Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரவியை காப்பாற்றி ஒளித்து வைத்துள்ள ஆளும்கட்சி முக்கிய புள்ளி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரவியை காப்பாற்றி ஒளித்து வைத்துள்ள ஆளும்கட்சி முக்கிய புள்ளி?

 

Bimal-Rathnayake-300x200.jpgகைது செய்வதற்காக சிறிலங்கா காவல்துறை தேடிக் கொண்டிருக்கும் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, சிறிலங்கா அரசாங்கமே ஒளித்து வைத்துள்ளது என்று ஜேவிபி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

பெலவத்தையில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளிட்ட அவர்,

“அரசாங்கத்தின் மிக சக்திவாய்ந்த அரசியல்வாதி ஒருவரின் இல்லத்திலேயே ரவி கருணாநாயக்க மறைந்திருக்கிறார். அந்த அரசியல்வாதியின் பெயரை வெளியிட முடியாது.

ஆனால், சில சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவதை தற்போதைய அரசாங்கம் அனுமதிக்காது என்பது நிச்சயம்.

ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட வேண்டும். சந்தேக நபர்களின் பட்டியலில் அவரது பெயர் உள்ள போதும், அவர் கைது செய்யப்படமாட்டார்.

ரவி கருணாநாயக்கவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களாகியும் அவர் கைது செய்யப்படவில்லை.

ஐதேக அரசாங்கத்தின் காலத்தில், தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களை, மறைத்து வைத்து காப்பாற்றியது.

அதுபோலவே, இப்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்கள், ஐதேகவினரைக் காப்பாற்றுகிறார்கள்.

அரசாங்கத்தின் முக்கிய அரசியல்வாதி ஒருவரின் வீட்டிலேயே ரவி கருணாநாயக்க மறைந்திருக்கிறார் என்பதை உறுதியாக கூறுகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2020/03/09/news/41890

14 minutes ago, nunavilan said:

அரசாங்கத்தின் முக்கிய அரசியல்வாதி ஒருவரின் வீட்டிலேயே ரவி கருணாநாயக்க மறைந்திருக்கிறார் என்பதை உறுதியாக கூறுகிறோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னர் எப்படியும் கைது செய்து,  மக்கள் தொடர்பு சாதனங்களில்  பிரச்சாரம் நடக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரவி தாக்கல் செய்த ரீட் மனு நாளை பரிசீலனைக்கு

 

 

  by : Dhackshala

ravi.jpg

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க உட்பட நான்கு பேர் தாக்கல் செய்த ரீட் மனுக்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் நாளை பரிசீலக்கப்படவுள்ளது.

ரவி கருணாநாயக்க மற்றும் அர்ஜுன் ஆலோசியஸ் உட்பட இருவரே இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை செல்லுபடியற்றதாக அறிவிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தனர்.


3 நாட்களாக தேடப்பட்டு வந்த ரவி நீதிமன்றில் மனு தாக்கல்

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க மேன் முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனு தாக்கல் செய்துள்ளார்.

தனக்கு எதிரான பிடியாணையினை செல்லுபடி அற்றதாக்குமாறு கோரியே அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த ரீட் மனுவின் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், இரகசிய பொலிஸ் பணிப்பாளர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன், பேப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவத்தின் முன்னாள் தலைவர் அர்ஜூன் அலோசியஸ் உட்பட 10 சந்தேகநபர்களை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் கடந்த 6ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி மற்றும் மார்ச் 31 ஆம் திகதி இடம்பெற்ற பிணைமுறிகள் ஏலத்தின்போது நிகழ்ந்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால், கோட்டை நீதவான் நீதிமன்றில் கடந்த புதனன்று புதிய வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையிலேயே,  இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனினும் கடந்த மூன்று நாட்களாக அவரை தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்த போதிலும் அவரை கைது செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரவி கருணாநாயக்கவை தேடி தொடர்ந்தும் வலைவீச்சு – உளவுப் பிரிவும் களமிறக்கம்

http://athavannews.com/3-நாட்களாக-தேடப்பட்டு-வந்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதிமன்ற புறக்கணிப்பு குற்றச்சாட்டில் இருந்து தப்ப ரவிக்கு கம்மன்பில அறிவுரை

நீதிமன்ற புறக்கணிப்பு குற்றச்சாட்டில் இருந்து தப்ப ரவிக்கு கம்மன்பில அறிவுரை

 
 

ரவி கருணாநாயக்க நீதிமன்ற புறக்கணிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் விரைவில் குற்றவாளியாக அறிவிக்கப்படக்கூடும் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

தெரண 360 நிகழ்ச்சியில் நேற்று (09) கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ரவி கருணாநாயக்க தற்போது இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடியாமல் உள்ளது.

சமீபத்தில் மினுவங்கொடையில் இடம்பெற்ற இனவாத கலவரத்தின் போது அதன் பிரதான சந்தேகநபராக தமது கட்சியின் பிரதித் தலைவர் மது மாதவ அரவிந்தவை குறிப்பிட்டு அவரை கைது செய்வதற்காக கடந்த அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்ததாகவும் குறித்த சந்தர்ப்பத்தில் அவர் கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவை பெறும் வரையில் மதுமாதவ அரவிந்தவை ஒரு மாதக்காலம் தான் மறைத்து வைத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சூட்சுமமாக செயற்பட்டால் மறைந்திருக்க முடியும் எனினும் எப்போதும் அதனை செய்ய முடியாது என அவர் இதன்போது தெரிவித்தார்.

அந்த வகையில் இன்னும் சில நாட்களில் ரவி கருணாநாயக்க நீதிமன்ற புறக்கணிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளாகுவதாக கம்மன்பில குறிப்பிட்டார்.

அதன் காரணமாக, மறைந்திருப்பதை விட நீதிமன்றில் சரணடைவது சிறந்த செயலாகும் என தெரிவித்த கம்மன்பில, பல நாட்கள் மறைந்திருக்க முடியாது எனவும் தலைவர் ஒருவர் என்ற வகையில் நீதிமன்றில் சரணடைந்து தண்டனையை பெறுவது கௌரவமானது என தெரிவித்திருந்தார்.

http://athavannews.com/3-நாட்களாக-தேடப்பட்டு-வந்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.