Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மரபுவழிச் சமரில் வலிமை பெற்றுள்ள புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினம்: முன்னாள் சிறிலங்கா இராணுவத் தளபதி.

Featured Replies

மரபுவழிச் சமரில் வலிமை பெற்றுள்ள புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினம்: முன்னாள் சிறிலங்கா இராணுவத் தளபதி.

மரபுவழிச் சமரில் வலிமை பெற்றுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினம் என்று சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சரத் முனசிங்க கூறியுள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பது என்ற சிறிலங்கா அரசாங்கத்தின் இராணுவ உத்தி அவ்வளவு தெளிவானதாக இல்லை என கருதுகிறேன். வடபகுதியில் நாம் முன்னகர்வு முயற்சிகளில் இருக்கிறோம். இருப்பினும் அவர்கள் அடிக்கடி வான்வழித் தாக்குதல்களை நடத்துகிறார்கள்.

கிழக்குப் பகுதிகளில் இராணுவம் முன்னேற்றமடைந்து எதுவித நேரடி மோதலுமின்றி சில பகுதிகளை கைப்பற்றியுள்ளது. இது புலிகளுக்கு கிழக்கில் உள்ள பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. இதில் கருணா குழுவுக்கு பாரிய பங்கு இருக்கிறது. அதற்காக கிழக்கிலிருந்து புலிகள் முழுமையாக வெளியேறிவிட்டார்கள் என்பது அல்ல. நூறு பேர் அளவிலான புலிகளே அங்கிருப்பர். விரும்பும்போது பயங்கரவாதத் தாக்குதல்களை அவர்கள் மேற்கொள்ளக்கூடும். அதே நேரத்தில் வடபகுதியில் விடுதலைப் புலிகள் வேறுவகையான உத்தியை கையாண்டுள்ளனர். விடுதலைப் புலிகள் தற்போது வடபகுதியில் மேலதிக கவனமெடுத்து வருகின்றனர். குறிப்பாக யாழ். குடாநாட்டின் மீது கவனமாக உள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது என்பது மிகவும் கடினமானது. ஏன் கடினம் எனச் சொல்லுகிறேன் எனில், தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாறை முழுமையாக அறிந்தவன் நான்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது மரபுவழி சமருக்கானவர்களான வளர்ச்சியடைந்துள்ளனர். இராணுவம் தரைத் தளத்தில் முன்னகர்வை மேற்கொள்ளும் போது அனைத்து வகை எதிர்த்தாக்குதல்களையும் நடத்துகின்றனர். அதேபோல் வான்வழித் தாக்குதல் தகைமையும் அவர்கள் பெற்றுள்ளனர். கடலிலும் கடற்படையைத் தாக்கும் வலிமை பெற்றுள்ளனர். ஆகையால் தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபுவழி வலுவை தோற்கடிப்பது கடினம் எனக் கூறுகிறேன்.

ஆனால் அதுவே இராணுவத்தின் இலக்காக இருக்கிறது. பயங்கரவாதத்தை ஒழிப்பது என்பது மிக மிக கடினமான நடவடிக்கை. பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இளைஞனிடம் உளவியள் ரீதியாகவும், அதன் பின்னர் அரசியல் தீர்வையும் முன்வைக்கும் போது பயங்கரவாதம் ஒருநாள் இல்லாமல் போகும். ஆனால் இது இரண்டாம் நிலைதான். முதலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மரபுவழி வலுவைத் தோற்கடிக்க வேண்டும்.

இனப்பிரச்சனைக்கு போர் கண்டிப்பாகத் தீர்வாகாது. இலங்கை ஒரு அமைதியான தீவு. இங்கே தமிழ் மக்கள் மிகவும் அமைதியாக வாழ்ந்து வந்தனர். இன்றும் தமிழ் மக்கள் அப்பாவிகளாக அமைதியை விரும்புபவர்களாக உள்ளனர். ஆனால் தமிழ் மக்களிடத்தில் ஒரு குழு போராடத் தொடங்கி பயங்கரவாதத்தை கையிலெடுத்துள்ளனர். வலுச் சமநிலையிலிருந்துதான் இறுதித் தீர்வு காணப்பட வேண்டுமே தவிர பலவீனமான நிலையில் இருந்து அல்ல.

விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை என்பது குறைவாக இருக்கலாம். ஆனால் நன்கு பயிற்சி பெற்ற போராளிகள் போதுமான அளவில் உள்ளனர். சிறிலங்கா இராணுவத்துடன் அவர்கள் மரபுவழிச் சமரை நீண்டகாலமாக நடத்தி வருகின்றனர். முல்லைத்தீவு, பூநகரி போன்ற பல பாரிய படைத்தளங்களை அவர்கள் கைப்பற்றியுள்ள்ளனர். இத்தளங்களை கைப்பற்றியதன் மூலம் பாரிய அனுபவங்களைப் பெற்றுள்ளனர். ஆகையால் விடுதலைப் புலிகள் எண்ணிக்கையை விட திறமையை அதிகமாக வளர்த்துள்ளனர்.

1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்தது. தற்போது கிழக்கிலிருந்து குறிப்பிடும்படியான போராளிகளை திரும்ப அழைத்துள்ளனர். இவையெல்லாம் பாரதூரமாக கணக்கிலெடுக்கப்பட வேண்டும். எந்த ஒரு பாரிய தாக்குதலுக்கும் அவர்கள் தயாராக உள்ளனர்.

கருணாவை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்துகிறதா இல்லையா என்பது உண்மையில் எனக்குத் தெரியாது. ஊடகச் செய்திகள் அப்படித்தான் கூறுகின்றன. எதிரியை வீழ்த்துவதற்காக எது கிடைக்கிறதோ அதனை அரசாங்கங்கள் பயன்படுத்துகின்றன.

கருணாவை அரசாங்கம் பயன்படுத்துகிறது எனில் நாம் நல்ல முடிவை எட்டுவோம். புலிகள் இயக்கத்தில் நீண்டகாலம் இருந்தவர் கருணா. பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். அவர்களை இராணுவம் முறையான வழிகளில் பயன்படுத்துகிறதா எனத் தெரியவில்லை.

ஒரு கட்டத்தில் ஈ.பி.டி.பி.யினரை இராணுவத்தில் சேர்த்தோம் என்பது உண்மை. சீருடையும் உணவும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. ஆயுதங்களும் கையளிக்கப்பட்டு ஒட்டுமொத்த ஊர்க்காவற்றுறை தீவும் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் கொண்டுவரப்பட்டது. கருணா குழுவினரை அரசாங்கம், இராணுவத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும். சிறிலங்கா இராணுவத்தினராக அவர்களை அங்கீகரித்து பயிற்சியும் அளிக்க வேண்டும் என்றார் சரத் முனசிங்க.

-Puthinam-

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளை 30 வருடமாக புரிந்த வள்ளல் அவர்களை வெல்ல முடியாது என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.இவ்வளவு காலம் சென்று மரமண்டைக்கு விளங்கி இருக்கின்றது.இருந்தாலும் கருணா வெல்லவேண்டும் என்ற சின்ன நப்பாசையும் உண்டு.சிங்களத்தின் கனவுகளுக்கு மட்டும் குறைவில்லை.

மரபுவழிச் சமரில் வலிமை பெற்றுள்ள புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினம்: முன்னாள் சிறிலங்கா இராணுவத் தளபதி.

.

.

கருணாவை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்துகிறதா இல்லையா என்பது உண்மையில் எனக்குத் தெரியாது. ஊடகச் செய்திகள் அப்படித்தான் கூறுகின்றன. எதிரியை வீழ்த்துவதற்காக எது கிடைக்கிறதோ அதனை அரசாங்கங்கள் பயன்படுத்துகின்றன.

கருணாவை அரசாங்கம் பயன்படுத்துகிறது எனில் நாம் நல்ல முடிவை எட்டுவோம். புலிகள் இயக்கத்தில் நீண்டகாலம் இருந்தவர் கருணா. பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். அவர்களை இராணுவம் முறையான வழிகளில் பயன்படுத்துகிறதா எனத் தெரியவில்லை.

ஒரு கட்டத்தில் ஈ.பி.டி.பி.யினரை இராணுவத்தில் சேர்த்தோம் என்பது உண்மை. சீருடையும் உணவும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. ஆயுதங்களும் கையளிக்கப்பட்டு ஒட்டுமொத்த ஊர்க்காவற்றுறை தீவும் டக்ளஸ் தேவானந்தாவின் கீழ் கொண்டுவரப்பட்டது. கருணா குழுவினரை அரசாங்கம், இராணுவத்தில் இணைத்துக்கொள்ள வேண்டும். சிறிலங்கா இராணுவத்தினராக அவர்களை அங்கீகரித்து பயிற்சியும் அளிக்க வேண்டும் என்றார் சரத் முனசிங்க.

கழுத்தில் ஒரு இரும்புச் சங்கிலி போட்டு இறுகப் பிடிக்கப்பட்டுள்ளனர். நாய்கள் போல்.

இந்த நாய்களைக் காக்க

சில நாய்கள் தயாராக நிற்குதே..

....பட்டும் திருந்தாத பரதேசி நாய்கள்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.