Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதரஸாக்களையும் காதி நீதிமன்றங்களையும் இல்லா​தொழிப்பது எப்போது?

Featured Replies

Gavitha    

இலங்கையிலுள்ள மதரஸக்களையும் காதி நிதிமன்றங்களையும் இல்லாமல் ஒழிப்பதற்கு, தற்போதுள்ள இந்த அரசாங்கம், பொதுத் தேர்தலுக்கு முன்னர் பதிலளிக்கவேண்டும் என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வண.அத்துரலிய ரத்தண தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நாட்டின் தேசிய பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே, தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷவுக்கு, தேர்தல் காலத்தில் ஆதரவு வழங்கியதாகவும் நாட்டிலுள்ள மதரஸாக்களை இல்லாமல் செய்வதாகவும் காதி நீதிமன்றங்களை இல்லாம் செய்வதாகவும் அப்போது வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்டு 3 மாத காலம் முடிவடைந்தும், அதற்காக தற்போதுள்ள அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை கூறவேண்டும் என்று அவர் கோரினார்.

நாட்டில் 1,000க்கும் மேற்பட்ட மதரஸாக்கள் இயங்கிவருவதாகவும் இஸ்லாம் மதம் அல்லாதோரைக் கொலை செய்யவேண்டும் என்றே இந்த மதரஸாக்களில் வழங்கப்படுகின்ற புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அதை பலமுறை தாங்கள் எடுத்துக் கூறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் வியாபாரங்களை மேற்கொள்வதற்காக, பல மில்லியன் ரூபாய் பணத்தை, சவுதி அரேபிய தனவந்தர்கள் அனுப்பி வருவதாகவும் அதற்கென, 1,200 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளமை தங்களுக்குத் தெரியும் என்னும் 100க்கும் 90 சதவீதம் இலாபம் என்ற அடிப்படையிலேயே, தனவந்தர்களால் பணம் அனுப்பப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரி சஹரான் போன்றோரை கைது செய்வது இலகுவாக இருந்தாலும் அவரைப் போன்ற ஒரு பயங்கரவாதி நாட்டில் இனிமேல் தோன்றாமல் இருப்பதற்காகவே, அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை விடுத்து வருவதாகவும் எனவே, தேர்தலுக்கு முன்னர், இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து அரசாங்கம் தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் கோரினார்.

இதற்கு பதில் கூறினால் மாத்திரமே, நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தாங்கள் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக தீர்மானம் எடுக்கமுடியும் என்னும் இல்லையேல், தானே பொதுத் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கக்கூடிய வாய்ப்புகள் வரலாம் என்றும் கூறினார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக, கோட்டாப ராஜபக்‌ஷ பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும் என்றும் தற்போது தலைவராக இருக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, அந்தப் பொறுப்பிலிருந்து விலகி, தற்போதைய ஜனாதிபதிக்கு அந்தப் பதவியை வழங்கினாலே, நாட்டிலுள்ள பல பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/மதரஸககளயம-கத-நதமனறஙகளயம-இலல-தழபபத-எபபத/175-246780

மதரசாக்கள் இயங்களினாலும் அதை அரசாங்கம் கண்காணித்தல் போதும்। அவற்றை இல்லாதொழிக்க முடியாது। இங்கு எல்லோருக்கும் மத சுதந்திரம் இருக்கிறது। காதி நீதி மன்றம், விவாக சடட திருத்தும் போன்றவை முஸ்லிம்களின் ஷரியா சடடதுடன் இணைந்திருப்பதால் அதை மாற்றியமைப்பதில் அவர்களின் சம்மதம் பெறப்பட வேண்டும்।  இருந்தாலும் இலங்கை ஒரு இசுலாமிய நாடாக இல்லாதபடியால் எல்லா மக்களுக்கும் ஒரே சடடத்தை கொண்டு வருவது நல்லது। அப்படி என்றால் கண்டிய சடடம், தேசவழமை சட்ட்திலும் மாற்றம் வருமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.