Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 17 பேர் பொது மன்னிப்பில் விடுதலை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Prisoners-Released-in-jaffna-jail-2-2.jpg

யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 17 பேர் பொது மன்னிப்பில் விடுதலை!

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து  17 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் சிறைச்சாலையில் உள்ளவர்களில் 512 பேர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் ஜனாதிபதியினால் விடுதலை செய்யப்படுகின்றனர்.

இதன்படி, இன்று (செவ்வாய்க்கிழமை) யாழ். சிறைச்சாலையிலிருந்து பெண்ணொருவர் உட்பட 17 பேர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு விடுதலை செய்யப்பட்டவர்கள் சிறு குற்றங்கள் புரிந்து தண்டப்பணம் செலுத்த முடியாது சிறையில் உள்ளவர்கள் எனவும், அதில் நான்கு பேர் வழக்குகளுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Prisoners-Released-in-jaffna-jail-2-3.jpg

Prisoners-Released-in-jaffna-jail-2-4.jpg

Prisoners-Released-in-jaffna-jail-2-1.jpg

http://athavannews.com/யாழ்ப்பாணம்-சிறைச்சாலைய/

  • கருத்துக்கள உறவுகள்

மட்டு. சிறைச்சாலையிலிருந்து ஏழு கைதிகள் விடுதலை

 

ரீ.எல்.ஜவ்பர்கான்  

72ஆவது சுதந்திர தினத்தையொட்டி, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ், மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஏழு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் சுஜீவ ஜெயசேகர தலைமையில் இன்று (04) காலை இக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறைச்சாலை பிரதம ஜெயிலர் எம்.மோகனதாஸ் உட்பட சிறைச்சாலை அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

சிறு குற்றங்களுக்காகத் தண்டனை பெற்று வந்த கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனரென, சிறைச்சாலை அத்தியட்கர் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/மடட-சறசசலயலரநத-ஏழ-கதகள-வடதல/73-244995

வவுனியாவில் 6 சிறைக் கைதிகள் விடுதலை!

வவுனியாவில் 6 சிறைக் கைதிகள் விடுதலை!

இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையில் இருந்து 6 சிறைக்கைதிகள் இன்று (04) காலை 10.00 மணி அளவில் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டதாக வவுனியா சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (04) இலங்கையின் 72 வது சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
 

-வவுனியா தீபன்-

http://tamil.adaderana.lk/news.php?nid=125354

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கட்டிருந்த தண்டனைக் கைதிகளான பெண் உள்பட 17 பேர் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டனர்.


01__1___1_.jpg

நாடுமுழுவதும்  ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 512 கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுகின்றனர்.

இதில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையிலிருந்து 17 பேர் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
<p><img src="01__2___1_.jpg

இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் திருட்டு,நம்பிக்கை மோசடி மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் போன்ற சிறிய குற்றங்களின் காரணமாக சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்களாகும்.


01__4___1_.jpg

வன்புணர்வு, பாலியல் துன்புறுத்தல்கள், கொள்ளை மற்றும் இலஞ்சம் கோருதல் போன்ற பெரிய குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் எவரும் இந்த பட்டியலில் இல்லை என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/74841

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் திருமலை சிறையிலிருந்து ஆறு பேர் விடுதலை

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் திருகோணமலை சிறைச்சாலையிலிருந்து ஆறு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


20200204_122545.png

கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வு இன்று(4) திருகோணமலை சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் சமந்த லியனகேயின்; தலைமையில் நடைபெற்றது.

இதன் போது சிறு குற்றங்கள் புரிந்த, தண்டப்பணம் செலுத்த முடியாத சிறைக்கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.

20200204_122628.png

இந்நிகழ்வில் திருகோணமலை சிறைச்சாலையின் பிரதான ஜெயிலர் சமந்த லியனகே,ஜெயிலர் அருள் வண்ணன், தயாகரன், பெரேரா சிறைச்சாலை பாதுகாவலர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.

https://www.virakesari.lk/article/74864

 

வவுனியாவில் ஆறு சிறை கைதிகள் விடுதலை

நாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 512 சிறைக் கைதிகள் இன்று விடுதலை செய்யப்படுவார்கள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்திருந்தது.

DSC_0147_4.JPG

குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தென்னகோன் அறிவித்திருந்தார்.


அதன்படி வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்தும் ஆறு கைதிகள் இன்றையதினம் காலை 10 மணிக்கு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

DSC_0141_2.JPG

சிறுகுற்றங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டவர்களே இவ்வாறு பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/74876

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.