Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உடல்நலக்குறைவால் டைரக்டர் விசு காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: சென்னையில் டைரக்டர் விசு(74) உடல்நல குறைவு காரணமாக இன்று(மார்ச் 22) காலமானார். கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக, சிகிச்சை பெற்று வந்த விசு, இன்று சிகிச்சை பலனின்றி காலமானார்.


 

latest tamil news


 


விசு தமிழ்த் திரைப்பட டைரக்டர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் ஆவார். 1945-ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் மக்களிடையே பெரும் வரேவற்பு பெற்றது.

இத்திரைப்படம் 1986-ம் ஆண்டிற்கான சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான பிலிம் பேர் விருதை பெற்றுள்ளது. தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான பாலச்சந்தரிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்படமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


latest tamil news


 

ஓபிஎஸ் இரங்கல்:

துணை முதல்வர் ஓபிஎஸ் தனது இரங்கல் செய்தியில், 'இயக்குநரும், நடிகருமான விசு, காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. பன்முக திரைக்கலைஞர் விசுவின் மறைவு தமிழ் திரையுலகிற்கு பேரிழப்பு' எனக் குறிப்பிட்டுள்ளார்.
 

ஸ்டாலின் இரங்கல்:

திமுக தலைவர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியில், 'விசுவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் திரைத்துறையினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபம்' எனக்கூறியுள்ளார்.
 

ரஜினி இரங்கல்:

விசுவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது இரங்கல்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவிட்டுள்ளதாவது: என் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய நண்பர், ஒப்பற்ற எழுத்தாளர், இயக்குனர், நடிகர் விசு அவர்களின் மறைவு என் மனதை மிகவும் பாதித்துள்ளது. அவரை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

 

https://www.dinamalar.com/news_detail.asp?id=2507264

 

நல்ல நடிகர். ஆழ்ந்த இரங்கல்கள்

Edited by உடையார்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விசுத்தனம்" என்று ஒரு இலக்கணத்தையே வசனத்திற்குள் ஒரு வகையாக சேர்த்திட்டவர் இவர். தனக்கென ஒரு பாணி. கணீரென்ற குரல் வளம். தெளிவான உச்சரிப்பு. வசனங்கள் அனைவருக்கும் புரிவதாக, குடும்பத்துடன் சென்று கண்டு அறிவதாக திரைக்காவியம் படைத்தவர். என்பது தொண்ணூறுகளில் நிறைய காவியங்களை படைத்தளித்திருக்கிறார். விரசம் என்ற ஒன்று இல்லாத படம் எடுத்தவர். கவர்ச்சி என்று எதுவும் இவரது படத்தில் கிடையவே கிடையாது. நாடக மேடையை வெள்ளித்திரையில் அப்படியே தந்தவர். நாடகவியலின் தந்தை பம்மல் சம்பந்த முதலியாரின் நாடக உத்திகளை கடைபிடித்து தான் திரைப்படங்கள் பொதுவாக எடுக்கப்படுவது வழக்கம். அதை இவர் சிறப்பாக்கியவர். நெஞ்சை கணமாக்கும் ஒரு நிகழ்வு சோகமான காட்சிகளை தொடர்ந்து தரமாட்டாமல், உடனே அதை தொடர்ந்து ஒரு நகைச்சுவையை வைத்து பார்ப்பவர்களின் மனதின் சோகத்தை குறைப்பது நாடக வழக்கமாம். அத்தகு இலக்கணங்கள் உண்டு இவரின் படைப்புக்களில். கூட்டு குடும்பமாய் வாழ்ந்த தன் அனுபவத்தை திரைப்படத்தில் காண்பித்தவர். நடுத்தர வர்க்கம் படும் பாடு பிரச்சினைகளிலுருந்து விடுபட சமுதாயம் தரும் உதவி, அதே சமுதாயத்தில் இருந்து வரும் ஏச்சுக்கள் ஏளனங்கள் அனைத்தும் சிறப்பாக வெளிக்காட்டியவர். அரட்டை அரங்கத்தை நகைச்சுவையாக்கி அதில் சமூக கண்ணூட்டங்களை வெளிப்படுத்தி இளைஞர்களை நல்வழி படுத்தியவர். இவரின் சினிமாவில் காட்சிகள் பட மாக்கப்பட்டவைகள் அன்றைய சிறு குறு நகரங்களின் முழுப்பரிமாணங்கள் தான். பிரிட்டிஷ் இந்தியாவில் ஜூலை திங்கள் முதல் நாளில் நாற்பத்தைந்தாம் வருடம் ஜனனம் கொண்டு நேற்றைய தினம் தனது பரிபூரண வாழ்வை நிறைவாக்கி கொண்டு இன்று தகனமாகி பூவுலகிற்கு அனுப்பியவனிடமே செல்கிறார். நாடகம் இயற்றுவது ஒரு கடினமான செயல். இயலும் இசையும் விரைந்து காணப்படும் நமது இலக்கியத்தில் நாடகத்தமிழ் பெருமளவில் தமிழறிஞர்களால் வளர்க்கப்படவில்லை. முத்தமிழ் மூன்றாம் தமிழ் பிந்தைய காலகட்டத்தில் தான் வளர்ச்சி காணப்பட்டது. அதை பெருமளவில் வளர்க்காமல் தமிழறிஞர்கள் பள்ளி கல்லூரி பாடத்திட்டங்கள் நின்று போன குறைகளை ஓரளவு கலைந்தவர்களில் விசுவிற்கு ஒரு இடம் நிச்சயம் உண்டு. மீனாட்சி சுந்தரம் ராமசாமி விசுவநாதன் விசுவாக தமிழுக்கு தொண்டாற்றியவர் எனபதை நிச்சயம் தமிழ் ஞாபகம் வைத்திருக்கும் தனது அணிகலன்களில் முத்தாய்ப்பாக. சிறுநீரக கோளாறால் உச்ச காட்சியை நிறைவு செய்து நாடகம் முற்று பெற்றது. பூவுலகின் வாழ்க்கையை சுபமாக்கி நிறை கொண்டாலும், தமிழன்னையின் அணிகலன்களில் இவர் வீற்றிருப்பார் நிரந்தரமாக. பிரிவால் வாடும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள். ஆன்மா சாந்தியடையட்டும். பிரார்த்திப்போம்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2507264

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.