Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொள்கை வழிகாட்டிகள் மூலமே சிறிலங்காவிற்கான உதவிகள் வழங்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொள்கை வழிகாட்டிகள் மூலமே சிறிலங்காவிற்கான உதவிகள் வழங்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியம்

சிறிலங்காவிற்கான மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி உதவிகளை வழங்குவதற்கு 10 கொள்கை வழிகாட்டிகளை தாம் தயாரித்துள்ளதாகவும், அதில் பிரதான கொடையாளர்கள் கையொப்பங்களை இட்டுள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஆணைக்குழு, ஜேர்மனி, கிறீஸ், ஜப்பான், நெதர்லாந்து, நோர்வே, தென்கொரியா, சுவீடன், சுவிற்சலாந்து, பிரித்தானியா, ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா போன்ற உதவி வழங்கும் நாடுகள் இந்த கொள்கை வழிகாட்டி ஆவணத்தில் மே 20 ஆம் நாள் கையொப்பம் இட்டுள்ளன.

இது தொடர்பில் ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் ஜுலியன் வில்சன் தெரிவித்துள்ளதாவது:

இந்த கொள்ளை வழிகாட்டியானது ஐரோப்பிய ஒன்றியத்தின் பணி தொடர்பாக இலங்கை மக்களின் நம்பிக்கையை கட்டி எழுப்பும் நடவடிக்கை. இந்த உடன்பாட்டின் அடிப்படையில் மனிதாபிமானப் பணிகளுக்கும், அபிவிருத்திக்குமாக உதவிகள் வழங்கப்படும். அது மோதல்களை ஊக்குவிப்பதற்கோ அல்லது பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்கிவிப்பதற்கோ அல்ல. அவர்கள் அதனை தெளிவாக உறுதிசெய்ய உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

இந்த ஆவணம் தொடர்பாக பேரனர்த்த, முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளதாவது:

கொள்கை வழிகாட்டி ஆவணம் சிறிலங்காவின் தேசிய பாதுகாப்பை பாதிக்காத வரை அரசு அதற்கு ஆதரவு வழங்கும். அது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானால் அரசுக்கு அதன் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமை உண்டு. அதன் மீதான விசாரணைகளும் நடத்தப்படும். எனினும் விசாரணைகள் நிறைவுபெறும் வரை எந்த பெறுமதியான முடிவுகளும் எடுக்கப்பட மாட்டாது என்றார்.

இது தொடர்பில் கனேடிய தூதுவரான அஞ்ஜெலா போக்டன் தெரிவித்துள்ளதாவது:

கொள்கை வழிகாட்டியானது ஒரு தெளிவான நடைமுறை, அது என்ன செய்யப்படுகின்றது, ஏன் செய்யப்படுகின்றது என்பதை கோடிட்டுக்காட்டும்.

மனிதாபிமான உதவிகள் மற்றும் அபிவிருத்தி உதவிகள் தொடர்பாக பெருமளவான தவறான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்த இடைவெளியை நிரப்புவதற்கு எப்படி பணிகளை நடைமுறைப்படுத்துவது என்பதை நாம் ஆராய்ந்தால், முதலில் நாம் நிபுணத்துவமுள்ள பங்குதாரர்களை நியமிக்க வேண்டும். பின்னர் அதிகளவு முக்கியமானதை நாம் செய்ய வேண்டும் என்றார்.

-புதினம்

இப்போது இலங்கைக்கு வழங்கப்படும் உதவிகளைப் பார்த்தால், சிங்களம் இவர்களிம் கொள்கை வழிகாட்டிக்கு உட்பட்டு நடப்பதென்று அர்த்தமாகும்.

அந்தப் 10 கொள்கைகளும் எவை ?

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தாத உதவி வழங்கும் நாடுகளின் தீர்மானங்கள்

[31 - May - 2007]

அருளானந்தம் அருண்

இலங்கையில் மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளும் அமைப்புகளும் இணைந்து 10 அம்ச வழிகாட்டல் கோட்பாடுகளில் கையொப்பமிட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஜூலியன் வில்ஸன் தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமான சட்டம், இலங்கையில் நடைமுறையிலுள்ள சட்டம் மற்றும் பிரயோகிக்கப்படக்கூடிய அனைத்து சர்வதேச நியமங்களின் வழிகாட்டல்களின்படி இலங்கையில் மனிதாபிமானம் மற்றும் அபிவிருத்தி உதவிகளை செயற்றிறனுடன் அமுல்படுத்துவதற்கு ஏதுவாகவே மேற்படி வழிகாட்டல் கோட்பாடுகளை ஏற்படுத்தி உதவி வழங்கும் தரப்பினர் கையொப்பமிட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வழிகாட்டல் கொள்கைகள் தொடர்பாக நேற்று முன்தினம் ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் கொழும்பு காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த வழிகாட்டல் கொள்கைகளை வகுத்துக்கொண்டதன் மூலம் உதவி வழங்கும் சமூகத்தின் இலங்கை மக்களுக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பான தெளிவான வரையறையொன்றை மக்கள் பெறக்கூடியதாக இருப்பதோடு, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் உதவி வழங்கும் சமூகத்தின் மீது அண்மைக்காலங்களில் முன்வைக்கப்பட்ட `பயங்கரவாதம் பிரிவினைவாதம் என்பவற்றுக்கு உதவி புரிகிறார்கள்' என்னும் குற்றச்சாட்டின் ஆதாரமற்ற தன்மையை நிரூபிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் உதவி வழங்கும் சமூகமும் அதன் பங்காளர்களான அரச சார்பற்ற நிறுவனங்களும் எக்காலத்திலும் எக்காரணத்திற்காகவும் பிரிவினைவாதம், பயங்கரவாதம் என்பவற்றிற்கு உதவி வழங்கும் செயற்பாடுகளை மேற்கொள்வதில்லை என்றும் அவ்வாறான குற்றச்சாட்டுகள் எழுந்தால் அது தொடர்பான விசாரணைகளை நடத்துவதற்கான உரிமை அரசிற்கு உண்டென்றும் அதற்கு உதவி வழங்கும் சமூகம் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கனடியத் தூதுவர்

இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடன் இணைந்து கலந்துகொண்ட கனடிய தூதுவர் அஞ்செலா போக்டென் உரையாற்றுகையில்;

இலங்கையில் ஒரு சமாதானமான தீர்வைக் காண்பதற்கும், இலங்கையின் மனிதாபிமான மற்றும் அபிவிருத்திக்கான தேவைகளுக்கு உதவி செய்வதுமே உதவி வழங்கும் சமூகத்தின் குறிக்கோளாகும்.

ஆயினும் இந்த நாடு தற்பொழுது ஒரு கடினமான தருணத்தில் உள்ளது.

உதவி வழங்கும் சமூகங்களின் பங்காளர்கள் மீதும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மீதும் பிழையான தவறான குற்றச்சாட்டுகள் பல முன்வைக்கப்பட்டன.

உதவி வழங்குநர்களுக்கும் அவர்களின் பங்காளர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் என்பவற்றிற்கு மோதல்கள் மற்றும் நிவாரணங்கள் தேவைப்படும் இடங்களுக்கு செல்வதற்கான அனுமதியும் கட்டுப்பாடற்ற நடமாட்டத்திற்கான அனுமதியும் கிடைக்காது விட்டால் நிவாரண, மனிதாபிமான பணிகளை முன்னெடுப்பது இயலாத காரியமாகவே இருக்கும்' எனக் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு மனிதாபிமான நிவாரணம் மற்றும் நிதியுதவிகளை அளிப்பதில் பிரதான பங்காளர்களான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆணைக்குழு, ஜப்பான், பிரித்தானியா, ஜேர்மனி, நோர்வே, அமெரிக்கா, நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, கனடா, கிறீஸ், தென்கொரியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியனவே மேற்படி வழிகாட்டல் கோட்பாடுகளில் கையொப்பமிட்டுள்ள நாடுகளும் அமைப்புகளுமாகும்.

இக் கோட்பாடுகள் இலங்கை அரசை கட்டுப்படுத்தாது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இந்த நாடுகளும் அமைப்புகளும் கையொப்பமிட்டுள்ள வழிகாட்டல் கோட்பாடுகள் பின்வருமாறு;

1) மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி உதவியின் குறிக்கோள்: இலங்கையில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் பங்களிப்பதற்கு நாங்கள் ஒன்றிணைந்து பணியாற்றுகின்றோம். எங்கள் உதவிகள் மக்களின் வேதனைகளை நீக்குதல், வறுமையை ஒழித்தல், இலங்கையின் மோதல் நிலைமைகளுக்கு அமைதியான தீர்வொன்றிற்கு ஆதரவளித்தல் உட்பட சமூகங்கள் தன்னிறைவை அடைய உதவுதல் போன்றவை குறித்துக் கவனம் செலுத்துகின்றன.

2) பாரபட்சமின்மை: இடவமைவு, இனம், பால்நிலை, சமூக அந்தஸ்து அல்லது மதம் என்பவற்றைக் கருதாது இனங்காணப்பட்ட தேவைகளின் அடிப்படையில் மட்டுமே நாங்கள் உதவிகளை வழங்குகின்றோம்.

3) பக்கச்சார்பின்மை: எங்களது உதவிகள், வழங்கல்கள், வாகனங்கள், வசதிகள் அல்லது உபகரணங்கள் என்பன எந்தவொரு இராணுவ, அரசியல் அல்லது பிரிவினை நோக்கங்களுக்காக உபயோகிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ளாததுடன் நாங்கள் பக்கச் சார்பின்மையுடன் இருப்போம்.

4) மனித கௌரவத்தை மதித்தல்: சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் என்பவற்றுக்கான மதிப்பளித்தலை நாங்கள் வேண்டுகின்றோம். நாங்கள் உள்ளூர் சமூகங்கள் வெளிப்படுத்திய விருப்புகளின் விளைவாக பணியாற்றுவதுடன் மக்களது கௌரவம் அவர்களது கலாசாரம், மதம் மற்றும் பாரம்பரியங்களை மதிக்கின்றோம்.

5) ஒளிவு மறைவின்மை மற்றும் பொறுப்புக் கூறல்: உதவி வழங்குபவர்களுக்கு நாங்கள் பொறுப்புக் கூற வேண்டியவர்களாவோம். எங்களது உதவிகள் ஓளிவு மறைவில்லாதவை என்பதை நாங்கள் உறுதிப்படுத்துவோம். அபிவிருத்தி அல்லது மனிதாபிமான உதவிகளுக்கான வழங்கல்கள் அல்லது உபகரணங்களில் ஊழல் எதனையும், களவு அல்லது துஷ்பிரயோகங்களை அனுமதிக்கமாட்டோம்.

6) நிலைத்து நிற்றல் மற்றும் தயார்படுத்தல்: உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் எங்களது செயற்பாடுகளை அமைத்துக் கொள்வதுடன் உள்ளூரில் கிடைக்கும் வளங்களை அதிகரிப்பதையும் இலக்காகக் கொண்டுள்ளோம். சிவில் சமூகங்கள், வர்த்தக சமூகங்கள், உள்ளூர் அதிகார சபைகள் போன்ற உள்ளூர் அமைப்புகள் தற்போதைய தேவைகள் குறித்து கவனம் செலுத்த மற்றும் எதிர்கால அவசர நிலைமைகளைத் தவிர்க்க அல்லது எதிர்கொள்ளத் தயாராவதற்கு வலுவூட்டுகிறோம்.

7) ஆலோசனை மற்றும் பங்குபற்றல்: நாங்கள் சமூகங்களை அவர்களது நன்மைகளுக்காக அமுல்படுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களை வடிவமைக்க, திட்டமிட, முகாமைத்துவம் செய்ய, நடைமுறைப்படுத்த மற்றும் மதிப்பீடு செய்வதில் அவர்களை ஈடுபடுத்துவதற்கு நாடுகிறோம்.

8) ஒருங்கிணைத்தல்: நாங்கள், எங்களது செயற்பாடுகளை அரசாங்கம் மற்றும் தொடர்புடைய அனைத்து பங்காளர்களுடனும் ஒவ்வொரு மட்டத்திலும் ஒருங்கிணைக்கின்றோம்.

9) வழிவகைகள்: உதவி தேவைப்படும் அனைத்து மக்களுக்குமான அடிப்படைத் தேவைகளாக கட்டுப்பாடுகளற்ற வழிவகைகளை நாம் வேண்டிக் கொள்கின்றோம். மனிதாபிமானப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெறுவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஊழியர்களுக்கான அதிகாரத்தை விரைவில் வழங்குவதையும் சுங்கப் பகுதியிலிருந்து வெளிக்கொண்டு வருவதையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

10) பாதுகாப்பும் பத்திரமும்: சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்சிகளிடமும், முகவர் ஸ்தாபனங்கள் மற்றும் அவர்களது ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரத்தை தற்காத்து பாதுகாப்பை மேம்படுத்துமாறு வேண்டுகின்றோம். ஊழியர்கள் வன்முறை, கடத்தப்படல், தொந்தரவு அல்லது அச்சுறுத்தல்களுக்கு ஆளாகுவதை நாம் அனுமதிக்க மாட்டோம். எங்களது பணிகளுடன் தொடர்புகளற்ற ஆட்கள் அல்லது பொருட்களை போக்குவரத்து செய்வதற்கு எங்களது வாகனங்கள் உபயோகப்படுத்தப்படல் கூடாது.

தினக்குரல்

இலங்கைக்கு மனிதாபிமான நிவாரணம் மற்றும் நிதியுதவிகளை அளிப்பதில் பிரதான பங்காளர்களான ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் ஆணைக்குழு, ஜப்பான், பிரித்தானியா, ஜேர்மனி, நோர்வே, அமெரிக்கா, நெதர்லாந்து, சுவிற்சர்லாந்து, அவுஸ்திரேலியா, கனடா, கிறீஸ், தென்கொரியா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியனவே மேற்படி வழிகாட்டல் கோட்பாடுகளில் கையொப்பமிட்டுள்ள நாடுகளும் அமைப்புகளுமாகும்...

அமெரிக்கா, பிரித்தானியாவும் இதில் அடங்குகின்றன? இவர்களின் மனிதாபிமான நிவாரண உதவிகளில் தரையில் இருந்து விண்ணுக்கு பாயும் ஏவுகணைகளும் அடக்கமோ?

3) பக்கச்சார்பின்மை: எங்களது உதவிகள், வழங்கல்கள், வாகனங்கள், வசதிகள் அல்லது உபகரணங்கள் என்பன எந்தவொரு இராணுவ, அரசியல் அல்லது பிரிவினை நோக்கங்களுக்காக உபயோகிக்கப்படுவதனை ஏற்றுக்கொள்ளாததுடன் நாங்கள் பக்கச் சார்பின்மையுடன் இருப்போம்.

??? அமெரிக்காவுக்கு இது பொருந்துமோ?

4) மனித கௌரவத்தை மதித்தல்: சர்வதேச மனிதாபிமானச் சட்டம் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் சட்டம் என்பவற்றுக்கான மதிப்பளித்தலை நாங்கள் வேண்டுகின்றோம். நாங்கள் உள்ளூர் சமூகங்கள் வெளிப்படுத்திய விருப்புகளின் விளைவாக பணியாற்றுவதுடன் மக்களது கௌரவம் அவர்களது கலாசாரம், மதம் மற்றும் பாரம்பரியங்களை மதிக்கின்றோம்.

??? அமெரிக்காவுக்கு இது பொருந்துமோ? லொள்ளு ரொம்ப ஓவராக இருக்கிறது...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.