Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடபகுதி மக்களில் மிகச்சிறிய எண்ணிக்கையிலானவர்களே தீவிரவாதிகள்- அமைச்சர் தினேஸ் குணவர்த்தன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடபகுதி மக்களில் மிகச்சிறிய எண்ணிக்கையிலானவர்களே தீவிரவாதிகள்- அமைச்சர் தினேஸ் குணவர்த்தன

வடபகுதி மக்களை பொறுத்தவரையில் அவர்களில் தீவிரவாதிகள் இருக்கலாம் ஆனால் அவர்கள் சிறிய எண்ணிக்கையிலானவர்கள் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சர்வதேச அமைப்புகளில் இருந்து வெளியேறுவது குறித்த தனது கருத்தின் மூலம் இலங்கை ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை தெளிவாக முன்வைத்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
சண்டே ஒப்சேவரிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்

dinesh-guna-300x169.jpg
கேள்வி
நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு எதிர்கட்சியினர் தொடர்ச்சியாக விடுக்கும் வேண்டுகோளை, ஜனாதிபதியின் கொரோனா வைரசிற்கு எதிரான நடவடிக்கைகளை முறியடிப்பதற்கான சதியாக நீங்கள் பார்க்கின்றீர்களா?

பதில்-ஜனாதிபதி தலைமையில் கொவிட் 19ற்கு எதிரான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது முதல் நாட்டில் ஆயிரக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.
நாட்டை பெரிதும் பாதித்திருக்ககூடிய பாரிய அழிவை தவிர்ப்பதற்கு இது உதவியுள்ளது.
ஆரம்பதருணத்தில் இந்த திட்டத்திற்கு அரசாங்கத்தில் உள்ள அரசியல் குழுக்கள் மாத்திரமல்லாமல் எதிர்கட்சியினரும்; நாட்டின் அனைத்து பகுதியை சேர்ந்த மக்களும் ஆதரவளித்தனர்.
இதன் பின்னர் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு கோருவதன் மூலம் எதிர்கட்சியினர் அரசாங்கத்தினது முயற்சியை மாத்திரமல்ல நாட்டின் அனைத்து சமூகங்களினது முயற்சியையும் குழப்புவதற்கு முயன்றனர்.

GeneralElection2020-5-300x169.jpg
கேள்வி- ஜூன் 20 திகதி தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையகத்தின் வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்த உங்கள் கருத்து என்ன?
பதில்- இந்த விடயம் நீதிமன்றத்தின் முன்னாள் உள்ளது இதுவை தீர்மானிக்கவேண்டியது அவர்களே.அவர்கள் ஏற்கனவே தங்கள் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
உச்சநீதிமன்றம் இந்த விடயத்தில் என்னசெய்யலாம் என்பது குறித்து நான் கருத்து தெரிவிக்கவிரும்பவில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவிர் எதிர்கட்சிகள் உட்பட அனைவரும் தேர்தலை எதிர்கொள்வதற்கான வேட்புமனுக்களில் கைச்சாத்திட்டுள்ளனர்,தேர்தல் ஆணைக்குழு தேர்தலை நடத்தும்.
தேர்தல் ஆணைக்குழு அவர்கள் தீர்மானிக்கும் திகதியில் தேர்தலை நடத்தவேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

262-4-300x193.jpg

3
எதிர்கட்சிகள் உள்மோதல்களில் சிக்கியுள்ளதால் தேர்தலை எதிர்கொள்ள முடியாத நிலையில் உள்ளனரா?
பதில்
எதிர்கட்சிகள் பிளவுபட்டுள்ளன என்பது தெளிவான விடயம், குறிப்பாக முக்கிய எதிர்கட்சியான ஐக்கியதேசிய கட்சி பிளவுபட்டுள்ளது.
ஐக்கியதேசிய கட்சியாக மாத்திரமல்லாமல் ஒரு கூட்டணியாகவும் அவர்களின் தோல்வி உறுதியான விடயம்.
கடந்த வருடம் நவம்பர் 16 ம் திகதி அவர்கள் சந்தித்ததோல்விக்கு பின்னர் அவர்களால் முன்னோக்கி நகரமுடியவில்லை என்பதும் புதிய அரசியல் போக்கை உருவாக்க முடியவில்லை என்பதும் தெளிவான விடயம்.
எதிர்வரும் தேர்தலில் தாங்கள் தோல்வியை சந்திக்கவுள்ள அவர்களிற்கு நன்கு தெரிந்துள்ளது.

4
நாட்டின் யுத்தவீரர்கள் மீது தேவையற்ற அழுத்தங்களை பிரயோகிப்பதற்கும் துன்புறுத்துவதற்கும் ஒருவரையும் அனுமதிக்கமாட்டேன் என தெரிவித்துள்ள ஜனாதிபதி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சர்வதேச அமைப்பிலிருந்து விலகுவோம் என தெரிவித்துள்ளார்.
இது குறித்த உங்கள் கருத்து என்ன?

Gotabaya-Rajapaksa-may-19-5-300x168.jpg

பதில்- ஜனாதிபதி தனது நிலைப்பாடு குறித்து மிகத்தெளிவாக தெரிவித்துள்ளார்.
எங்கள் இறைமை ஆள்புல ஒருமைப்பாடு சுதந்திரம் மற்றும் எங்களின் யுத்தவீரர்களை பாதுகாப்பதற்கான தெளிவான ஆணையை அவருக்கு வழங்கியுள்ளது.

சர்வதேச சமூகத்தினால் தடை செய்யப்பட்ட உலகின் மிகவும் ஈவிரக்கமற்ற பயங்கரவாத அமைப்பை நாங்கள் தோற்கடித்தோம்.
ஜனநாயகத்திற்கான போராளிகள் அனைவரும் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதை வரவேற்றனர்,இதன் காரணமாக ஜனாதிபதியின் கொள்கை போன்ற ஒன்று ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும் நாட்டையும் மக்களையும் பாதுகாத்த பாதுகாப்பு படையினரை பாதுகாப்பதற்கும் அவசியம்.

images-6.jpg

5
வடக்கில் உள்ள விடுதலைப்புலிகள் ஆதரவு சக்திகள் அவர்களது கொள்கையை இன்னமும் கைவிடவில்லை என்பதை எங்களால் பார்க்கமுடிகின்றது, மேலும் அவர்கள் யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூறுகின்றனர்,இந்த நிலைமையை எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்-
தற்போதைய சூழலில் வடக்கில் மக்கள் பாரிய அபிவிருத்தி முன்னேற்றத்தையும் ஜனநாயக உரிமைகளையும் அனுமதிக்கின்றனர்.
உள்ளுராட்சி தேர்தல்கள், வடபகுதி மக்கள் தாங்கள் தேசிய அபிவிருத்தி செயற்பாடுகளில் தங்களின் உள்ளுர் பிரதிநிதிகள் பங்குபெற்றுவதை விரும்புகின்றனர் என்பதை வெளிப்படுத்தின.

Dinesh-Gunawardena3-1-300x169.jpg
மாகாணசபைகள்திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவளித்ததன் மூலம் அந்த மக்களின் தலைவர்கள் அவர்களிற்கு துரோகமிழைத்தனர்.
இது மாகாணசபையை தெரிவு செய்வதற்கான அவர்களின் உரிமைகளிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடபகுதி மக்களை பொறுத்தவரையில் அவர்களில் தீவிரவாதிகள் இருக்கலாம் ஆனால் அவர்கள் சிறிய எண்ணிக்கையிலானவர்கள்.
உயர்ந்தளவு ஜனநாயக உரிமைகள் உள்ள நாடுகளும் இதேபோன்றதொரு நிலைமையை சந்தித்துள்ளன.
ஆகவே எங்கள் மத்தியில் தீவிரவாதிகள் இருப்பார்கள் ஆனால் பெரும்பான்மையானவர்கள் இந்த தீவிரவாதம் தங்கள் நாளாந்த வாழ்க்கையை குழப்புவதை விரும்புவதில்லை.

http://thinakkural.lk/article/43214

13 hours ago, உடையார் said:

வடபகுதி மக்களை பொறுத்தவரையில் அவர்களில் தீவிரவாதிகள் இருக்கலாம் ஆனால் அவர்கள் சிறிய எண்ணிக்கையிலானவர்கள் என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

சிங்கள அரசியல்வாதிகள் ஏன் தமிழ் மக்கள் " தீவிரவாத " சிந்தனைக்கு தள்ளப்படுகிறார்கள்.? என்ற வினாவிற்கு விடை தேட முயலுவதில்லை.

மாறாக, அந்த வினாவை "போட்டுத்தள்ளவே"  முயலுகிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.