Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க தேசத்தை உலுக்கும் கொரோனா – சர்வதேச ரீதியிலான கொரோனா பாதிப்புகளின் முழுமையான விபரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தேசத்தை உலுக்கும் கொரோனா – சர்வதேச ரீதியிலான கொரோனா பாதிப்புகளின் முழுமையான விபரம்

 

 

     by : Yuganthini

CORONA_DAILY_UPDATE-720x450.jpg

உலகமெங்கும் பரவும் கொரோனா வைரஸ் பரவல் பல நாடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ள அதேவேளை அமெரிக்கா அதன் உச்சக்கட்ட பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகின் பல நாடுகள் பாரிய மனித அழிவுகளையும் பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்றைய தினமும் வழக்கம் போலவே அமெரிக்காவில் பாரிய மனித உயிரிழப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அதனடிப்படையில் நேற்று ஒரே நாளில் அமெரிக்காவில் 2,341 பேர் வைரஸ் தாக்கத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்காவில் இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 47 ஆயிரத்து 659 பேராக அதிகரித்துள்ளது.

இதேவேளை அமெரிக்காவில் நேற்றைய தினம் 29 ஆயிரத்து 973 பேர் கொரோனா வைரஸ் பரவலுக்கு இலக்காகியுள்ளமை பதிவாகியதை தொடர்ந்து மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு லட்சத்து 48 ஆயிரத்து 717 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இதுவரையான காலப்பகுதியில் அந்நாட்டில் கொரோனா வைரஸுக்கான அறிகுறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏழு லட்சத்து 17 ஆயிரத்து எட்டு பேர் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், 84 ஆயிரத்து 50 பேர் இதுவரை குணமடைந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பாரிய பாதிப்புகளுக்கு முகம் கொடுத்துவரும் பிரித்தானியாவில், நேற்று ஒரே நாளில் 763 பேர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து அந்நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் உயிரிழந்த மொத்த நபர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 100 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழப்புகளை தொடர்ந்து நேற்றைய தினம் அங்கு கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 451 ஆக பதிவாகியுள்ளது.
அதனடிப்படியில், அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒருலட்சத்து 33 ஆயிரத்து 495 என பதிவாகியுள்ளதாக அந்நாட்டு உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பிரித்தானிய அரசாங்கத்தால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என விசனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதுவரையான காலப்பகுதியில், கொரோனா வைரஸ் அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 51 பேர் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கொரோனா வைரஸால் பாதிப்புக்கு உள்ளான நாடுகளில் பிரான்ஸும் முன் வரிசையில் உள்ளது.  அதனடிப்படையில் நேற்று ஒரே நாளில் அங்கு 544 பேர் உயிரிழந்துள்ளமை பதிவாகியுள்ளது.

குறித்த உயிரிழப்பு எண்ணிக்கையுடன் சேர்த்து அங்கு மொத்தமாக மரணித்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 340 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் பிரான்சில் நேற்றைய தினம் ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து 1,827 ஆக பதிவாகியுள்ளது. குறித்த எண்ணிக்கையுடன் சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 877 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அந்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகளுடன் கண்டுபிடிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட 97 ஆயிரத்து 880 பேர் சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், இதுவரையான காலப்பகுதியில் குறித்த தொற்றுக்கு இலக்கானவர்களில் 40 ஆயிரத்து 657 பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை தொற்றுக்கு இலக்கானவர்களில் ஐயாயிரத்து 218 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரச சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த வைரஸ் பரவலால் கடுமையாக அவதியுற்று வரும் மற்றுமொரு நாடான இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 437 பேர் மரணித்ததுள்ளனர்.
சீனாவினை தொடர்ந்து இத்தாலியில் நிலைகொண்ட கொரோனா வைரஸ் பரவல் பாரிய மனித அழிவுகளை அங்கு ஏற்படுத்தி வந்த நிலையில், குறித்த நிலை தற்போது குறைந்துள்ளது.

அதனடிப்படையில் அங்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 85 ஆக உயர்ந்துள்ளது.
அத்துடன் நேற்று ஒரே நாளில் இத்தாலியில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 3,370 ஆக பதிவாகியுள்ளதுடன் இதுவரையான காலப்பகுதியில் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 327 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் அங்கு 2,384 பேர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரும் அதேவேளை இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 54 ஆயிரத்து 543 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

அத்துடன், ஒரு லட்சத்து ஏழாயிரத்து 699 பேர் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகளுடன் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 435 பேர் மரணித்துள்ள அதேவேளை அங்கு மரணித்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 21ஆயிரத்து 717 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் நேற்றைய தினம் 4,211 பேர் அங்கு புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ள அதேவேளை இதுவரையான காலப்பகுதியில் பாதிப்புக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை இரண்டு லட்சத்து எட்டாயிரத்து 389 ஆக உயர்ந்துள்ளது.

குறித்த நாடுகளை தாண்டி அதீதமாக பரவி வரும் கொரோனா வைரஸால், ஜேர்மனியில் நேற்று ஒரே நாளில், 229 பேர் மரணித்துள்ளனர். அங்கு மொத்தமாக மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,315 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 648 ஆக காணப்படும் அதேவேளை நேற்றைய தினத்தில் மாத்திரம் அங்கு தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 2,195 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை தாண்டி துருக்கியில் நேற்றைய தினம் 117 பேர் மரணித்து மொத்த மரணம் 2,376 ஆக அதிகரித்துள்ளது.
அதனை விட இதுவரையான காலப்பகுதியில் 5,391 பேர் மரணித்துள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 94 ஆக பதிவாகியுள்ளது.

குறித்த நாடுகளை விட கொரோன வைரஸ் தோற்றம் பெற்ற நாடான சீனாவில் நேற்றைய தினம் எவ்விதமான மரணங்களும் பதிவாகவில்லை என்பதுடன், அங்கு நேற்று 30 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுவரையான காலப்பகுதியில் சீனாவில், 4,632 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.

குறித்த தகவ்களின் அடிப்படையில், கடந்த டிசம்பர் மாதம் முதல் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் பரவலுக்கு இலக்காகி உலகளாவிய ரீதியில் இதுவரை, இருபத்தாறு லட்சத்து முப்பத்து எட்டாயிரத்து 909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் இவ்வைரஸ் தொற்றின் காரணமாக இதுவரை, ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 248 பேர் மரணித்துள்ள அதேவேளை, ஏழு லட்சத்து 22 ஆயிரத்து 55 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/அமெரிக்க-தேசத்தை-உலுக்கு/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.