Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கும் வழக்கு; தீபா, தீபக் 2ம் நிலை வாரிசுகள் என தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கும் வழக்கு; தீபா, தீபக் 2ம் நிலை வாரிசுகள் என தீர்ப்பு

ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கும் வழக்கு; தீபா, தீபக் 2ம் நிலை வாரிசுகள் என தீர்ப்பு

முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்கும் வழக்கில் அவரது அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் 2ம் நிலை வாரிசுகளாக நியமித்து தீர்ப்பு வெளிவந்துள்ளது.
பதிவு: மே 27,  2020 12:06 PM
சென்னை,

தமிழக முன்னாள் முதல் அமைச்சர் மறைந்த ஜெயலலிதாவின் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி சென்னையை சேர்ந்த அ.தி.மு.க.வினர்கள் புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.


இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு தங்களையே நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தனர். இதில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30ந்தேதி நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் இன்றைக்கு ஒத்திவைத்தனர்.

இதனிடையே, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்குகளின் தீர்ப்பை, நீதிபதிகள் இன்று காணொலி காட்சி வாயிலாக வழங்கினர்.

அதில், ஜெயலலிதாவின் சொத்துகளில் ஒரு பகுதியை அறக்கட்டளை அமைக்க வேண்டும் என்றும் தீபா, தீபக்கை இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்தும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.  இதுபற்றி 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும், உத்தரவு பிறப்பித்து உள்ளது.

ஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துகளை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரி புகழேந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு அவரது அண்ணன் வாரிசுகளான தீபா மற்றும் தீபக் ஆகியோரை 2ம் நிலை வாரிசுகளாக அறிவித்து உள்ளது.

தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை முழுமையாக நினைவு இல்லமாக மாற்றும் திட்டத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்ட நீதிமன்றம், வேதா இல்லத்தின் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றி கொள்ள பரிந்துரை வழங்கியுள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை முதல் அமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமாக ஏன் மாற்ற கூடாது? என்று கேள்வியும் எழுப்பியுள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/05/27120648/The-case-of-managing-the-Jayalalithaa-property-Judgment.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டை முதல்வர்களின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம்- சென்னை ஐகோர்ட்

ஜெயலலிதா போயஸ் கார்டன் வீட்டை முதல்வர்களின் அதிகாரப்பூர்வ அலுவலகமாக மாற்றலாம்- சென்னை ஐகோர்ட்
 
 
 
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க, தனி அதிகாரி நியமிக்கக் கோரி, அதிமுகவின் புகழேந்தி மற்றும் ஜானகிராமன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
 
அதேபோல், ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை அறிவிக்கக்கோரி, தீபா மற்றும் தீபக் தரப்பிலும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நீதிபதி கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் தலைமையில் நடைபெற்று, அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
 
 
தீர்ப்பில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் மற்றும் மகனுமான தீபா மற்றும் தீபக் ஆகியோர், ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்டது. மேலும், ஜெயலலிதாவின் சொத்துகளில் இருவருக்கும் உரிமை உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
 
மேலும், ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி அதிகாரி நியமிக்கக் கோரிய மனுவையும் சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
 
அதேபோல், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை முழுவதுமாக நினைவு இல்லமாக மாற்றக் கூடாது என உத்தரவிட்டுள்ள ஐகோர்ட், அதன் ஒரு பகுதியை மட்டும் நினைவு இல்லமாக மாற்றலாம் என குறிப்பிட்டுள்ளது. அதுமட்டுமின்றி போயஸ் கார்டன் இல்லத்தை, தமிழக முதலமைச்சர்களின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக செயல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக எட்டு வாரத்திற்குள் தமிழக அரசு உரிய பதில் அளிக்கவேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

 சசிகலா கோஸ்டிக்கு... பெரிய ஏமாற்றமாக இருக்கப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்

School-Parithabangal.jpg

பேபிம்மா & மாதவனை இனி கையில பிடிக்க முடியாது..☺️

  • கருத்துக்கள உறவுகள்

தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதா சொத்துக்கு நேரடி வாரிசுகள்: சென்னை உயர் நீதிமன்றம்

ஜெயலலிதா சொத்துக்கு தீபா, தீபக் நேரடி வாரிசுகள்படத்தின் காப்புரிமைJ.DEEPA / FACEBOOK

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்து தொடர்பான வழக்கின் தீர்ப்பில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் மற்றும் மகளான தீபா மற்றும் தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் "இரண்டாம் நிலை வாரிசுகள்" என குறிப்பிடப்பட்டதை 'நேரடி வாரிசு' என மாற்றி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் திருத்தம் செய்து தீர்ப்பளித்துள்ளனர்.

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி அதிகாரியை நியமிக்கக்கோரி அதிமுக நிர்வாகிகள் புகழேந்தி மற்றும் ஜானிகிராமன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.இந்த வழக்கில் எதிர்தரப்பினராக தீபா, தீபக் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கில், நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வு, ஜெயலலிதாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாததால், இந்திய வாரிசு உரிமைச் சட்டப்படி, தீபா மற்றும் தீபக் ஆகியோரை ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்திருந்தது. தற்போது அந்த தீர்ப்பில் திருத்தம் செய்து, அவர்கள் இருவரும் நேரடி வாரிசுகள் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற சமீபத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது என்றும் தீபா மற்றும் தீபக் அங்கு செல்வது சர்ச்சையை ஏற்படுத்தும் என அரசு தரப்பு தெரிவித்தது. இதனை அடுத்து, தீபா மற்றும் தீபக் ஆகியோர் அங்கு செல்வதை விடுத்து, சட்டரீதியாக பிரச்சனையை கையாளவேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஜெயலலிதா சொத்துக்கு தீபா, தீபக் நேரடி வாரிசுகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

முன்னதாக, தீபா மற்றும் தீபக் தொடர்ந்த வழக்கில், ஜெயலலிதாவுக்குத் தங்களைத் தவிர ரத்த உறவு யாருமில்லை என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டி, இந்து வாரிசுரிமை சட்டத்தின்படி தங்களை ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கும்படி கோரியிருந்தனர். ஆனால் இந்த வழக்கில் பதில் மனுவைத் தாக்கல் செய்த தமிழக அரசு, போயஸ் கார்டன் இல்லத்தை, ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக்க தமிழக அரசு முடிவுசெய்திருப்பதாகவும் கூறியிருந்தது. கடந்த வாரம் இதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

கடந்த மே22ம்தேதி ஜெயலலிதாவின் வேதா நிலையம் வீட்டை நினைவில்லமாக மாற்றுவதற்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது என்றும் நினைவு இல்லம் அமைக்க அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு அறிவித்தது.

நினைவு இல்லம் அமைப்பதற்காக அந்த அமைப்பின் தலைவராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம், செய்தி மக்கள் தொடர்பு துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாக செயல்படுவார்கள் என்றும் தெரிவித்தது.

வேதா நிலையத்தையும், அங்குள்ள பொருட்கள், நகைகள், புத்தகங்கள் உள்ளிட்டவற்றை பராமரிக்க இந்த அமைப்பு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் வீடு மற்றும் அங்குள்ள பொருட்களை அரசுடைமையாக்க வழிவகை செய்யும் வகையில் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா சொத்துக்கு தீபா, தீபக் நேரடி வாரிசுகள்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

தற்காலிகமாக அந்த பொருட்கள் அரசின் வசம் இருக்கும் என்றும் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்தபின்னர், நினைவு இல்லத்தில் அவை வைக்கப்படும் என அறிவித்தது.

"தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை"

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, செய்தியாளர்களை சந்தித்த தீபா, ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தாங்களே எதிர்பார்க்கவில்லை என்றார்.

''ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதிமுகவினர் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்ததீர்ப்பை முழுமையாக ஏற்கவேண்டும். எங்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் இந்த அரசாங்கம் எங்களை ஓட ஓட துரத்தும் என முன்பே தெரிவித்திருதேன். எனது பாதுகாப்பு கருதி, ஆளுநரிடம் மனு கொடுக்கவுள்ளேன். போயஸ் இல்லத்திற்கு நான் வரக்கூடாது என யாரோ எண்ணுகிறார்கள். போயஸ் தோட்டத்திற்கு நான் வரக்கூடாது என ஏன் தடுக்கிறார்கள்,''என்றார்.

மேலும் உயர்நீதிமன்றம் நேரடி வாரிசு என்று அறிவித்துள்ளதால், போயஸ் தோட்ட இல்லம் மட்டுமின்றி ஜெயலலிதாவின் எல்லா சொத்துகளையும் பெறவேண்டியது தன்னுடைய கடமை என்று உணர்வதாகக் கூறினார்.

''ஜெயலலிதாவின் இறுதிச் சடங்கில் என்னை பங்கேற்கவிடவில்லை. எனக்கு நடந்த அநியாயத்தை மக்கள் பார்த்தார்கள். ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, நான் பார்ப்பதற்கு முயற்சித்தேன். என்னை அனுமதிக்கவில்லை. மெரினாவில் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளவும் விடவில்லை. என்னை விரட்டினார்கள். இறுதியாக அவர் முகத்தை ஒருமுறை பார்க்கவேண்டும் என்று கேட்டபோது கூட விரட்டினார்கள். எங்கள் மீது வீண்பழி சுமத்துகிறார்கள். அரசியல் ஆதாயம் எனக்கு முக்கியமில்லை,''என்றார்.

மேலும், உயர் நீதிமன்றம் தங்களை நேரடி வாரிசு என்று தீர்ப்பு வருவதற்கு முன்னர், போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்றும் தமிழக அரசின் முடிவை தீபா விமர்சித்தார்.

https://www.bbc.com/tamil/india-52850749

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.