Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினியின் உதவி: தயாரிப்பாளர்கள் மத்தியில் மோதல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரஜினியின் உதவி: தயாரிப்பாளர்கள் மத்தியில் மோதல்!

spacer.png

 

ரஜினி எங்கு வந்தாலும், பேசினாலும் அது விவாதப் பொருளாக மாறி முக்கியத்துவம் பெற்று விடுகிறது.

அது போன்று தான் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு ரஜினிகாந்த் தரப்பில் வழங்கப்படுவதாக இருந்த அரிசி - மளிகை சாமான்கள் விவகாரமாகி வீதிக்கு வந்துவிட்டது. இதனைத் தொலைக்காட்சிகள் தங்கள் செய்தி பசிக்கு இரையாக்கி ஒரே நேரத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் குடும்ப தேவைக்கு அரிசி பருப்பு கூட வாங்க முடியாத வறுமையில் இருப்பதான தோற்றத்தை உலகம் முழுமையும் கொண்டு சேர்த்துள்ளது.

 

கொரோனா காரணமாக வேலையின்றி வீட்டில் முடங்கிவிட்ட தொழிலாளர்களுக்கு உதவி செய்ய வசதி படைத்த திரைத் துறையினரிடம் உதவி கேட்டவர் ஃபெப்சி அமைப்பின் தலைவர் R.K.செல்வமணி. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் பொருளுதவியும், நிதியுதவியும் செய்தனர். ரஜினிகாந்த் 50 லட்சம் நிதி வழங்கியதை ஃபெப்சி அமைப்பு தான் பொதுவெளியில் அறிவித்தது. ரஜினி அறிவிக்கவில்லை.

ஃபெப்சி அமைப்பைத் தொடர்ந்து தென்னிந்திய நடிகர் சங்கம், சின்னத்திரை கலைஞர்கள் சங்கம், திரைப்பட இயக்குநர்கள் சங்கம் இவை மூன்றும் நிவாரண உதவி கேட்க தொடங்கினார்கள். இந்த சங்கங்களில் வேலைவாய்ப்பு கிடைத்தவர்கள் எல்லாம் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வசதியான வாழ்க்கை வாழ்பவர்கள். இவர்கள் தாமாக முன்வந்து உதவி செய்திருந்தால் பொதுவெளியில் உதவி கேட்டிருக்க வேண்டி இருந்திருக்காது.

 

இந்த அமைப்புகளுக்கு 10 கிலோ அரிசி மூட்டையுடன் பலசரக்கு அடங்கிய பை தலா 500 ரஜினிகாந்த் வழங்கினார். இந்த தகவலையும் சம்பந்தப்பட்ட அமைப்புகளே அறிவித்தனர். ரஜினி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இது மட்டுமின்றி நலிந்த கலைஞர்கள், பத்திரிகையாளர்கள் என பலதரப்புக்கும் அரிசி, மளிகை சாமான்கள் வழங்கப்பட்டிருந்தாலும், இவை பற்றிய தகவலை ரஜினிகாந்த் தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ரஜினிகாந்த் உறுப்பினர். இருந்த போதிலும் அந்த அமைப்பில் இருப்பவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தயாரிப்பாளர் கே.ராஜன் கஷ்டத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என ரஜினிக்கு கடிதம் எழுதியதால் 750 தயாரிப்பாளர்களுக்கு அரிசி, மளிகை சாமான் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இதனைத் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடும் மூன்று அணிகளுக்கு தலா 250 என ஒதுக்கீடு செய்து தி.நகர், சாலிகிராமம், வளசரவாக்கம் என மூன்று இடங்களில் வழங்கப்படும் என அறிவித்தார். இதனை நேரடியாக விமர்சனம் செய்ய இயலாத தயாரிப்பாளர்கள், தங்களது விசுவாசிகள் மூலம் விமர்சனம் செய்யத் தொடங்கினார்கள்.

தயாரிப்பாளர்களிடம் சம்பளம் வாங்கும் நடிகரிடம் கோடிக்கணக்கில் முதலீடு செய்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர் அரிசி, மளிகை சாமான் கேட்டு வாங்குவது பெரும் அவமானம் என ஒரு தரப்பு கே.ராஜனை திட்டி தீர்த்தது, மற்றொரு தரப்பு பொருளாகக் கொடுப்பதை காட்டிலும் தயாரிப்பாளர்களின் வங்கி கணக்கில் ரஜினி நேரடியாக பணத்தை செலுத்துவது கௌரவமாக இருக்கும் என்றனர். மற்றொரு தரப்பு ரஜினி தயாரிப்பாளர்கள் சங்க தயாரிப்பில் படம் ஒன்று தயாரிக்க கால்ஷீட் தரவேண்டும் அதன் மூலம் கோடிக்கணக்கில் சங்க அறக்கட்டளைக்கு வருமானம் கிடைக்கும். என்று ரஜினிக்கு வேண்டுகோள் வைக்கத் தொடங்கியுள்ளனர்.

இது சம்பந்தமாக தயாரிப்பாளர்கள் சிலரிடம் கேட்டபோது, "கேட்காமல் கிடைப்பது தான் உதவி, தயாள குணம் என்பார்கள். கடிதம் எழுதி கேட்டு பெறுவது யாசகம் ரஜினி சங்கத்தின் உறுப்பினராக இருந்தபோதிலும் அவரை உச்சபட்ச நட்சத்திரமாகவே இந்த உலகம் பார்க்கிறது. தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு அவர் தாமாக முன்வந்து உதவிகரம் நீட்டியிருந்தால் கௌரவமாக இருந்திருக்கும் .

கேட்டு பெற்ற பின்பு அதனை பங்கு பிரித்து தேர்தலில் போட்டியிடுபவர்கள் வழங்குவதற்கு நாள் குறித்தது சரியான செயல் இல்லை. உதவும் நோக்கோடு வழங்கிய உதவியை தங்கள் வசதிக்கு ஏற்ப விமர்சனம் செய்வர்கள் எல்லாம் எப்போதோ படம் தயாரித்தவர்கள். தற்போதைய திரைப்படத் துறை நிலை அறியாதவர்கள். இவர்களுக்கான பொழுதுபோக்கு மையமாக தயாரிப்பாளர்கள் சங்கம் மாறிவிட்டது.

உண்மையிலே கடந்த பத்தாண்டுகளாக திரைப்படத் தயாரிப்பில் இருக்கும் தயாரிப்பாளர்கள், பொதுவெளியில் எந்த கருத்தையும் தெரிவிப்பதில்லை. 4500 பேர் சங்கத்தில் உறுப்பினராகப் பதிவு செய்துள்ளனர். இவற்றில் 1300 உறுப்பினர்களே வாக்களிக்கத் தகுதியுள்ளவர்கள். இவர்களில் 70% பேர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு படம் தயாரித்தவர்கள்.

தேர்தல் வெற்றி தோல்வியை தீர்மானிப்பவர்களாக இருக்கும் இவர்களை அதிக அளவில் விலைக்கு வாங்கும் சக்தி படைத்த தயாரிப்பாளர் தலைவராக முடிகிறது. கூலிக்கு மாரடிக்கும் இந்த கூட்டம் தேர்தலுக்குப் பின் சொந்ததொழிலுக்கு திரும்பி விடுவார்கள். இதனால் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நலனுக்கான உறுதியான முடிவுகளை தலைமை பொறுப்புக்கு வருபவர்களால் எடுக்க முடிவதில்லை. அதேபோன்ற நிலை தான் ரஜினிகாந்த் வழங்கும் உதவி விஷயத்தை ஊதிப் பெரிதாக்கி பொது வெளியில், தயாரிப்பாளர்களின் கௌரவத்தை சின்னா பின்னமாக்கும் வேலையை கூலிக்கு வாக்களிக்கும் கூட்டம் செய்து கொண்டிருக்கிறது" என்றனர்.

 

https://minnambalam.com/entertainment/2020/05/06/23/latest-tamil-cinema-newsdispute-between-producers-help-fom-rajini

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.