Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரேசிலில் கொரோனாவை வென்ற 97 வயது மூதாட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசிலில் கொரோனாவை வென்ற 97 வயது மூதாட்டி

பிரேசில் நாட்டில் கொரோனா தாக்கி சிகிச்சை பெற்று வந்த 97 வயதான மூதாட்டி ஒருவர் வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமாகி வீடு திரும்பியுள்ளார்.
 
 
உலகையே அச்சுறுத்தி வரும் உயிர்க்கொல்லி கொரோனா வைரசால் இதுவரை 1 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை நோக்கி செல்கிறது
 
இந்த கொடிய வைரசுக்கு பலியானவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள்தான் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களை கொரோனா தாக்கினால் அவர்கள் உயிர் பிழைப்பது கடினம் என்று கூறப்படுகிறது.
 
எனினும் சில நாடுகளில் 90 வயதை கடந்த முதியவர்கள் சிலர் கொரோனாவை எதிர்த்து போராடி, அதில் இருந்து மீண்டதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.
 
அந்த வகையில் பிரேசில் நாட்டில் சா பாலோ நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் கொரோனா தாக்கி சிகிச்சை பெற்று வந்த 97 வயதான மூதாட்டி ஒருவர் வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமாகி வீடு திரும்பியுள்ளார்.
 
கினா தால் கொலேட்டோ என்ற அந்த மூதாட்டி கொரோனாவுடன் போராடி வென்றதை சிறப்பிக்கும் விதமாக, அவர் வீடு திரும்பும்போது மருத்துவ ஊழியர்கள் இருபுறமும் அணிவகுத்து, கை தட்டி, உற்சாகப்படுத்தி அவரை வழியனுப்பினர்
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

2ம் உலக போரை தொடர்ந்து கொரோனாவையும் வென்ற 99 வயது முன்னாள் ராணுவ அதிகாரி

2ம் உலக போரை தொடர்ந்து கொரோனாவையும் வென்ற 99 வயது முன்னாள் ராணுவ அதிகாரி

 

2ம் உலக போரில் கலந்து கொண்ட பிரேசில் நாட்டு முன்னாள் ராணுவ அதிகாரி 99 வயதில் கொரோனா வைரசையும் வென்றுள்ளார்.
 
 
இரண்டாவது உலக போர் நடந்தபொழுது பிரேசில் நாட்டின் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றியவர் எர்மேண்டோ பைவெட்டா (வயது 99).  இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டது.
 
இதனால் பிரேசிலியா நகரில் உள்ள ராணுவ படையினருக்கான மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.  இதில் அவர் உடல்நலம் தேறினார்.
 
உடல் தளர்ந்தும் மனம் தளராத நிலையில், கடந்த 8 நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் அவர் குணமடைந்து உள்ளார்.  ராணுவத்தினர் அணியும் பச்சை வண்ண தொப்பி அணிந்தபடி, கைகளை வானை நோக்கி அசைத்தபடி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார்.
 
அவருக்கு மருத்துவமனையில் இருந்த பணியாளர்கள் பேண்ட் வாத்தியம் இசைத்தும், கைத்தட்டி உற்சாகப்படுத்தியும் வழியனுப்பி வைத்தனர்.
 
2வது உலக  போரில் பிரேசில் ராணுவம் வெற்றி பெற்றதற்கான 75வது ஆண்டு கொண்டாட்ட தினத்தில் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார்.  இதனால் அவர் மற்றொரு போரில் வெற்றி பெற்றுள்ளார் என அந்நாட்டு ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து உள்ளது.
 
லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 1,532 பேர் பலியாகி உள்ளனர்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.