Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுத் தேர்தலில் இமானுவேல் ஆர்னோல்ட் களமிறங்குகிறார்

Featured Replies

-எம்.றொசாந்த்

யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இமானுவேல் ஆர்னோல்ட், பொதுத் தேர்தலில், இலங்கைத் தமிழரசுக் கட்சி (தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்) சார்பில், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேட்பாளராகக் களமிறக்கப்படுகின்றார்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கான வேட்பு மனு தயாரிக்கும் பணி, யாழ்ப்பாணம் - மார்டீன் வீதியில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையக பணிமனையில், இன்று முற்பகல் 11 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெறுகிறது.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெறும் இந்த நடவடிக்கையில், யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் வேட்பாளராக இணைக்கப்பட்டார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், ஈ.சரவணபவன், த.சித்தார்த்தன், கஜதீபன், கு.சுரேன், திருமதி சசிகலா ரவிராஜ், இமானுவேல் ஆர்னோல்ட், தபேந்திரன் ஆகியோர் வேட்பாளர்களாக வேட்புமனுவில் கையொப்பமிட்டனர்.

அத்துடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், தேசியப் பட்டியலில் இடமளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பொதுத்-தேர்தலில்-இமானுவேல்-ஆர்னோல்ட்-களமிறங்குகிறார்/71-247070

  • தொடங்கியவர்

வேட்புமனு பத்திரத்தில் சிவசக்தி ஆனந்தன் கையெழுத்திட்டார்

Editorial   / 2020 மார்ச் 17 , மு.ப. 10:34 - 0      - 14

-க. அகரன்

வன்னி மாவட்டத்தின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பொது செயலாளருமான சிவசக்தி ஆனந்தன், நேற்று (16) வேட்பு மனு பத்திரத்தில் கையொப்பமிட்டார்.

இந்த நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், தியாகராஜா, இந்திரராசா மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் உறுப்பினர்களான அருந்தவராஜா, மதிகரன், பரமேஸ்வரன், சஜீ ஆகியோர் கலந்துகொண்டனர்.

http://www.tamilmirror.lk/வன்னி/வேட்புமனு-பத்திரத்தில்-சிவசக்தி-ஆனந்தன்-கையெழுத்திட்டார்/72-247053

  • தொடங்கியவர்

‘விக்னேஸ்வரன் வன்னிப் பகுதியைப் புறந்தள்ளுகிறார்’

-க. அகரன்

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தை மாத்திரமே அடிப்படையாக கொண்டு செயற்படுவதாகத் குற்றஞ்சாட்டிய அக்கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் எஸ். சிறிதரன், வன்னி தொகுதியை புறந்தள்வதற்கு, கொழும்பில் இருந்து வேட்பாளர் ஒருவரை அழைத்து வந்து, வன்னி தேர்தல் தொகுதியில் நிறுத்தியுள்ளதாகவும் சாடினார்.

வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தில், நேற்று (16) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், வன்னி தேர்தல் தொகுதியில், வேட்பாளர்களை நியமிக்கும் பொறுப்பு தனக்கு மத்திய குழுவால் வழங்கப்பட்டதாகவும் அருந்தவபாலனும் அதற்கு உடன்பட்டிருந்தாரெனவம் கூறினார்.

அதன் அடிப்படையில், பலருடன் கதைத்தபோதும், யாரும் கட்சியில் இணைந்து போட்டியிட முன்வரவில்லையெனத் தெரிவித்த அவர், எனினும், தான் முல்லைத்தீவு, மன்னார், வவுனியா என அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று சிறந்த வேட்பாளர்களைத் தெரிவு செய்திருந்ததாகவும் கூறினார்.

அதன் பிரகாரம், வவுனியா மாவட்டத்தில், சந்திரகுமார் கண்ணன் என்பவரை வேட்பாளராகத் தெரிவு செய்தததாகத் தெரிவித்த அவர், கண்ணன் என்பவரை தெருவில் தான் விட்டுவிட்டதாக மற்றவர் கூறும் அளவுக்கு தமிழ் மக்கள் கூட்டணியினர் நடந்து விட்டனரெனவும் சாடினார்.

எனினும், தான் விக்னேஸ்வரனை மதிப்பதாகத் தெரிவித்த அவர், எனினும் அவருடன் கூட இருப்பவர்கள் சிலர், தாங்கள் தான் விக்னேஸ்வரனின் கட்சிக்கு அடுத்த தலைவர் என்ற நிலையில் கனவு கண்டு செயற்பட்டு வருகின்றனரெனவும் குற்றஞ்சாட்டினார்.

அக்கட்சியில் மத்தியகுழு என்பது போலியாக உள்ளதாகத் தெரிவித்த அவர், இந்நிலையில் தான் தொடர்ந்தும் தமிழ் மக்கள் கூட்டணியில் அங்கம் வகிக்க விரும்பவில்லையெனவும் இதன் காரணமாக வவுனியா மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்தும் உறுப்புரிமையில் இருந்தும் விலகிக்கொள்வதாகவும் கூறினார்.

கிழக்கு மாகாணம் போல, வன்னியிலும் ஒரு தலைமை உருவாகுமாக இருந்தால், அதில் தான் இணைந்து பணயிப்பதாகவும், அவர் கூறினார்.

வன்னியில் இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றக்கூடிய நிலையில் உள்ள வேட்பாளர்களைத் தெரிவு செய்துள்ள போதிலும், கொழும்பில் இருந்து ஒருவரை வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட வைத்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியானது, இன்று ஓர் ஆசனத்தைக்கூட பெற முடியாத அளவுக்கு நிலைமை மாறியுள்ளதாகவும், சிறிதரன் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/வன்னி/விக்னேஸ்வரன்-வன்னிப்-பகுதியைப்-புறந்தள்ளுகிறார்/72-247054

12 minutes ago, ampanai said:


அத்துடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், தேசியப் பட்டியலில் இடமளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/பொதுத்-தேர்தலில்-இமானுவேல்-ஆர்னோல்ட்-களமிறங்குகிறார்/71-247070

நல்லது। இருந்தாலும் இறக்குமதி செய்யும் ஆட்களுக்கு தேசியப்பட்டியல் கொடுப்பது நல்லதல்ல। கொழும்பிலிருந்து இறக்குமதி செய்தவர்களால்தான் இவர்களது கட்சிக்கே அழிவு வந்தது। 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.