Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நின்று நிதானமாய் சிந்தித்துச் செயற்படுக!

Featured Replies

பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு தேர்தல் களம் சூடாகி விட்டது.

தாம் தயார் செய்த வேட்பாளர் பட்டியல்களை அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் அறிவிக்கவுள்ளன. இவை நாடளாவிய ரீதியான பொதுவிடயம்.

மாறாக வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகத்தில் தேர்தல் களம் எவ்வாறாக இருக்கும் என்று ஆராய்ந்தால், முன்பு ஒருபோதும் இல்லாத அளவில் தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் இறங்கவுள்ளன.

இவ்வாறு தமிழர் தாயகத்தில் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் கன்னை பிரிந்து பிர சாரம் செய்யும்போது, ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்வதான நிலைமைகள் உருவாகும் என்பது தவிர்க்க முடியாத உண்மை.

இதற்கு அப்பால், ஊடகங்கள் கூட தத்தம் சார்புநிலைகளை அறம் பிழைத்து வெளிப்படுத்த முற்படும் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

இவ்வாறாக எதிர்வரும் பொதுத் தேர்தல் பிரசாரங்கள் அனல் பறப்பதாக இருந்தாலும் யாரைத் தெரிவு செய்வது என்ற முடிவை எடுக் கின்ற நீதியாளர்களாக தமிழ் மக்கள் இருப்பர்.

இதற்கு மேலாக, யார் என்னதான் கத்திக் குளறினாலும் எனது வாக்கு இவருக்குத் தான் என்ற அழுங்குப்பிடியோடு இருப்பவர் களும் இல்லாமல் இல்லை.

எதுஎவ்வாறாயினும் இம்முறை இடம்பெறப் போகும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் மிக நிதானமாகச் சிந்திக்க வேண்டும் என்பதுதான் நம் தாழ்மையான கோரிக்கை.

அதாவது யாருக்கு வாக்களிப்பது என்ப தற்கு முன்னதாக, நாம் வாக்களிப்பவர் எவ் வாறானவராக இருக்க வேண்டும் என்பதை ஒருகணம் சிந்தித்துப் பாருங்கள்.

அதேநேரம் நாம் வாக்களிக்காமல் கைவிடு வதிலும் நியாயமான காரணங்கள் உள்ளதா என்பதையும் ஆராயுங்கள். அவர் சொல்லி விட்டார். இவர் உறுதிமொழி தந்துவிட்டார் என்பவற்றை உங்கள் அறிவுடமை கொண்டு அதன் உண்மைத்தன்மைகளைப் பகுப்பாய்வு செய்யுங்கள். நன்மை தீமைகளை ஆராயுங்கள். நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகின் றீர்களோ அவர்களின் நம்பகத்தன்மை தொடர்பில் அதிகூடிய கவனம் செலுத்துங்கள்.

தேர்தல் காலத்து ஆசாடத்தனங்கள், சதி வேலைகள், கபடத்தனங்கள், உண்மைக்குப் புறம்பான கதைகட்டல்கள் இவை அனைத் தினதும் மெய்ப்பொருளைத் தேடுங்கள்.

நடைபெறப் போகும் பொதுத் தேர்தலில் தமிழ் இனத்தின் எதிர்காலம் தங்கியுள்ள தென்ற உண்மையை உணர்ந்து வாக்களிக் கும் உங்கள் தார்மீகக் கடமையை நிறைவேற் றுங்கள். அதுவே சொன்னோம் சுகம்.

http://valampurii.lk/valampurii/content.php?id=20670&ctype=news

  • கருத்துக்கள உறவுகள்
On 3/5/2020 at 9:40 PM, ampanai said:

தேர்தல் காலத்து ஆசாடத்தனங்கள், சதி வேலைகள், கபடத்தனங்கள், உண்மைக்குப் புறம்பான கதைகட்டல்கள்

ZySEFuC3mi4WGDpUwxk2Jq6fdDpDCxWwSQJYc1t6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.