Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலனாய்வு ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு

Featured Replies


இலஞ்சம், ஊழலை இல்லாதொழிப்பது தொடர்பாக சுதந்திர ஊடக இயக்கம் நடத்திய புலனாய்வு ஊடக செயலமர்வைத் தொடர்ந்து புலனாய்வு ஆக்கங்களை சமர்ப்பித்த ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வானது யாழ்ப்பாணம் கிரீன் க்ராஸ் ஹோட்டலில் நேற்று (12) நடைபெற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நடத்தப்பட்ட ஊடக செயலமர்வில் கலந்து கொண்டு பயிற்சிபெற்ற ஊடகவியலாளர்கள் புலனாய்வில் ஈடுபட்டு, ஆக்கங்களைச் சமர்ப்பித்திருந்தனர். அவர்களில் ஒன்பது ஊடகவியலாளர்கள் இங்கு விருது வழங்கி ஊக்குவிக்கப்பட்டனர்.

ஊடகவியலாளர்கள் இலஞ்சம், ஊழல் தொடர்பாக தகவலறியும் உரிமையைப் பயன்படுத்தி புலனாய்வில் ஈடுபட்டிருந்ததோடு, ஊடகவியலாளர்களின் ஆக்கங்களின் புலனாய்வுத் தன்மை, பொதுமக்கள் நலன், கதையாக்கம் போன்ற விடயங்களின் அடிப்படையில் புலனாய்வுக்கான சான்றிதழ்களும், ஊக்குவிப்புத் தொகையும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஆக்கங்களைச் சமர்ப்பித்த ஊடகவியலாளர்களான கே.பி. லக்மால், யூ.எல்.மப்ரூக், மங்களனாத் லியனாரச்சி, சுமித்தி தங்கராசா, யஷோதரா பாலசிங்கம், தர்மினி பத்மநாதன், ஏ. மொஹமட் பாயிஸ், திவியந்தினி சிவகுமார் மற்றும் கே. ரூபகாந்த் ஆகியோர் சான்றிதழ்களுடன் ஊக்குவிப்புத் தொகையும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விருது வழங்கும் நிகழ்வுக்கு மேலதிகமாக ஊடகவியலாளர்களின் ஆக்கங்கள் மற்றும் இலஞ்சம், ஊழலை இல்லாதொழிப்பதில் சிவில் சமூக அமைப்புகளின் பங்களிப்பு தொடர்பான கலந்துரையாடலும் நடைபெற்றது.

சுதந்திர ஊடக இயக்கத்தின் தலைவர் சீ. தொடாவத்த தலைமையில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்வுக்கு சுதந்திர ஊடக இயக்கத்தின் பொருளாளர் தாஹா முஸம்மில், முன்னாள் தலைவர் விரஞ்சன ஹேரத், ஊடக பயிற்றுவிப்பாளர் அமீர் ஹுஸைன், செயற்றிட்ட ஒருங்கிணைப்பாளர்களான ஆதில் அலி சப்ரி, இன்பாஸ் இஸ்ஸதீன் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

http://www.thinakaran.lk/2020/03/13/உள்நாடு/49532/புலனாய்வு-ஊடகவியலாளர்களுக்கான-விருது-வழங்கும்-நிகழ்வு

இவர்கள் மேலும் மேலும் நடுநிலையுடன் செயற்பட்டு உயர்தர ஊடகவியலாளர்களாக பரிணமித்தால் சமூகம் மேன்மையுறும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.