Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவில் இருந்து விடுதலையான 8 இலட்சம் பேர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Coronavirus-World-Updates.jpg

கொரோனாவில் இருந்து விடுதலையான 8 இலட்சம் பேர்!

உலகம் முழுவதும் மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் அமெரிக்கா கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் அங்கு நேற்றும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மரணித்துள்ளனர்.

இதனைவிட, அங்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 இலட்சத்தை நெருங்கிவருகிறது.

இதேவேளை, உலகம் முழுவதும் மொத்த பாதிப்பு 30 இலட்சத்தை நெருங்கி வருவதுடன் மொத்த உயிரிழப்புக்கள் 2 இலட்சத்தைக் கடந்துள்ளன.

கடந்த 24 மணிநேரங்களில் உலக நாடுகளில் 90 ஆயிரத்து 722 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்தமாக 29 இலட்சத்து 21 ஆயிரத்து 439 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், 6 ஆயிரத்து 69 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழப்பு ஒரு 2 இலட்சத்து 3 ஆயிரத்து 289ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, 8 இலட்சத்து 36 ஆயிரத்து 978 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 65 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 54 ஆயிரத்து 256 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று மட்டும் அங்கு புதிய நோயாளர்கள் 35 ஆயிரத்து 419 பேர் இனங்காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 9 இலட்சத்து 60 ஆயிரத்து 651 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய நாடுகளில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸால் இதுவரை ஒரு இலட்சத்து 20 ஆயிரத்து 118 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன், நேற்று குறித்த நாடுகளில் 2 ஆயிரத்து 794 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஐரோப்பிய நாடுகளில் நேற்று 27 ஆயிரத்து 183 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் மொத்தமாக 12 இலட்சத்து 52 ஆயிரத்து 497 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் இதுவரை 4 இலட்சத்து 7 ஆயிரத்து 49 பேர் குணமடைந்துள்ளனர்.

குறித்த நாடுகளில் இத்தாலி, ஸ்பெயின். பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் அதிக உயிரிழப்புக்களை ஏற்படுத்தி வந்தநிலையில் பெல்ஜியத்திலும் கணிசமான உயிரிழப்புக்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன.

இதேவேளை, கடந்த சில வாரங்களைவிட தற்போது பிரித்தானியாவைத் தவிர ஏனைய ஐரோப்பிய நாடுகளில் சற்று பாதிப்பு குறைந்துள்ளது.

அமெரிக்காவை அடுத்து அதிக உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ள இத்தாலியில் நேற்று ஒரேநாளில் 415 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 26 ஆயிரத்து 384 ஆகப் பதிவாகியுள்ளன.

மேலும், நேற்று புதிய நோயாளர்கள் 2 ஆயிரத்து 357 பேர் பதிவாகியுள்ள நிலையில் மொத்தமாக அங்கு ஒரு இலட்சத்து 95 ஆயிரத்து 351 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளமை பதிவாகியுள்ளது.

இதனைவிட, ஸ்பெயினில் நேற்று 378 பேரின் மரணங்கள் பதிவாகியதுடன் மொத்த மரணங்கள் 22 ஆயிரத்து 902 ஆக அதிகரித்துள்ளன.

அத்துடன், புதிய நோயாளர்கள் 3 ஆயிரத்து 995 ஆக உள்ளதுடன் இதுவரை 2 இலட்சத்து 23 ஆயிரத்து 759 ஆக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு 96 ஆயிரம் பேர்வரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, பிரான்ஸில் கடந்தவாரங்களை விட உயிரிழப்புக்கள் பெருமளவில் குறைந்துள்ளதுடன் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் குறைந்துள்ளன.

இந்நிலையில் அந்நாட்டில் நேற்று 369 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் மொத்த உயிரிழப்புக்கள் 22 ஆயிரத்து 614 பேர் ஆக அதிகரித்துள்ளது.

மேலும், மொத்த வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்து 61 ஆயிரத்து 488 பேராக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் பிரித்தானியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வைரஸால் நேற்று மட்டும் 813 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 20 ஆயிரத்து 319 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், நேற்று மட்டும் 4 ஆயிரத்து 913 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு ஒரு இலட்சத்து 48 ஆயிரத்து 913 ஆக அதிகரித்துள்ளது.

இதனைவிட, ஜேர்மனியில் ஒரு இலட்சத்து 56 ஆயிரத்து 513 பேருக்கு வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அங்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர்வரை தொற்றிலிருந்து குணமடைந்துள்ள நிலையில் உலக நாடுகளில் குணமடைவோர் எண்ணிக்கை ஜேர்மனியில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்நாட்டில் நேற்று 117 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 5 ஆயிரத்து 877 ஆக அதிகரித்துள்ளன.

மற்றொரு ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில் நேற்று 238 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு மொத்த மரணங்கள் 6 ஆயிரத்து 917 ஆக அதிகரித்துள்ளன. அங்கு 45 ஆயிரம் பொருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனைவிட, நெதர்லாந்தில் நேற்று மட்டும் 120 பேர் மரணித்துள்ளதுடன் அங்கு மொத்த உயிரிழப்புக்கள் 4 ஆயிரத்து 409 ஆக அதிகரித்துள்ளது.

இதனைவிட ரஷ்யாவில் தற்போது பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் நேற்று மட்டும் அங்கு 5 ஆயிரத்து 966பேர் புதிய நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களில் அதிக பாதிப்பு ஏற்பட்ட நிலையில் மொத்த பாதிப்புக்கள் அங்கு 74 ஆயிரத்து 588ஆகப் பதிவாகியுள்ளது. அந்நாட்டில் நேற்று 66 பேர் மரணித்துள்ளதுடன் மொத்த மரணங்கள் 681ஆக அதிகரித்துள்ளது.

இதனைவிட தென் அமெரிக்கா நாடான பிரேஸிலில் கடந்த நாட்களில் அதிக உயிரிழப்புக்கள் பதிவாகிவரும் நிலையில் நேற்றும் 375 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு மொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 45 ஆக அதிகரித்துள்ளதுடன் மொத்த பாதிப்பு 60 ஆயிரமாகக் காணப்படுகிறது.

இதையடுத்து மற்றொரு அமெரிக்க நாடான கனடாவில் நேற்று 163 பேர் மரணித்துள்ள நிலையில் மொத்த மரணங்கள் 2 ஆயிரத்து 465 ஆக அதிகரித்துள்ளன.

ஆசியாவில் நேற்று 350 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளதுடன் அதில் துருக்கியில் 106 பேர் மரணித்துள்ளதுடன் ஈரானில் 76 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பேரவத் தொடங்கிய சீனாவில் நேற்று 12 பேருக்கு வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் கடந்த ஒரு வாரத்தில் எந்தவொரு உயிரிழப்பும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/உலகம்-முழுவதும்-2-இலட்சம்/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.