Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்றுதான் - உலகின் கடைசி பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கியும் வேட்டையாடப்பட்ட சோகம்

Featured Replies

ஒட்டகச்சிவிங்கி

ஒட்டகச்சிவிங்கி ( Credit: Hirola Conservation )

கடந்த 30 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 40 சதவிகித ஒட்டகச்சிவிங்கிகள் வேட்டைக்காரர்களாலும் கடத்தல்காரர்களாலும் அழிக்கப்பட்டிருக்கின்றன என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது.

உலகிலேயே அரிய வகை உயிரினமான வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகள், கென்யா நாட்டில் மட்டுமே இருக்கின்றன. இந்நிலையில், கென்யா வனவிலங்கு சரணாலயத்தில் வசித்து வந்த ஒரு தாய் ஒட்டகச்சிவிங்கியும் அதன் குட்டியும், நேற்று எலும்புக்கூடுகளாகக் கண்டுபிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட இந்த ஒட்டகச்சிவிங்கிகள், இறந்து நான்கு மாத காலம் ஆகியிருக்கலாம் என அதிகாரிகள் கணித்திருக்கிறார்கள்.

எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்றுதான் - உலகின் கடைசி பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கியும் வேட்டையாடப்பட்ட சோகம்
 
Credit: Hirola Conservation

2017 -ம் ஆண்டில்தான் முதன்முதலாக இந்த தாய் வெள்ளை ஒட்டகச்சிவிங்கி கென்யா வனப்பகுதியில் கண்டறியப்பட்டது. பின்னர், அது இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளை ஈன்றெடுத்தது. அவற்றைக் காண்பதற்காகவே உலகம் முழுவதும் பல சுற்றுலாப் பயணிகள் கென்யாவுக்கு வந்தனர். தற்போது இந்தச் சம்பவத்துக்குப் பின், உலகில் ஒரே ஒரு வெள்ளை ஒட்டகச்சிவிங்கி மட்டுமே எஞ்சியிருக்கிறது. Leucism என்று அழைக்கப்படும் ஒரு மரபணு மாற்றம்தான், இந்த ஒட்டகச்சிவிங்கிகளின் வெள்ளைத்தோலுக்குக் காரணம்.

 

``இது, ஒட்டுமொத்த கென்யாவுக்கும் சோகமான நாளாக அமைந்துள்ளது. உலகிலேயே எங்கள் நாட்டில் மட்டும்தான் வெள்ளை ஒட்டகச்சிவிங்கிகளைப் பராமரித்துவந்தோம். உலகில் உள்ள அனைத்து வனவிலங்கு பாதுகாவலர்களுக்கும் ஓர் அச்சுறுத்தல். அரிய வகை உயிரினங்களைப் பாதுகாப்பதில் நாங்கள் இன்னும் கவனமாகச் செயல்பட வேண்டும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது" என்று தெரிவித்திருக்கிறார், கென்யா வனவிலங்கு சரணாலயத்தின் மேலாளரான மொஹம்மத் அகமத் நூர். மேலும், இந்த ஒட்டகச்சிவிங்கிகளின் இழப்பால், இவற்றின்மீது நடத்தப்பட்ட மரபணு ஆராய்ச்சிகளும் தற்போது வீணாகிவிட்டன.

எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்றுதான் - உலகின் கடைசி பெண் வெள்ளை ஒட்டகச்சிவிங்கியும் வேட்டையாடப்பட்ட சோகம்
 
news.sky.com

கடந்த 30 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 40 சதவிகித ஒட்டகச்சிவிங்கிகள் வேட்டைக்காரர்களாலும் கடத்தல்காரர்களாலும் அழிக்கப்பட்டிருக்கின்றன என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. இந்த பூமி, அனைத்து உயிரினங்களும் வாழ்வதற்கான ஓர் இடம். சுற்றுச்சூழலில் எல்லா உயிரினங்களும் பங்குவகிக்கின்றன. இப்படி ஒவ்வொரு உயிரினமாக அழிவைச் சந்திப்பது பெரும் ஆபத்தில் போய் முடியும் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள்.

https://www.vikatan.com/news/animals/worlds-only-female-white-giraffe-killed-by-poachers

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.