Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மோடி அரசு இனப்படுகொலை செய்துள்ளது – மம்தா பானர்ஜி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மோடி அரசு இனப்படுகொலை செய்துள்ளது – மம்தா பானர்ஜி

மம்தா-பானர்ஜி.jpg

டெல்லி வன்முறை பிரதமர் நரேந்திர மோடி அரசால் நடத்தப்பட்ட இனப்படுகொலை என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதல் வன்முறையாக உருவெடுத்ததில் 46 பேர் வரையில் உயிரிழந்தனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி மேற்படி விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “டெல்லியில்  நடந்த வகுப்புவாத வன்முறை மோடி அரசால் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை என்றும், குஜராத் கலவரத்தைப் போன்று நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிக்கிறது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன் டெல்லி வன்முறையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது குறித்து தான் மிகவும் வேதனையடைவதாக தெரிவித்த அவர், இதனை இனப்படுகொலையாகவே தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும்  இவ்வளவு பேர் உயிரிழந்ததற்கு குடியுரிமைத் திருத்தச் சட்டம் தான் காரணம் என்பதை அமைச்சர் அமித்ஷா நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் டெல்லி  கலவரத்திற்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

http://athavannews.com/மோடி-அரசு-இனப்படுகொலை-செ/

 

"அத்துடன் டெல்லி வன்முறையில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது குறித்து தான் மிகவும் வேதனையடைவதாக தெரிவித்த அவர், இதனை இனப்படுகொலையாகவே தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும்  இவ்வளவு பேர் உயிரிழந்ததற்கு குடியுரிமைத் திருத்தச் சட்டம் தான் காரணம் என்பதை அமைச்சர் அமித்ஷா நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் டெல்லி  கலவரத்திற்கு பாஜக மன்னிப்பு கேட்க வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்."

அரசியலுக்காக குற்றம் சாட்டலாம். ஆனால், யதார்த்தம் என்ன ? 


மேற்கு வங்காளம் வங்கதேசத்தால் முழுமையாக இஸ்லாமிய மாநிலமாக மாறிவிடலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
On 3/2/2020 at 4:55 PM, ampanai said:

அரசியலுக்காக குற்றம் சாட்டலாம். ஆனால், யதார்த்தம் என்ன ? 

மேற்கு வங்காளம் வங்கதேசத்தால் முழுமையாக இஸ்லாமிய மாநிலமாக மாறிவிடலாம்.  

மேற்கு வங்கத்தில் வாழும் வங்கதேசத்தினர் அனைவரும் இந்தியர்கள்தான்.. முதல்வர் மம்தா பானர்ஜி.!

mamta-banerjee-jpg_1200x630xt.jpg 

மேற்கு வங்க மாநிலம் கலியாகன்ஞ்-ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அந்த கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில் கூறியதாவது: வங்கதேசத்திலிருந்து வந்த அனைவரும் இந்திய குடிமக்கள். அவர்கள் குடியுரிமை பெற்று உள்ளார்கள். நீங்கள் (வங்கதேசத்தினர்) குடியுரிமைக்காக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை. தேர்தலில் உங்க வாக்குகளை பதிவு செய்து வருகிறீர்கள்.

பிரதமர் மற்றும் முதல்வரை நீங்கள் தேர்ந்தெடுக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் குடிமக்கள் இல்லை என இப்போது அவர்கள் சொல்கிறார்கள். அவர்களை நம்பாதீர்கள். வங்கத்தை விட்டு ஒரு நபரை வெளியேற விடமாட்டோம். இந்த மாநிலத்தில் வாழும் எந்தவொரு அகதிகளின் குடியுரிமையையும் பறிக்கபடாது. இது வங்கம் என்பதை மறந்து விடாதீர்கள். வங்கத்தை மற்றொரு டெல்லி அல்லது உத்தர பிரதேசமாக மாறுவதை நாங்கள் விரும்பவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதேசமயம், வாக்கு வங்கி அரசியலுக்காக, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினரை திருப்திபடுத்தி தேசிய நலன்களை இழிவுப்படுத்தி வருகிறார் என பா.ஜ.க. தொடர்ந்து குற்றச்சாட்டி வருகிறது. மேலும் அம்மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு கடும் சவாலை அளித்து வருகிறது.

https://tamil.asianetnews.com/india/all-bengalis-are-indians-says-mamta-q6nwjq 

டிஸ்கி

தோழர் தாங்கள் ஒரு தீர்க்கதரிசி.!  இந்தியாக்காரன் தனியா பங்களாதேஷ் பெற்று தந்திருக்க வேண்டியதில்லை.. ☺️

7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இந்தியாக்காரன் தனியா பங்களாதேஷ் பெற்று தந்திருக்க வேண்டியதில்லை.. ☺️

இந்திரா காந்தி வங்க தேசத்தை உருவாக்கிய மாதிரி சிங்கள தேசத்தில் இருந்து தமிழீழத்தை அவரின் மூத்த மகன் உருவாக்கியிருந்தால், இன்று நானும் நீங்களும் வேறு தளத்தில் நின்று வேறு பல புதிய விடயங்களை விவாதித்தவண்ணம் இருந்திருப்போம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.