Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காணாமல் போன 12 தமிழக கடற்றொழிலாளர்கள் கரை திரும்பினர்

Featured Replies

காணாமல் போன 12 தமிழக கடற்றொழிலாளர்கள் கரை திரும்பினர்

ஜவெள்ளிக்கிழமைஇ 18 மே 2007இ 21:41 ஈழம்ஸ ஜபுதினம் நிருபர்ஸ

தமிழகத்தின் கன்னியாகுமரியிலிருந்து காணாமல் போன 12 தமிழக கடற்றொழிலாளர்கள் இன்று வெள்ளிக்கிழமை கரை திரும்பிவிட்டதாக தமிழக ஊடகத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

5 மீனவர்கள் முதலில் கரை சேர்ந்ததாகவும் 6 மீனவர்கள் கரை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தினமலர் நாளேட்டின் கடைசி செய்திப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே 12 மீனவர்களும் கரை திரும்பிவிட்டதாக தமிழக ஊடகத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

கன்னியாகுமரி மற்றும் கேரளத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் கடந்த மார்ச் மாதம் கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது காணாமல் போயிருந்தனர்.

மீனவர்கள் காணாமல் போனமை தொடர்பாக தமிழகக் காவல்துறைஇ விடுதலைப் புலிகள் மீது குற்றம்சாட்டியிருந்தது. ஆனால் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இதனை முற்றாக நிராகரித்திருந்தது.

இந்நிலையில் மீனவர்கள் கரை திரும்பியுள்ளனர்.

தினமலர் இப்படி செய்தி வெளியிட்டு இருகின்ரது

காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்களை ராமேஸ்வரம் கடற்கரையில் விட்டுசென்ற புலிகள்

ராமநாதபுரம்: விடுதலை புலிகள் கடத்தி சென்ற கன்னியாகுமரி மீனவர்களில் ஐந்து பேர் நேற்று ராமேஸ்வரம் அருகே உள்ள பிசாத்துமுனை கடற்கரை பகுதிக்கு வந்து சேர்ந்தனர். இவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார் சென்னை அழைத்து சென்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் மற்றும் துõத்துக்குடி, கேரளாவை சேர்ந்த தலா ஒரு மீனவர்கள் கடந்த மார்ச் 6 ம் தேதி ராமேஸ்வரத்திலிருந்து ஸ்ரீ கிருஷ்ணா என்ற படகில் மீன் பிடிக்க சென்றனர். குறிப்பிட்ட நாட்களுக்கு பின்பும் இவர்கள் கரை திரும்பாததால் மீனவர்களின் குடும்பத்தினர் பதட்டம் அடைந்தனர். இதையடுத்து இந்திய கடற்பகுதியில் இவர்களை தேடும் பணி நடந்து வந்தது. இந்நிலையில் துõத்துக்குடியில் மரியா என்ற படகில் நின்று கொண்டிருந்த கடல் புலிகள் ஆறு பேரை இந்திய கடற்படையினர் பிடித்து தமிழக போலீஸ் துறையினரிடம் ஒப்படைத்தனர். இவர்களிடம் கியூ பிராஞ்ச் போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட 6 பேரும் கடல் புலிகள் என்பதும், இவர்களின் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் தமிழக மீனவர்களை சுட்டு கொன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்கள் 12 பேரும் விடுதலை புலிகளின் சிறையில் இருப்பதாக கூறினர்.

இதையடுத்து இந்த மீனவர்களை இந்திய அரசு மீட்க வேண்டும் என கன்னியாகுமரி மீனவர்கள் போராட்டங்களை நடத்தினர். சிறையில் இருக்கும் மீனவர்கள் உயிருடன் உள்ளார்களா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. இதற்கிடையில் தமிழக அரசு காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு மாதாந்திர நிவாரண நிதியாக ரூ. ஆயிரத்து 500 அளிக்க உத்தரவிட்டது. தமிழகத்தில் உள்ள ம.தி.மு.க., தலைவர் வைகோ உட்பட சிலர் காணாமல் போன மீனவர்களை விடுதலை புலிகள் கடத்தி சென்றிருக்க மாட்டார்கள். அவர்கள் மீது வீண் பழி சுமத்தப்பட்டிருப்பதாக கூறினர்.

இதனிடையே ராமேஸ்வரம் அருகே உள்ள பிசாத்துமுனையில் விடுதலை புலிகளுக்கு சொந்தமான படகில் ஐந்து மீனவர்கள் கரையில் கொண்டு வந்து விடப்பட்டனர். இவர்கள் இறங்கியவுடன் விடுதலை புலிகளின் படகு மின்னல் வேகத்தில் அங்கிருந்து மறைந்து விட்டது. கரைக்கு வந்து சேர்ந்த மீனவர்கள் ஜோசப் ததேயூஸ்(32) மற்றொரு ததேயூஸ்(42) ஆல்பர்ட்(32) பிரான்சிஸ்(40) கிங்ஸ்லி(24) ஆகியோரிடம் விசாரணை நடத்திய ராமேஸ்வரம் டி.எஸ்.பி., சுப்பிரமணியம் ராமநாதபுரம் எஸ்.பி., திருஞானத்திற்கு தகவல் தெரிவித்தார்.

http://www.dinamalar.com/2007May18/final.asp

புலிகள் மீது பழிபோடுவதற்காக தொடங்கப்பட்ட நாடகம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

புலிகள் மீது பழிபோடுவதற்காக தொடங்கப்பட்ட நாடகம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

இன்னும் புலிகள் மீது தான் அவர்கள் பலி சுமத்துகின்றனர் இன்னும் தமிழனை (இலங்கைத்) தமிழர் சேனையைபிடித்த இந்தியவல்லாதிக்க பேய்கள் இன்னும் ஓயவில்லை என்று தெரிகின்றது!

இருப்பினும் தமிழர்கள் பத்திரமாய் நாடு திரும்பி தங்கள் மக்களிடம் சேர்ந்தது மிகவும் நன்றி எது நடப்பினும் நன்றாய் நடந்தாள் தமிழர் பால் நாம் மகிழ்ச்சியே!

நாதன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் இவர்கள் மீனவர்களிடம் தங்களை யார் கடத்தினார்கள் என்று கேட்கவில்லை??? தினமலர் ஆசிரியர்கள் என்ன அவ்வளவு முட்டாள்களா? அல்லது தமிழர்கள் முட்டாள்கள் என்று நினைத்துவிட்டார்களா?

தமிழர்களை முட்டாள்களாக்க நினைப்பது ஒன்றும் புதிதல்ல. அதுவும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மிக எளிதாக ஏமாற்றப்பட்டுவிடுகிறார்கள். மீனவர்கள் மீண்டது ஒரு சந்தோசமான விடயம்.

அவர்களே கடத்துவார்களாம் அவர்களே விடுவார்கள்,, இந்த சூழ்சி வலையில் சில மீனவ குடும்பங்கள் வீழ்ந்தது கவலைக்குரிய விடயம், உன்மய புரிந்து தர்மதின்ப்பால் தாய் தமிழகத்து மக்க்ள் இருப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் ஈழ தமிழர்கள்....

இது இலங்கையரசின் தமிழ் ஒட்டுக்குழுவினர்களை வைத்து ஒரு நாடகம் நடத்தப்பட்டமாதிரி உள்ளது. ஒரு பிரிவினர் தாம் புலிகள் போன்று பசாங்கு செய்து கைதாக மற்றவர்கள் தமிழக மீனவர்களை கடத்திவைத்து பிடிபட்டவர்களை வைத்து மீனவர்கள் தம்மிடம் உள்ளதாக கூற, இதனை வைத்து தமிழ் நாட்டில் புலிகளின்

மீது வெறுப்பு உண்டாக்க நாடகம் விடுவித்தல் உடன் அரங்கேறியுள்ளது.

இதில் இந்திய உளவு எவ்வளவு செயல்பட்டு இருக்கிறதோ தெரியாது..

ஒரு சினிமா கதையே உருவாக்கி முடித்துள்ளனர்....

இதனை அம்பலமாக்க வேண்டும்...... தமிழ் நாட்டின் ஆதரவு இல்லாமல் செய்ய இவ்வளவு நாடகம்....

மீண்ட 11 மீனவர்களும் கருணாநிதியுடன் சந்திப்பு

மே 19, 2007

சென்னை: விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் 11 மீனவர்களும் இன்று முதல்வர் கருணாநிதியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

கடந்த மார்ச் 6ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜோசப் ததேயூஸ், ஜேசுதாசன், கிங்ஸ்லி, ததேயூஸ், ஆல்பர்ட், கிளமன்ட், தீபக், அனிஸ்டன், ஜேம்ஸ், பிரபு, பிராங்க்ளின், கேரளாவைச் சேர்ந்த சைமன் ஆகிய 12 பேரும் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.

ஆனால் குறித்த நேரத்தில் கரைக்கு அவர்கள் திரும்பவில்லை. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடியில் கடலோரக் காவல் படையிடம் சிக்கிய 6 கடல் புலிகளிடம் நடத்திய விசாரணையில் 12 பேரும் விடுதலைப் புலிகள் வசம் இருப்பதாக தெரிய வந்தது.

இதையடுத்து அவர்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில், 11 தமிழக மீனவர்களும் நேற்று இரு பிரிவாக ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.

அவர்களை கியூ பிரிவு போலீஸார் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு அழைத்து வந்தனர். இன்று காலை 11 பேரும் முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர்.

தங்களைக மீட்க நடவடிக்கை எடுத்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் கியூ பிரிவு தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மீட்கப்பட்ட மீனவரக்ளிடம் பேச பத்திரிக்கையாளர்கள் முயன்றபோது அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். வேக வேகமாக மீனவர்களை அங்கிருந்து வேனில் அழைத்துச் சென்று விட்டனர்.

thatstamil oneIndia

  • கருத்துக்கள உறவுகள்

முகர்ஜி புலிகளின் மீது பழி போடுகின்றார். ஆனால் யாருக்குமே உறுதிபட மீனவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியவே தெரியாது. அப்படியிருக்கின்றபோது புலிகள் தங்கள் மீது விழுந்துள்ள சந்தேகத்தை உறுதிப்படுத்தவும், பெயரைப் பழதாக்கிக் கொள்ளவும், அம் மீனவர்களை விட்டுச் சென்றார்களாம்.

தாங்களாக நடத்துகின்ற நாடகத்தில், புலிகளை முட்டாள்களாக நினைத்து நாடகம் இயற்றுகின்றார்கள்.

ஆனால் எது எப்படியென்றாலும், அம் மீனவர்கள் பாதுகாப்பாக மீண்டு வந்தது மிகமிக மகிழ்ச்சியளிக்கின்றது. அவ் உறவுகளின் பாதுகாப்பிற்கு நாங்கள் செய்த வேண்டுதல் வீண்போகவில்லை.

மீனவர்களை விடுவிக்க வேண்டிய எல்லா முயற்ச்சிகளும் தங்களால் மேற்கொள்ளப்படும் எண்று புலிகளும் சொல்லி இருந்தார்கள். அதோடு பிராந்திய தலவர்கள் மட்டத்தில் விசாரணைகளையும் முடுக்கி விட்டு இருந்ததாக இளந்திரேயன் அவர்கள் சொல்லி இருந்தார்கள்...! இது புலிகளின் முயற்ச்சியால் நிகழ்ந்ததா, இல்லையா, என்பதையும் இப்போதைய தமிழக குற்றச்சாட்டுகளுக்கும் புலிகள் தெளிவான பதில் அளிப்பார்கள் எண்று நினைக்கிறேன்...!

மீனவர்கள் விடுவிக்க பட்டு பாதுகாப்பாக திரும்பியது மகிழ்ச்சி அளித்தாலும்... மலையாளி ஒருவர் போன படகை (80 அடி நீளமான ஆதுத படகு எண்டது) மாலைதீவுக்கு அருக்கில் அடிச்சு தாட்டு போட்டார்கள் எண்று அறிக்கை விட்டு இருக்கினமே அது பற்றிய தகவல் என்ன...???

இப்பிடி தற்ஸ்தமிழ் சொல்கிறதே...?? :lol:

http://thatstamil.oneindia.in/news/2007/05/19/fishermen.html

இதற்கிடையே, தனியாக படகில் அனுப்பப்பட்ட சைமன் இன்னும் கேரளா போய்ச் சேரவில்லை என்று தெரிகிறது. அவர் மாலத்தீவு வழியாக போனபோது அந்நாட்டு கடலோரப் பாதுகாப்புப் படையால் பிடிக்கப்பட்டிருக்கலாம் என டிஜிபி முகர்ஜி கூறியுள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல நாடகம், நல்லவேளை பாதுகாப்பாக திரும்பிவிட்டார்கள்.

ஜயா அவர்களை எமது இயக்கம் கடத்தவேண்டிய அவசியம் ஏதும் உள்ளதா? இந்த புலனாய்வினர் புனையும் கதைகள் சிறிதளவேனும் நம்பகரமாக இருந்தால் தானே முடிவும் நல்லாகவிருக்கும்.

நம்முடைய பொட்டம்மானிட்டை ஒரு வாரம் பயிற்சியாவது எடுத்திருக்கலாம் அல்லவோ.

வந்திட்டாங்க..பெரிய றோவாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.