Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொல்லை நாட்டின் தலைவரின் கதியை உலகினால் அலட்சியம் செய்யமுடியாமல் இருப்பது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொல்லை நாட்டின் தலைவரின் கதியை உலகினால் அலட்சியம் செய்யமுடியாமல் இருப்பது ஏன்?

kim-jong-un-exlarge-169.jpgவடகொரியாவின் அதியுயர் தலைவர் கிம் ஜொங் – உன் இறுதியாக ஏப்ரில் 11 பகிரங்கத்தில் காணப்பட்டார். அதற்குப் பிறகு அவரை யாரும் காணவில்லை. அதனால், அவர் காணாமல்போனது பற்றிய ஊகங்களும் சந்தேகங்களும் கிளம்ப ஆரம்பித்தன.

குறிப்பாக, கிம் அவரது பேரனாரும் வடகொரியாவின் தாபகத் தலைவருமான கிம் இல் – சுங்கின் பிறந்ததினக் கொண்டாட்டங்கள் ஏப்ரில் 15 நடைபெற்றபோது பங்கேற்கவில்லை. தந்தையார் மறைந்த பிறகு ஆட்சியதிகாரத்துக்கு வந்த கிம் வடகொரியாவில் மிகவும் முக்கியத்துவம்வாய்ந்த தேசிய விடுமுறைதினமான ஏப்பரில் 15 கொண்டாட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டார். அவர் அதில் இத்தடவைதான் பங்கேற்கவில்லை. அதனால், அவர் காணாமல்போன மர்மம் தொடர்பில் பல்வேறு விதமான சதிக்கோட்பாடுகள் ஊடகங்களில் விசேடமாக இணையவெளியில் உலாவரத்தொடங்கின.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு தனது நாட்டை கொரோனா வைரஸ் வதைத்துக்கொண்டிருப்பதன் விளைவாக ஆயிரம் தொல்லைகள். அதற்கு மத்தியிலும் அவரும் கிம்மைப் பற்றி பேசத்தவறவில்லை; பேசாமல் இருக்கமுடியவில்லை.

global-inside.jpgவடகொரியா மிகவும் வறிய நாடு. மனிதகுலத்துக்கு அழிவைத்தரும் அணுவாயுதங்களைத் தவிர, ஆக்கபூர்வமான எந்தவொரு காரியத்துக்காகவும் அந்த நாடு பெயரெடுத்ததில்லை. ஆனால், அதன் தலைவர் காணாமல் போயிருப்பது குறித்து உலகம் ஏன் அக்கறைப்படுகிறது ?

கிம் மாயமாக மறைந்தருப்பது இதுதான் முதற்தடவையுமல்ல. கடந்தகாலத்தில் பல தடவைகள் அவர் காணாமல்போனார்…..பிறகு அவதாரம் எடுத்துவந்தவர் போல காட்சிதந்தார். வடகொரியாவில் இருந்து ஏனைய நாடுகள் போன்று தகவல்கள் வெளியில் வருவதில்லை. அதனால் ஊகங்கள் வேகமாக கிளம்புகின்றன என்று கூறலாம்.

வடகொரியா உலகிற்கு முக்கியமான நாடு என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.நிச்சயமாக அந்த முக்கியத்துவம் எந்த நல்ல காரணத்தினாலும் அல்ல, மாறாக அதனால் உலகிற்கு வருகின்ற தொல்லைகள்தான் ஒரு இரண்டகமான முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றன.

வடகொரியாவின் சனத்தொகை 2 கோடி 60 இலட்சம் ; இது தென்கொரிய சனத்தொகையின் பாதி. மோசமான வறுமை தாண்டவமாடுகிறது வடகொரியாவில்.கொரிய உற்பத்திகள் என்று சொன்னால் சகலதுமே தென்கொரியாவில் இருந்தே வருகின்றன. ஆனால், தென்கொரியாவை விடவும் உலகத்தின் கவனத்தை முழு உலகிலுமே ‘அசல் சர்வாதிகார’ ஆட்சியைக் கொண்டிருக்கும் வடகொரியா கூடுதலாக பெறுகிறது.

உண்மையிலேயே, தொல்லை நாடுகளையும் அவற்றின் தலைவர்களையும் உலகம் அலட்சியம் செய்யமுடியாது. அணுவாயுதங்களையும் நீண்டதூர வீச்சு ஏவுகணைகளையும் வைத்துக்கொண்டு தொந்தரவு தருகின்ற தருகின்ற ஒரு நாடாக வடகொரியா இருக்கிறது. தனது ஏவுகணைகள் அணுவாயுதங்களை தாங்கிக்கொண்டு அமெரிக்காவரை சென்று தாக்குதலகளை நடத்தும் வல்லமை படைத்தவை என்று வடகொரியா மார்தட்டிக்கொள்ளவும் செய்கிறது. இந்த ஏவுகணைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதிலும் அந்த நாடு ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் அணு விஞ்ஞானியான அப்துல் கதீர் கான் அரிசிக்கு பரிமாற்றமாக வடகொரியாவிடமிருந்து ஏவுகணைகளை வாங்கியதாவும் கூறப்படுகிறது. சிலவகையான அணுத்தொழில்நுடபங்களை அவர் அந்த நாட்டிடமிருந்து பெற்றுக்கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் உண்டு.

 

கிம் இதய சத்திரசிகிச்சையொன்றை அடுத்து ‘கோமா’ நிலைக்கு சென்றதாக அல்லது மாரடைப்பினால் அவர் இறந்ததாக வடகொரியாவில் இருந்து அல்ல, தென்கொரியாவில் இருந்து செய்திகள் வெளியாகின்றன. கரையோர நகரொன்றில் தனது உல்லாச மாளிகையில் கிம் ஒய்வெடுத்துவருவதாக இன்னொரு செய்தி உண்டு. தான்தோன்றித்தனமாகப் பேசுவதில் பெயரெடுத்த டொனால்ட் ட்ரம்ப் கிம் உயிருடனன் இருப்பதாக கூறுகிறார். தென்கொரிய அரசாங்க உயர்வட்டாரங்களும் கூட கிம் உயிருடன்நலமே இருப்பதாக கூறுகின்றன. ஆனால், வடகொரிய அரசாங்கத்திடமிருந்து அவரைப் பற்றிய தகவல் எதுவும் வருவதில்லை.

முழு உலகையுமே கொவிட் ட– 19 வைரஸ் வதைத்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் கிம் காணாமல்போயாருக்கிறார்.வடகொரியாவில் வைரஸ் தொற்று கிடையாது என்று அரசாங்க வட்டாரங்கள் ஊடகச்களுக்கு செய்தி கொடுக்கின்றன.

மூன்று வாரங்களாகியும் கிம்மைப் பற்றிய உறுப்பாடன எந்தத்தகவலும் இல்லை…..ஏனைய நாடுகளில் இருந்து வருகின்ற ஊர்ஜிதமற்ற தகவல்களைத் தவிர.

உண்மையில், வடகொரிய தலைவரின் ‘மாயம்’ உலகிற்கு அச்சந்தருகிறது…… அவர் நலமே திரும்பிவரவேண்டும் என்ற அக்கறையையும் விட அவர் இல்லாமல்போனால் அணுவாயுதநாடான வடகொரியாவின் உறுதிப்பாடு மேலும் சீர்குலைந்து விடமே என்ற அக்கறையே பெரிதாக உலக நாடுகளை வைரஸ் கொடுமைக்கு மத்தியிலும் கொரிய தீபகற்பத்தை நோக்கிப் பார்க்கவைக்கிறது.

 

http://thinakkural.lk/article/39901

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, உடையார் said:

வடகொரியா மிகவும் வறிய நாடு. மனிதகுலத்துக்கு அழிவைத்தரும் அணுவாயுதங்களைத் தவிர, ஆக்கபூர்வமான எந்தவொரு காரியத்துக்காகவும் அந்த நாடு பெயரெடுத்ததில்லை

யாரப்பா இந்த கட்டுரையாளர். வட கொரியாவில நிண்டுகொண்டு எல்லாவற்றையும் பார்த்து எழுதுகிற மாதிரி இருக்கு. 😜

கிறுக்குப்பய புள்ள. 😂

கக்கட தீவ விட்டு வெளியில கூட போயிருக்க மாட்டான். ஆனா கட்டுரையோ உலகத்தச் சுத்தி வந்த மாதிரி எழுதியிருக்கிறான். ☹️

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.