Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யானைச் சின்னத்தில் ஓரணியில் களமிறங்குவதற்கு சஜித், ரணில் ஆலோசனை: ராஜித

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யானைச் சின்னத்தில் ஓரணியில் களமிறங்குவதற்கு சஜித், ரணில் ஆலோசனை: ராஜித

 

 

by : Dhackshala

Rajitha-Senarathna.jpg

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் யானைச் சின்னத்தில் ஒரே அணியில் போட்டியிடுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவது குறித்து ஆராயவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், “ஐ.தே.க வின் தலைவர் விக்ரமசிங்கவிற்கும் சஜித் பிரரேமதாசவின் கூட்டணியினருக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

ஏனெனில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் யாப்பில் காணப்படும் குறைபாடுகளின் காரணமாகவே இத்தகைய முரண்பாடுகள் தோன்றியுள்ளன. எனவே, எமது கட்சியின் செயலாளர் பதவியை அவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவருக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டனர். எனவே, இந்த பிரச்சினைக்கான தீர்வை கூடிய விரைவில் காண முடியும் என எதிர்பார்க்கின்றோம்.

அவ்வாறு இணைந்து செயற்படுவதன் ஊடாக மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெறும் வாய்ப்பு எமக்கு அதிகளவில் உள்ளது.

கூட்டணியின் யாப்பு கட்சியின் யாப்பை போன்று அமைந்துள்ளமையின் காரணமாகவும் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. ஆகவே, கூட்டணியின் யாப்பில் மாற்றம் ஏற்படும் பட்சத்தில் எம்மால் அவர்களுடன் இணைந்து பயணிக்ககக் கூடியதாகவிருக்கும்.

யானை சின்னத்தில் போட்டியிடுவதற்கு சஜித் அணியினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எதிர்காலத்தில் பலமான கூட்டணியை உருவாக்கி அதன் ஊடாக ராஜபஷ அரசாங்கத்தை வீழ்த்துவதே எமது இலக்காகும். இந்நிலையில், ஒன்றிணைந்து பயணிப்பதன் ஊடாக வெற்றி இலக்கை அடைவதே எமது எதிர்பார்ப்பாகும்” என மேலும் தெரிவித்தார்.

http://athavannews.com/யானைச்-சின்னத்தில்-ஓரணிய/

இறுதி நேரத்தில் இரத்து; இரவில் டுபாய் பறந்தார் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, டுபாய் நோக்கி நேற்று (04) இரவு பயணமாகியுள்ளார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான ஈ.கே.655 ரக விமானத்தில் அவர் பயணமாகியுள்ளார்.

இரவு 10.05 அளவில் அவர் டுபாய் நோக்கிய பயணித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் நேற்று காலை 10 மணிக்கு டுபாய் நோக்கி செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், இறுதி நேரத்தில் அவரது பயணம் இரத்துச் செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இறத-நரததல-இரதத-இரவல-டபய-பறநதர-ரணல/150-246419

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.