Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச மருந்தகங்களை தவிர ஏனைய மருந்தகங்கள், சுப்பர் மார்க்கெட்டுகளை மூட உத்தரவு

Featured Replies

(செ.தேன்மொழி)

அரச மருந்தக கூட்டுத்தாபன விற்பனை நிலையங்களை தவிர ஏனைய ஒளடத விற்பனை நிலையங்களையும் சொகுசு வர்த்தக நிலையங்களையும் உடன் மூடுமாறு பொலிமா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பொலிஸ்  தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் தற்போது நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்களின் நலன்கருதி அனைத்து ஒளடத நிலையங்களையும் திறந்து வைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

மக்களின் நலன் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவை கருத்திற்கொள்ளாத சிலர் இந்த ஒளடத நிலையங்களில் ஏனையப் பொருட்களையும் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அத்தியாவசிய உணவுப்பொருட்களை வீடுகளுக்கு விநியோகிப்பதற்காக சொகுசு வர்த்தக நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த போதும். குறித்த வர்த்தக நிலையங்களை திறந்து வைத்து வர்த்தக நடவடிக்கைகள் முற்கொள்ளப்படுவதாக வம் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனாலேயே பொலிஸ்மா அதிபர் இவற்றை மூடுமாறு தெரிவித்துள்ளதுடன் இவ்வாறு மூடாதிருக்கும் வர்த்தக நிலையங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் ஆலோசனையும் வழங்கியுள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையிலேயே மக்களுக்கு அவசியமான ஓளடதங்களை பெற்றுக் கொள்வதற்காக அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்கள் அனைத்தும் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன்இஇதனூடாக மக்களுக்கு அவசியமான ஓளடதங்களை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/78749

  • தொடங்கியவர்
13 minutes ago, ampanai said:

இந்நிலையில் மக்களின் நலன்கருதி அனைத்து ஒளடத நிலையங்களையும் திறந்து வைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.

மக்களின் நலன் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவை கருத்திற்கொள்ளாத சிலர் இந்த ஒளடத நிலையங்களில் ஏனையப் பொருட்களையும் விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்துள்ளதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறானவர்களுக்கு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு தனியார் மருந்தகங்கள் எல்லோரையும் மூடுவது என்பது சரியான முடிவாக தெரியவில்லை. 

கொழும்பில இன்று ஊரடங்குச் சட்டம் இருந்தாலும் சில லட்சம் மக்கள் 1000 க்கணக்கான வாகனங்கள் தெருக்களில் நடமாடியதாக சொல்றாங்க. போலீஸ் சும்மா நின்டு வேடிக்கை பாத்தாகவும் சொல்றாங்க.

சொறிலங்கா அரசு உரிய ஏற்பாடுகளை செய்யாம கண்மூடித்தனமா பல முடிவுகளை எடுப்பதால் குழப்பமான சூழ்நிலைகள் உருவாகின்றன.

  • தொடங்கியவர்
5 minutes ago, Rajesh said:

கொழும்பில இன்று ஊரடங்குச் சட்டம் இருந்தாலும் சில லட்சம் மக்கள் 1000 க்கணக்கான வாகனங்கள் தெருக்களில் நடமாடியதாக சொல்றாங்க. போலீஸ் சும்மா நின்டு வேடிக்கை பாத்தாகவும் சொல்றாங்க.

சொறிலங்கா அரசு உரிய ஏற்பாடுகளை செய்யாம கண்மூடித்தனமா பல முடிவுகளை எடுப்பதால் குழப்பமான சூழ்நிலைகள் உருவாகின்றன.

கோவிட்  19க்கு முன்னராக இராணுவம், கடற்படை, விமானப்படை என வீதிகளில்  போக்குவரத்தை   கட்டுப்படுத்தினர்.எங்கே அந்த 'வீரர்கள்?'  😉

15 hours ago, ampanai said:

கோவிட்  19க்கு முன்னராக இராணுவம், கடற்படை, விமானப்படை என வீதிகளில்  போக்குவரத்தை   கட்டுப்படுத்தினர்.எங்கே அந்த 'வீரர்கள்?'  😉

அவங்க பயத்தில முகாம்களுக்குள்ள அடைஞ்சிருப்பாங்க!

நேற்று கோத்தாவின் ஊரடங்குச் சட்டத்தை மதிக்காம சில லட்சம் மக்கள் 1000 க்கணக்கான வாகனங்கள் தெருக்களில் நடமாடியதால கோபமடைஞ்ச கோத்தா எல்லா கடைகளையும் இழுத்து மூட சொல்லி உத்தரவு போட்டிருக்கார். கோத்தாவுக்கு தெரிஞ்ச நிர்வாகம் இது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.