Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று – மருத்துவ குழு எச்சரிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-720x450.jpg

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது சாத்தியமில்லாத ஒன்று – மருத்துவ குழு எச்சரிக்கை!

கொரோனா  சமூகப் பரவல் நாட்டில் ஏற்கெனவே அதிகரித்துள்ள நிலையில், நோய்த் தொற்று தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்பது சாத்தியமில்லாத செயல் என எய்ம்ஸ் மருத்துவர்கள், ஐ.சி.எம்.ஆர் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு எச்சரிக்கைவிடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்றைய (திங்கட்கிழமை) நிலைவரப்படி 1.9 இலட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

அத்துடன் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 16 பேர் கொண்ட மருத்துவர் நிபுணர் குழு அறிக்கையொன்றை தயாரித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் கையளித்துள்ளது.

குறித்த அறிக்கையில்,  “சமூகப் பரவல் மூலமான கொரோனா பாதிப்பு நாட்டில் ஏற்கெனவே அதிகரித்து விட்டது. ஏரானமானோா் இந்த சமூகப் பரவலால் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். இந்தச் சூழலில், நோய்த் தொற்று தாக்குதலை முழுமையாக கட்டுப்படுத்தவிட முடியும் என்பது சாத்தியமில்லாத ஒன்று.

மருத்துவ வசதிகள் போதிய அளவில் இல்லாத காரணத்தால் கொரோனா நோய்த் தொற்று பரவும் வேகத்தை மட்டுப்படுத்தும் நோக்கத்துடனேயே  இந்த கடுமையான தேசிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்த எதிா்பாா்ப்பு  நான்காம் கட்ட பொதுமுடக்கத்துக்குப் பிறகு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு,  பொருளாதார பாதிப்புகளுக்கிடையே நிறைவேறியிருப்பதாகவே தெரிகிறது.

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பொது முடக்க கட்டுப்பாடுகள் என்பது சா்வதேச அளவில் கொரோனா  பாதிப்பால் ஏற்பட்ட 22 இலட்சம் உயிரிழப்புகள்,  நோய்த் தொற்று பரவல் வீரியம் ஆகியவற்றின் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும். ஆனால்  இந்த நடைமுறை முழுமையான பலனைத் தரவில்லை என்பதை அதன்பிறகு ஏற்பட்ட பாதிப்புகள் நிரூபித்திருக்கின்றன.

குறிப்பாக   நோய்த் தொற்றை பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடைமுறைகள் வகுக்கப்படும்போது  தொற்றுநோய் நிபுணா்களுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை. அவ்வாறு தொற்றுநோய் நிபுணா்களுடன் மத்திய அரசு கலந்தாலோசித்து முடிவுகளை எடுத்திருந்தால்  பாதிப்புகளை இன்னும் சிறப்பாக கட்டுப்படுத்தியிருக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://athavannews.com/இந்தியாவில்-கொரோனா-பரவலை/

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது: பலி எண்ணிக்கை 5,598 ஆக உயர்வு

 

புதுடெல்லி, 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க 4-கட்டங்களாக தொடர்ந்து 68 நாட்கள் ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த நிலையில் 5-வது கட்டமாக நோய் கட்டுபாட்டு பகுதியில் இந்த மாதம் 30-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. மற்ற பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் தொடர்ந்து 98 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.


அந்த வகையில் இந்தியாவில் மெதுவாக பரவ தொடங்கிய கொரோனா, கடந்த ஒரு மாதமாக அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிவிட்டது.

இந்தியாவில் நேற்று முன்தினம் காலை முதல் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்களை நேற்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அதில் ஒரே நாளில் 8,171 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், புதிதாக 204 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,98,706 ஆகவும், பலி எண்ணிக்கை 5,598 ஆகவும் உயர்ந்துள்ளது.

மேலும் இந்த வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து 95,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 97,581 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

ஒரே நாளில் பலியான 204 பேரில், மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டும் 76 பேர். டெல்லியில் 50, குஜராத்தில் 25, தமிழகத்தில் 11, மேற்குவங்காளம் மற்றும் மத்தியபிரதேசத்தில் தலா 8, தெலுங்கானாவில் 6, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 4, பீகார் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தலா 3, ஆந்திராவில் 2, அரியானா, கர்நாடகா, கேரளா மற்றும் உத்தரகாண்டில் தலா ஒருவரும் ஒரே நாளில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,98,706 பேரில், 70,013 பேர் மராட்டிய மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிப்பு 24,586 ஆக உள்ளது. டெல்லியில் 20,834, குஜராத்தில் 17,200, ராஜஸ்தானில் 8,980, மத்திய பிரதேசத்தில் 8,283, உத்தரபிரதேசத்தில் 8,075, மேற்குவங்காளத்தில் 5,772 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பீகாரில் இந்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. ஆந்திராவில் 3,783, கர்நாடகாவில் 3,408, தெலுங்கானாவில் 2,792, ஜம்மு காஷ்மீரில் 2,601, அரியானாவில் 2,356, பஞ்சாபில் 2,301, ஒடிசாவில் 2,104, அசாமில் 1,390, கேரளாவில் 1,326 பேரையும் கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

உத்தரகாண்டில் 958, ஜார்கண்டில் 659, சத்தீஸ்கார் 547, திரிபுரா 420, இமாசலபிரதேசம் 340, சண்டிகார் 294, மணிப்பூர் 83, லடாக் 77, புதுச்சேரி 74, கோவா 71, நாகாலாந்து 43, அந்தமான் நிகோபர் தீவு 33, மேகாலயா 27, அருணாசலபிரதேசம் 22, தாதர்நகர் ஹவேலி 3, மிசோரம் மற்றும் சிக்கிமில் தலா ஒருவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

கொரோனா பாதிப்பில் முதல் இடம் வகிக்கும் மராட்டிய மாநிலத்திலேயே உயிரிழப்பும் அதிகமாக ஏற்பட்டுள்ளது. அங்கு கொரோனா வைரசுக்கு 2,362 பேர் பலியாகி இருக்கிறார்கள். குஜராத்தில் 1,063, டெல்லியில் 523, மத்தியபிரதேசத்தில் 358, மேற்குவங்காளத்தில் 335, உத்தரபிரதேசத்தில் 217, ராஜஸ்தானில் 198, தமிழகத்தில் 197 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானாவில் 88, ஆந்திராவில் 64, கர்நாடகாவில் 52, பஞ்சாபில் 45, ஜம்மு காஷ்மீரில் 31, பீகாரில் 24, அரியானாவில் 21, கேரளாவில் 10, ஒடிசாவில் 7, உத்தரகாண்டில் 6, ஜார்கண்ட் மற்றும் இமாசலபிரதேத்தில் தலா 5, சண்டிகாரில் 4, சத்தீஸ்கார் மற்றும் மேகாலயாவில் தலா ஒருவரையும் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/03035310/Coronal-impact-in-India-is-close-to-2-lakhs-The-death.vpf

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளை மராட்டிய மாநிலத்தை.... 🌬பெரிய புயல் 💨ஒன்றும் தாக்க இருப்பதாக கூறப் படுகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.