Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியை கடுமையாக விமர்சிக்கும் இரு இராஜதந்திரிகள்; சர்வதேச அளவிலும் எதிரொலிக்குமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியை கடுமையாக விமர்சிக்கும் இரு இராஜதந்திரிகள்; சர்வதேச அளவிலும் எதிரொலிக்குமா?

 

5000-3-20.jpgதயான் ஜயதிலக்க மற்றும் தமாரா குணநாயகம் ஆகிய இருவரும் கடுமையான ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள். இவர்கள் இருவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் தூதர்களாக நியமிக்கப்பட்டனர்.

மேலும், ஜயதிலக்க இலங்கைக்கான பிரான்ஸின் தூதராகவும், தமாரா குணநாயகம் இலங்கைக்கான கியூபாவின் தூதராக பணியாற்றியுள்ளனர். தமாரா குணநாயகம் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷவின் நீண்டகால நண்பி.

போர் வீரர்களின் நினைவு விழாவில் போது கோத்தாபய நிகழ்த்திய உரையை இவர்கள் இருவரும் கடுமையாக விமர்சித்துள்ளார்கள்.

“நாட்டுக்காக தங்களை அர்ப்பணித்து பணிப்புரியும் இராணுவத்தினருக்கு ஒரு போதும் நான் மன அழுத்தத்தைக் கொடுக்க மாட்டேன். நாட்டுக்குப் பங்கம் விளைக்கும் வகையில் சர்வதேச நிறுவனங்களோ அல்லது அமைப்புகளோ தொடர்ந்து செயற்பட்டால் இலங்கை அதன் உறுப்பினர்களிடமிருந்து விலக ஒருபோதும் தயங்காது” என ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்தார்.

Gotabaya-Rajapaksa-may-19-4-1024x574.jpgஇலங்கை தொடர்பான தீர்மானங்களை ஜெனீவாவில் உள்ள மனித உரிமை சபை மட்டுமே தொடர்ந்து ஏற்றுக்கொண்டன. ஐ.நா மனித உரிமை சபைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை இயல்பாகத் தெரிகிறது.

தமாரா குணநாயகம் அறிவிப்பு

கோத்தா தனது கருத்தினை தெரிவித்த மறுநாள் தமாரா குணநாயகம் அறிக்கை ஒன்றில் இவ்வாறு வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதியின் அறிக்கையில் தெரியவருவது ஐக்கிய நாடுகள் சபைக்கு தவரான கருத்தை தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நிச்சயமாக இராணுவத்தைப் பாதுகாப்பதற்குச் சர்வதேச உதவி தேவை. இலங்கை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் உறுப்பினராக இல்லை.

இது ஒரு அவதானிப்பு நிலை மட்டுமே. எனவே, ”வெளியேறுவது” குறித்து கேள்வி எழும்புவதில்லை. யு.என்.எச்.ஆர்.சியில் இருந்து முழுமையாக விலகுவதற்கான ஒரே வழி ஐ.நா.வை விட்டு வெளியேறுவதுதான். ஜனாதிபதி சர்வதேச அமைப்புகளைப் பற்றி எந்த அறிவும் இல்லாதவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

thamara-300x300.pngஅவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “எங்களைப் போன்ற குறைந்த சக்திவாய்ந்த நாடுகளின் நலன்கருதியே ஐ.நா.சாசனம் நிறுவப்பட்டுள்ளன. அதன் பலவீனங்கள் ஏதுவாக இருந்தாலும், குறைந்த சக்திவாய்ந்த நாடுகள் மற்றும் எங்களைப் போன்ற முன்னாள் காலனித்துவ இறையாண்மையை வெளிப்புற குறுக்கீடு, ஆக்கிரமிப்பு மற்றும் போருக்கு எதிராகப் பாதுகாக்கக்கூடிய ஒரே நிறுவனம் இதுதான்.”

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது, “ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து விலகுவது உலகின் ஒருதலைப்பட்ச பார்வையைப் பலப்படுத்தும். சுயாதீன மற்றும் இறையாண்மை கொண்ட நாடுகளின் இருப்பு ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் உள்ள குறிக்கோள்களையும் கொள்கைகளையும் மதிக்க வேண்டும். இந்த அறிக்கை டொனால் ட்ரம்ப் பிளேக் உலக சுகாதார அமைப்பை விட்டு வெளியேறுவதாக அச்சுறுத்தியது போன்றது.” எனவும் தாமரா கூறியுள்ளார்.

தயான் ஜயதிலக்க கோத்தாவின் அரசியல் மையத்தை குறிவைத்து ஒரு தாக்குதலை நடத்தியுள்ளார்.

dayan.jpg“பொத்துவில் கடல் பகுதியில் அமைந்துள்ள விகாரை பற்றிய தகவலைத் திரட்டுவதற்கா பாதுகாப்பு அமைச்சர், இராணுவ தளபதி மற்றும் கடற்படை தளபதி உள்ளிட்ட தூதுக்குழுவை அனுப்பியதைக் குறிக்கும் வகையில் கடந்த மே 21 ஆம் திகதி பத்திரிக்கை ஒன்றுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார்.

அதில் உள்ளடக்கியவை

“தூதுக்குழு ஜனாதிபதி ராஜபக்ஷனால் அனுப்பப்பட்டது என்ற உண்மையைக் குறிப்பிட்டு, குறித்த தூதுக் குழு பற்றிய விபரங்களைத் தெரிவிக்கையில், விமானப்படை தளபதி மாத்திரமே குறைவாக இருந்தது.

இந்நிலையில் தேசியப் பாதுகாப்புக்குப் பங்கம் விளைவிக்க கூடியவகையில் அச்சுறுத்தலாக அமைந்துள்ளதை பற்றி ஆரம்பத்திலே ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.

சிங்கள பௌத்த அரச திட்டம்

சிங்கள- பௌத்த பிரதேசத்தில் சிங்கள -பௌத்த நிறுவனங்களிடையே இதுபோன்ற ஒரு சர்ச்சை எழுந்திருந்தால், உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் அங்குச் சென்று ஒரு இராணுவ தளத்தை அமைப்பது சாத்தியமில்லை என அவர் தொடர்ந்தும் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணம் போன்ற பகுதிகளில் பல இன, பல மத, பன்மொழிப் மக்கள் காணப்படுகிறார்கள் இந்த பகுதியில் இவ்வாறான நடவடிக்கை எடுத்திருந்தால், அதாவது, பொலிஸ் சோதனை சாவடி, பொதுவான பொலிஸ் தொலைப்பேசி சுற்றிவளைப்பு ஆரம்பிப்பது சரியான மற்றும் விகிதாச்சார அடிப்படையில் வரவேற்பைப் பெற்று இருந்திருக்கும் என அவர் தெரிவித்தார்.

கடற் பகுதியிலுள்ள விகாரைக்கு சொந்தமான நிலங்களை சட்டவிரோதமாக முறையில் ஆக்கிரமிப்பு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில், சட்டமா அதிபர் ஏன் குற்றவாளிகள் மீது வழக்கு தொடராமல் இருக்கிறார்கள்?

உலகில் இராணுவத்தின் அரசு இறுதியில் பிரபல்யமாகும். ஆனால் இப்போது இலங்கையில் முதன்மை தன்மையாக பிரபல்யமாகியுள்து என ஜயதிலக்க தெரிவித்துள்ளார். தயான் ஜயதிலகே கீழே பல கேள்விகளை எழுப்பியுள்ளார் அதற்கான பதில் அந்த கேள்விக்குள்ளே உள்ளடக்கியுள்ளது.

dayan-gotha.jpg“புதிய ஆட்சியின் கீழ் தேசியப் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் பற்றிய வரையறைகள் மாற்றப்பட்டுள்ளதா? “தேசிய”, “அரசு”, “பாதுகாப்பிற்கு”, “பாதுகாப்பு” மற்றும் “அச்சுறுத்தல்” தகவல் தொழில் நுட்பங்கள் ஆகியவற்றின் வரையறைகள் கடுமையாக மாற்றப்பட்டுள்ளனவா?

“வன்முறை மோதல் அல்லது ஆயுதம் ஏந்திய எதிரிகளின் தொடர்பு இல்லாவிட்டாலும், பாதுகாப்பு அமைச்சு, இராணுவமும் பிராந்தியம் / சிவில் மோதல் செயற்பாடுகளில் தலையிடுவதற்குத் தனது பங்கை மாற்றியுள்ளதா?

“உலகளாவிய விதிமுறை என்னவென்றால், ஒரு மோதல் அதிகரிக்கும் சந்தர்ப்பத்தில் பொலிஸாரால் பிராந்திய மோதல்களைக் கையாளுகிறது. ஆயுத வன்முறையின் ஒரு குறிப்பிட்ட அளவு தீவிரம் இருக்கும்போதுதான் ஆயுதப்படைகள் அழைக்கப்படுகின்றன.

ஒரு மூலோபாய பிரச்சினை அல்லது குறைந்தபட்சம் ஆயுத அச்சுறுத்தல் இல்லாத நிலையில், ஒரு பொலிஸ் நிலையத்திற்குப் பதிலாக ஏன் ஒரு இராணுவ தளத்தை அமைக்க வேண்டும்?

“பல இன, பல மத, பன்மொழி சூழலில், பாதுகாப்பு பிறசேர்க்கைகளில் மற்றும் இராணுவ ஆயுதங்களில் அடையாளம் மற்றும் செயற்பாடுகளில் இப்போது வித்தியாசமாக வரையறுக்கப்பட்டுள்ளதா?

அத்துடன், ராஜபக்ஷ ஆட்சிகாலத்தில் இருந்த இராணுவத்தின் நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசின் அடையாளம், பங்கு, செயற்பாடு, தன்மை, அதன் வாள் மற்றும் கேடயம் ஆகியவற்றைத் தீவிரமாக வேறுபடுத்தியுள்ளதா?

“அப்படியானால், புனரமைப்பு முடிந்ததும், அதற்கு வழிவகுக்கும் சித்தாந்தமும், அரசின் இறுதி வடிவமும் எதை வெளிப்படுத்தும்? ”

இந்த கேள்விகளுக்கு அவர் நேரடியான பதிலை அளிக்கிறார்.

ராஜபக்ஷவின் “புதிய அரசியலமைப்பின் கீழ், இலங்கை அரச ஆயுதங்கள், புதிய நோக்குதலையும் தன்மையும் ஒரு பரிமாணமாகும் ஒரு மத, ஒருமொழி, ஒரு கலாச்சார மேலாதிக்கத்தின் கருவியாக முறைப்படுத்தப்படும்.”

பொத்துவில் கடல் பகுதியில் அமைந்துள்ள விகாரை தொடர்பான விடயங்களை விசாரிப்பதற்கான கோத்தாபய ராஜபக்ஷவின் புகைப்படத்தை ஜயதில விளக்குகிறார்:

இதில், ஆளுநர், பாதுகாப்பு செயலாளர், இராணுவ தளபதி, மற்றும் பௌத்த துறவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இலங்கை அரசு ஏற்கெனவே சிங்கள-பௌத்த அரசாகச் செயற்பட்டு வருவதை வெளிப்படுத்துகிறது.

மூன்று முக்கிய நாடுகளில் இலங்கைக்கான இலங்கை தூதராக இருக்கும் பல்கலைக்கழக விரிவுரையாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் அரசியல் திட்டத்தின் மீதான கடுமையான தாக்குதல் இது. இது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் எதிரொலிக்கும்.

நன்றி: ராவய

தமிழில் ; தயா

http://thinakkural.lk/article/43235

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.