Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென் சீனக் கடலை ஆக்கிரமிக்க சீனாவும் அமெரிக்காவும் துடிப்பது ஏன்?- அதிரவைக்கும் பின்னணி!

Featured Replies

தென் சீனக் கடல் சீனாவினால் ஆக்கிரமிக்கப்படுவதை, அமெரிக்கா விரும்பவில்லை. சீனாவின் அண்டை நாடுகளும் விரும்பவில்லை.

உலக வல்லரசுகள், கொரோனா வைரஸின் கோரப் பிடியில் சிக்கி சீரழிந்துவரும் நிலையில், அமெரிக்கா-சீனா இடையேயான பொருளாதாரப் போர், ஆதிக்கப் போராக உருமாறி, ஆசியக் கண்டத்தை அச்சுறுத்திவருகிறது.

கொரோனா பிரச்னையில், சீனாவை கடுமையாகச் சாடிவரும் அமெரிக்கா, தற்போது அந்நாட்டை ராணுவரீதியாக ஒடுக்கவும் திட்டமிட்டுள்ளது. இதை உணர்ந்த சீனா, தென் சீனக் கடல்மீது தனது அதிகாரத்தை நிலைநாட்ட ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இரு வல்லரசுகளின் ஆதிக்கப் போரால் தென் சீனக் கடல் கொந்தளித்துள்ளது.

சமீபகாலமாக, அமெரிக்காவின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள், தென் சீனக் கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய வகையில் நுழைந்துள்ளதாலும், சீனாவின் போர் விமானங்கள் அப்பகுதியில் வட்டமிடுவதாலும், பதற்றம் அதிகரித்துள்ளது.

தென் சீனக் கடல்
 
தென் சீனக் கடல்

தென் சீனக் கடல்மீது சீனா ஆதிக்கம் செலுத்துவதை அமெரிக்கா விரும்பவில்லை. சீனாவின் அண்டை நாடுகளும் விரும்பவில்லை. ஏனெனில், மலேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான் எனப் பல நாடுககள் தென் சீனக் கடல்மீது சொந்தம் கொண்டாடுகின்றன. பல காலமாக அமெரிக்கா தென் சீனக் கடலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.

இதற்கு முக்கியக் காரணம், தென் சீனக் கடல் முழுக்க கொட்டிக்கிடக்கும் எரிவாயு, எண்ணெய் உட்பட பல இயற்கை வளங்கள். இக்கடல், உலகின் முக்கியமான கடல் போக்குவரத்துத் தடங்களில் ஒன்று. உலகின் மூன்றில் ஒரு பங்கு கப்பல் போக்குவரத்து தென் சீனக் கடல் வழியாகத்தான் நடைபெறுகிறது.

சமீபகாலமாக, சீனா இந்தக் கடல் பகுதியைச் சொந்தம் கொண்டாடினாலும், இதுவரை இந்த அளவுக்கு கடுமையாக சீனா நடந்துகொண்டதில்லை. கொரோனா பிரச்னையில் சீனா உள்நாட்டிலும் உலகத்தின் பார்வையிலும் குற்றவாளியாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலைப் பயன்படுத்தி, அமெரிக்கா சீனாவை ஒடுக்க முனைந்துள்ளது. தனது அதிகாரத்தை நிலைநாட்டவும், இழந்த பெயரை மீட்கவும் சீனாவுக்குத் தேவை ஒரேயொரு வெற்றி. தனது ஆளுமையை நிலைநாட்ட எப்போதும் சீனா பிரயோகிக்கும் ஒரே அஸ்திரம் ஆக்கிரமிப்பு அல்லது அச்சுறுத்தல். தற்போது, தென் சீனக் கடலிலும் இதே அஸ்திரத்தைப் பயன்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து, கொரோனா வைரஸ் சீனாவை புரட்டிப்போட்டபோதிலும், தென் சீனக் கடலில் தனது செயல்பாடுகளை சீனா குறைத்துக்கொள்ளவில்லை.

சீனப் பொருளாதாரம்
 
சீனப் பொருளாதாரம்

சர்வதேச விதிமுறைகளை மீறி, சீனா தென் சீனக் கடல்மீது செயற்கை திட்டுகள் அமைத்து, இரு புதிய ஆராய்ச்சி நிலையங்களை அமைத்துள்ளது. அந்தப் பகுதியில் பாதுகாப்பு குழிகள் மற்றும் ராணுவ விமான ஓடுபாதைகள் அமைத்தது. இதன்மூலம் 100 கிமீ சுற்றளவுள்ள பகுதிமீது உரிமை கொண்டாடி வருகிறது.

கடந்த ஜனவரி முதல் சீனாவின் கடலோர காவல்படை கப்பல்கள், தென் சீனக் கடல் பகுதியின் சர்ச்சைக்குரிய பகுதியில் வலம் வரத்தொடங்கியதும், அப்பகுதியில் மீன்பிடிப்பவர்களைத் துன்புறுத்தி விரட்டியதும், வியட்நாமின் மீன்பிடிப் படகை சீனா கண்காணிப்பு கப்பல் மூழகடித்தது என அனைத்தும் தனது பலத்தைக் காட்டுவதற்காகத்தான்.

ஏற்கெனவே, ஒரு சர்வதேச தீர்ப்பாயம் நீர்வழி உரிமை தொடர்பாக சீனா முன்வைத்த கோரிக்கைகளை நிராகரித்தது. ஆனால், பெய்ஜிங் இதற்கு அலட்டிக்கொள்ளவில்லை.

சீனா வேண்டுமென்றேதான் இப்படி நடந்துகொள்கிறது. பிரச்னையைத் திசைதிருப்பவும், அமெரிக்காவால் ஓரளவுக்கு மேல் எதுவும் செய்ய முடியாது என்றும் தனது அண்டை நாடுகளுக்குக் காட்டவும்தான் சீனா இப்படிச் செய்கிறது என்கிறார்கள், ராணுவ நிபுணர்கள்.

நாங்கள் நினைத்ததைச் செய்வோம் என்பதைக் காட்டும் வகையில், மேலும் பல பகுதிகளை ஆக்கிரமித்தது.

அமெரிக்காவுக்கு இந்தக் கடல் பகுதிமீது எந்த உரிமையும் இல்லாதபோது, அந்தப் பகுதியை சீனா ராணுவமயமாக்குவதை அது விரும்பவில்லை. தனது நட்பு நாடுகளின் பாதுகாப்புக்கும், பொருளாதாரத்திற்கும் அச்சம் ஏற்படும் என்பதால், சீனாவை ஒடுக்க நினைக்கிறது.

சீனாவைச் சுற்றியுள்ள நாடுகள் மற்றும் தீவுகளைத் தங்கள் வசம் கொண்டுவந்து, ஒரு சங்கிலித்தொடர் போல அமைத்து, சீனாவுக்கு ஒரு நிரந்தர அச்சுறுத்தலை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
 

நேரடியாகவோ அல்லது ராணுவரீதியாகவோ சீனாவை அடக்குவது அவ்வளவு எளிதல்ல என்பது அமெரிக்காவுக்குத் தெரியும். சமீப காலமாக, சீனாவின் ராணுவம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 1991ல் வளைகுடா மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் அமெரிக்கா கவனம் செலுத்தியபோது, அந்தச் சூழலைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சீனா, தன்னுடைய ராணுவ பலத்தை பிரயோகித்து, அண்டை நாடுகளை அடக்கி, தென் சீனக் கடல்மீது கோலோச்சத் தொடங்கிவிட்டது.

அதனால், அமெரிக்கா தனது ராஜ தந்திர அணுகுமுறைகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.

சீனாவைச் சுற்றியுள்ள நாடுகள் மற்றும் தீவுகளைத் தங்கள் வசம் கொண்டுவந்து, ஒரு சங்கிலித்தொடர் போல அமைத்து, சீனாவுக்கு ஒரு நிரந்தர அச்சுறுத்தலை உருவாக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக, விமானம்தாங்கிக் கப்பல்கள் தெற்கு பசிபிக் கடலில் நிலை நிறுத்தப்பட்டன. தைவானுக்கு நவீன ஏவுகணைகளைத் தர முன்வந்துள்ளது. அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலை தென் சீனக் கடலில் நிறுத்தியது.
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்
 
அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்

கடந்த ஆகஸ்ட்டில் நவீன ஏவுகணைகளை உற்பத்திசெய்ய, 5,000 கி.மீ தூரம் செலுத்தக்கூடிய ஏவுகணைகள் உற்பத்திக்குத் தடை விதிக்கும் உடன்படிக்கையிலிருந்து அமெரிக்கா வெளியேறியது. இதனால் நவீன ஏவுகணை உற்பத்தி செய்வதில் அமெரிக்காவுக்கு இருந்த தடை விலகியது. வான்படையை பலப்படுத்தினால் சீனாவை அடக்க முடியும் என்றும் அமெரிக்கா நம்புவதால், பி 21 ஸ்டெல்த் விமானங்களைப் பயன்படுத்தவும், சூப்பர் ஹார்னெட் ஜெட்டுகளைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

அரசியல் லாபத்திற்காகவும், தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்தவும், இரு நாட்டுத் தலைவர்களாலும் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த அரசியல் விளையாட்டால், இரு நாடுகளுக்கும் பெரிய அளவில் நீண்ட கால பலன் எதுவும் இருக்காது. மொத்தத்தில், பல நாடுகளின் அமைதிக்குப் பங்கம் மட்டுமே ஏற்படும் என்பதை இரு நாடுகளும் உணரவேண்டிய தருணம் இது.

https://www.vikatan.com/government-and-politics/international/us-china-governments-on-tug-of-war-for-south-china-sea

  • கருத்துக்கள உறவுகள்

..👍

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.