Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தயார் – தினேஷ் உறுதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக உள்ளக விசாரணைகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கம் தயார் – தினேஷ் உறுதி!

 

 

   by : Jeyachandran Vithushan

dinesh-4.jpg

போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக (உள்நாட்டுக்குள்) இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஐ.நா. அமர்வில் இலங்கையின் நிலைப்பாட்டினை அறிவித்தார் வெளிவிவகார அமைச்சர்!

ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 வது அமர்வில் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது உரையைத் தொடங்கினார்.

இதன்போது கடந்த அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய 40/1 மற்றும் அதற்கு முந்தைய 30/1, 34/1 ஆகியவற்றிலிருந்து விலகுவதற்கான முடிவினை அவர் உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார்.

குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் செயற்படுத்தப்பட முடியாது, மேலும் மக்களின் இறையாண்மையை மீறும் செயற்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கம் அனைத்து ஜனநாயக நடைமுறைகளையும் மீறியது, குறிப்பாக அமைச்சரவை அங்கீராம் வழங்கப்படவில்லை, நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை, முன்னாள் ஜனாதிபதியிடமும் இந்த விடயம் ஆலோசிக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே கடந்த அரசாங்கத்தினால் இணை அனுசரணை வழங்கப்பட்ட தீர்மானம் 40/1 மற்றும் 30/1 மற்றும் 34/1 இல் இருந்து முறையாக விலக நாம் தீர்மானித்துள்ளோம் இது நடைமுறைக்கு சாத்தியமற்றது, அரசியலமைப்பிற்கு விரோதமானது என்றும் அவர் கூறினார்.

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறிய விவகாரம் தொடர்பாக (உள்நாட்டுக்குள்) இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

http://athavannews.com/போர்க்குற்ற-விவகாரம்-தொட/

25 minutes ago, nunavilan said:

போர்க்குற்ற விவகாரம் தொடர்பாக (உள்நாட்டுக்குள்) இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

ஐ.நா. அமர்வில் இலங்கையின் நிலைப்பாட்டினை அறிவித்தார் வெளிவிவகார அமைச்சர்!

சிங்களத்தின் மீண்டும் மீண்டும் இசைக்கும் அதே இராஜதந்திரம். நாட்டில் ஒரு செயல் இந்த அரங்கில் இன்னொரு கதை. 

எமது தாயக அரசியல் வாதிகள் மீண்டும் ஏமாறி விடுவார்கள்.  

இதை நீங்கள் யுத்தம் முடிந்த பின்னர் இருந்த ஐந்து வருட ஆட்சியில் செய்திருக்கலாம்। அப்போது நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள், தீர்மானங்களை நிறைவேற்ற தவறியதால்தான் இவளவு பிரச்சினைகளும்। இப்போது இனி இது தாமதமாகி விட்ட்து போலத்தான் தோன்றுகிறது। எனவே இலங்கை மக்களின் கோரிக்கைக்கு ஏட்ப சர்வதேசம் தலையிட வேண்டிய சந்தர்ப்பமாகவே இது இருக்கிறது। 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, nunavilan said:

மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களை மீறிய விவகாரம் தொடர்பாக (உள்நாட்டுக்குள்) இலங்கை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவை நியமிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

1590-DD57-9836-4-CCF-B2-F3-220-AE15369-A

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்காக மற்றுமொரு ஆணைக்குழுவை அமைக்கும் இலங்கையின் அறிவிப்பை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நிராகரித்துள்ளார்.

இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் கருத்து தெரிவித்துள்ள மிச்லே பச்செலெட் இலங்கையின் உள்ளுர் பொறிமுறைகள் பொறுப்புக்கூறல் விடயத்தில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளன என தெரிவித்துள்ளார்.


un_geneva_srilanka.jpg

இதன் காரணமாக இன்னொரு ஆணைக்குழுவை அமைப்பது இந்த நடவடிக்கைகளை முன்னகர்த்தும் என தான் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளனர்,மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறும் என்பதற்கான உத்தரவாதம் இலங்கையின் அனைத்து சமூகத்தினரிற்கும் இல்லாதநிலை காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/76668

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.