ச் சேர வேண்டும். ஆனால் அங்கு இராணுவத்தினர் இருப்பதே பயமாக உள்ளது. 1990 ஆம் ஆண்டு இராணுவத்தினர் இருந்த போது பல கஷ்டங்களை அனுபவித்துள்ளோம். ஆண்களையும் இளைஞர்களையும் மிகவும் துன்பப்படுத்தினார்கள். அவ்வாறான துன்பங்களை எதிர்நோக்க வேண்டி வருமோ தெரியாது. 1990 ஆம் ஆண்டு பட்ட கஷ்டம் போதும். எமது பகுதிக்கு மனித உரிமை அமைப்புகளோ அரச சார்பற்ற நிறுவனங்களோ எந்த நேரமும் வராவிட்டால் படையினர் நினைத்ததைச் செய்வார்கள். நாங்கள் குடியமர்த்தப்படும் அதேவேளை மனித உரிமை ஆணைக்குழு, அரச சார்பற்ற நிறுவனங்கள், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றின் காரியாலயங்களும் திறக்கப்பட்டு எமக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இல்லாவிட்டால் புலிகளுடன் மோதல் இடம்பெற்றால் எமது இளைஞர், யுவதிகளை இவர்கள் துன்பப்படுத்துவார்கள். எமது பிள்ளைகள் சகோதரங்களை எவ்வாறு வைத்துக் காப்பாற்றுவது என்பது குறித்தே மீள்குடியமர்வு விடயத்தில் அச்சமாகவுள்ளது என்றனர்.

இளைஞர்கள் சிலர் கூறுகையில், எமது ஊருக்கு நாங்கள் செல்ல வேண்டும். ஆனால், பயமாக உள்ளது. இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகள் ஏதும் செய்துவிட்டுச் சென்றால் எங்களை பிடித்து அடிப்பார்கள், கைது செய்வார்கள். எமது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் இல்லை. எமது பகுதிக்கு எவரும் வருவதில்லை. எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றனர்.

மீள்குடியேற்றப்பட வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ள அதேவேளை மக்கள் தங்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றனர்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.