Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கை மீது அமெரிக்காவுக்கு கேந்திர முக்கியத்துவம் கருதிய கரிசனை இல்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை மீது அமெரிக்காவுக்கு கேந்திர முக்கியத்துவம் கருதிய கரிசனை இல்லை

[17 - May - 2007]

* வாஷிங்டனின் முன்னாள் தூதுவர் லன்ஸ்டெட்

அமெரிக்காவிற்கு இலங்கை குறித்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நோக்கங்களோ அல்லது பொருளாதார நலனை அடிப்படையாகக் கொண்ட அக்கறையோ இல்லையென கொழும்பிற்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஜெவ்ரி லன்ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சமாதான முயற்சிகளில் அமெரிக்காவின் பங்களிப்பு குறித்து ஆசியா பவுண்டேஷனுக்கு அளித்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தென்னாசியாவின் ஏனைய நாடுகளுடன் உள்ளது போன்று கேந்திர நலன்களை அடிப்படையாகக் கொண்ட இராணுவ உறவு இலங்கையுடன் அமெரிக்காவிற்கு கிடையாது என தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

வாஷிங்டனுக்கு இலங்கை குறித்து குறிப்பிடத்தக்க கேந்திர முக்கியத்துவ நோக்கமோ அல்லது பொருளாதார நலனோ இல்லை.

எனினும், 2001 இலிருந்து இலங்கையின் சமாதான முயற்சிகளில் இரு காரணங்களுக்காகவே அது அக்கறை கொண்டுள்ளது.

செப்டெம்பர் 11 இற்குப் பின்னர் சர்வதேச அளவில் பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவது என்ற அதன் உறுதிப்பாடும், மனித உரிமைகளை சகல் இடங்களிலும் நிலைநாட்டுவது என்ற அக்கறையும் அந்த இரு காரணங்களாகும்.

இலங்கையுடன் அமெரிக்கா சுமுகமான இராணுவ, இராணுவ உறவுகளை கொண்டுள்ள போதிலும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா போன்று கேந்திர முக்கியத்துவ நோக்கங்கள் இல்லை.

தென்னாசியாவின் பல ஆய்வாளர்கள் தெரிவிப்பது போன்று திருகோணமலையை இராணுவ நோக்கங்களுக்கு பயன்படுத்துவது குறித்து அமெரிக்கா எவ்வித ஆர்வமும் கொண்டிருக்கவில்லை.

திருகோணமலை முக்கிய கடல்பாதையில் அமைந்திருக்கவில்லை. அதன் உட்கட்டமைப்பு மோசமானது. இவை யாவற்றையும் விட, அது மோதல் நடைபெறும் பகுதியிலுள்ளது.

விடுதலைப்புலிகளால் எந்நேரமும் அது தாக்கப்படலாம். இந்தியாவின் அயல்நாடொன்றில் தளமொன்றை உருவாக்குவதன் மூலம் புதுடில்லியை பகைத்துக் கொள்ள அமெரிக்கா விரும்பவில்லை.

இலங்கையுடனான அமெரிக்காவின் வர்த்தகம் (2.3 பில்லியன் டொலர்) மிகக் குறைந்தளவு முக்கியத்துவத்தைக் கொண்டது. இதற்கு மாறாக அந்த நாடு இலங்கையை விட சிறிய நாடான மலேசியாவுடன் குறிப்பிடத்தக்க வர்த்தகத்தினை கொண்டுள்ளது.

மேலும், அமெரிக்கா, இலங்கை பொருட்களுக்கான முக்கிய சந்தையில்லை. (198 மில்லியன் டொலர்) கொழும்பில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனங்களின் எண்ணிக்கையும் மிகச் சிறியது. முதலீடு செய்வதற்கு உகந்த நாடாக அமெரிக்க நிறுவனங்கள் இலங்கையை கருதவில்லை. இதற்கு யுத்தம் மாத்திரம் காரணமல்ல திறமையற்ற அதிகார வர்க்கம், ஊழல் மற்றும் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறும் அரசாங்கங்களும் இதற்குக் காரணம்.

இந்திய, இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கை காரணமாகவே பல அமெரிக்க நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்தன.

எனினும், இலங்கை குறித்து போதிய அக்கறை இல்லாத நிலையிலும் இலங்கையின் சமாதான முயற்சிகளில் அமெரிக்கா பங்காளியாக உள்ளது.

செப்டெம்பர் 11 இற்கு பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதற்கான ஆர்வமும், அமெரிக்க சார்பு, சமாதான சார்பு ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தெரிவு செய்யப்பட்டமையும் பிரதி வெளிவிவகார அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிரேஜ் காட்டிய ஆர்வமும் இதற்குக் காரணம்.இலங்கையின் சமாதான முயற்சிகளில் பங்குகொண்ட ஏனைய நாடுகளின் அங்கீகாரத்துடன், அமெரிக்கா கடும் போக்கு நிலைப்பாட்டை கையாண்டது. விடுதலைப்புலிகள் தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டை கையாண்ட அதேவேளை, இலங்கை அரசாங்கத்திற்கு இராணுவ ரீதியிலான உதவிகளை மேற்கொண்டது.

எனினும், விடுதலைப்புலிகளை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்த விரும்பாத அமெரிக்கா, விடுதலைப்புலிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதே சிறந்த விடயம் எனக் கருதியது.

விடுதலைப்புலிகள் இலங்கையை சேர்ந்த அமைப்பு என்ற காரணத்தினால் அவர்களால் அமெரிக்காவிற்கு நேரடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை.

விடுதலைப்புலிகளை தொடர்ந்தும் தடை செய்ததன் மூலமும், அதனை கடுமையாக விமர்சிப்பதன் மூலமும் இலங்கையின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகின்றது.

அதேவேளை, கொழும்பு அரசியல் தீர்வை நோக்கி செல்ல வேண்டும். மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்கா கேட்டு வருகின்றது.

இலங்கை விவகாரத்தில் அமெரிக்கா தொடர்ந்தும் ஆர்வம் காட்டுவதற்கு கொழும்பு சமாதான முயற்சிகளை நோக்கி செல்வதும், மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்துவதும் முக்கியமானது.

தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கரிசனை...முட்டால்தனமான கொள்கை...

எதைத் தேவையில்லை என்று அமெரிக்கா சொல்கின்றதோ ? அதன் முக்கியத்துவத்தை அது உணர்ந்திருக்கிறது என்பதுதான் அர்த்தம். இந்த அறிக்கையெல்லாம் எந்தப் பக்கத்தைச் சார்ந்து நிற்பது என்ற குழப்பத்தில் விடப்படுவது. பயங்கரவாதத்திற்கெதிரான போரை நிறுத்த முடியாமல் திணறும் அமெரிக்காவைத்தான் இன்று காணக் கூடியதாகவுள்ளது. அது புலி வாலைப் பிடித்த கதைதான். கடலில் மிதக்கும் தளங்களை வைத்திருக்கும் இன்றைய இராணுவ வளர்ச்சியில் கேந்திர முக்கியத்துவம் தேவையற்றதெனக் கருத இடமுண்டு. ஆனாலும் அnரிக்காவிற்கு இலங்கை தேவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.