Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழர்கள் நாட்டின் ஒரு இனமேயல்ல அவர்களுக்கு எந்தவிதமான உரிமையுமில்லை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் நாட்டின் ஒரு இனமேயல்ல அவர்களுக்கு எந்தவிதமான உரிமையுமில்லை

வீரகேசரி நாளேடு

தமிழ் மக்கள் இந்த நாட்டின் தேசிய இனம் அல்ல. தமிழர்கள் ஒரு மக்கள் பிரிவினர் மட்டுமேயாகும். சுயநிர்ணய உரிமையையும் தாயகக் கோட்பாட்டையும் கோருவதற்கு தமிழ் மக்களுக்கு எந்தவிதமான உரிமையும் இல்லை. சிங்கள மக்களுக்கே நாட்டின் அனைத்து விதமான ஏகபோக உரிமைகளும் இருக்கின்றன என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஜாதிக ஹெல உறுமய இனப்

பிரச்சினைக்கான தீர்வு யோசனையை தயாரித்துள்ளது.

இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் மக்களுக்கு தனிநாடொன்றை கோரும் வரலாற்று உரிமை இருக்கின்றது. ஆனால் இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு அவ்வாறான உரிமை இல்லை. வடகிழக்கு தமிழர்களின் தயாகம் என்பதை தமிழ் மக்கள் சான்றுகளுடன் நிரூபித்தால் ஈழத்தை அனுமதிக்கவும் நாங்கள் தயாராக இருக்கின்றோம். ஆனால் அதற்கு முன்னர் புலிகள் தோற்கடிக்கப்படவேண்டும் என்றும் ஹெலஉறுமயவின் யோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமயவின் இனப்பிரச்சினைக்கான தீர்வுயோசனையை வெளியிடும் ஊடகவியாளர் மாநாடு நேற்று நுகேகொடையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்றது. இங்கு கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த ஹெலஉறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் மேற்கண்ட விடயங்களை கூறினார்.

தீர்வு திட்டம் தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட தேரர் கூறியதாவது:

இலங்கையில் இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்ற அடிப்படையில் நாங்கள் எமது தீர்வுத் திட்டத்தை தயாரித்துள்ளோம். ஆனால் விடுதலைப்புலிகளும் ஜே.வி.பி.யும். தற்போதைய பிரச்சினையை தேசியப் பிரச்சினையாக வெளிக்காட்டி வருகின்றன. வடக்கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் தென்பகுதிக்கு இடம் பெயரும் நிலைமையே காணப்படுகின்றது. இது இனப்பிரச்சினை நிலவுகின்ற நாட்டில் காணப்படுகின்ற நிலைமை அல்ல. தற்போது வடகிழக்கில் பயங்கரவாதப் பிரச்சினையே இருக்கின்றது. பயங்கரவாதத்தை தோற்கடித்ததன் பின்னர் எழுகின்ற சிக்கல்கள் குறித்து பின்னர் ஆராயலாம்.

ஜாதிக ஹெல உறுமய

வாழ்க

எங்கள் நாடு தழிழீழம் அதற்கும் நிங்கள நாட்டிற்கும் எந்த தொடுசலும் இல்லை என்பதனை இவர்கள் வலியுறுத்துவதாக புரிந்துகொள்வோம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் சிறிலங்காவிற்கு உரித்தானவர்கள் அல்ல- அவர்கள் தமிழ்நாட்டில் தான் போராட வேண்டும்: அத்துரலிய ரத்ன தேரர்

தமிழ் மக்கள் சிறிலங்காவிற்கு உரித்தானவர்கள் அல்ல, அவர்கள் வேறு ஒரு நாட்டை கொண்டுள்ளானர். எனவே அவர்கள் சிறிலங்காவில் போரிடாது தமிழ்நாட்டில் தனிநாட்டை கோரவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினரான வண. அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை அனைத்துக் கட்சிக் குழுவுக்கு தமது தீர்வுத்திட்டத்தை கையளிக்க முன்னர், தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஜப்பானியர்கள் ஜப்பானைச் சேர்ந்தவர்கள், ஆங்கிலேயர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள், தமிழர் சிறிலங்காவிற்கான இனம் அல்ல. அவர்களுக்கு வேறு ஒரு நாடு உண்டு. அவர்கள் சிறிலங்காவுடன் போரிடுவதை விடுத்து தமிழ்நாட்டில் தனிநாடு கோரவேண்டும்.

அரச தலைவரின் நடத்தைகள் தொடர்பாக எழும் கேள்விகளுக்கு பதிலளிக்க ஒரு பிரதி அமைச்சரை நியமிக்க வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளுக்கு அமைய சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்கப்படல் வேண்டும் என ஹெல உறுமய தனது திட்டத்தில் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றம் 270 உறுப்பினர்களை கொண்டதாக இருத்தல் வேண்டும். 200 பேர் தேர்தல் தொகுதிகள் மூலமும், 40 உறுப்பினர்கள் தேசியப்பட்டியல் மூலமும், 22 பேர் தொழிற்சங்கங்கள் மூலமும், 5 உறுப்பினர்கள் சிறிய கட்சிகளில் இருந்தும், 3 பேர் சிறுபான்மை குழுக்களில் இருந்தும், ஒரு உறுப்பினர் வேடுவ சமூகத்தில் இருந்தும் தெரிவுசெய்யப்பட வேண்டும்.

அமைச்சரவை அதிகளவு 25 ஆகவும் குறைந்தளவு 20 ஆகவும் இருத்தல் வேண்டும். அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்கள் என்ற பதவி ஒழிக்கப்பட வேண்டும். பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை 30 அக இருத்தல் வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.