Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கலையாத கனவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

                                                                             கலையாத கனவு
                                                                             ----------------------------  
என்றுமில்லாத ஒரு பரவசத்தில் தமிழீழமெங்கும் மகிழ்ச்சிப் பிரவாகம். பார்க்கும் முதன்மை வாய்ந்த இடங்களில் எல்லாம் தமிழீழ தேசியக்கொடி பட்டொளிவீசிப் பறந்து கொண்டிருந்தது. மாவீரர்துயிலும் இல்லங்கள் மஞ்சள் சிவப்பு வண்ணக்கொடிகளால் அழகூட்டப்பட்டு, வித்துடல்கள் உறங்கும் கருவறைகள் எங்கும் மலர்கள் தூவித் தீபங்கள் ஏற்றப்பட்டு உற்றார் உறவுகளின் விசும்பலும் மக்களின் வாழ்த்தொலியுமாக ஒருபுறமென்றால், குடாரப்பு, திருகோணமலை, மன்னார், காங்கேசன்துறை எனக் கடலிலே காவியமான மாவீரர்களுக்கும் வானிலே மேலெளுந்து காவியமானோருக்கு இரணைமடுவிலுமென மக்கள் தமது நன்றிக் கடனைச் செலுத்த, ஆலயங்கள் தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் தோறும் சிறப்பு வழிபாடுகள் முதல் அன்னதானம் வரை எங்கும் மறுபுறமாக ஒரே அமர்க்களம்.  அதேவேளை ஆங்காங்கே இருந்த பௌத்த ஆலயங்களிலும் பிரித்தோதும் ஓசையுமாக இலங்கைத்தீவில் சிறீலங்கா -  தமிழீழம் என்ற தேசங்களாகியதான அறிவிப்பு நள்ளிரவில் வெளியாகியதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவுக்குப்பின் தொடங்கிய இந்த ஆரவாரம் மெதுவாகப் பரவித் தமிழீழ தேசத்தில் மட்டுமல்ல மலையகம் உட்பட இலங்கையில் தமிழ்மொழிபேசுவோர் வாழும் கிராமங்கள்தோறும் கொண்டாட்டமாகவே இருந்தது. 
 
கொறோனாவால் திடீரென மாற்றம் கண்ட உலகஒழுங்கும் சிறீலங்காவின் அரச ஆட்சியாளர் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்தோரென பல்வேறு தரப்பினர் மீதான உறுதிப்படுத்தப்பட்ட இனப்படுகொலைத் தரவுகளின் அடிப்படையில் தமிழ்ப் புலமையாளர்கள் சட்டவல்லுனர்கள் பல்கலைக் கழக குமுகாயம் சிங்கள முற்போக்குச் சக்திகள் தமிழகத்தின் பல்வேறுகட்சிகள் மனித உரிமை அமைப்புகள் புலம்பெயர் தமிழ் அமைப்புகள் என ஒன்றிணைந்து உலக குமுகாயத்துக்குக் கொடுத்த அழுத்தம் கரணியமாக சிங்கள அரசதரப்பு இரண்டு திட்டங்களை முன்வைத்தது. அதில் உள்ளக சுயநிர்ணயமும் போர்க்குற்ற விசாரணையும் அல்லது வெளியக சுயநிர்ணய உரிமைக்கான வாக்கெடுப்பு என்று முன்வைத்த திட்டங்களை ஏலவே பெற்ற பட்டறிவின்பாற்பட்டு ஆய்வுசெய்த புலமையாளர்கள் முதலில் வெளியசுயநிர்ணய உரிமையை அடைந்து, அதன் மூலம்; அனைத்துலக குமுகாயத்தில் ஒரு அதிகாரமுள்ள தரப்பாகி இனப்படுகொலையாளர்களுக்கு தண்டனை வேண்டிக்கொடுக்கலாம் என்ற சிந்தனையின் அடிப்படையில் ஏற்பட்ட முடிவின் வெளிப்பாடாய் ஏற்பட்டுள்ள மாற்றமே  எங்கள் சனத்தின் இந்த அமர்க்களத்துக்குக் கரணியமா என்ற வினாவோடு, அமைதியாகப் பல களமுனைகளைக் கண்ட தமிழ்மாறன் தனது மனைவியையும் பிள்ளைகளையும் இதேநாளில் புதுக்குடியிருப்பிலே பறிகொடுத்ததை எண்ணியவாறு, தன்னோடு களத்திலே நின்று ஒரு காலையும் கண்ணையும் இழந்தும் புலம்பெயர் தமிழர்கள் சிலரது ஆதரவோடு சுயதொழில் முயற்சியாக மீன் பண்ணையமைத்து தன்போன்ற பலரையும் இணைத்துச் செயற்படும் கதிராளனின் பண்ணையை நோக்கிச் சென்று கொண்டிருந்தவனை, ஏய் டமில்மாற, ஏய் டமில்மாற என்ற குரலொலி கேட்டு நித்திரையிலிருந்து திடுக்குற்று எழுந்தவன் சட்டையை அணிந்துகொண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் கோத்தாவின் கட்சி சிங்களவர்களது வாக்குகளால் வென்று ஆட்சியமைத்து ஒரு வாரம்தானேயாகிறது என்று சிந்தித்தவாறு குடிசையின் வாசலுக்குச் செல்லவும் படைப்புலனாய்வுக்குழு வாசலுக்கு வரவும் சரியாக இருந்தது.  வந்தவன் கதவைத் திறந்து „என்ன?' என்று கேட்கின்றான்.  „எங்களுக்குக் கோத்தா மாத்தயாட்டையிருந்து உத்தரவு வந்திருக்கு! உங்களைப் போன்றவர்களை மீண்டும் கைது செய்யச் சொல்லி' என்று அழைத்துச் செல்கின்றனர். அவன் சிந்தனை தான் காலையிற் கண்ட கனவைச் சுற்றிச் சுழல்கிறது. கனவுமெய்ப்படும் என்று அவன் ஆழ்மனது சொல்கிறது. 


யாவும் கற்பனை


நட்புடன்
நொச்சி  

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

சமத்துவமான உரிமைகள் இல்லாத இனத்துக்கு கனவுகள்தான் மிஞ்சும்.....நல்ல கரு நொச்சி.....!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, suvy said:

சமத்துவமான உரிமைகள் இல்லாத இனத்துக்கு கனவுகள்தான் மிஞ்சும்.....நல்ல கரு நொச்சி.....!  👍

சுவியவர்களுக்கு படித்துப் பாராட்டியமைக்கு நன்றி. 

 பச்சைப் புள்ளிகளை வழங்கிய கள உறவுகளான கவி அருணாசலம்  காவலூர் கண்மணி மற்றும் தமிழ்சிறி ஆகியோருக்கும் எனது நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கனவுதான் ம்...... எல்லாம் கனவாகவே போச்சு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்ல கனவுதான் ம்...... எல்லாம் கனவாகவே போச்சு

கனவு மெய்படுவதற்கான சூழலைக் கையாளும் தலைமையின்மையும்  ஒரு ஏமாற்றமே. கனவு மெய்ப்பட ஒவ்வொரு தமிழ் அரசியல் தலைமையும்  சரியாகச்  செயற்பட்டால் சாத்தியமே. 

 மெசொபொத்தேமியா சுமேரியர், தமிழ் சிறி, காவலூர் கண்மணி,  கவி அருணாசலம்   ஆகியோருக்குப் பச்சைப் புள்ளிகளை வழங்கி ஊக்ககப்படுஇதுகின்றமைக்கும் நன்றி.  

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

நல்ல கனவுதான் ம்...... எல்லாம் கனவாகவே போச்சு

க‌ட‌சி த‌மிழ‌ன் இருக்கும் வ‌ர‌ த‌மிழீழ‌த்துக்கான‌ போராட்ட‌ம் தொட‌ரும் என்று ஒரு முறை த‌லைவ‌ர் சொன்ன‌து நினைவு இருக்கு /

2009ம் ஆண்டு இழ‌க்க‌ கூடாத‌ எல்லாம் இழ‌ந்து விட்டோம் , அதுங்க‌ளை காக்க‌ த‌வ‌றிய‌ பாவிக‌ள் நாங்க‌ள் 😓/
 

  • கருத்துக்கள உறவுகள்

1990ம் ஆண்டுக்கு முத‌ல் புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ உற‌வுக‌ளுக்கு இந்த‌ பாட‌சாலை நிக‌ழ்வு கிடைத்து இருக்காது /

1992ம் ஆண்டு , முத‌லாம் ப‌குப்பு ப‌டித்த‌ போது , கார்த்திகை மாத‌ம்   மாவிர‌ நாள் தொட‌ங்க‌ ப‌த்து நாளுக்கு முத‌லே பாட‌சாலையில் ஒவ்வொரு வ‌குப்பில் ப‌டிக்கும் பிள்ளைக‌ள் , பாட‌சாலை க‌ம்ப‌த்தில் எம‌து தேசி கொடி ஏத்தும் போது ( ஏறுது பார் கொடி ஏறு பார் என்ர‌ எங்களின் தேசிய‌ கீத‌ம் ப‌டிக்க‌னும்) பெரிய‌ வ‌குப்பு அக்கா மார் தான் தேசிய‌ கீத‌ம் பாடுவின‌ம் அவையோட‌ சேர்ந்து என்ர‌ வ‌குப்பு பிள்ளைக‌ளும் பாட‌னும் 🙏 /

அடுத்த‌ நாள் ம‌ற்ற‌ வ‌குப்பு பிள்ளைக‌ளின் நாள் அவையும் நிரைக்கு நின்று தேசிய‌ கொடி ஏறும் போது சேர்ந்து பாட‌னும் /

மேல் வ‌குப்பு ப‌டிச்ச‌ அண்ணா மார் பின் நாளில் போராட்ட‌த்தில் இணைந்து த‌ங்க‌ளின் உயிரை தாய் ம‌ணுக்கு தியாக‌ம் செய்தார்க‌ள் / அவ‌ர்க‌ளின் முக‌ம் ஒரு போதுன் என் க‌ண்ணில் இருந்து நீங்காது 😓/

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இணையவன் மற்றும்  பையன் ஆகியோருக்குப் பச்சைப் புள்ளிகளை வழங்கி ஊக்ககப்படுத்துகின்றமைக்கும் நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 3/4/2020 at 00:02, பையன்26 said:

1990ம் ஆண்டுக்கு முத‌ல் புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ந்த‌ உற‌வுக‌ளுக்கு இந்த‌ பாட‌சாலை நிக‌ழ்வு கிடைத்து இருக்காது /

1992ம் ஆண்டு , முத‌லாம் ப‌குப்பு ப‌டித்த‌ போது , கார்த்திகை மாத‌ம்   மாவிர‌ நாள் தொட‌ங்க‌ ப‌த்து நாளுக்கு முத‌லே பாட‌சாலையில் ஒவ்வொரு வ‌குப்பில் ப‌டிக்கும் பிள்ளைக‌ள் , பாட‌சாலை க‌ம்ப‌த்தில் எம‌து தேசி கொடி ஏத்தும் போது ( ஏறுது பார் கொடி ஏறு பார் என்ர‌ எங்களின் தேசிய‌ கீத‌ம் ப‌டிக்க‌னும்) பெரிய‌ வ‌குப்பு அக்கா மார் தான் தேசிய‌ கீத‌ம் பாடுவின‌ம் அவையோட‌ சேர்ந்து என்ர‌ வ‌குப்பு பிள்ளைக‌ளும் பாட‌னும் 🙏 /

அடுத்த‌ நாள் ம‌ற்ற‌ வ‌குப்பு பிள்ளைக‌ளின் நாள் அவையும் நிரைக்கு நின்று தேசிய‌ கொடி ஏறும் போது சேர்ந்து பாட‌னும் /

மேல் வ‌குப்பு ப‌டிச்ச‌ அண்ணா மார் பின் நாளில் போராட்ட‌த்தில் இணைந்து த‌ங்க‌ளின் உயிரை தாய் ம‌ணுக்கு தியாக‌ம் செய்தார்க‌ள் / அவ‌ர்க‌ளின் முக‌ம் ஒரு போதுன் என் க‌ண்ணில் இருந்து நீங்காது 😓/

 

 

 உண்மை!

களத்திலே நின்று ஈகம் புரிந்தவர்களை எமதினம் என்றும் மறவாதிருக்கும். 

பச்சைப் புள்ளி வழங்கி உற்சாகமூட்டும் புத்தனவர்களுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.