Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உயிர் கொல்லி கொரொனா : அடிக்கடி கைகளை கழுவுவதே ஒரே வழி

Featured Replies

சீனாவின் ஹுபே மாகாணத்திலுள்ள வுஹான் நகரில் ஆரம்பித்த உயிர்கொல்லி கொரோனா வைரஸ் தாக்கம் இன்று முழு உலகத்துக்கும் ஓர் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச மருத்துவ அமைப்புக்கள் திணறிக் கொண்டிருக்கின்றன. எப்படி இதிலிருந்து மீண்டு வருவது என்பதே இன்று உலக வாழ் மக்கள் மத்தியில் பாரிய சவாலாகமாறியிருக்கின்றது.

வுஹான் நகரில் நபரொருவர் ஒருநாள் காலையில் எழுந்தபோது மூச்சு விடுவதற்கு கஷ்டப்பட்டிருக்கின்றார். அவர் ஒரு வைத்தியரிடம் சென்று தன்னைப் பரிசோதித்திருக்கின்றார். அப்போது அவரை பரிசோதித்த வைத்தியர்கள் குறித்த நபரின் உடலில் தொற்றியிருக்கின்ற வைரஸ் குறித்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அப்போதிருந்து பரவிய இந்த உயிர்கொல்லி வைரஸ் தற்போது பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளதுடன் மக்களின் உயிருக்கே அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

இதுவரை 18 நாடுகளுக்கு இந்த கொரோனா வைரஸ் பரவியுள்ளது;

10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 213 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த அனைவரும் சீனாவைச் சேர்ந்தவர்கள். இலங்கையிலும் ஒரு சீனப்பெண் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்துக்குள்ளாகி கண்டுபிடிக்கப்பட்டு ஐ.டி.எச். வைத்தியசாலையில் தனியறையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவர் தற்போது குணமடைந்து வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்திருக்கின்றார்.

முதலில் இந்த உயிர்கொல்லி வைரஸ் எவ்வாறு வெளியில் வருகின்றது என்பதைப் பார்க்க வேண்டும். பொதுவாகவே விலங்குகளில் இவ்வாறான வைரஸ்கள் இருக்கின்றன. அவை மனித உடலுக்குள் செல்வதால் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதுவரை விலங்குகளிலிருந்து ஏழு உயிர்கொல்லி வைரஸ்கள் மனிதனுக்கு பரவியிருக்கின்றன. முக்கியமாக 2000ஆம் ஆண்டுகளில் பரவிய சார்ஸ் வைரஸ் மிகக் கொடியதாகக் காணப்பட்டது. அதன் பின்னர் சிகா, இன்புளுவென்சா போன்ற வைரஸ்கள் விலங்குகளிலிருந்து மனிதனுக்கு பரவியிருந்தன.

மத்திய கிழக்கில் ஒட்டகத்திலிருந்து மேர்ஸ் என்ற வைரஸ் பரவியிருந்தது. அந்தவகையிலேயே விலங்கிவி ருந்து தற்போது மற்றுமொரு வைரஸ் மனிதனுக்கு பரவியிருக்கின்றது. இந்த வைரஸ் தற்போது ஒரு மனிதனின் உடலிலிருந்து மற்றுமொரு உடலுக்கு பரவிக்கொண்டு செல்கின்றது. இந்த விலங் குகளின் வைரஸ்கள் எவ்வாறு வெளியே வருகின்றன என்பதும் ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது. அதாவது பல வழிகளில் இந்த வைரஸ்கள் தொற்றலாம். இம்முறை இந்த கொரோனா வைரஸானது சீன வுஹான் நகரில் ஒரு நபர் பாம்பை  உண்டதால், அதிலிருந்து இந்த வைரஸ் பரவியிருப்பதாக நம்பப்படுகின்றது. எனினும், இதுவரை இந்த வைரஸ் மனித உடலுக்கு எவ்வாறு பரவியது என்பது தொடர்பான துல்லியமான தகவல்கள் வெளிவரவில்லை என்பதே யதார்த்தமாகும்.

எவ்வாறு வந்தது?
சீனாவின் ஹுபே மாகாணத்தில் உள்ள வுஹான் நகரில் கடலுணவு சந்தையொன்று காணப்படுவதாகவும் அதில் காட்டு விலகினங்கள் விற்கப்படுவதாகவும் அதிலிருந்தே குறித்த நபர் பாம்பை வாங்கிவந்து உண்டதாகவும் சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.   இந்த கொரோனா வைரஸ் பரவலை யடுத்து வுஹான் நகரம் முழுமையாக மூடப்பட்டிருக்கின்றது. அங்கிருந்து யாரும் வெளியே செல்லவோ அல்லது உள்நுழையவோ முடியாது.

இந்த நிலையிலேயே உலக நாடுகள் என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கின்றன. இதற்கான தடுப்பூசியைத் தயாரிக்கும் தீவிர முயற்சியில் உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச சுகாதார நிறுவனங்கள் கடுமையாக ஈடுபட்டுள்ளன. எனினும் அது இலகுவான விடயமல்ல என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வுஹான் நகர் மூடப்பட்டுள்ளதால் அந்த நகரிலுள்ள வெளிநாட்டு மாணவர்கள் கடும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளனர். வுஹான் நகரிலுள்ள பல்கலைக்கழகங்களில் பல வெளிநாட்டு மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இலங்கை மாணவர்களும் அங்கு கல்வி கற்கின்றனர். இந்த நிலையில், இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் வுஹான் நகரிலுள்ள தமது மாணவர்களை அழைத்து வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுகின்றன. எனினும், அது மிகவும் சிரமமான விடயமாகவே காணப்படுகின்றது. பல நாடுகள் சீனாவுக்கான விமானப் பயணங்களையும் ரத்து செய்து வருகின்றன.

இலங்கை அரசாங்கத்தால் இன்னும் வுஹான் நகரிலிருந்து ஒரு மாணவரைக்கூட அழைத்துவர முடியவில்லை. எனினும் இதற்கான தீவிர முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

வயது முதிர்ந்தவர்கள்
இந்த வைரஸானது வயது முதிர்ந்தவர்களையும் ஏலவே ஏதாவது நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களையுமே அதிகளவில் தாக்குவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது. தற்போது சீனாவில் உயிரிழந்திருக்கின்ற 213 பேரில் அதிகமானோர் வயது முதிர்ந்தவர்களாகவும் ஏலவே ஏதாவது நோயினால் பாதிக்கப்பட்டவர்களாகவுமே இருந்துள்ளனர்.

திணறும் நிலை
உலக நாடுகள் இந்த விடயம் தொடர்பில் என்ன செய்வது என்பது தெரியாமல் திணறும் சூழலில் இதிலிருந்து மனிதர்கள் தம்மைக் காப்பாற்றிக்கொள்வதற்கான வழிமுறைகளை சர்வதேச சுகாதார அமைப்பும் உள்நாட்டில் சுகாதார அமைச்சும் வெளியிட்டு வருகின்றன. குறித்த ஆலோசனைகளையும் வழிமுறைகளையும் பின்பற்றினால் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களில் தொடர்ச்சியாக மக்கள் தமது கைகளை சவர்க்காரமிட்டு கழுவுமாறு பிரதானமாக வலியுறுத்தியிருக்கின்றது. கைகள் அசுத்தமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றை அடிக்கடி கழுவிக்கொண்டிருக்குமாறு சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது. மிக முக்கியமாக தும்மல், இருமல் வந்தால் உடனடியாக கைகளைக் கழுவ வேண்டும் என சுட்டிக்காட்டப்படுகின்றது. ஒரு நோயாளியைப் பராமரிப்பவர் அடிக்கடி கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும். அத்துடன் உணவு சமைப்பதற்கு முன்னரும் சமைத்த பின்னரும் உணவு உண்பதற்கு முன்னரும் கைகளை சுத்தமாக கழுவிக்கொள்வது அவசியம் என்று உலக சுகாதார ஸ்தாபனம் அறிவுறுத்தியுள்ளது.

கைகளைக் கழுவுங்கள்
இதேவேளை, இந்தக் கொரோனா வைரஸ் எவ்வாறு பரவுகின்றது என்பது தொடர்பாக இலங்கை சமுதாய வைத்திய நிபுணர் ஆர். கேசவன் கேசரிக்கு கருத்து பகிர்கையில்,

இந்த கொரோனா வைரஸ் மனிதனில் இருந்து மனிதனுக்குப் பரவும் அபாயம் உள்ளது. இது எவ்வாறு ஓர் உடலிலிருந்து இன்னோர் உடலுக்குப் பரவுகின்றது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும். ஒருவர் தும்மும் போது அல்லது இருமும் போது அவரின் வாயிலிருந்து உமிழ்நீர் வெளிவரும். அந்த உமிழ்நீர் கண்களுக்குப் புலப் படுவதில்லை. எனவே அந்த உமிழ்நீர் அருகில் இருக்கின்ற மேசைகள், கதிரைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களில் படியலாம். அது தவிர ஒருவர் ஒரு கட்டிடத்தின் மாடிப் படிகளில் ஏறும்போதோ அல்லது இறங்கும் போதோ தும்மினால் அந்தப் படிக்கட்டுகளில் அவரின் உமிழ்நீர் படியலாம். அச்சமயத்தில் வேறு யாராவது அந்தப் படியில் கை வைத்தால் அல்லது மேசைகள், கதிரைகள் உள்ளிட்ட பொருட்களில் கை வைக்கும்போது அந்த உமிழ்நீர் அவரின் கைகளில் படியும். அவர் அந்த கைகளை தனது வாய், மூக்கில் வைக்கும்போது இந்த வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் இருக்கின்றது. அத்துடன், பொதுப் போக்குவரத்தின்போதும், ஒன்றுகூடல்களில் போதும் இந்த நிலைமை ஏற்படலாம். எனவே இவை தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டியது அவசியமாகிறது.

மிக முக்கியமாக கைகளை அடிக்கடி சவர்க்காரமிட்டு கழுவிக்கொண்டிருப்பது மிக அவசியமாகும். வெளியேசென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பியவுடன் உடனடியாக கைகளைக் கழுவ வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டாம் என்று நாம் கூறவில்லை. ஆனால், முகக்கவசம் அணிவதை விட கைகளை அடிக்கடி கழுவுவதே பாதுகாப்பான முறையாக இருக்கும்.

காய்ச்சல், சளி, இருமல், தும்மல், மூச்செடுப்பதற்கு சிரமம் ஆகியவையே இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தின் அறிகுறிகளாக இருக்கின்றன. எனவே, இவை தொடர்பான நிலைமை ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடவேண்டும். இந்த கொரோனா வைரஸ் உடலுக்குள் சென்றதும் நுரையீரலை தாக்குகின்றது. அதனைத் தொடர்ந்து நிமோனியா நிலை ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் அபாயத்தைத் தோற்றுவிக்கின்றது. கடந்த காலங்களில் ஏற்பட்ட வைரஸ்களுடன் ஒப்பிடுகையில் இந்த கொரோனா வைரஸினால் உயிரிழப்பு என்பது  ஐந்து வீதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
வயது முதிர்ந்தவர்கள், ஏலவே ஏதாவது நோய்த்தாக்கம் இருக்கின்றவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எப்படியும் அடிக்கடி கைகளைச் சுத்தமாகக் கழுவுவதன் மூலம் இந்த தாக்கத்திலிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். எனவே, கைகளைக் கழுவுவதே இங்கு முக்கியமானதாகும்” என்றும் குறிப்பிட்டார்.

அந்தவகையில், பொதுமக்கள் தொடர்ச்சியாக சவர்க்காரமிட்டு கைகளை கழுவுவதற்கு பழகிக்கொள்ள வேண்டும். ஏதாவது பொருட்களில் கைகளை வைத்தால் உடனடியாக சவர்க்காரமிட்டு கைகளைக் கழுவுவது அவசியமாகின்றது. அதனூடாக இதிலிருந்து மனிதர்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இது தொடர்பாக இலங்கை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில்ஜாசிங்க கேசரியுடன் தகவல் பகிர்கையில்,

பொறுப்புடன் செயற்படுங்கள்
''முழு உலகத்துக்குமே நெருக்கடியான நேரம். இலங்கைக்கும் ஒரு வகையில் நெருக்கடியான நேரமாகவே உள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் தொடர்பில் அநாவசிய பயம் கொள்ள வேண்டாம். எனினும், நாம் தயாராக இருக்க வேண்டும். இது பரவுவதைத் தடுப்பதற்கு நாம் உரிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது அவசியமாகும். நாம் இலங்கைக்குள் இந்த வைரஸ் வருவதை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றது.

பலாலி விமான நிலையத்திலும் இது நடைபெறுகின்றது. துறைமுகங்களிலும் கவனம் செலுத்தப்படுகின்றது. துறைமுகங்கள் ஊடாக வருகின்ற வெளிநாட்டவர்கள் குறித்தும் பரிசோதனை செய்யப்படுகின்றது.

விமான நிலையத்திலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்கள் எங்கே பயணிக்கின்றனர் என்பது தொடர்பான விபரங்களைச் சேகரிக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம். சுகாதார பரிசோதகர்கள் அவர்களைக் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர். சீன நாட்டவர்கள் அதிகம் பணியாற்றுகின்ற இடங்களைச் சென்று பார்வையிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கை வைத்திய ஆய்வு நிறுவனம் நொவேல் கொரோனா 2019 என்ற வைரஸ் பரிசோதனை முறையை உருவாக்கியுள்ளது. எமது பிராந்தியததில் கொழும்பிலும் இந்தியாவின் புனே நகரில் மட்டுமே இந்த முறைமை உள்ளது என்று குறிப்பிட்டார்.

எனவே, பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியமாகின்றது. எப்போதும் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி சவர்க்காரமிட்டு கைகளைக் கழுவுவது முக்கியம். அடிக்கடி கைகளால் முகத்தைத் தொட்டுக்கொண்டிருக்க வேண்டாம். உலக சுகாதார அமைப்பும் ஏனைய அமைப்புக்களும் இதற்கான தடுப்பூசியை கண்டுபிடிப்பது தொடர்பாக தீவிரமாக உழைத்து வருகின்றன.  எனினும், அதற்கு குறிப்பிட்ட காலப்பகுதி அவசியம் என சுட்டிக்காட்டப்படுகின்றது. 

எப்படியிருப்பினும் விரைவாக இதற்கான தடுப்பூசிகண்டுபிடிக்கப்பட்டுவிடும் என உலகம் நம்புகின்றது.

அதுவரை இந்த வைரஸ் பரவாமல் பார்த்துக்கொள்வதே மிக முக்கியமானது. வைத்திய நிபுணர்கள் கூறுவதைப்போன்று பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் சரியாகப் பின்பற்ற வேண்டும். மிக முக்கியமாக இறைச்சி உணவுகளை நன்றாக அவித்து சமைத்து உண்ணுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இல்லாவிடின் அவற்றில் உள்ள வைரஸ்கள்  மனிதனின் உடலை தாக்கும் அபாயம் உள்ளது. மக்கள் தமது பாதுகாப்புக்கு முகக்கவசத்தை அணியலாம். ஆனால், அதனைவிட எப்போதும் கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல் அவசியமாகின்றது. குறுகிய இடைவெளியில் இருந்து இருவர் பேசிக்கொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது. குறைந்தபட்சம் ஒருமீற்றர் இடைவெளி பேணப்படுவது அவசியம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.

நெருக்கடியான இந்த காலகட்டத்தில் மக்கள் தமது உடல்நல பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினதும் எமது நாட்டின் சுகாதார அமைச்சினதும் மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுவது அவசியமாகும். அதனூடாக இந்த அபாயகரமான உயிர்கொல்லி கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்க முடியும். எனவே, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

https://www.virakesari.lk/article/74733

  • தொடங்கியவர்

 

image_0568e874f5.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.