Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாங்காக்கில், நிலநடுக்கம்: நடிகர் தனுஷ்-நயன்தாரா உயிர் தப்பினார்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாங்காக்கில், நிலநடுக்கம்: நடிகர் தனுஷ்-நயன்தாரா உயிர் தப்பினார்கள்

சென்னை, மே.22-

பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தனுஷ்-நயன்தாரா ஆகிய இருவரும் உயிர் தப்பினார்கள். நிலநடுக்கம் காரணமாக அங்கு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

`யாரடி நீ மோகினி' என்ற புதிய படத்தை டைரக்டர் கஸ்தூரிராஜா சொந்தமாக தயாரித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாரா, கதாநாயகியாக நடிக்கிறார். இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் இது. படத்தை, ஜவகர் டைரக்டு செய்து வருகிறார்.

படப்பிடிப்பு சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் தொடங்கி, பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது.

பாடல் காட்சிகளை, தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் படமாக்க முடிவு செய்தார்கள். அதன்படி, நடிகர் தனுஷ், நடிகை நயன்தாரா, டைரக்டர் ஜவகர், மற்றும் படப்பிடிப்பு குழுவினர் பாங்காக் சென்றார்கள்.

தாய்லாந்தில், கடந்த சில நாட்களாகவே கடலில் ராட்சத அலைகள் ஏற்பட்டன. இதனால் அங்கு சுனாமி பீதி இருந்து வந்தது. இந்த நிலையில்தான் `யாரடி நீ மோகினி படப்பிடிப்பு குழுவினர் பாங்காக் சென்றார்கள்.

தனுஷ்-நயன்தாரா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை, பாங்காக்கில் உள்ள `சதான்' என்ற இடத்தில் படமாக்கிக்கொண்டிருந்தபோது, அங்கு பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டது.

படப்பிடிப்பு நடைபெற்ற பல மாடி கட்டிடம் லேசாக ஆடியது. இதனால் படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தார்கள். தனுஷ்-நயன்தாரா உள்பட படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் கட்டிடத்தைவிட்டு வெளியே ஓடிவந்து விட்டார்கள்.

படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அடுத்து என்ன செய்வது? என்ற பதட்டம் அனைவரையும் தொற்றிக்கொண்டது.

நில நடுக்கம் 2 வினாடிகளுக்கு நீடித்தது. அதன்பிறகு மெதுவாக பதட்டமும், பரபரப்பும் குறைந்து, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள். `யாரடி நீ மோகினி' பட குழுவினர் அங்கு படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, `புக்கட்' தீவுக்கு புறப்பட்டு சென்றார்கள்.

மாலைமலர்

  • கருத்துக்கள உறவுகள்

ஓ!

பாங்கொங்கில் இப்போது வேறு யாரும் உயிரோடு இல்லையா?

ஓ!

பாங்கொங்கில் இப்போது வேறு யாரும் உயிரோடு இல்லையா?

எல்லாரும்தான் தப்பிட்டாங்க :P

தனுஷ்க்கு ஒன்றும் இல்லை தானே கப்பி அக்கா

:P

தனுஷ்க்கு ஒன்றும் இல்லை தானே கப்பி அக்கா

:P

இல்லை. நயன்தாராவைக் கட்டிப் பிடித்ததால் தப்பித்தார். :huh:

இல்லை. நயன்தாராவைக் கட்டிப் பிடித்ததால் தப்பித்தார். :huh:

சிம்பு கோவிக்கபோறார்

:o :P

அடடடா ரொம்ப முக்கியமான செய்தி

கலிகாலம்,

ஏங்க என்னை டைகர்பேமிலிக்கு கூப்பிட்டிங்க, ஆனா எங்க வந்து ஞாயின் பன்னுரதன்னு சொல்லவெயில்ல!!

அரட்டைக்கு வாங்கோ சொல்லுறோம்

அது எங்க இருக்கு அரட்டை!!!

என்ன கொடுமை பூமித்தாய்கு எப்படி மனசு வந்ததோ தெரியல இப்படி உந்த தெய்வ பிறவிகளுக்கு சோதனை கொடுத்திட்டாளே

ஜயகோ ஜயகோ இதை கேட்க யாருமில்லையா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.