Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏழை நாடுகளை அழித்து வரும் கொரோனா வைரஸ்-பா.உதயன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏழை நாடுகளை அழித்து வரும் கொரோனா வைரஸ்-பா.உதயன் 

அண்மையில் உலகை ஆட்டிப் படைக்கும் கொரோன என்ற தோற்று நோய் பரவலால் மிகவும் வறிய நாடுகளுக்கு பாரிய பொருளாதார பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே எந்த திடமான கட்டமைப்பும் இல்லாத இந்த நாடுகள் இலஞ்சம்,அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை,உள்நாட்டு மோதல், நீதி நிர்வாக தலையீடுகள்,மனித உரிமை மீறல் ,இப்படி பல பிரச்சினைகளுக்கு மத்தியில் இந்த கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுகின்றன. ஆசியா ஆப்ரிக்க லத்தீன் அமெரிக்க வறிய நாடுகள் இந்த துன்பத்தில் இருந்து மீள முடியாமல் திண்டாடிவரும் வேளையிலே பசி பட்டினியால் பல மக்கள் மடிவது மட்டும் இன்றி இதை எதிர்த்து போராடும் சக்தியை இழந்து வருகின்றனர்.

பணக்கார நாடுகள் இந்த ஏழை நாடுகளுக்கு உதவ முன்வராது போனால் இவர்களின் பொருளாதார பின்னடைவு மாத்திரம் இன்றி இந்த பாரிய கொள்ளை நோயின் தாக்கம் மீண்டும் மீண்டும் வளர்ச்சி அடைந்த நாடுகளை தாக்கக் கூடும் ஆகவே இதை முழுமையாக அழிக்க முதலாம் தர உலகம் முன் வர வேண்டும்.

வளர்ச்சி அடைந்த பணக்கார நாடுகள் பல பொருளாதர மனிதாபமான ரீதியாக பல திட்டங்களை முன் வைத்து பாரிய நிதி உதவிகளை அந்தந்த நாடுகள் வழங்கி வருகின்றன.அதே போல் இந்த வறிய நாடுகளுக்கும் இவர்கள் இந்த அசாதாரண நிலையில் உதவ முன் வர வேண்டும்.பொருளாதார மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்.சாதாரண மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் துன்பங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.நாளாந்தம் கூலி வேலை செய்யும் தொழிலாளி வருமானம் எதுகும் இன்றி வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறான்.

எல்லா வளர்ச்சி அடைந்த நாடுகளும் தங்கள் தங்கள் மக்களையும் அதன் பொருளாதாரத்தையும் கொரோனா வைரஸின் கொலையில் இருந்து காப்பாற்ற போராடிக்கொண்டிருக்கிறார்கள்.இதோ வேளை கொடிய யுத்தம் மனித உரிமை மீறல் பொருளாதார பிரச்சினை இதன் நிமித்தம் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள அகதிகளாக ஐரோப்பிய தேச எல்லைகளில் அடைபட்டுக்கிடக்கும் அகதிகள் எந்த வித அடிப்படை வசதிகள் இல்லாமல் இருக்கும் இதே நேரத்தில் கோரோனா வைரஸின் தாக்கத்துக்கும் முகம் கொடுக்க வேண்டியுள்ளது .

எந்த பணக்கார நாடுகளும் இவர்களை கண்டு கொள்வதாய் இல்லை.ஜ,நா.வின் அகதிகளுக்கான பொறுப்பாளார் மனிதாபிமான அடிப்படையில் இந்த அகதிகளுக்கு உதவும்படி கேட்டிருக்கிறார்.இவ்வேளையில் பாரிய துன்பத்தை எதிர் கொள்ளும் இந்த அகதிகளுக்கு உதவ முன் வர வேண்டும்.

நோர்வே அகதிகள் கவுன்சிலின் பொதுச்செயலாளர் ஜான் எகேலாண்டின் கூறுகையில்  “உலகத் தலைவர்கள் தங்கள் மக்களை காப்பாற்றும்  அதே வேளை சர்வதேச ஐக்கியதுடனும் மனிதாபிமானத்துடனும் இந்த அகதிகளுக்கு உதவவேண்டும் என கேட்டிருக்கிறார்.உடனடியாக இந்த உதவிகளை செய்யாவிடின் மீண்டும் நாம் பாரிய அழிவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தும் இருக்கிறார்.

இந்த கொடிய கொள்ளை நோயினால் எப்படி உலகம் பாரிய துன்பத்தை எதிர் நோக்கி வருகிறதோ அதே துன்பத்தை அகதிகளாக அலையும் இந்த மக்கள் கொடிய யுத்தங்களினாலும் மனித உரிமை மீறல்களினாலும் காணாமல் போயும் என அத்தனை அழிவுகளையும் சுமந்து வந்தவர்கள்.வளர்ச்சி அடைந்த நாடுகளினால் கொடுக்கப்பட்ட கொடிய ஆயுதங்களினால் அத்தனை பெரிய அழிவுகளையும் துன்பங்களையும் சுமந்து வந்தவர்கள்.

ஆகவே மனித துன்பத்தின் வலிகளை நாம் இப்போ அறிந்திருக்கிறோம் அதுகும் ஆயுதம் இல்லாமல் தாக்கும் ஒரு கண்ணுக்கு தெரியாத பெரிய தொரு கொள்ளை நோயினால் .யுத்தம் ,நோய் ,துன்பம் ,துயரம் ,என இந்த உலகம் சந்தித்து வரும் துயரம் நீங்கி எல்லோருக்கும் இது ஓரு படிப்பினையாகி சமாதானமும் சமத்துவம் கொண்டதோர் புதிய உலகை ஒழுங்கை நோக்கி இனி உலகம் நகர வேண்டும்.எல்லா துன்பங்கள் போலவே இதுகும் கடந்து போய் மனிதம் வாழ மனிதர்கள் எல்லோரும் உழைக்க வேண்டும்.

இந்த பூமிப்பந்தானது தர்மம் நீதி சமத்துதின் அடிப்படையில் சுற்றுவதில்லை.
அனைத்து நாடுகளுமே தங்கள் பொருளாதார அரசியல் சுய லாபம் கருதியே தேர்வுகளை செய்கின்றன.... (All nations make choices based on their self-interest).இதில் முதலாளித்துவமோ சோஷலிசமோ கம்யூனிசமோ விதி விலக்கல்ல.சுய பொருளாதர வர்த்தக அரசியலுக்கு பின்பு தான் எல்லா தத்துவங்களுமே.அனைத்துமே மாறும் மாற்றம் என்பதை தவிர “There is nothing permanent except change."   என்று கூறிய கிரேக்கத் தத்துவஞானி Heraclitus இன் தத்துவம் போலவும் ஹெகல் சொன்னது போல் அரசனைத் தவிர அனைத்தும் மாறும் என்பதுபோல் எல்லாம் மாறிப்போனாலும் அரசனின் ஆதிக்கம் போல் சர்வாதிகார ஆட்சிகள்  (Authoritarian Rule ) அரசனைப் போல் தொடரவே செய்கின்றன.

B.Uthayan/07/04/20

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.