Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா வைரஸ் பரவுவதற்கு குறிப்பிட்ட ஒரு சமூகமே காரணம் என்ற கருத்தை உருவாக்குவதற்கு சிங்கள தேசிய ஊடகங்கள் முயற்சி- சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் அறிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா வைரஸ் பரவுவதற்கு குறிப்பிட்ட ஒரு சமூகமே காரணம் என்ற கருத்தை உருவாக்குவதற்கு சிங்கள தேசிய ஊடகங்கள் முயற்சி- சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் அறிக்கை

சிங்கள தேசிய ஊடகங்களும்,சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பெருமளவானவர்களும்,குறிப்பிட்ட சமூகமொன்றே நோய் தொற்றிற்கு காரணம் என்ற சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான கருத்தை பரப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது.

தென்னாசியாவில் பத்திரிகை சுதந்திரம் குறித்த தனது 18வது அறிக்கையில் சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் இதனை தெரிவித்துள்ளது.சர்வதேச பத்திரிகையாளர் சம்மேளனம் மேலும் தெரிவித்துள்ளதாவது

இலங்கையும் அதன் மக்களினது ஜனநாயக உரிமைகளும் முக்கியமான ஒரு குறுக்குபாதையில் உள்ளன.கொவிட் 19 உலகளாவிய நோய் தொற்று இந்த நிலைமையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

கொரேனா வைரஸ் குறித்து சமநிலையோடு, செய்தி வெளியிடும் விடயத்தில் ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் புதிய நெருக்கடியை சந்தித்துள்ளனர்.அச்சத்தை தூண்டாமல், பாரபட்சமற்ற விதத்தில் தகவல்களையும்,சுகாதார அறிவுறுத்தல்களையும் அவர்கள் வெளியிடவேண்டிய சவாலை சந்தித்துள்ளனர்.

எதிர்பார்த்ததை போல அரசாங்கம் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக அதிகளவு ஏதேச்சதிகார வழிமுறைகளை பயன்படுத்துகின்றது.
மார்ச் நடுப்பகுதி முதல் நாடு உத்தியோகபூர்வமற்ற சுகாதார நெருக்கடி நிலைமைக்குள் காணப்படுகின்றது.

 

அவசரகால நிலை பிரகடனத்திற்கு ஒரு மாதத்திற்குள் நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கவேண்டியது அவசியம். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் ஒத்திவைக்கபட்டுள்ளது.
இதன்காரணமாக பொலிஸ் சட்டத்தின் கீழ் அமைதி சட்டமொழுங்கை பேணுவதற்காக அரசாங்கம் பொலிஸ் ஊரடங்கினை அறிவித்துள்ளது.

சிங்கள தேசிய ஊடகங்களும்,சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பெருமளவானவர்களும்,குறிப்பிட்ட சமூகமொன்றே நோய் தொற்றிற்கு காரணம் என்ற சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான கருத்தாடல்களை ஆரம்பித்துள்ளனர்.இந்த சூழ்நிலையில் சுகாதார அமைச்சு கொவிட் 19 குறித்து செய்தியை வெளியிடும் போது பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.கொரோனா நோயினால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் இனம் குறித்தும் மதம் குறித்தும் குறிப்பிடவேண்டாம் என சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் படங்கள் வீடியோக்களை அவர்களின் அனுமதியின்றி வெளியிடவேண்டாம் எனவும் சுகாதார அமைச்சு அறிவுறுத்தலை விடுத்துள்ளது.

மக்களிற்கு வெறுப்பை ஏற்படுத்தும் விதத்தில் செய்திகளை வெளியிடவேண்டாம் எனவும் சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனா வைரசிற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரச ஊழியர்களை விமர்சனம் செய்பவர்கள், சிறிய தவறுகளை சுட்டிக்காட்டுபவர்கள்,அல்லது அவமதிப்பவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸின் ஊடகப்பிரிவு அனைத்து ஊடகங்களிற்கும் அறிவுறுத்தல் ஒன்றை விடுத்திருந்தது.பதில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரிலே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

ஏழு ஊடக அமைப்புகள் அறிக்கையொன்றில் பொலிஸ்மா அதிபரின் உத்தரவு குறித்து கரிசனை வெளியிட்டிருந்ததுடன்,இந்த உத்தரவு இணையத்தில் கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது எனவும் தெரிவித்திருந்தன.

சிவில் சமூகமும் இந்த உத்தரவிற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
எதிர்வரும் காலங்களில் கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்கும் காப்பாற்றுவதற்கும் இலங்கையின் ஊடக சுதந்திர அமைப்புகள் உள்நாட்டிலும சர்வதேச அளவிலும் தங்கள் மத்தியிலான ஐக்கியத்தை பலப்படுத்தவேண்டும்.

கொரோனா வைரசிற்கு பிந்தைய சூழல் பொருளாதார நெருக்கடிகளும்,அரசதரப்பிலிருந்து கடுமையான நடவடிக்கைகளையும் கொண்டதாக காணப்படும்.

சமூக டிஜிட்டல் ஊடகங்களின் அதிகரிப்பு நெறிமுறையை அடிப்படையாக கொண்ட இதழியலிற்கு சவாலாக காணப்படும்.
நெறிமுறையை அடிப்படையாக கொண்ட விட்டுக்கொடுப்பற்ற இதழியலே எங்கள் முன்னாள் உள்ள பாதைக்கு வழிகாட்டவேண்டும்.

http://thinakkural.lk/article/40129

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களை இனப்படுகொலை செய்யும்போது ...இவை எங்கை இருந்தவை.....

Edited by alvayan

7 hours ago, உடையார் said:

சிங்கள தேசிய ஊடகங்களும்,சமூக ஊடகங்களை பயன்படுத்தும் பெருமளவானவர்களும்,குறிப்பிட்ட சமூகமொன்றே நோய் தொற்றிற்கு காரணம் என்ற சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான கருத்தாடல்களை ஆரம்பித்துள்ளனர்.இந்த சூழ்நிலையில் சுகாதார அமைச்சு கொவிட் 19 குறித்து செய்தியை வெளியிடும் போது பின்பற்றவேண்டிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.கொரோனா நோயினால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் இனம் குறித்தும் மதம் குறித்தும் குறிப்பிடவேண்டாம் என சுகாதார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

ஆம், இலங்கை வாழ் சீன சமூகம் மீது இவ்வாறு குற்றம் கூறுவது சரியல்ல 😛

11 hours ago, ampanai said:

ஆம், இலங்கை வாழ் சீன சமூகம் மீது இவ்வாறு குற்றம் கூறுவது சரியல்ல 😛

நான் வேறு ஒரு சமூகம் , நமது மொழி பேசும் சமூகம்  என்று நினைத்தேன்। இப்போது இந்த சமூகமும் இலங்கையில் உள்ள இன்னொரு சிறுபான்மை சமூகமாக மாறி விட்ட்தா? இருக்கலாம் , இருக்கலாம்। இப்போது சீன மொழியிலும் எல்லா இடங்களிலும் அறிவிப்புக்களை காண முடிகிறது। நீங்கள் சொன்னது சரிதான்।

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.