Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளியவளை களிக்காட்டுப் பகுதியில் நடக்கும் சட்டவிரோத செயல்பாடு! துணைபோகிறார்களா அதிகாரிகள்?

Featured Replies

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களிக்காடு பகுதியில் சட்டவிரோதமாக அனுமதி அற்ற முறையில் கிரவல் அகழ்வு இடம்பெறுவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், அவ்விடத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக ஊடகவியலாளர்கள் நேற்று சென்றுள்ளனர்.

குறிப்பாக குறித்த இடத்திற்கு ஊடகவியலாளர்கள் சென்று செய்தி சேகரிக்கும் பணியை ஆரம்பித்ததும், அந்த இடத்தில் இருந்த டிப்பர் வாகனங்கள் அந்த இடத்தைவிட்டு அகன்று சென்றதோடு மீண்டும் அந்த இடத்திற்கு கிரவல் ஏற்றுவதற்காக வருகைதந்த டிப்பர் வாகனங்களும் திரும்பிச் சென்றுள்ளன

சம்பவ இடத்துக்கு சென்றதும் சம்பவத்தை அவதானித்த ஊடகவியலாளர்கள் முள்ளியவளை காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கும் வனவள திணைக்கள அதிகாரிக்கும் தகவல் வழங்கி இருந்த போதும் அந்த இடத்தில் இருந்த வாகனங்கள் அனைத்தும் அவ்விடத்தை விட்டு செல்லும் வரை சுமார் அரை மணி நேரமாக அந்த இடத்திற்கு பொலிஸாரோ வனவள அதிகாரிகளோ வருகைதரவில்லை

அப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பக்கோ இயந்திரமும் வாகனத்தில் ஏற்றப்பட்டு அந்தஇடத்தில் இருந்து அகற்றப்படும் வரை வனத்துறை அதிகாரிகளும் பொலிசாரும் வரவில்லை.

அந்த இடத்திலிருந்து மிகவும் அண்மையில் பொலிஸ் நிலையமும் வனவள அலுவலகமும் இருந்தபோதும் அவர்கள் வருகை தராமல் அந்த இடத்திலிருந்து சட்டவிரோத பணியில் ஈடுபட்டவர்கள் விலகிச் செல்லும் வரை இவர்கள் அவ் இடத்திற்கு வரவில்லை

இவ்வாறு சட்டவிரோதமாக கிரவல் அகழ்வு காரணமாக காடுகள் அழிக்கப்பட்டு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக அந்தப் பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் அனைத்தும் உயிரற்ற நிலைக்குச் சென்றுள்ளன.

இக் கிரவல் அகழ்வானது ஏற்கனவே பிரதேச சபையுடன் இணைந்து மரநடுகைக்கென சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக பாரியளவிலான விருந்தினர் விடுதி ஒன்றை அமைத்து வரும் அவலோன் நிறுவனத்தினராலேயே ஏற்றிச் செல்லப்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகின்றார்கள்.

அப்பகுதியில் கிரவல் அகழ்வில் ஈடுபட்டவர்களிடம் அனுமதிப்பத்திரங்கள் கேட்ட போது அங்கு நின்றவர்கள் அனுமதிப்பத்திரங்களை வைத்திருக்கவில்லை. இவ்வாறு ஊடகவியலாளர்களை கண்டவுடன் வாகனங்களை எடுத்துச் செல்கிறார்கள் எனில் இங்கு சட்டவிரோத தொழில் இடம் பெறுவது உறுதியாகி இருக்கின்றது.

இங்கிருந்து அனைத்து வாகனங்களும் திரும்பி சென்றபின்னர் அந்த இடத்துக்கு வருகைதந்த வனவள அதிகாரி 15 கியூப்க்கு அனுமதி வழங்கியதாக தெரிவிக்கப்பட்ட போதும் அந்த இடத்தில் சுமார் 150 கியூப்க்கு மேல்நேற்று கிரவல் அகழப்பட்டுள்ளமை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

குறிப்பாக குறித்த பகுதியை அண்டிய பகுதிகளில் அனைத்து வனப்பகுதிகள் அழிக்கப்பட்டு பாரியளவிலான மரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு இவ்வாறாக சட்டவிரோத கிரவல் அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் தகவல்கள் வழங்கியுள்ளார்கள்.

இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அதிகாரிகள் பூரண ஆதரவை வழங்குகின்றார்களா என்ற சந்தேகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றார்கள்.

குறிப்பாக குறித்த இடத்திற்கு வருகை தந்த வனவள திணைக்கள அதிகாரி அவ்இடத்திலிருந்து திரும்பி செல்லும் போது, அகழ்வில் ஈடுபட்ட ஒரு நபரை மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் கூட அணியாமல் ஏற்றிச் செல்கின்றார். இவ்வாறான செயற்பாடுகள் இவர்கள் குறித்த நபர்களுடன் என்ன ஒப்பந்தத்தில் இந்த வேலைகளை செய்கின்றார்கள் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை நிறுத்த தவறும் பட்சத்தில் முல்லைத்தீவு வனப்பகுதிகள் அழிந்து உரிய காலத்தில் மழைவீழ்ச்சி இன்றி விவசாயத்தையே நம்பி வாழும் மக்களை பாதிக்கும். எனவே இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

https://www.ibctamil.com/srilanka/80/144608

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, போல் said:

காடுகள் அழிக்கப்பட்டு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக அந்தப் பகுதியில் உள்ள காடுகள் அழிக்கப்பட்டு மரங்கள் அனைத்தும் உயிரற்ற நிலைக்குச் சென்றுள்ளன.

காடு இருந்தால் பதுங்கு குழி அமைப்பியல் போராடுவியள்  என்று அரசு முன்  எச்சரிக்கையா காடுகளை அழிக்கினமாக்கும்..😀

Edited by putthan

வடக்கு கிழக்குல உந்த கடத்தல் தொழிலில் கொள்ளை லாபம் அடிக்கிற ஆட்கள் சொறிலங்கா போலீஸ் தான்.

  • தொடங்கியவர்
10 hours ago, Rajesh said:

வடக்கு கிழக்குல உந்த கடத்தல் தொழிலில் கொள்ளை லாபம் அடிக்கிற ஆட்கள் சொறிலங்கா போலீஸ் தான்.

சிங்கள-பௌத்த அரச கடத்தல் கும்பலுக்கு துணை செய்வதில் செயற்திறனற்ற  வடமாகாண ஆளுநர் திருமதி.சார்ள்ஸ்சும் அடக்கம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.