Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முன்னாள் இராணுவத்தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் இராணுவத்தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

முன்னாள் இராணுவத்தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேரையும் நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு

 

எழுத்தாளர் Bella Dalima

Colombo (News 1st) முன்னாள் இராணுவத்தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 பேரையும் நாளை மறுதினம் (24) மன்றில் ஆஜராகுமாறு கொழும்பு விசேட மூவரடங்கிய மேல்நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது.

11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கு தொடர்பிலேயே இந்த அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சட்டமா அதிபரினால் தொடரப்பட்டிருந்த வழக்கை விசாரித்த ஷம்பா ஜானகி ராஜரத்ன, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க உள்ளிட்ட விசேட மூவரடங்கிய மேல்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது.

இதற்கிணங்க, நாளை மறுதினம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு முன்னாள் இராணுவத்தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ரியல் அட்மிரல் T.K.P. தசநாயக்க உள்ளிட்ட 14 பேருக்கும் அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

https://www.newsfirst.lk/tamil/2020/01/22/முன்னாள்-இராணுவத்தளபதி-வ/

  • கருத்துக்கள உறவுகள்

இவர் மகிந்த மற்றும் கோத்தாபயவின் நெருங்கிய நண்பராச்சே? இவரை இப்போது எதற்காக மீண்டும் விசாரணைக்கு அழைக்கிறார்கள் என்று தெரியவில்லையே? 

அடுத்ததாக, இவரை புதிதாக ஒரு பதவியில் அண்மையில்த்தான் மைத்திரிபால அமர்த்தியிருந்தார். அதுமட்டுமல்லாமல், முன்னால் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு விசாரணைகளிலிருந்து விலக்களிக்கும் சட்டமூலத்தை அமுல்ப்படுத்தவேண்டுமென்று மைத்திரியிடம் கோரிக்கை வைத்தவர்களின் இவர் முதன்மையானவர். அதற்கமைய, கோத்தாவின் அரசும் முன்னாள் ராணுவ புல்நாய்வுத்துறை அதிகாரிகளுக்கு அவர்கள் செய்த மனிதவுரிமை மீறல்களுக்கெதிரான விசாரணைகளிலிருந்து விலக்களிக்கும் சட்டமூலத்தை முன்வைத்திருக்கிறது.

சிலவேளை இவரை எல்லா வழக்குகளிலிருந்து விடுவிப்பதற்காக நீதிமன்றிற்கு அழைத்திருக்கலாம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.