Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கிலே தமிழர் அணியை உருவாக்க முயற்சி

Featured Replies

image_2c93dd5d51.jpg

க.விஜயரெத்தினம்

கிழக்கிலே தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து பலம் பொருந்திய ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த விடயம், தமிழ் மக்களிடம், புத்திஜீவிகளிடம், அரசியல் பிரமுகர்களிடம் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இக்கூட்டு உருவாக்கத்தின் சட்டச் சிக்கல்கள் தொடர்பாக, கொழும்பில் உள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவுடன் சந்திப்பொன்று, நேற்று (19) நடைபெற்றுள்ளது.

இச்சந்திப்பின் போது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன், அக்கட்சியின் அரசியல் ஆலோசகர் சின்னா மாஸ்டர் ஆகியோர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/கிழக்கிலே-தமிழர்-அணியை-உருவாக்க-முயற்சி/73-245846

16 hours ago, ampanai said:

image_2c93dd5d51.jpg

க.விஜயரெத்தினம்

கிழக்கிலே தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து பலம் பொருந்திய ஒரு மாற்று அணியை உருவாக்கும் முயற்சி தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதென்ன கூத்தாட இது। எல்லாரும் மாற்றுக கட்சி , மாற்றுதலமை எண்டால் எவனுக்குடா ஒட்டு போடுறது। வடக்கில் ஒரு  மாற்றுதலமை, கிழக்கில் ஒரு மாற்று தலைமை। உங்களுடைய பதவி ஆசைகளுக்கு அளவு கணக்கே இல்லையாடா?

சிங்களவன்  விடடாலும் இந்த அரசியல்வாதிகள் சும்மா விட மாடடார்கள் போல கிடக்கு। ஆளுக்கொரு கட்சி , ஆளுக்கொரு தலைவன்।

இதுக்கெல்லாம் கூட்டமைப்புதான் காரணம் எண்டு இணையப்போராளிகள் வெடிக்காத  குண்டுகளை வீசப்போகிறார்கள்। 

Edited by Vankalayan
Need to change some wordings

  • கருத்துக்கள உறவுகள்

உதயசூரியன் சின்னத்தில் கிழக்கில் தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உதயம்

மட்டக்களப்பு ஏரன்ஸ் வீதியில் அமைந்துள்ள கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைமைக் காரியலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கிழக்கில் 4 கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளதுடன் உதயசூரியன் சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி.சிவநாதன் தெரிவித்தார்.கிழக்கு மாகாணத்தின் கள நிலையைக் கருத்திற்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பை விடுத்து ஏனைய தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து ஒரு குடையின் கீழ் சேர்ந்து போட்டியிடுவது மிகவும் சாதுரியமான விடயமாக அமையும். இதன்மூலம் தமிழர்களின் வாக்குகளை சிதறடிக்காமல் கணிசமான ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த 4 கட்சிகளும், இணைந்து தமிழர் ஐக்கிய முன்னணி என கட்சி ஒருவாக்கப்பட்டு தமிழ் மக்களின் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் சின்னமான உதய சூரியன் சின்னத்தை ஏகோபித்த சின்னமாக புதிய கூட்டணிக்கு தெரிவுசெய்து உடன்பாட்டில் கைச்சாத்திட்டுள்ளன.தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் கிழக்கு தமிழர் ஓன்றியம் பேச்சுவார்த்தையில் பல தடவை ஈடுபட்டோம். அவர்கள் எங்கள் கொள்கையை ஏற்றுக் கொண்டிருந்தனர். கள நிலை யதார்த்த நிலையை உணர்ந்து எமது முயற்சி நன்று என்றனர். ஆனால் தாங்கள் வீட்டுச் சின்னத்தை விட்டு எமது சின்னத்தில் வருவதில் பிரச்சினையுள்ளதாக தெரிவித்தனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில் கிழக்கில் அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து பொதுச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற முயற்சியை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த கிழக்கு தமிழர் ஒன்றியம் இன்று சிவராத்திரி தினத்தில் வெற்றிகண்டுள்ளது.கிழக்கு தமிழர் ஒன்றிய தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்ற செயற்குழுக் கூட்டத்திலே, நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைக்கான எதிர்வரும் தேர்தல்களில் தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுவது குறித்த கலந்துரையாடல் சுமூகமான முறையில் இடம்பெற்றது. தமிழர் ஜக்கிய முன்னணி பேயர் கொண்ட கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதுடன் இதன் சின்னமாக உதய சூரியன் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

தற்போது 4 கட்சிகளான பி.ஆனந்தசங்கரியை தலைவராகக் கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி, கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான ரி.சிவநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனை தலைவராகக் கொண்ட முற்போக்கு தமிழர் அமைப்பு, முன்னாள் பிரதி அமைச்சாரன நா.கணேசமூர்த்தியை தலைவராகக் கொண்ட இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி ஆகியன தற்போது இணைந்துள்ளன.குறித்த ஊடக சந்திப்பில், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி, இலங்கை தமிழர் முற்போக்கு முன்னணி கட்சியின் தலைவர் நா.கணேசமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்ட நிலையில் கிழக்கு தமிழர் ஒன்றிய தலைவர் சிவநாதன் மேற்குறித்த தகவலை தெரிவித்தார்.(15)
 

http://www.samakalam.com/செய்திகள்/உதயசூரியன்-சின்னத்தில்-க/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.