Jump to content

தமிழகத்தில் தீவிரமாகும் கோரோனோ.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் புதிய உச்சமாக இன்று 6,785 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,299 பேர் பாதிப்பு: 2 லட்சத்தை நெருங்கும் தமிழகம்

corona-infection-infects-6-785-people-today-a-new-high-in-tamil-nadu-1-299-people-affected-in-chennai-2-lakh-towards-tamil-nadu  

சென்னை

தமிழகத்தில் முதன்முறையாக அதிக அளவில் 6,785 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் 1,299 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகம் 2 லட்சத்தைத் தொட சில நூறு எண்ணிக்கையே உள்ளது.

6,785 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 19 சதவீதத் தொற்று சென்னையில் (1,299) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 1,99,749-ல் சென்னையில் மட்டும் 92,206 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 46.1 சதவீதம் ஆகும். 1,43,297 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 71.7 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 2 லட்சத்தை அடைய சில நூறு எண்ணிக்கையே மிச்சமுள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழகம் ஒரு லட்சத்து 99 ஆயிரம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 92 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 4 லட்சத்து 20 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 5,044 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும். சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்ததற்கு அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 49 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 4,27,048.

தமிழகத்தில் உயிரிழப்பு 3,320-ஐ (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) கடந்துள்ளது. உயிரிழந்த 3,320 பேரில் சென்னையில் மட்டுமே 1,969 பேர் (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 59.3 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 92,206-ல் 1,969 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 2.1% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.6% ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 6 லட்சம் பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது. இதன் மூலம் சென்னையில் கடந்த 10 நாட்களாக தொற்று எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அகில இந்திய அளவில் தொற்று எண்ணிக்கை வேகமாக அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் 30 ஆயிரத்தைக் கடந்து தொற்று எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. பல மாநிலங்கள் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளன. இதில் அகில உலக அளவில் மகாராஷ்டிரா முதல் பத்து இடத்தில் உள்ள நாடுகளுடன் போட்டியிடுகிறது.

மகாராஷ்டிரா 3 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 3,47,502 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 9-ம் இடத்திலிருந்த சிலியைப் பின்னுக்குத் தள்ளி 8-ம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.

அடுத்த இடத்தில் உள்ள தமிழகம் உலக அளவில் பிரான்ஸைப் பின்னுக்குத் தள்ளி ஜெர்மனிக்கு அடுத்து 19-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் 1,99,749 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது.

அதற்கு அடுத்த இடத்தில் டெல்லி 1,27,364 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் கனடாவைப் பின்னுக்குத் தள்ளி 21-வது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் கர்நாடகா 80,863 என்கிற எண்ணிக்கையுடன் 4-வது இடத்திலும், ஆந்திரா 72,711 என்கிற எண்ணிக்கையுடன் 5-ம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் 58,104 என்கிற எண்ணிக்கையுடன் 6-ம் இடத்திலும், குஜராத் 52,477 என்கிற எண்ணிக்கையுடன் 7-ம் இடத்திலும், மேற்கு வங்கம் 51,757 எண்ணிக்கையுடன் 8-ம் இடத்திலும், தெலங்கானா 50,826 என்கிற எண்ணிக்கையுடன் 9-ம் இடத்திலும், ராஜஸ்தான் 33,220 என்கிற எண்ணிக்கையுடன் 10-வது இடத்திலும் உள்ளன.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 5,486 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டை அடுத்து திருவள்ளூரும் 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது.

உலக அளவில் ஈராக்குக்கு அடுத்தபடியாக எகிப்தைப் பின்னுக்குத் தள்ளி சென்னை 92,206 என்கிற எண்ணிக்கையுடன் 25-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 58 அரசு ஆய்வகங்கள், 56 தனியார் ஆய்வகங்கள் என 114 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 53,132. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 26.5 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 22,23,019. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 2.7 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 65,510. இது .08 சதவீதம் ஆகும்.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 10.3 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 1,99,749.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 6,785.

* மொத்தம் (1,99,749) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,21,389 பேர் (60.7 %) / பெண்கள் 78,337 பேர் (39.2 %)/ மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் ( .01%)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 4,137 (60.9 %) பேர். பெண்கள் 2,648 (39.1 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 6,504 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,43,297 பேர் (71.7 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 88 பேர் உயிரிழந்தனர். இதில் 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 66 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,320 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 1,969 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 88 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 15 பேர் ஆவர். இது 17 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர் 3 பேர் . இதில் கரோனாவால் உயிரிழந்ததில் ஆண்கள் 66 பேர் (75%). பெண்கள் 22 (25 %) பேர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 82 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 6 பேர்.

சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 5,486.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 20 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 80 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 11,308, திருவள்ளூர் 11,008, மதுரை 9,302, காஞ்சிபுரம் 6,361, விருதுநகர் 5,193, தூத்துக்குடி 4,971, திருவண்ணாமலை 4,781, வேலூர் 4,646, திருநெல்வேலி 3,387, தேனி 3,321, திருச்சி 3,089, ராணிப்பேட்டை 3,223, கன்னியாகுமரி 3,124 ஆகியவை 3,000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

12 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 23 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னை, செங்கல்பட்டு தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 7 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன. 7 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 56 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 5,100 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 10,006 பேர் (5%). இதில் ஆண் குழந்தைகள் 5,227 பேர் (52.2%). பெண் குழந்தைகள் 4,779 பேர் (47.8%).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1,64,995 பேர் (82.6%). இதில் ஆண்கள் 1,00,915 பேர். (61.1%) பெண்கள் 64,057 பேர் (38.8%). மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 24,748 பேர் (12.3%). இதில் ஆண்கள் 15,247 பேர் (61.6%). பெண்கள் 9,501 பேர் (38.3 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/566268-corona-infection-infects-6-785-people-today-a-new-high-in-tamil-nadu-1-299-people-affected-in-chennai-2-lakh-towards-tamil-nadu-9.html

 

 

Link to comment
Share on other sites

  • Replies 167
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் கரோனா தொற்று 2 லட்சத்தைக் கடந்தது: புதிய உச்சமாக இன்று 6,988 பேருக்குத் தொற்று; சென்னையில் 1,329 பேர் பாதிப்பு

corona-infection-crosses-2-lakh-in-tamil-nadu-6-988-infected-today-a-new-high-1329-people-affected-in-chennai  

சென்னை

தமிழகத்தில் முதன்முறையாக அதிக அளவில் 6,988 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 2 லட்சத்தை தமிழகம் கடந்து மொத்தம் 2,06,737 என்கிற எண்ணிக்கையில் உள்ளது. சென்னையில் 1,329 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு 6,988 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 19 சதவீதத் தொற்று சென்னையில் (1,329) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,06,737 -ல் சென்னையில் மட்டும் 93,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 45.2 சதவீதம் ஆகும். 1,51,055 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 73 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 2 லட்சத்தை தமிழகம் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழகம் 2 லட்சம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 93 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 4 லட்சத்து 32 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 5,162 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும். சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்ததற்கு அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 62 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 4,32,041.

தமிழகத்தில் உயிரிழப்பு 3,409-ஐ (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) கடந்துள்ளது. உயிரிழந்த 3,409 பேரில் சென்னையில் மட்டுமே 1,989 பேர் (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 58.3 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 93,537-ல் 1,989 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 2.1% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.6% ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 6 லட்சம் பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது. இதன் மூலம் சென்னையில் கடந்த 10 நாட்களாக தொற்று எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அகில இந்திய அளவில் தொற்று எண்ணிக்கை வேகமாக அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் 30 ஆயிரத்தைக் கடந்து தொற்று எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. பல மாநிலங்கள் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளன. இதில் அகில உலக அளவில் மகாராஷ்டிரா முதல் பத்து இடத்தில் உள்ள நாடுகளுடன் போட்டியிடுகிறது.

மகாராஷ்டிரா 3 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 3,57,117 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 9-ம் இடத்திலிருந்த சிலியைப் பின்னுக்குத் தள்ளி 8-ம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.

அடுத்த இடத்தில் உள்ள தமிழகம் உலக அளவில் ஜெர்மனியைப் பின்னுக்குத் தள்ளி வங்கதேசத்துக்கு 18-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் 2,06,737 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. டெல்லி அதற்கு அடுத்த இடத்தில் 1,28,389 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் கனடாவைப் பின்னுக்குத் தள்ளி 21-வது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில், கர்நாடகா 85,870 என்கிற எண்ணிக்கையுடன் 4-வது இடத்திலும், ஆந்திரா 80,858 என்கிற எண்ணிக்கையுடன் 5-ம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் 60,771 என்கிற எண்ணிக்கையுடன் 6-ம் இடத்திலும், மேற்கு வங்கம் 53,973 என்கிற எண்ணிக்கையுடன் 7-ம் இடத்திலும், குஜராத் 53,548 எண்ணிக்கையுடன் 8-ம் இடத்திலும், தெலங்கானா 52,466 என்கிற எண்ணிக்கையுடன் 9-ம் இடத்திலும், ராஜஸ்தான் 34,178 என்கிற எண்ணிக்கையுடன் 10-வது இடத்திலும் உள்ளன. பிஹார் 33,926 என்கிற எண்ணிக்கையுடன் 11 வது இடத்தில் உள்ளது.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 5,659 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டை அடுத்து திருவள்ளூரும் 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது.

உலக அளவில் ஈராக்குக்கு அடுத்தபடியாக எகிப்தைப் பின்னுக்குத் தள்ளி சென்னை 93,537 என்கிற எண்ணிக்கையுடன் 25-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 58 அரசு ஆய்வகங்கள், 57 தனியார் ஆய்வகங்கள் என 115 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 52,273. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 25.2 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 22,87,334. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 2.8 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 64,315. இது .08 சதவீதம் ஆகும்.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகள் எண்ணிக்கை 10.8 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 2,06,737.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 6,988.

* மொத்தம் (2,06,737) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,25,553 பேர் (60.7 %) / பெண்கள் 81,161 பேர் (39.2 %)/ மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் ( .01%)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 4,164 (59.5 %) பேர். பெண்கள் 2,824 (40.5 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 7758 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,51,055 பேர் (73 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 89 பேர் உயிரிழந்தனர். இதில் 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 66 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,409 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 1,989 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 88 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 11 பேர் ஆவர். இது 17 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர் 4 பேர் . இதில் 18 வயது இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதில் கரோனாவால் உயிரிழந்ததில் ஆண்கள் 61 பேர் (68.5%). பெண்கள் 28 (31.4 %) பேர். முதன்முறையாக அதிக அளவில் பெண்கள் உயிரிழந்துள்ளது இன்றுதான்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 84 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 5 பேர்.

சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 5,659.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 20 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 80 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 11,764, திருவள்ளூர் 11,395, மதுரை 9,595, காஞ்சிபுரம் 6,796, விருதுநகர் 5,573, தூத்துக்குடி 5,291, திருவண்ணாமலை 4,933, வேலூர் 4,854, திருநெல்வேலி 3,595, தேனி 3,556, திருச்சி 3,289, ராணிப்பேட்டை 3,467, கன்னியாகுமரி 3,393, கோவை 3237 ஆகியவை 3,000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

11 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 23 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 9 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன. 2 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 62 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 5,162 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 10,344 பேர் (5%). இதில் ஆண் குழந்தைகள் 5,398 பேர் (52.1%). பெண் குழந்தைகள் 4,946 பேர் (47.9%).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1,70,735 பேர் (82.5%). இதில் ஆண்கள் 1,04,339 பேர். (61.1%) பெண்கள் 66,373 பேர் (38.8%). மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 25,658 பேர் (12.4%). இதில் ஆண்கள் 15,816 பேர் (61.6%). பெண்கள் 9,842 பேர் (38.3 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/566448-corona-infection-crosses-2-lakh-in-tamil-nadu-6-988-infected-today-a-new-high-1329-people-affected-in-chennai-9.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கை விசாரித்து வரும் மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு கொரோனா

சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கை விசாரித்து வரும் மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு கொரோனா

 

தூத்துக்குடி,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீ ஸ் காவலில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த வழக்கை சி.பி.ஐ. ஏ.டி.எஸ்.பி. விஜயகுமார் சுக்லா தலைமையில் சச்சின், அனுராக்சிங், பவன்குமார்திவேதி, சைலேஷ்குமார், சுஷில்குமார்வர்மா, அஜய்குமார், பூனம்குமார் ஆகிய 8 பேர் கொண்ட அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 10 போலீசாரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து மதுரை ஆத்திக்குளத்தில் உள்ள அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் அழைத்துச் சென்றும் விசாரித்தனர்.

இதற்கிடையே காவலில் எடுக்கப்பட்ட போலீசாருக்கும், அவர்களிடம் விசாரணை நடத்திய சி.பி.ஐ. அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், சி.பி.ஐ. விசாரணை குழுவில் உள்ள சப்-இன்ஸ்பெக்டர் சச்சின் உள்பட 2 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது. அதை தொடர்ந்து இருவரும் ஏற்கனவே மதுரை ரெயில்வே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை தொடர்ந்து, சாத்தான்குளம் வழக்கில் கைதான போலீசாருக்கும், சி.பி.ஐ. அதிகாரிகள் மற்ற 6 பேருக்கும் மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவுகள் நேற்று காலை வெளிவந்தன. அதில் சி.பி.ஐ. குழுவில் இடம் பெற்றிருந்த பவன்குமார்திவேதி, அஜய்குமார் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. பின்னர் அவர்களும் மதுரை ரெயில்வே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதே போல் சாத்தான்குளம் வழக்கில் 9-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பால்துரைக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அதை தொடர்ந்து அவரை சிறை நிர்வாகம் தனிமைப்படுத்தி, மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். இந்நிலையில்  சாத்தான்குளம் தந்தை-மகன் வழக்கை விசாரித்து வரும் மேலும் ஒரு சிபிஐ அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே 4 சிபிஐ அதிகாரிகளுக்கு கொரோனா ஏற்பட்ட நிலையில் மேலும் ஒருவருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/07/26092402/Sathankulam-fatherson-case-is-being-investigated-And.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 6,986 பேருக்கு கரோனா: சென்னையில் 1,155 பேருக்குத் தொற்று; 5,471 பேர் குணமடைந்தனர்

6-986-new-corona-cases-in-tamilnadu தமிழகத்தில் கரோனா தொற்று குறித்த இன்றைய நிலவரம்.

சென்னை

தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 6,986 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 1,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 94 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய (ஜூலை 26) கரோனா தொற்று நிலவரம் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

''தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 6,986 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் 64 ஆயிரத்து 129 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 23 லட்சத்து 51 ஆயிரத்து 463 மாதிரிகளுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று மட்டும் 62 ஆயிரத்து 305 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தமாக 22 லட்சத்து 62 ஆயிரத்து 738 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

அரசு சார்பாக 58 மற்றும் தனியார் சார்பாக 58 என, தமிழகத்தில் மொத்தம் 116 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

தமிழகத்தில் இன்று மட்டும் 5,471 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தமாக 1 லட்சத்து 56 ஆயிரத்து 526 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அரசு மருத்துவமனைகளில் 49 பேர் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 36 பேர் என மொத்தம் இன்று 85 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தமாக 3,494 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்கள் 75 பேர். இணை நோய்கள் அல்லாதவர்கள் 10 பேர்.

தற்போது வரை 53 ஆயிரத்து 703 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 94 ஆயிரத்து 695 ஆக உயர்ந்துள்ளது. இன்று மட்டும் 26 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக, 2,011 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்தமாக, 78 ஆயிரத்து 940 பேர் வீடு திரும்பியுள்ளனர். 13 ஆயிரத்து 744 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்''.

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/566595-6-986-new-corona-cases-in-tamilnadu-2.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

10 ஆயிரம் எண்ணிக்கையைக் கடந்த மாவட்டங்களில் இணைந்தது மதுரை; தமிழகத்தில் இன்று 6,993 பேருக்குத் கரோனா தொற்று: சென்னையில் 1,138 பேர் பாதிப்பு

madhurai-crossed-10-thousand-cases-corona-infection-affects-6-993-people-in-tamil-nadu-today-1-138-in-chennai  

சென்னை

தமிழகத்தில் முதன்முறையாக அதிக அளவில் 6,993 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 2 லட்சத்தை தமிழகம் கடந்து மொத்தம் 2,20,716 என்கிற எண்ணிக்கையில் உள்ளது. சென்னையில் 1,138 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இல்லாத அளவுக்கு 6,993 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 16.2 சதவீதத் தொற்று சென்னையில் (1,138) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,20,716 -ல் சென்னையில் மட்டும் 95,857 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 43.4 சதவீதம் ஆகும். 1,62,249 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 73.5 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 2 லட்சத்தை தமிழகம் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழகம் 2 லட்சம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 95 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 4 லட்சத்து 44 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 5,274 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும். சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்ததற்கு அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 62 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 4,44,464.

தமிழகத்தில் உயிரிழப்பு 3,571-ஐ (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) கடந்துள்ளது. உயிரிழந்த 3,571 பேரில் சென்னையில் மட்டுமே 2,032 பேர் (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 61.6 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 95,857-ல் ,2032 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 2.1% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.6% ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 6 லட்சம் பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது. இதன் மூலம் சென்னையில் கடந்த 10 நாட்களாக தொற்று எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அகில இந்திய அளவில் தொற்று எண்ணிக்கை வேகமாக அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்கள் வேக வேகமாகத் தொற்று எண்ணிக்கையில் அதிகரித்து வருகின்றன. ஆந்திரா, கர்நாடக இரண்டு மாநிலங்களும் சென்னையைக் கடந்து சென்றுவிட்டன. பல மாநிலங்கள் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளன. இதில் அகில உலக அளவில் மகாராஷ்டிரா முதல் பத்து இடத்தில் உள்ள நாடுகளுடன் போட்டியிடுகிறது.

மகாராஷ்டிரா 3.75 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 3,75,799 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 6-ம் இடத்திலிருந்த பெருவைப் பின்னுக்குத் தள்ளி தென் ஆப்பிரிக்காவுக்கு அடுத்து மகாராஷ்டிரா உள்ளது.

அடுத்த இடத்தில் உள்ள தமிழகம் உலக அளவில் வங்கதேசத்தைப் பின்னுக்குத் தள்ளி 17-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் 2,20,716 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. டெல்லி அதற்கு அடுத்த இடத்தில் 1,30,606 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் கனடாவைப் பின்னுக்குத் தள்ளி 21-வது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில், ஆந்திரா 96,298 என்கிற எண்ணிக்கையுடன் 4-வது இடத்திலும், கர்நாடகா 96,141 என்கிற எண்ணிக்கையுடன் 5-ம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் 66,988 என்கிற எண்ணிக்கையுடன் 6-ம் இடத்திலும், மேற்கு வங்கம் 58,718 என்கிற எண்ணிக்கையுடன் 7-ம் இடத்திலும், குஜராத் 55,822 எண்ணிக்கையுடன் 8-ம் இடத்திலும், தெலங்கானா 54,059 என்கிற எண்ணிக்கையுடன் 9-ம் இடத்திலும், பிஹார் 39,176 என்கிற எண்ணிக்கையுடன் 10-வது இடத்திலும் உள்ளன.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 5,855 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூரை அடுத்து மதுரையும் 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது.

சென்னை, உலக அளவில் ஈராக்குக்கு அடுத்தபடியாக இந்தோனேசியாவைப் பின்னுக்குத் தள்ளி 95,857 என்கிற எண்ணிக்கையுடன் 24-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 58 அரசு ஆய்வகங்கள், 59 தனியார் ஆய்வகங்கள் என 117 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 54,896. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 24.8 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 24,14,713. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 3 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 63,250. இது .07 சதவீதம் ஆகும்.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 11 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 2,20,716.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 6,993.

* மொத்தம் (2,20,716) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,33,930 பேர் (60.6 %) / பெண்கள் 86,763 பேர் (39.3 %)/ மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் ( .01%)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 4,162 (59.5 %) பேர். பெண்கள் 2,831 (40.5 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5723 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,62,249 பேர் (73.5 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 77 பேர் உயிரிழந்தனர். இதில் 27 பேர் தனியார் மருத்துவமனையிலும், 50 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,571 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 2,032 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 77 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 12 பேர் ஆவர். இது 15.5 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர் 5 பேர். இதில் ரத்த சோகையால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த 26 வயது இளைஞரும் உயிரிழந்துள்ளார். இதில் கரோனாவால் உயிரிழந்ததில் ஆண்கள் 50 பேர் (64.9 %). பெண்கள் 23 (29.8%) பேர். முதன்முறையாக 4 பேர் ஆணா? பெண்ணா? எனக் குறிப்பிடாமல் தகவல் வெளியிட்டுள்ளனர். .

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 69 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 8 பேர்.

சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 5,855.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 43.4 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 56.6 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 12,717, திருவள்ளூர் 12,320, மதுரை 10,057, காஞ்சிபுரம் 7,527, விருதுநகர் 6,302, தூத்துக்குடி 5,896, திருவண்ணாமலை 5,376, வேலூர் 5,236, திருநெல்வேலி 3,963, தேனி 4,053, திருச்சி 3,604, ராணிப்பேட்டை 4,107, கன்னியாகுமரி 3,849, கோவை 3,775, கள்ளக்குறிச்சி 3,303, சேலம் 3,185 , விழுப்புரம் 3,170 ஆகியவை 3,000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

11 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 22 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 9 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன. 2 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 37 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 5,274 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 11,042 பேர் (5%). இதில் ஆண் குழந்தைகள் 5,784 பேர் (52.3%). பெண் குழந்தைகள் 5,258 பேர் (47.7%).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1,82,286 பேர் (82.5%). இதில் ஆண்கள் 1,11,273 பேர். (61%) பெண்கள் 70,990 பேர் (39.9 %). மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 27,388 பேர் (12.4%). இதில் ஆண்கள் 16,873 பேர் (61.6%). பெண்கள் 10,515 பேர் (38.3 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/566756-madhurai-crossed-10-thousand-cases-corona-infection-affects-6-993-people-in-tamil-nadu-today-1-138-in-chennai-9.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக அளவில் 15-வது இடத்தில் தமிழகம்; இன்று 6,972 பேருக்குத் கரோனா தொற்று: சென்னையில் 1,107 பேர் பாதிப்பு

tamil-nadu-ranked-15th-in-the-world-corona-infection-affects-6-972-people-today-1-107-in-chennai  

சென்னை

தமிழகத்தில் அதிக அளவில் 6,972 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 2 லட்சத்தை தமிழகம் கடந்து மொத்தம் 2,20,716 என்கிற எண்ணிக்கையில் உள்ளது. சென்னையில் 1,107 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

6,972 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 15.8 சதவீதத் தொற்று சென்னையில் (1,107) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,27,688-ல் சென்னையில் மட்டும் 96,438 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 42.3 சதவீதம் ஆகும். 1,66,956 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 73.3 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 2 லட்சத்தை தமிழகம் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழகம் 2.27 லட்சம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 96 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 4 லட்சத்து 44 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 5,338 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும். சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்ததற்கு அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 64 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 4,50,096.

தமிழகத்தில் உயிரிழப்பு 3,659-ஐ (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) கடந்துள்ளது. உயிரிழந்த 3,659 பேரில் சென்னையில் மட்டுமே 2,056 பேர் (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 56.1 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 96,438-ல் 2,056 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 2.1% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.6% ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 6 லட்சம் பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது. இதன் மூலம் சென்னையில் கடந்த 10 நாட்களாக தொற்று எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அகில இந்திய அளவில் தொற்று எண்ணிக்கை வேகமாக அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் வேக வேகமாகத் தொற்று எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களும் சென்னை எண்ணிக்கையைக் கடந்து சென்றுவிட்டன. பல மாநிலங்கள் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளன. இதில் அகில உலக அளவில் மகாராஷ்டிரா முதல் பத்து இடத்தில் உள்ள நாடுகளுடன் போட்டியிடுகிறது.

மகாராஷ்டிரா 3.75 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 3,83,723 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 6-ம் இடத்திலிருந்த பெருவைப் பின்னுக்குத் தள்ளி தென் ஆப்பிரிக்காவுக்கு அடுத்து மகாராஷ்டிரா உள்ளது.

அடுத்த இடத்தில் உள்ள தமிழகம் உலக அளவில் கொலம்பியாவைப் பின்னுக்குத் தள்ளி 15-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் 2,27,688 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. டெல்லி அதற்கு அடுத்த இடத்தில் 1,31,219 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் கனடாவைப் பின்னுக்குத் தள்ளி 21-வது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில், ஆந்திரா 1,02,349 என்கிற எண்ணிக்கையுடன் 4-வது இடத்திலும், கர்நாடகா 1,01,465 என்கிற எண்ணிக்கையுடன் 5-ம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் 70,493 என்கிற எண்ணிக்கையுடன் 6-ம் இடத்திலும், மேற்கு வங்கம் 60,830 என்கிற எண்ணிக்கையுடன் 7-ம் இடத்திலும், குஜராத் 56,874 எண்ணிக்கையுடன் 8-ம் இடத்திலும், தெலங்கானா 57,142 என்கிற எண்ணிக்கையுடன் 9-ம் இடத்திலும், பிஹார் 41,244 என்கிற எண்ணிக்கையுடன் 10-வது இடத்திலும் உள்ளன.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 5,865 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூரை அடுத்து மதுரையும் 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது.

சென்னை, உலக அளவில் ஈராக்குக்கு அடுத்தபடியாக இந்தோனேசியாவைப் பின்னுக்குத் தள்ளி 96,438 என்கிற எண்ணிக்கையுடன் 24-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 58 அரசு ஆய்வகங்கள், 61 தனியார் ஆய்வகங்கள் என 119 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 57,073. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 25 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 24,75,766. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 3 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 61,153. இது .07 சதவீதம் ஆகும்.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 11.4 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 2,27,688.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 6,972.

* மொத்தம் (2,20,716) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,38,163 பேர் (60.6 %) / பெண்கள் 89,502 பேர் (39.3 %)/ மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் ( .01%)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 4,233 (60.7 %) பேர். பெண்கள் 2,739 (39.2 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,707 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,66,956 பேர் (73.3 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 88 பேர் உயிரிழந்தனர். இதில் 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 65 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,659 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 2,056 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 77 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 18 பேர் ஆவர். இது 20.4 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர் 8 பேர். இதில் திருச்சியைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார். இதில் கரோனாவால் உயிரிழந்ததில் ஆண்கள் 63 பேர் (71.5 %). பெண்கள் 25 (28.5%) பேர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 85 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 3 பேர்.

சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 5,865.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 42.3 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 57.7 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 13,348, திருவள்ளூர் 12,806, மதுரை 10,392, காஞ்சிபுரம் 8,017, விருதுநகர் 6,884, தூத்துக்குடி 6278, திருவண்ணாமலை 5,644, வேலூர் 5,385, திருநெல்வேலி 4,350, தேனி 4,337, திருச்சி 3,755, ராணிப்பேட்டை 4,306, கன்னியாகுமரி 4,073, கோவை 4,052, கள்ளக்குறிச்சி 3,498, சேலம் 3,309 , விழுப்புரம் 3,361, ராமநாதபுரம் 3132, ஆகியவை 3,000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

10 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 23 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 9 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன. 2 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 64 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 5,338 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 11,379 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 5,957 பேர் (52.3%). பெண் குழந்தைகள் 5,422 பேர் (47.7%).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1,88,015 பேர் (82.5%). இதில் ஆண்கள் 1,14,741 பேர். (61%) பெண்கள் 73,251 பேர் (39.9 %). மூன்றாம் பாலினத்தவர் 23 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 28,294 பேர் (12.4%). இதில் ஆண்கள் 17,465 பேர் (61.7%). பெண்கள் 10,829 பேர் (38.3 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/566953-tamil-nadu-ranked-15th-in-the-world-corona-infection-affects-6-972-people-today-1-107-in-chennai-9.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 6,426 பேருக்கு கரோனா தொற்று: சென்னையில் 1,117 பேர் பாதிப்பு: 4 திருநங்கைகளுக்கு பாதிப்பு 

corona-infection-affects-6-426-people-in-tamil-nadu-1-117-in-chennai-4-transgender-people-affected  

சென்னை

தமிழகத்தில் அதிக அளவில் 6,426 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 2 லட்சத்தை தமிழகம் கடந்து மொத்தம் 2,34,114 என்கிற எண்ணிக்கையில் உள்ளது. சென்னையில் 1,117 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிதாக 4 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

6,426 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 17.3 சதவீதத் தொற்று சென்னையில் (1,117) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,34,114-ல் சென்னையில் மட்டும் 97,575 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 41.6 சதவீதம் ஆகும். 1,72,883 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 73.8 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 2.34 லட்சத்தை தமிழகம் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழகம் 2.34 லட்சம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 97 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 4 லட்சத்து 55 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 5,371 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும். சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்ததற்கு அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 82 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 4,55,638.

தமிழகத்தில் உயிரிழப்பு 3,741-ஐ (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) கடந்துள்ளது. உயிரிழந்த 3,741 பேரில் சென்னையில் மட்டுமே 2,076 பேர் (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 55.4 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 97,575-ல் 2,076 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 2.1% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.6% ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 6 லட்சம் பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது. இதன் மூலம் சென்னையில் கடந்த 10 நாட்களாக தொற்று எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அகில இந்திய அளவில் தொற்று எண்ணிக்கை வேகமாக அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் வேக வேகமாகத் தொற்று எண்ணிக்கையில் அதிகரித்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களும் சென்னை எண்ணிக்கையைக் கடந்து சென்றுவிட்டன. பல மாநிலங்கள் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளன. இதில் அகில உலக அளவில் மகாராஷ்டிரா முதல் பத்து இடத்தில் உள்ள நாடுகளுடன் போட்டியிடுகிறது.

மகாராஷ்டிரா 3.90 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 3,91,440 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 8-ம் இடத்திலிருந்த சிலியைப் பின்னுக்குத் தள்ளி பெருவுக்கு அடுத்து 8-ம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.

அடுத்த இடத்தில் உள்ள தமிழகம் உலக அளவில் வங்கதேசத்தை பின்னுக்குத் தள்ளி 16-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் 2,34,114 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. டெல்லி அதற்கு அடுத்த இடத்தில் 1,32,275 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் ஈராக்கைப் பின்னுக்குத் தள்ளி 21-வது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில், ஆந்திரா 1,10,297 என்கிற எண்ணிக்கையுடன் 4-வது இடத்திலும், கர்நாடகா 1,07,001 என்கிற எண்ணிக்கையுடன் 5-ம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் 73,951 என்கிற எண்ணிக்கையுடன் 6-ம் இடத்திலும், மேற்கு வங்கம் 62,964 என்கிற எண்ணிக்கையுடன் 7-ம் இடத்திலும், குஜராத் 57,982 எண்ணிக்கையுடன் 8-ம் இடத்திலும், தெலங்கானா 57,142 என்கிற எண்ணிக்கையுடன் 9-ம் இடத்திலும், பிஹார் 43,843 என்கிற எண்ணிக்கையுடன் 10-வது இடத்திலும் உள்ளன.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 5,309 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூரை அடுத்து மதுரையும் 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது.

சென்னை, உலக அளவில் ஈராக்குக்கு அடுத்தபடியாக இந்தோனேசியாவைப் பின்னுக்குத் தள்ளி 97,575 என்கிற எண்ணிக்கையுடன் 24-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 58 அரசு ஆய்வகங்கள், 61 தனியார் ஆய்வகங்கள் என 119 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* டிஸ்சார்ஜ் ஆனவர்கள் போக தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 57,490. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 24.5 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 25,36,660. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 3.1 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 60,794. இது .07 சதவீதம் ஆகும்.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 10.5 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 2,34,114.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 6,426.

* மொத்தம் (2,34,114) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,42,055 பேர் (60.6 %) / பெண்கள் 92,032 பேர் (39.3 %)/ மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் ( .1%)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3892 (60.5 %) பேர். பெண்கள் 2,530 (39.5 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5927 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,72,883 பேர் (73.8 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 82 பேர் உயிரிழந்தனர். இதில் 28 பேர் தனியார் மருத்துவமனையிலும், 54 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,741 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 2,076 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 82 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 18 பேர் ஆவர். இது 21.9 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர் 5 பேர். அரியலூரைச் சேர்ந்த 22 வயது கர்ப்பிணிப் பெண், நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஆகியோர் அடக்கம். இதில் கரோனாவால் உயிரிழந்ததில் ஆண்கள் 57 பேர் (69.5 %). பெண்கள் 25 (30.5%) பேர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 75 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 7 பேர்.

சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 5,309.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 41.6 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 58.4 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 13,841, திருவள்ளூர் 13,184, மதுரை 10,618, காஞ்சிபுரம் 8,422, விருதுநகர் 7,256, தூத்துக்குடி 6,591, திருவண்ணாமலை 5,823, வேலூர் 5,492, திருநெல்வேலி 4,729, தேனி 4,468, ராணிப்பேட்டை 4,491, கன்னியாகுமரி 4,275, கோவை 4,344, திருச்சி 3,889, கள்ளக்குறிச்சி 3,633, சேலம் 3,428, விழுப்புரம் 3,499, ராமநாதபுரம் 3169, ஆகியவை 3,000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

10 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 23 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 9 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன. 2 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 82 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 5,371 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 11,697பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 6143 பேர் (52.5%). பெண் குழந்தைகள் 5,554 பேர் (47.5%).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1,93,304 பேர் (82.5%). இதில் ஆண்கள் 1,17,919 பேர். (61%) பெண்கள் 75,358 பேர் (39.9 %). மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 29,113 பேர் (12.4%). இதில் ஆண்கள் 17,993 பேர் (61.8%). பெண்கள் 11,120 பேர் (38.2 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/567144-corona-infection-affects-6-426-people-in-tamil-nadu-1-117-in-chennai-4-transgender-people-affected-9.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 5,864 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,175 பேர் பாதிப்பு: 97 பேர் உயிரிழப்பு

corona-infection-affects-5-864-people-in-tamil-nadu-1-175-in-chennai-97-deaths-for-the-first-time  

சென்னை

தமிழகத்தில் அதிக அளவில் 5,864 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 2 லட்சத்தை தமிழகம் கடந்து மொத்தம் 2,39,978 என்கிற எண்ணிக்கையில் உள்ளது. சென்னையில் 1,175 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக உயிரிழப்பு 97 ஆக அதிகரித்துள்ளது.

5,864 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 20 சதவீதத் தொற்று சென்னையில் (1,175) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,39,978-ல் சென்னையில் மட்டும் 98,767 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 41.1 சதவீதம் ஆகும். 1,78,178 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 74.2 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 2.39 லட்சத்தை தமிழகம் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழகம் 2.39 லட்சம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 98 ஆயிரத்தைக் கடந்துவிட்டது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 4 லட்சத்து 62 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 5,371 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும். சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்ததற்கு அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 53 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 4,62,131.

தமிழகத்தில் உயிரிழப்பு 3,838-ஐ (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) கடந்துள்ளது. உயிரிழந்த 3,838 பேரில் சென்னையில் மட்டுமே 2,092 பேர் (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 54.5 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 98,767-ல் 2,092 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 2.1% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.6% ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 6 லட்சம் பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது. இதன் மூலம் சென்னையில் கடந்த 10 நாட்களாக தொற்று எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அகில இந்திய அளவில் தொற்று எண்ணிக்கை வேகமாக அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் வேக வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களும் சென்னை எண்ணிக்கையைக் கடந்து சென்றுவிட்டன. பல மாநிலங்கள் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளன. இதில் அகில உலக அளவில் மகாராஷ்டிரா முதல் பத்து இடத்தில் உள்ள நாடுகளுடன் போட்டியிடுகிறது.

மகாராஷ்டிரா 4 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 4,00,651 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 8-ம் இடத்திலிருந்த பெருவைப் பின்னுக்குத் தள்ளி பெருவுக்கு அடுத்து 7-ம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.

அடுத்த இடத்தில் உள்ள தமிழகம் உலக அளவில் வங்கதேசத்தைப் பின்னுக்குத் தள்ளி 16-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் 2,39,978 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. டெல்லி அதற்கு அடுத்த இடத்தில் 1,33,310 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் ஈராக்கைப் பின்னுக்குத் தள்ளி 21-வது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில், ஆந்திரா 1,20,390 என்கிற எண்ணிக்கையுடன் 4-வது இடத்திலும், கர்நாடகா 1,12,504 என்கிற எண்ணிக்கையுடன் 5-ம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் 77,334 என்கிற எண்ணிக்கையுடன் 6-ம் இடத்திலும், மேற்கு வங்கம் 65,258 என்கிற எண்ணிக்கையுடன் 7-ம் இடத்திலும், குஜராத் 59,126 எண்ணிக்கையுடன் 8-ம் இடத்திலும், தெலங்கானா 58,906 என்கிற எண்ணிக்கையுடன் 9-ம் இடத்திலும், பிஹார் 46,080 என்கிற எண்ணிக்கையுடன் 10-வது இடத்திலும் உள்ளன.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,689 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூரை அடுத்து மதுரையும் 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது.

சென்னை, உலக அளவில் இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக எகிப்தைப் பின்னுக்குத் தள்ளி 98,767 என்கிற எண்ணிக்கையுடன் 25-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 58 அரசு ஆய்வகங்கள், 61 தனியார் ஆய்வகங்கள் என 119 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 57,962. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 24.1 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 25,97,862. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 3.2 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 61,202. இது .07 சதவீதம் ஆகும்.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 9.5 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 2,39, 978.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,864.

* மொத்தம் (2,39,978) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,45,615 பேர் (60.6 %) / பெண்கள் 94,336 பேர் (39.3 %)/ மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் ( .1%)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3560 (60.7 %) பேர். பெண்கள் 2,304 (39.3 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,295 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,78,178 பேர் (74.2 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 97 பேர் உயிரிழந்தனர். இதில் 32 பேர் தனியார் மருத்துவமனையிலும், 65 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,838 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 2,092 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 97 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 24 பேர் ஆவர். இது 24.7 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர் 11 பேர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 3 வயதுச் சிறுமி, அரியலூரைச் சேர்ந்த 5 வயதுச் சிறுமியும் இதில் அடக்கம். கரோனாவால் உயிரிழந்ததில் ஆண்கள் 65 பேர் (67 %). பெண்கள் 32 (33 %) பேர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோய் பாதிப்பால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 89 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 8 பேர்.

சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 4,689

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 41.1 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 58.9 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 14,197, திருவள்ளூர் 13,481, மதுரை 10,838, காஞ்சிபுரம் 8,604, விருதுநகர் 7,502, தூத்துக்குடி 6,812, திருவண்ணாமலை 6,010, வேலூர் 5,677, திருநெல்வேலி 5,002, தேனி 4,729, ராணிப்பேட்டை 4,769, கன்னியாகுமரி 4,523, கோவை 4,647, திருச்சி 4,011, கள்ளக்குறிச்சி 3,726, சேலம் 3,498, விழுப்புரம் 3,594, ராமநாதபுரம் 3215 ஆகியவை 3,000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

10 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 23 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 9 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன. 2 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 53 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 5,424 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 11,970 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 6,271 பேர் (52.3%). பெண் குழந்தைகள் 5,699 பேர் (47.7%).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 1,98,093 பேர் (82.5%). இதில் ஆண்கள் 1,20,858 பேர். (61%) பெண்கள் 77,208 பேர் (39.9 %). மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 29,915 பேர் (12.4%). இதில் ஆண்கள் 18,486 பேர் (61.7%). பெண்கள் 11,429 பேர் (38.3 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/567320-corona-infection-affects-5-864-people-in-tamil-nadu-1-175-in-chennai-97-deaths-for-the-first-time-9.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 5,881 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,013 பேர் பாதிப்பு: 1 லட்சத்தை நெருங்கும் சென்னை

corona-infection-affects-5-881-people-in-tamil-nadu-1-013-people-affected-in-chennai-chennai-approaching-1-lakh  

சென்னை

தமிழகத்தில் அதிக அளவில் 5,881 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 2 லட்சத்தை தமிழகம் கடந்து மொத்தம் 2,45,859 என்கிற எண்ணிக்கையில் உள்ளது. சென்னையில் 1,013 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக உயிரிழப்பு 97 ஆக அதிகரித்துள்ளது.

5,881 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 17.2 சதவீதத் தொற்று சென்னையில் (1,013) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,45,859-ல் சென்னையில் மட்டும் 99,794 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 40.5 சதவீதம் ஆகும். 1,83,956 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 74.8 சதவீதமாக உள்ளது.

 

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 2.45 லட்சத்தை தமிழகம் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழகம் 2.45 லட்சம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் 99 ஆயிரத்தைக் கடந்து ஒரு லட்சத்தை அடைய சில நூறு எண்ணிக்கை மிச்சம் உள்ளது . புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 4 லட்சத்து 67 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 5,455 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் குறிப்பாக சென்னைக்குள் நெரிசல் காரணமாக தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும். சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்ததற்கு அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 31 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 4,67,858.

தமிழகத்தில் உயிரிழப்பு 3,935-ஐ (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) கடந்துள்ளது. உயிரிழந்த 3,935 பேரில் சென்னையில் மட்டுமே 2,113 பேர் (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 53.6 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 99,794-ல் 2,113 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 2.1% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.6% ஆக உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 6 லட்சம் பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது. இதன் மூலம் சென்னையில் கடந்த 10 நாட்களாக தொற்று எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அகில இந்திய அளவில் தொற்று எண்ணிக்கை வேகமாக அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் வேக வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களும் சென்னை எண்ணிக்கையைக் கடந்து சென்றுவிட்டன. பல மாநிலங்கள் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளன. இதில் அகில உலக அளவில் மகாராஷ்டிரா முதல் பத்து இடத்தில் உள்ள நாடுகளுடன் போட்டியிடுகிறது.

மகாராஷ்டிரா 4 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 4,11,798 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 7-ம் இடத்திலிருந்த பெருவைப் பின்னுக்குத் தள்ளி 7-ம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.

அடுத்த இடத்தில் உள்ள தமிழகம் உலக அளவில் வங்கதேசத்தைப் பின்னுக்குத் தள்ளி 16-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் 2,45,859 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. டெல்லி அதற்கு அடுத்த இடத்தில் 1,34,403 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் ஈராக்கைப் பின்னுக்குத் தள்ளி 21-வது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் ஆந்திரா 1,30,557 என்கிற எண்ணிக்கையுடன் 4-வது இடத்திலும், கர்நாடகா 1,18,632 என்கிற எண்ணிக்கையுடன் 5-ம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் 81,039 என்கிற எண்ணிக்கையுடன் 6-ம் இடத்திலும், மேற்கு வங்கம் 67,692 என்கிற எண்ணிக்கையுடன் 7-ம் இடத்திலும், குஜராத் 60,285 எண்ணிக்கையுடன் 8-ம் இடத்திலும், தெலங்கானா 60,717 என்கிற எண்ணிக்கையுடன் 9-ம் இடத்திலும், பிஹார் 48,477 என்கிற எண்ணிக்கையுடன் 10-வது இடத்திலும் உள்ளன.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,868 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூரை அடுத்து மதுரையும் 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது.

சென்னை, உலக அளவில் இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக எகிப்தைப் பின்னுக்குத் தள்ளி 99,794 என்கிற எண்ணிக்கையுடன் 25-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 59 அரசு ஆய்வகங்கள், 61 தனியார் ஆய்வகங்கள் என 120 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 57,962. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 23.5 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 26,58,138. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 3.3 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 60,276. இது .07 சதவீதம் ஆகும்.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 9.7 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 2,45,859.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,881.

* மொத்தம் (2,45,859) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,49,107 பேர் (60.6 %) / பெண்கள் 96,725 பேர் (39.3 %)/ மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் ( .1%)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,492 (59.3 %) பேர். பெண்கள் 2,389 (40.6 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,778 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,83,956 பேர் (74.8 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 97 பேர் உயிரிழந்தனர். இதில் 29 பேர் தனியார் மருத்துவமனையிலும், 68 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,935 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 2,113 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 97 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 18 பேர் ஆவர். இது 18.5 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர் 9 பேர். இதில் திருவள்ளூரைச் சேர்ந்த 27 வயது இளம்பெண், கோவையைச் சேர்ந்த 27 வயது இளைஞர், கன்னியாகுமரியைச் சேர்ந்த 29 இளைஞரும் அடக்கம். கரோனாவால் உயிரிழந்ததில் ஆண்கள் 78 பேர் (80.4 %). பெண்கள் 19 (19.6 %) பேர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 89 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 8 பேர்.

சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 4,868.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 40.5 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 59.5 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 14,534, திருவள்ளூர் 13,836, மதுரை 11,009, காஞ்சிபுரம் 9,094, விருதுநகர் 7,865, தூத்துக்குடி 7,107, திருவண்ணாமலை 6,052, வேலூர் 5,875, திருநெல்வேலி 5,212, தேனி 5,028, ராணிப்பேட்டை 5,130, கன்னியாகுமரி 4,693, கோவை 4,821, திருச்சி 4,146, கள்ளக்குறிச்சி 3,745, சேலம் 3,622, விழுப்புரம் 3,764, ராமநாதபுரம் 3,255, கடலூர் 3,088, ஆகியவை 3,000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

10 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 23 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 9 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன. 2 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 53 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 5,424 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 12,263 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 6,425 பேர் (52.3%). பெண் குழந்தைகள் 5,838 பேர் (47.7%).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2,02,926 பேர் (82.5%). இதில் ஆண்கள் 1,23,732 பேர். (61%) பெண்கள் 79,167 பேர் (39.9 %). மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 30,670 பேர் (12.4%). இதில் ஆண்கள் 18,950 பேர் (61.7%). பெண்கள் 11,720 பேர் (38.3 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/567518-corona-infection-affects-5-881-people-in-tamil-nadu-1-013-people-affected-in-chennai-chennai-approaching-1-lakh-9.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2.5 லட்சத்தை கடந்தது தமிழகம்; 5,879 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,074 பேர் பாதிப்பு

tamil-nadu-surpasses-italy-by-over-2-5-lakhs-corona-infection-in-5-879-people-1-074-people-affected-in-chennai  

சென்னை

தமிழகத்தில் அதிக அளவில் 5,879 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 2.5 லட்சத்தை தமிழகம் கடந்து மொத்தம் 2,51,738 என்கிற எண்ணிக்கையில் உள்ளது. சென்னையில் 1,074 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக உயிரிழப்பு 99 ஆக அதிகரித்துள்ளது.

5,879 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 18.2 சதவீதத் தொற்று சென்னையில் (1,074) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,51,738-ல் சென்னையில் மட்டும் 1,00,877 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 40 சதவீதம் ஆகும். 1,90,966 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 75.8 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 2.51 லட்சத்தை தமிழகம் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழகம் 2.5 லட்சம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், இன்று சென்னையும் ஒரு லட்சத்தை கடந்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 4 லட்சத்து 74 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 5,512 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்து சம நிலையில் உள்ள நிலையில் மாவட்டங்களில் தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும். சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்ததற்கு அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 57 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 4,74,659.

தமிழகத்தில் உயிரிழப்பு 4,034-ஐ (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) கடந்துள்ளது. உயிரிழந்த 4,034 பேரில் சென்னையில் மட்டுமே 2,140 பேர் (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 53 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 1,00,877-ல் 2,140 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 2.1% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.6% ஆக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக உயிரிழப்போர் எண்ணிக்கை 90-ஐ தாண்டியுள்ளது கவலையளிக்கும் ஒன்றாகும்.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 6 லட்சம் பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது. இதன் மூலம் சென்னையில் கடந்த 10 நாட்களாக தொற்று எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அகில இந்திய அளவில் தொற்று எண்ணிக்கை வேகமாக அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் வேக வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களும் சென்னை, டெல்லி எண்ணிக்கையை வேகமாக கடந்து செல்கின்றன. பல மாநிலங்கள் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளன. இதில் அகில உலக அளவில் மகாராஷ்டிரா முதல் பத்து இடத்தில் உள்ள நாடுகளுடன் போட்டியிடுகிறது.

மகாராஷ்டிரா 4 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 4,22,118 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 7-ம் இடத்திலிருந்த பெருவைப் பின்னுக்குத் தள்ளி 7-ம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.

அடுத்த இடத்தில் உள்ள தமிழகம் உலக அளவில் இத்தாலியைப் பின்னுக்குத் தள்ளி 15-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் 2,51,738 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. டெல்லி அதற்கு அடுத்த இடத்தில் 1,35,598 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் ஈராக்கைப் பின்னுக்குத் தள்ளி 21-வது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் ஆந்திரா 1,40,933 என்கிற எண்ணிக்கையுடன் 4-வது இடத்திலும், கர்நாடகா 1,24,115 என்கிற எண்ணிக்கையுடன் 5-ம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் 85,461 என்கிற எண்ணிக்கையுடன் 6-ம் இடத்திலும், மேற்கு வங்கம் 70,188 என்கிற எண்ணிக்கையுடன் 7-ம் இடத்திலும், தெலங்கானா 62,703 எண்ணிக்கையுடன் 8-ம் இடத்திலும், குஜராத் 61,438 என்கிற எண்ணிக்கையுடன் 9-ம் இடத்திலும், பிஹார் 52,233 என்கிற எண்ணிக்கையுடன் 10-வது இடத்திலும் உள்ளன.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,805 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூரை அடுத்து மதுரையும் 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது.

சென்னை, உலக அளவில் இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக பிலிப்பைன்சைப் பின்னுக்குத் தள்ளி 1,00,877 என்கிற எண்ணிக்கையுடன் 25-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 59 அரசு ஆய்வகங்கள், 62 தனியார் ஆய்வகங்கள் என 121 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 56,738. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 22.5 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 27,18,718. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 3.3 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 60,580. இது .07 சதவீதம் ஆகும்.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 9.7 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 2,51,738.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,879.

* மொத்தம் (2,51,738) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,52,651 பேர் (60.6 %) / பெண்கள் 99,060 பேர் (39.3 %)/ மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் ( .1%)

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,544 (60.2 %) பேர். பெண்கள் 2,335 பேர் (39.8 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 7,010 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,90,966 பேர் (75.8 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 99 பேர் உயிரிழந்தனர். இதில் 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 77 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 4,034 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 2,140 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 99 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 15 பேர் ஆவர். இது 15 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர் 8 பேர். இதில் மதுரையைச் சேர்ந்த 28 வயது இளம்பெண், ராமநாதபுரத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர், சென்னையைச் சேர்ந்த 27 இளம்பெண்ணும் அடக்கம். கரோனாவால் உயிரிழந்ததில் ஆண்கள் 76 பேர் (76.7 %). பெண்கள் 23 (23.2 %) பேர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 90 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 9 பேர்.

சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 4,805.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 40.5 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 59.5 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 14,866, திருவள்ளூர் 14,128, மதுரை 11,175, காஞ்சிபுரம் 9,384, விருதுநகர் 8,151, தூத்துக்குடி 7,350, திருவண்ணாமலை 6,304, வேலூர் 6,069, திருநெல்வேலி 5,393, தேனி 5,355, ராணிப்பேட்டை 5,300, கன்னியாகுமரி 4,891, கோவை 5,059, திருச்சி 4,282, கள்ளக்குறிச்சி 3,807, சேலம் 3,670, விழுப்புரம் 3,923, ராமநாதபுரம் 3,293, கடலூர் 3,271, ஆகியவை 3,000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

10 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 23 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 9 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன. 2 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 57 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 5,512 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 12,536 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 6,569 பேர் (52.4%). பெண் குழந்தைகள் 5,967 பேர் (47.6%).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2,07,773 பேர் (82.5%). இதில் ஆண்கள் 1,26,647 பேர். (61%) பெண்கள் 81,099 பேர் (39.9 %). மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 31,429 பேர் (12.4%). இதில் ஆண்கள் 19,435 பேர் (61.8%). பெண்கள் 11,994 பேர் (38.2 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/567711-tamil-nadu-surpasses-italy-by-over-2-5-lakhs-corona-infection-in-5-879-people-1-074-people-affected-in-chennai-9.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 5,875 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,065 பேர் பாதிப்பு: மூன்றாவது நாளாக 90-ஐத் தாண்டிய உயிரிழப்பு 

corona-infection-in-5-875-people-1-065-affected-in-chennai-more-than-90-deaths-in-third-day  

சென்னை

தமிழகத்தில் இன்று 5,875 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், 2.5 லட்சத்தை தமிழகம் கடந்து மொத்தம் 2,57,613 என்கிற எண்ணிக்கையில் உள்ளது. சென்னையில் 1,065 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நாளாக உயிரிழப்பு 90-ஐத் தாண்டியுள்ளது.

5,875 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 18.1 சதவீதத் தொற்று சென்னையில் (1,065) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,57,613-ல் சென்னையில் மட்டும் 1,01,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 39.5 சதவீதம் ஆகும். 1,96,483 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 76.2 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 2.57 லட்சத்தை தமிழகம் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழகம் 2.5 லட்சம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், சென்னையும் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 4 லட்சத்து 81 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 5,576 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்து சமநிலையில் உள்ள நிலையில் மாவட்டங்களில் தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும். சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்ததற்கு அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 64 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 4,81,706.

தமிழகத்தில் உயிரிழப்பு 4,132-ஐ (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) கடந்துள்ளது. உயிரிழந்த 4,132 பேரில் சென்னையில் மட்டுமே 2,157 பேர் (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

மொத்த உயிரிழப்பில் சென்னையில் உயிரிழந்தவர்கள் மட்டும் 53 சதவீதமாகும். சென்னையின் மொத்த எண்ணிக்கையான 1,01,951-ல் 2,157 பேர் உயிரிழந்திருப்பதன் மூலம் மரண விகிதம் சென்னையில் 2.1% ஆக உள்ளது. தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.6% ஆக உள்ளது. கடந்த 3 நாட்களாக உயிரிழப்போர் எண்ணிக்கை 90-ஐத் தாண்டியுள்ளது கவலையளிக்கும் ஒன்றாகும். மொத்த உயிரிழப்பில் மகாராஷ்டிரா, டெல்லியை அடுத்து தமிழகம் 3-ம் இடத்தில் உள்ளது.

சென்னையில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தனிக்கவனம் செலுத்தப்படுகிறது. சென்னை மாநகராட்சி சார்பில் சென்னையில் குடிசைப் பகுதி, வருமானத்தில் பிற்பட்ட நிலையில் உள்ள பகுதி மக்கள் 28 லட்சம் மக்களைக் குறிவைத்து சமுதாய முன்னெடுப்புத் திட்டத்தை சென்னை மாநகராட்சி அமல்படுத்துகிறது. மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 6 லட்சம் பேருக்குச் சோதனை செய்யப்பட்டுள்ளதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வீடு வீடாகச் சோதனை நடத்தவும், பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் சோதனை நடத்தவும், 580 மருத்துவ மையங்களை மாநகராட்சி நடத்தி வருகிறது. இதன் மூலம் சென்னையில் கடந்த 10 நாட்களாகத் தொற்று எண்ணிக்கை 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.

அகில இந்திய அளவில் தொற்று எண்ணிக்கை வேகமாக அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் வேகவேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களும் சென்னை, டெல்லி எண்ணிக்கையை வேகமாகக் கடந்து செல்கின்றன. பல மாநிலங்கள் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளன. இதில் அகில உலக அளவில் மகாராஷ்டிரா முதல் பத்து இடத்தில் உள்ள நாடுகளுடன் போட்டியிடுகிறது.

மகாராஷ்டிரா 4 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 4,31,719 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 7-ம் இடத்திலிருந்த பெருவைப் பின்னுக்குத் தள்ளி 7-ம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.

அடுத்த இடத்தில் உள்ள தமிழகம் உலக அளவில் இத்தாலியைப் பின்னுக்குத் தள்ளி 15-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் 2,57,613 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ஆந்திரா 1,50,209 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் ஈராக்கைப் பின்னுக்குத் தள்ளி 21-வது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் டெல்லி 1,36,716 என்கிற எண்ணிக்கையுடன் 4-வது இடத்திலும், கர்நாடகா 1,29,287 என்கிற எண்ணிக்கையுடன் 5-ம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் 89,048 என்கிற எண்ணிக்கையுடன் 6-ம் இடத்திலும், மேற்கு வங்கம் 72,777 என்கிற எண்ணிக்கையுடன் 7-ம் இடத்திலும், தெலங்கானா 64,786 எண்ணிக்கையுடன் 8-ம் இடத்திலும், குஜராத் 62,463 என்கிற எண்ணிக்கையுடன் 9-ம் இடத்திலும், பிஹார் 54,240 என்கிற எண்ணிக்கையுடன் 10-வது இடத்திலும் உள்ளன.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,810 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூரை அடுத்து மதுரையும் 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது.

சென்னை, உலக அளவில் இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக எகிப்தைப் பின்னுக்குத் தள்ளி 1,01,951 என்கிற எண்ணிக்கையுடன் 26-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 59 அரசு ஆய்வகங்கள், 63 தனியார் ஆய்வகங்கள் என 122 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 56,998. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 22.1 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 27,79,062. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 3.4 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 60,344. இது .07 சதவீதம் ஆகும்.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 9.7 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 2,57,613.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,875.

* மொத்தம் (2,57,613) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,56,140 பேர் (60.6%) / பெண்கள் 1,01,446 பேர் (39.3%)/ மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் ( .1%).

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,489 (59.3 %) பேர். பெண்கள் 2,386 பேர் (40.7 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,517 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 1,96,483 பேர் (76.2 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 98 பேர் உயிரிழந்தனர். இதில் 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 75 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 4,132 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 2,157 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 98 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 21 பேர் ஆவர். இது 21.4 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர் 7 பேர். இதில் 23 வயது சென்னையைச் சேர்ந்த இளைஞர், திருவண்ணாமலையைச் சேர்ந்த 27 வயது இளைஞரும் அடக்கம். கரோனாவால் உயிரிழந்ததில் ஆண்கள் 67 பேர் (68.3%). பெண்கள் 31 (31.6%) பேர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 90 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 8 பேர்.

சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 4,810.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 39.5 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 60.5 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று தொற்று கண்டறியப்பட்ட 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 15,312, திருவள்ளூர் 14,430, மதுரை 11,352, காஞ்சிபுரம் 9,785, விருதுநகர் 8,491, தூத்துக்குடி 7,628, திருவண்ணாமலை 6,446, வேலூர் 6,242, திருநெல்வேலி 5,572, தேனி 5,664, ராணிப்பேட்டை 5,469, கன்னியாகுமரி 5,092, கோவை 5,230, திருச்சி 4,416, கள்ளக்குறிச்சி 3,840, சேலம் 3,804, விழுப்புரம் 4,022, ராமநாதபுரம் 3,338, கடலூர் 3,415, தஞ்சாவூர் 3,008 ஆகியவை 3,000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

அனைத்து மாவட்டங்களும் 100 என்கிற தொற்று எண்ணிக்கையை இன்று கடந்துவிட்டன. அதாவது 37 மாவட்டங்களிலும் இன்றைய தொற்று எண்ணிக்கை 100-க்கு மேல் உள்ளன.

9 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 24 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை தொற்று எண்ணிக்கை 5 இலக்கத்தில் உள்ளது. 9 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன. 2 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் தொற்று எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதுதவிர வெளிநாடுகள், வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களில் இன்று 64 பேருக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக இதுவரை வெளி மாநிலங்களிலிருந்து தொற்றுடன் வந்தவர்கள் 5,576 பேர்.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 12,790 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 6,695 பேர் (52.3%). பெண் குழந்தைகள் 6,095 பேர் (47.6%).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2,12,589 பேர் (82.5%). இதில் ஆண்கள் 1,29,531 பேர். (60.9%) பெண்கள் 83,031 பேர் (39.1 %). மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 32,234 பேர் (12.5%). இதில் ஆண்கள் 19,914 பேர் (61.7%). பெண்கள் 12,320 பேர் (38.3 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/567843-corona-infection-in-5-875-people-1-065-affected-in-chennai-more-than-90-deaths-in-third-day-9.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,021 பேர் பாதிப்பு: காஞ்சிபுரமும் 10,000-ஐ கடந்தது

corona-infection-affects-5-609-people-in-tamil-nadu-today-1-021-people-affected-in-chennai-kanchipuram-crossed-10-thousand  

சென்னை

தமிழகத்தில் இன்று 5,609 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் சென்னையில் 1,021 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதன்முறையாக தமிழகத்தில் கரோனாவால் உயிரிழப்பு 100-ஐத் தாண்டியுள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 2.63 லட்சத்தை தமிழகம் கடந்துள்ளது. தமிழகத்தில் மரண எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

தமிழகம் 2.6 லட்சம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், சென்னையும் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 4 லட்சத்து 87 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 5,608 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்து சமநிலையில் உள்ள நிலையில் மாவட்டங்களில் தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும். சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்ததற்கு அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 32 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 4,87,533.

தமிழகத்தில் உயிரிழப்பு 4,241-ஐ (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) கடந்துள்ளது. உயிரிழந்த 4,241 பேரில் சென்னையில் மட்டுமே 2,176 பேர் (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.6% ஆக உள்ளது. கடந்த 3 நாட்களாக உயிரிழப்போர் எண்ணிக்கை 90-ஐத் தாண்டிய நிலையில் இன்று முதன்முறையாக 100 தாண்டியுள்ளது கவலையளிக்கும் ஒன்றாகும்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள 44 மாதிரி சேகரிக்கும் மையங்கள் மற்றும் 10 நடமாடும் மையங்கள் என மொத்தம் 54 மையங்கள் உள்ளன. இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன, உலகளவில் பெரு நகரங்களில் அதிக பரிசோதனை மேற்கோண்டதில் பெருநகர சென்னை மாநகராட்சியே முதலிடம்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 10 லட்சம் நபர்களில் 87,000 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றன (87,000 test per million). நாள்தோறும் சென்னையில் மட்டும் 12,000 முதல் 15,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

மொத்த உயிரிழப்பில் மகாராஷ்டிரா, டெல்லியை அடுத்து தமிழகம் 3-ம் இடத்தில் உள்ளது. இந்திய அளவில் டெல்லி 1,37,677 என்கிற எண்ணிக்கையுடன் 4-வது இடத்திலும், கர்நாடகா 1,34,819 என்கிற எண்ணிக்கையுடன் 5-ம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் 92,921 என்கிற எண்ணிக்கையுடன் 6-ம் இடத்திலும், மேற்கு வங்கம் 75,516 என்கிற எண்ணிக்கையுடன் 7-ம் இடத்திலும், தெலங்கானா 66,677 எண்ணிக்கையுடன் 8-ம் இடத்திலும், குஜராத் 63,652 என்கிற எண்ணிக்கையுடன் 9-ம் இடத்திலும், பிஹார் 57,024 என்கிற எண்ணிக்கையுடன் 10-வது இடத்திலும் உள்ளன.

* தற்போது 59 அரசு ஆய்வகங்கள், 63 தனியார் ஆய்வகங்கள் என 122 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 56,698. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 21.5 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 28,37,273. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 3.5 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 58,211. இது .07 சதவீதம் ஆகும்.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 9.6 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 2,63,222.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,609.

* மொத்தம் (2,63,222) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,59,435 பேர் (60.5%) / பெண்கள் 1,03,760 பேர் (39.4%)/ மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் ( .1%).

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,295 (58.7 %) பேர். பெண்கள் 2,314 பேர் (41.2 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,800 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,02,283 பேர் (76.8 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 109 பேர் உயிரிழந்தனர். இதில் 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 86 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 4,241 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 2,176 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழப்புகளில் இளவயது மரண விகிதம் அதிக அளவில் உள்ளன. உயிரிழந்த 109 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 14 பேர் ஆவர். இது 12.8 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர் 5 பேர். இதில் சென்னையைச் சேர்ந்த 8 வயது சிறுமியும், 17 வயது இளைஞரும், மதுரையைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணும் அடக்கம். கரோனாவால் உயிரிழந்ததில் ஆண்கள் 88 பேர் (80.7%). பெண்கள் 21 (19.2%) பேர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 102 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 7 பேர்.

சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 4,588.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 39.1 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 60.9 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 15,657, திருவள்ளூர் 14,750, மதுரை 11,455, காஞ்சிபுரம் 10,095, விருதுநகர் 8,843, தூத்துக்குடி 7,846, திருவண்ணாமலை 6,660, வேலூர் 6,376, திருநெல்வேலி 5,641, தேனி 5,969, ராணிப்பேட்டை 5,852, கன்னியாகுமரி 5,307, கோவை 5,458, திருச்சி 4,517, கள்ளக்குறிச்சி 3,906, சேலம் 3,868, விழுப்புரம் 4,112, ராமநாதபுரம் 3,400, கடலூர் 3,582, தஞ்சாவூர் 3,154, திண்டுக்கல் 3,066 ஆகியவை 3,000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

8 மாவட்டங்களில் மொத்த தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 25 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரையைத் தொடர்ந்து காஞ்சிபுரமும் தொற்று எண்ணிக்கை 5 இலக்க எண்ணிக்கையில் இணைந்துள்ளது. 9 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன. 2 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 13,044 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 6,830 பேர் (52.3%). பெண் குழந்தைகள் 6,214 பேர் (47.6%).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2,17,207 பேர் (82.5%). இதில் ஆண்கள் 1,32,229 பேர். (60.8%) பெண்கள் 84,951 பேர் (39.9 %). மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 32,971 பேர் (12.5%). இதில் ஆண்கள் 20,376 பேர் (61.7%). பெண்கள் 12,595 பேர் (38.3 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/568002-corona-infection-affects-5-609-people-in-tamil-nadu-today-1-021-people-affected-in-chennai-kanchipuram-crossed-10-thousand-7.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 5,063 பேருக்கு கரோனா தொற்று; சென்னையில் 1,023 பேர் பாதிப்பு: 4 நாட்களில் 400-ஐக் கடந்த இறப்பு

corona-infection-affects-5-063-people-in-tamil-nadu-today-1-023-victims-in-chennai-400-deaths-in-4-days  

சென்னை

தமிழகத்தில் இன்று 5,063 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் சென்னையில் 1,023 பேருக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனாவால் உயிரிழப்பு 4 நாட்களில் 400-ஐத் தாண்டியுள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 2.68 லட்சத்தை தமிழகம் கடந்துள்ளது. தமிழகத்தில் மரண எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

5,063 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் 20.2 சதவீதத் தொற்று சென்னையில் (1,023) உள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,63,285-ல் சென்னையில் மட்டும் 1,04,027 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மொத்த தமிழக எண்ணிக்கையில் 39.5 சதவீதம் ஆகும். 2,08,784 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் மொத்த எண்ணிக்கையில் டிஸ்சார்ஜ் சதவீதம் 79.2 சதவீதமாக உள்ளது.

நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் மொத்த எண்ணிக்கை, ஒவ்வொரு நாள் எண்ணிக்கையையும் முறியடித்து 2.68 லட்சத்தை தமிழகம் கடந்துள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் தமிழகம் தொடர்ந்து இருந்து வருகிறது.

தமிழகம் 2.6 லட்சம் தொற்று எண்ணிக்கையைக் கடந்த நிலையில், சென்னையும் ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள், அண்டை மாநிலங்களிலிருந்து தமிழகம் திரும்புவோர் தொற்றுடன் வருகின்றனர். 4 லட்சத்து 93 ஆயிரம் பேர் இதுவரை திரும்பியுள்ளனர். இதில் 5,636 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்து சமநிலையில் உள்ள நிலையில் மாவட்டங்களில் தொற்று கணிசமாக அதிகரித்து வருகிறது. இது தமிழகத்துக்குப் பெரிய சவாலாக உள்ளது. பொதுமக்கள் தங்களைக் கட்டுப்பாடாக வைத்துக்கொள்வதே நோய்த்தொற்றிலிருந்து காக்கும். சென்னையில் தொற்று எண்ணிக்கை குறைந்ததற்கு அதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 28 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 4,93,510.

தமிழகத்தில் உயிரிழப்பு 4,349-ஐ (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) கடந்துள்ளது. உயிரிழந்த 4,349 பேரில் சென்னையில் மட்டுமே 2,202 பேர் (சென்னை மாநகராட்சியில் உயிரிழந்த 444 பேரை இணைத்த அடிப்படையில்) உயிரிழந்துள்ளனர். இன்று சென்னையில் மட்டும் 23 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழக மொத்த எண்ணிக்கையில் தமிழகத்தின் மரண விகிதம் 1.6% ஆக உள்ளது. கடந்த 4 நாட்களாக உயிரிழப்போர் எண்ணிக்கை 400-ஐத் தாண்டியுள்ளது கவலையளிக்கும் ஒன்றாகும்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொள்ள 44 மாதிரி சேகரிக்கும் மையங்கள் மற்றும் 10 நடமாடும் மையங்கள் என மொத்தம் 54 மையங்கள் உள்ளன. இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டுள்ளன, உலக அளவில் பெரு நகரங்களில் அதிக பரிசோதனை மேற்கோண்டதில் பெருநகர சென்னை மாநகராட்சியே முதலிடம்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் 10 லட்சம் நபர்களில் 87,000 நபர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன (87,000 test per million). நாள்தோறும் சென்னையில் மட்டும் 12,000 முதல் 15,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

அகில இந்திய அளவில் தொற்று எண்ணிக்கை வேகமாக அனைத்து மாநிலங்களிலும் பரவி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் வேகவேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய இரண்டு மாநிலங்களும் சென்னை, டெல்லி எண்ணிக்கையை வேகமாகக் கடந்து செல்கின்றன. தென் மாநிலங்களின் மொத்த தொற்று எண்ணிக்கை இந்தியத் தொற்று எண்ணிக்கையில் 36% ஆக உள்ளது. பல மாநிலங்கள் அந்தப் பட்டியலில் சேர்ந்துள்ளன. இதில் அகில உலக அளவில் மகாராஷ்டிரா முதல் பத்து இடத்தில் உள்ள நாடுகளுடன் போட்டியிடுகிறது.

மகாராஷ்டிரா 4.5 லட்சத்தைக் கடந்துவிட்டது. அங்கு 4,50,196 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 6-ம் இடத்திலிருந்த மெக்சிகோவை பின்னுக்குத் தள்ளி 6-ம் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது.

அடுத்த இடத்தில் உள்ள தமிழகம் உலக அளவில் இத்தாலியைப் பின்னுக்குத் தள்ளி 15-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் 2,68,285 என்கிற எண்ணிக்கையுடன் இரண்டாம் இடத்தில் தமிழகம் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் ஆந்திரா 1,66,586 என்கிற எண்ணிக்கையுடன் உலக அளவில் ஈராக்கைப் பின்னுக்குத் தள்ளி 21-வது இடத்தில் உள்ளது.

இந்திய அளவில் கர்நாடகா 1,39,571 என்கிற எண்ணிக்கையுடன் 4-வது இடத்திலும், டெல்லி 1,38,482 என்கிற எண்ணிக்கையுடன் 5-ம் இடத்திலும், உத்தரப் பிரதேசம் 97,362 என்கிற எண்ணிக்கையுடன் 6-ம் இடத்திலும், மேற்கு வங்கம் 78,232 என்கிற எண்ணிக்கையுடன் 7-ம் இடத்திலும், தெலங்கானா 68,946 எண்ணிக்கையுடன் 8-ம் இடத்திலும், குஜராத் 64,685 என்கிற எண்ணிக்கையுடன் 9-ம் இடத்திலும், பிஹார் 59,328 என்கிற எண்ணிக்கையுடன் 10-வது இடத்திலும் உள்ளன.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,040 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரையை அடுத்து காஞ்சிபுரமும் 10 ஆயிரம் என்கிற எண்ணிக்கையைக் கடந்துவிட்டது.

சென்னை, உலக அளவில் இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக எகிப்தைப் பின்னுக்குத் தள்ளி 1,04,027 என்கிற எண்ணிக்கையுடன் 26-வது இடத்தில் உள்ளது.

* தற்போது 60 அரசு ஆய்வகங்கள், 65 தனியார் ஆய்வகங்கள் என 125 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 55,152. இது மொத்த தொற்று எண்ணிக்கையில் 20.5 சதவீதம் ஆகும்.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 28,92,395. இது மொத்த தமிழக மக்கள்தொகையில் 3.6 சதவீதம் ஆகும்.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 55,122. இது .06 சதவீதம் ஆகும்.

* மொத்தம் 100 பேரில் உறுதிப்படுத்தப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 9.1 சதவீதம்.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 2,68,285.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,875.

* மொத்தம் (2,68,285) தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,62,476 பேர் (60.5%) / பெண்கள் 1,05,782 பேர் (39.4%)/ மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் ( .1%).

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,041 (60 %) பேர். பெண்கள் 2,022 பேர் (40 %) பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 6,501 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,08,784 பேர் (77.8 %).

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 108 பேர் உயிரிழந்தனர். இதில் 25 பேர் தனியார் மருத்துவமனையிலும், 83 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 4,349 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 2,202 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழப்புகள் அதிக அளவில் கவலை ஏற்படுத்தும் வண்ணம் உள்ளன. உயிரிழந்த 108 பேரில் 50 வயதுக்கு உட்பட்டோர் 17 பேர் ஆவர். இது 15.7 சதவீதம் ஆகும். 40 வயதுக்கு உட்பட்டவர் 6 பேர். கரோனாவால் உயிரிழந்ததில் ஆண்கள் 80 பேர் (68.3%). பெண்கள் 28 (31.6%) பேர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 99 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 9 பேர்.

சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சென்னையைத் தவிர்த்து மற்ற 36 மாவட்டங்களின் மொத்த எண்ணிக்கை 4,040.

இந்திய அளவில் மும்பை போன்ற சில பெருநகரங்களின் தொற்று எண்ணிக்கைக்கு இணையாக சென்னை செல்கிறது. இன்று தமிழகத்தின் மொத்த நோய்த்தொற்று உள்ளவர்களில் சென்னையில் மட்டும் 39.1 சதவீதத்தினர் உள்ளனர். மற்ற 36 மாவட்டங்களில் 60.9 சதவீதத்தினர் உள்ளனர். மதுரை மாவட்டத்தில் மிக வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் 37 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 15,917, திருவள்ளூர் 15,096, மதுரை 11,487, காஞ்சிபுரம் 10,303, விருதுநகர் 9,269, தூத்துக்குடி 8,035, திருவண்ணாமலை 6,793, வேலூர் 6,526, தேனி 6,261, ராணிப்பேட்டை 5,930, திருநெல்வேலி 5,797, கோவை 5,688, கன்னியாகுமரி 5,435, திருச்சி 4,603, விழுப்புரம் 4,162, கள்ளக்குறிச்சி 4,055, சேலம் 3,931, கடலூர் 3,846, ராமநாதபுரம் 3,449, தஞ்சாவூர் 3,243, திண்டுக்கல் 3,131 ஆகியவை 3,000 எண்ணிக்கைக்கு மேல் உள்ள மாவட்டங்கள் ஆகும்.

8 மாவட்டங்களில் மொத்த தொற்று எண்ணிக்கை 3 இலக்கத்தில் உள்ளன. 25 மாவட்டங்கள் 4 இலக்கத்தில் உள்ளன. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரையைத் தொடர்ந்து காஞ்சிபுரமும் தொற்று எண்ணிக்கை 5 இலக்க எண்ணிக்கையில் இணைந்துள்ளது. 9 மாவட்டங்கள் 500 என்கிற எண்ணிக்கையைத் தாண்டிவிட்டன. 2 மாவட்டங்கள் 500-க்குள் உள்ளன. இன்று தமிழகத்தில் 37 மாவட்டங்களில் தொற்று உறுதியாகியுள்ளது.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 13,276 பேர் (4.9%). இதில் ஆண் குழந்தைகள் 6,963 பேர் (52.3%). பெண் குழந்தைகள் 6,313 பேர் (47.6%).

13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் 2,21,383 பேர் (82.5%). இதில் ஆண்கள் 1,34,731 பேர். (60.8%) பெண்கள் 86,625 பேர் (39.9 %). மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் (.09%).

60 வயதுக்கு மேற்பட்டோர் 33,626 பேர் (12.5%). இதில் ஆண்கள் 20,782 பேர் (61.7%). பெண்கள் 12,844 பேர் (38.3 %).

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/568192-corona-infection-affects-5-063-people-in-tamil-nadu-today-1-023-victims-in-chennai-400-deaths-in-4-days-8.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 5,175 பேருக்குக் கரோனா; பாதிப்பு எண்ணிக்கை 2,73,460 ஆக உயர்வு: சென்னையில் 1,044 பேருக்குத் தொற்று

5-175-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu தமிழகத்தில் கரோனா தொற்று குறித்த இன்றைய நிலவரம்.

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 5,175 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரத்து 460 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 4 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்த இன்றைய (ஆக.5) நிலவரம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

"தமிழகத்தில் இன்று புதிதாக 5,175 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், 3,033 பேர் ஆண்கள், 2,142 பேர் பெண்கள். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரத்து 460 ஆக உயர்ந்துள்ளது. இதில், 1 லட்சத்து 65 ஆயிரத்து 509 பேர் ஆண்கள், 1 லட்சத்து 7 ஆயிரத்து 924 பேர் பெண்கள், 27 பேர் மாற்றுப் பாலினத்தவர்கள்.

இதுவரை பாதிக்கப்பட்டுள்ளவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 13 ஆயிரத்து 520 பேர். 13-60 வயதுடையவர்கள் 2 லட்சத்து 25 ஆயிரத்து 606 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 34 ஆயிரத்து 334 பேர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 61 ஆயிரத்து 166 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக, 29 லட்சத்து 53 ஆயிரத்து 561 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இன்று மட்டும் 59 ஆயிரத்து 156 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக 28 லட்சத்து 45 ஆயிரத்து 406 தனிநபர்களுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று தனியார் மருத்துவமனையில் 28 பேர், அரசு மருத்துவமனையில் 84 பேர் என, மொத்தம் 112 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4,461 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 8 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 104 பேர்.

தமிழகத்தில் இன்று மட்டும் 6,031 பேர் குணமாகி மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 2 லட்சத்து 14 ஆயிரத்து 815 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 54 ஆயிரத்து 184 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

இன்று பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அதிகபட்சமாக சென்னையில் 1,044 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 4 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் சென்னையில் 997 பேர் வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக, 90 ஆயிரத்து 966 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக, 2,227 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11 ஆயிரத்து 811 பேர் (வீட்டுத் தனிமை உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 60 மற்றும் தனியார் சார்பாக 65 என, 125 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன''.

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/568357-5-175-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu-2.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 5684 பேருக்கு தொற்று: சென்னையில் 1091 பேருக்கு பாதிப்பு

corona-infection-affects-people-in-tamil-nadu-today-victims-in-chennai  

சென்னை

5,684 என்கிற மொத்த தொற்று எண்ணிக்கையில் தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,79,144-ல் சென்னையில் மட்டும் 10,6,096 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,21,087 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 42 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 5,07,092.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,593 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 61 அரசு ஆய்வகங்கள், 65 தனியார் ஆய்வகங்கள் என 126 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 53,486.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 30,20,714.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 67,153.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 2,79,144.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,684.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,68,889 பேர் / பெண்கள் 1,10,228 பேர் / மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் .

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,380 பேர். பெண்கள் 2,304 பேர் பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 6,272 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,21,087 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 110 பேர் உயிரிழந்தனர். இதில் 22 பேர் தனியார் மருத்துவமனையிலும், 88 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 4,571 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 2,248 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 104 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 6 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/568537-corona-infection-affects-people-in-tamil-nadu-today-victims-in-chennai-3.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 5,880 பேருக்குத் தொற்று: சென்னையில் 984 பேர் பாதிப்பு: 1000-க்கும் கீழ் குறைந்தது சென்னை

tamil-nadu-corona-bulletin  

சென்னை

தமிழகத்தில் மொத்தம் 5,880 பேருக்கு இன்று கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் முதன்முறையாக தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,85,024-ல் சென்னையில் மட்டும் 1,07,109 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,27,575 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 24 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 5,14,931.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,896 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 61 அரசு ஆய்வகங்கள், 65 தனியார் ஆய்வகங்கள் என 126 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத்துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 52,759.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 30,88,066.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 67,352.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 2,85,024.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,880.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 984.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,72,334 பேர் / பெண்கள் 1,12,663 பேர் / மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் .

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,445 பேர். பெண்கள் 2,435 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 6,488 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,27,575 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 119 பேர் உயிரிழந்தனர். இதில் 41 பேர் தனியார் மருத்துவமனையிலும், 78 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 4,690 ஆக உள்ளது. அதில் சென்னையில் மட்டுமே 2,272 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 115 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 4 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/568738-tamil-nadu-corona-bulletin-3.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 5,883 பேருக்குத் தொற்று: சென்னையில் 986 பேர் பாதிப்பு: 2-வது நாளாக 1000-க்கும் கீழ் குறைந்தது சென்னை

tamil-nadu-corona-virus-bulletin  

சென்னை

தமிழகத்தில் இன்று மொத்தம் 5,883 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 2-வது நாளாகத் தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 2,90,907-ல் சென்னையில் மட்டும் 1,08,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,32,618 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 17 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 5,22,753.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,897 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 61 அரசு ஆய்வகங்கள், 68 தனியார் ஆய்வகங்கள் என 129 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 53,481.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 31,55,619.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 67,553.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 2,90,907.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,883.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 986.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,75,744 பேர்/ பெண்கள் 1,15,136 பேர்/ மூன்றாம் பாலினத்தவர் 27 பேர் .

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,410 பேர். பெண்கள் 2,473 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,043 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,32,618 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 118 பேர் உயிரிழந்தனர். இதில் 37 பேர் தனியார் மருத்துவமனையிலும், 81 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 4,808 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 2,290 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 109 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 9 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/568887-tamil-nadu-corona-virus-bulletin-3.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்தார்கள் என்ற தகவல் தவறானது - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்தார்கள் என்ற தகவல் தவறானது - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 43 மருத்துவர்கள் இறந்ததாக ஒரு தகவல் அண்மையில் வெளியானது. அந்த தகவல் குறித்து மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று செய்தியாளர் சந்திப்பில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் இறந்ததாக கூறப்படும் தகவலை இந்திய மருத்துவசங்கத்தின் தமிழக தலைவர்  மறுப்பு தெரிவித்துள்ளார். ஆதலால், சமூக வலைத்தளங்களில் ஆதாரமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம். கொரோனா தடுப்பு பணிகளில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும், ' கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 18 சதவீதம் பேர் மட்டுமே தற்போது மருத்துவமனை சிகிச்சைகளில் உள்ளனர். மீதம் உள்ளவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

சிகிச்சை பெற்று வருபவர்களில் 80 முதல் 90 சதவீதம் பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சென்னையில், கொரோனா தொற்றானது வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா மரண எண்ணிக்கையில் எதுவும் மறைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/09145842/In-TamilNadu-43-Physicians-The-information-that-they.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்குக் கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 2,96,901 ஆக அதிகரிப்பு; சென்னையில் 989 பேருக்குத் தொற்று

5-994-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu தமிழகத்தில் கரோனா தொற்று குறித்த இன்றைய நிலவரம்.

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 5,994 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் அதிகபட்சமாக 989 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இன்றைய (ஆக.9) கரோனா தொற்று நிலவரம் குறித்து தமிழக பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள விவரம்:

''தமிழகத்தில் இன்று புதிதாக 5,994 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், ஆண்கள் 3,503 பேர். பெண்கள் 2,489 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 2 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆண்கள் 1 லட்சத்து 79 ஆயிரத்து 247 பேர். பெண்கள் 1 லட்சத்து 17 ஆயிரத்து 625 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 29 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 14 ஆயிரத்து 605 பேர். 13-60 வயதுடையவர்கள் 2 லட்சத்து 44 ஆயிரத்து 934 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 37 ஆயிரத்து 362 பேர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 186. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 32 லட்சத்து 25 ஆயிரத்து 805.

இன்று மட்டும் கரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 68 ஆயிரத்து 179. இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 9,708.

தமிழகம் முழுவதும் இன்று 6,020 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக, 2 லட்சத்து 38 ஆயிரத்து 638 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 34 பேர் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 85 பேர் என 119 பேர் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 4,927 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் இணை நோய்கள் அல்லாதவர்கள் 16 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 103 பேர்.

இன்று கரோனா பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 989 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட 11 ஆயிரத்து 654 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 9,117 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமாக, 95 ஆயிரத்து 161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக 2,302 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் தற்போது 53 ஆயிரத்து 336 பேர் (தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 61, தனியார் சார்பாக 68 என மொத்தம் 129 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன''.

இவ்வாறு தமிழக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/569036-5-994-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu-2.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் திரையுலக முன்னணி தயாரிப்பாளர் மரணம்!

famous-producer-v-swaminathan-dies-of-covid19.jpg?189db0&189db0

 

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த முன்னணி தயாரிப்பாளர் வி.சுவாமிநாதன் (67-வயது) சிகிச்சை பலனின்றி இன்று (10) காலமானார்.

தமிழ்த் திரையுலகில் முன்னணித்தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று தான் லட்சுமி மூவி மேக்கர்ஸ். கே.முரளிதரன், வி.சுவாமிநாதன் மற்றும் ஜி.வேணுகோபால் என மூவர் இணைந்து இந்தத் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தனர்.

1994ம் ஆண்டு வெளியான அரண்மனை காவலன் படத்தின் மூலம் லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத் தயாரிப்பில் இறங்கியது. “கோகுலத்தில் சீதை, பிரியமுடன், எனக்காக எல்லாம் உனக்காக, உன்னைத் தேடி, பகவதி, அன்பே சிவம், புதுப்பேட்டை” உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளது.

இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான சகலகலா வல்லவன் படத்தைத் தயாரித்து வெளியிட்டது.

இந்நிலையிலேயே கொரோனா தொற்றுக்கு உள்ளான தயாரிப்பாளர் சுவாமிதான் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். தமிழ்த் திரையுலகில் நிகழ்ந்த முதல் கொரோனா மரணம் இதுவாகும்.

 

https://newuthayan.com/தமிழ்-திரையுலக-முன்னணி-த/

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 5,914 பேருக்குக் கரோனா: மொத்த பாதிப்பு 3 லட்சத்தைக் கடந்தது; சென்னையில் 976 பேருக்குத் தொற்று

tamil-nadu-corona-bulletin  

சென்னை

தமிழகத்தில் இன்று மொத்தம் 5,914 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 3,02,815-ல் சென்னையில் மட்டும் 1,10,121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,44,675 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 35 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 5,40,175.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,938 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 61 அரசு ஆய்வகங்கள், 69 தனியார் ஆய்வகங்கள் என 130 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 53,099.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 32,92,958.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 67,153.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 3,02,815.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,914.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 976.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,82,779 பேர்/ பெண்கள் 1,20,007 பேர் மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் .

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,532 பேர். பெண்கள் 2,382 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 6,037 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,44,675 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 114 பேர் உயிரிழந்தனர். இதில் 34 பேர் தனியார் மருத்துவமனையிலும், 80 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 5,041 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 2,327 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 105 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 9 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/569217-tamil-nadu-corona-bulletin-3.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 5,834 பேருக்குக் கரோனா: சென்னையில் 986 பேருக்குத் தொற்று

corona-bulletin-in-tamil-nadu  

சென்னை

தமிழகத்தில் இன்று மொத்தம் 5,834 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 3,08,649-ல் சென்னையில் மட்டும் 1,11,054 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,50,680 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 20 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 5,48,747.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,848 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 61 அரசு ஆய்வகங்கள், 70 தனியார் ஆய்வகங்கள் என 131 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 52,810.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 33,60,450.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 67,492.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 3,08,649.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,834.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 986.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,86,156 பேர்/ பெண்கள் 1,22,464 பேர் மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் .

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,377 பேர். பெண்கள் 2,457 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 6,005 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,50,680 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 118 பேர் உயிரிழந்தனர். இதில் 47 பேர் தனியார் மருத்துவமனையிலும், 71 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 5,159ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 2,350 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 107 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 11 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/569372-corona-bulletin-in-tamil-nadu-3.html

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 5,871 பேருக்குக் கரோனா: சென்னையில் 993 பேருக்குத் தொற்று

corona-bulletin-in-tamil-nadu  

சென்னை

தமிழகத்தில் இன்று மொத்தம் 5,871பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 1000-க்குக் கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 3,14,520-ல் சென்னையில் மட்டும் 1,12,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,56,313 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 27 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 5,56,298.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4,878 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 61 அரசு ஆய்வகங்கள், 72 தனியார் ஆய்வகங்கள் என 133 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 52,929.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 34,32,025.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 71,575.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 3,14,520.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,871.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 993.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,89,677 பேர்/ பெண்கள் 1,24,814 பேர் மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் .

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,521 பேர். பெண்கள் 2,350 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,633 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,56,313 பேர்.

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 119 பேர் உயிரிழந்தனர். இதில் 41 பேர் தனியார் மருத்துவமனையிலும், 78 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 5,278 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 2370 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 107 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 12 பேர்.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/569531-corona-bulletin-in-tamil-nadu-3.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று 5,890 பேருக்குக் கரோனா: சென்னையில் 1,187 பேருக்குத் தொற்று

corona-bulletin-in-tamil-nadu  

சென்னை

தமிழகத்தில் இன்று மொத்தம் 5,890 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மீண்டும் தொற்று எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது.

தமிழகத்தின் மொத்த எண்ணிக்கை 3,26,245 -ல் சென்னையில் மட்டும் 1,14,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,67,015 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று மட்டும் வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வந்தவர்களில் 25 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்தபின் அண்டை மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து விமானம், ரயில், சாலை மார்க்கமாக வந்தவர்கள் இன்றைய தேதி வரை மொத்த எண்ணிக்கை 5,75,823.

இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 4703 பேருக்குத் தொற்று உள்ளது. இதில் சென்னையைத் தவிர வேறு சில மாவட்டங்களிலும் நான்கு இலக்கத்தில் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

* தற்போது 61 அரசு ஆய்வகங்கள், 73 தனியார் ஆய்வகங்கள் என 134 ஆய்வகங்கள் உள்ளன.

இந்த நிலையில் பொது சுகாதாரத் துறை தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று வெளியிட்ட அறிவிப்பு:

* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 53,716.

* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 35,69,453.

* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 70,153.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 3,26,245.

* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 5,890.

* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 1,187.

* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 1,96,744 பேர் பெண்கள் 1,29,472 பேர் மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் .

* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 3,518 பேர். பெண்கள் 2,372 பேர்.

* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 5,556 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 2,67,015 பேர் .

* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 117 பேர் உயிரிழந்தனர். இதில் 34 பேர் தனியார் மருத்துவமனையிலும், 83 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 5,514 ஆக உள்ளது. இதில் சென்னையில் மட்டுமே 2,408 பேர் உயிரிழந்துள்ளனர்.

முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் 105 பேர், எவ்விதப் பாதிப்பும் இல்லாதவர்கள் 12 பேர்''.

இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

https://www.hindutamil.in/news/tamilnadu/569925-corona-bulletin-in-tamil-nadu-3.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இன்று புதிதாக 5,950 பேருக்குக் கரோனா: பாதிப்பு எண்ணிக்கை 3,38,055 ஆக அதிகரிப்பு; ஒரே நாளில் 125 பேர் உயிரிழப்பு

5-95-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu தமிழகத்தில் கரோனா தொற்று குறித்த இன்றைய நிலவரம்

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 5,950 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று குறித்து இன்றைய (ஆக.16) நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

தமிழகத்தில் இன்று புதிதாக 5,950 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 3,585 பேர். பெண்கள் 2,365 பேர்.

தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்து 38 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆண்கள் 2 லட்சத்து 3,838 பேர். பெண்கள் 1 லட்சத்து 34 ஆயிரத்து 188 பேர். மாற்றுப்பாலினத்தவர்கள் 29 பேர்.

இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 16 ஆயிரத்து 385 பேர். 13-60 வயதுடையவர்கள் 2 லட்சத்து 78 ஆயிரத்து 903 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 42 ஆயிரத்து 767 பேர்.

தமிழகத்தில் இன்று பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 70 ஆயிரத்து 450. இதுவரை பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 37 லட்சத்து 11 ஆயிரத்து 246.

தமிழகத்தில் இன்று மட்டும் 68 ஆயிரத்து 444 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 35 லட்சத்து 81 ஆயிரத்து 939 தனிநபர்களுக்குக் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று தனியார் மருத்துவமனைகளில் 39 பேரும், அரசு மருத்துவமனைகளில் 86 பேரும் என 125 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5,766 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 17 பேர். ஏற்கெனவே இணை நோய்கள் உள்ளவர்கள் 108 பேர்.

இன்று மட்டும் 6,019 பேர் மருத்துவமனைகளிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக, 2 லட்சத்து 78 ஆயிரத்து 270 பேர் வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 54 ஆயிரத்து 19 பேர் (தனிமைப்படுத்துதல் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

இன்று கரோனா பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 1,196 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 650 ஆக உயர்ந்துள்ளது. இன்று 1,009 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 2,698 பேர் வீடு திரும்பியுள்ளனர். இன்று 22 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 2,454 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 11 ஆயிரத்து 498 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 62 மற்றும் தனியார் சார்பாக 73 என மொத்தம் 135 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

https://www.hindutamil.in/news/tamilnadu/570227-5-95-more-persons-tests-positive-for-corona-virus-in-tamilnadu-2.html

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்  1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
    • பிற்சேர்க்கை III வெஸ்டேர்ன் மெடிசின் Vs வெதமாத்தையா  அடுத்த பாகத்தை கொடுக்க பிந்தியமைக்கு மன்னிக்கவும். படங்களை போட்டது திரியை எழுத்தில் இருந்து படங்கள் நோக்கி திருப்பி விட்டது. ————— இலங்கை போவதில் ஒரு வசதி - கொஞ்சம் காசை செலவழித்து ஒரு புல் மெடிக்கல் செக்கப் செய்துகொண்டு வரலாம். அதுவும் நவலோக்க, டேர்டன்ஸ், ஆசிரி, லங்கா ஹொஸ்பிட்டல் போன்ற முதல் தர வைத்தியசாலைகளிலேயே £230 க்குள் ஒரு டோட்டல் மெடிக்கல் செக்கப்பை செய்துகொள்ளலாம்.. முன்னர் ஒரு காலம் இருந்தது யூகே NHS என்றால் உலகிற்கே முன்மாதிரி, ஆனால் இப்போ அப்படி இல்லை. எல்லாம் 14 வருட வலதுசாரி மகாராசாக்களின் ஆட்சி தந்த “முன்னேற்றம்”. இப்போதெல்லாம் ஜீ பி யிடம் அப்பாயின்மெண்ட் வாங்குவதை விட நோயில் சாகலாம் என்ற நிலை. அப்படியே ஜி பி யை சந்திக்க முடிந்தாலும், அவர் refer பண்ணி ஒரு ஸ்கான் எடுப்பதற்குள் சித்திரகுப்தன் சீட்டை கிழிக்க ரெடியாகி விடுவார். அத்தோடு இலவசம் என்பதால் கண்ட மாதிரி speculative டெஸ்டுகளும் எடுக்க refer பண்ண மாட்டார்கள். முதலில் தண்ணீர் குடியுங்கள், ரெஸ்ட் எடுங்கள் என்றே சொல்லி அனுப்புவார்கள். ஆகவே உடனடி கவனிப்பு தேவை எனில், ஒன்றில் கணிசமான அளவு பணத்தை கட்டி யூகேயில் தனியார் ஹெல்த் இன்சூரன்ஸ் எடுத்து வைக்க வேண்டும்.  அல்லது….இலங்கை அல்லது இந்தியா (பல்லு கட்ட போலந்து, துருக்கி) போன்ற நாடுகளுக்கு போய் இப்படி ஒரு செக்கப்பை செய்து வரலாம். இந்த ரிப்போர்ட்டுகள் எல்லாம் எடுக்க ஒரு நாள் செலவாகும். பின்னர் இதை வைத்து ஒரு கன்சல்டண்டுடன் உங்களுக்கு அப்பாயின்மெண்ட்டும் தருவார்கள். இதில் நன்மை என்னவென்றால் - இந்த டெஸ்டுகளில் ஏதாவது கோளாறாக கட்டினால் - அதை நேரடியாக இங்கே ஜி பி யிடம் காட்டும் போது - நோயின் தார்பரியம் அறிந்து வேலை கட…. கட…. என நடக்கும். எனக்கு தெரிந்த சிலர் முன்பே இவ்வாறு செய்திருந்தாலும், இதுவரை நான் செய்ததில்லை. இந்த முறை வயதும் 45 இன் அடுத்த பக்கத்துக்கு போய் விட்டதாலும், கடந்த 3 வருடத்தில் ஜி பி க்கள் தந்த அனுபவத்தினாலும் - ஒரு டெஸ்டை செய்ய முடிவு செய்தேன். இந்தியா போல் அல்லாது, இலங்கையில் health tourism த்தின் பெறுமதி இன்னும் வடிவாக அறியப்படவில்லை. விலைகளும் உள்ளூர் ஆட்களை குறிவைத்தே உள்ளன (வடை, கொத்து, சிகிரியா டிரிக்ஸ் இன்னும் இங்கே வரவில்லை).  ஒவ்வொரு ஆஸ்பத்திரியும், பல வகை வகையான packages வைத்திருக்கிறார்கள்.  ஒன்றிற்கு மூன்றாக தெரிந்த வைத்தியர்களிடம் கதைத்து - ஒரு package ஐ நானும் ஒரு முண்ணனி வைத்தியசாலையில் தெரிந்து கொண்டேன். டெஸ்ட் எடுக்கும் நாள் அதிக நிகழ்வுகள் இன்றி கழிந்தது. ஒவ்வொரு உடல் பகுதிக்குமுரிய இடத்துக்கு அந்த டெஸ்டுக்காக போகும் போது, அவை உள்ளூர் வாசிகளால் நிரம்பியே இருந்தது. எந்த நாட்டிலும், எந்த நிலையிலும் உணவுக்கு அடுத்து நல்ல பிஸினஸ் மருத்துவம் என்பது புரிந்தது. எல்லாம் முடிந்து கன்சல்டேசன் போனால் -கன்சல்டன் - எடுத்த எடுப்பிலேயே எந்த நாடு என்று கேட்டார் - டாக்டரிடம் பொய் சொல்ல கூடாதாமே? ஆகவே எனது “யாழ்பாணம்/மாடகளப்பு/வன்னி/இந்தியா” உத்தியை கைவிட்டு யூகே என உண்மையை சொன்னேன். கண்ணாடிக்கு மேலால் ஒரு பார்வை பார்த்து விட்டு, நான் அங்கேதான் மேற்படிப்பு படித்தேன், “இப்படி ஒரு முழுமையான டெஸ்டை அங்கே உன்னால் செய்யவே முடியாது அல்லவா”, என அவருக்கு ஏலவே தெரிந்த விடயத்தை என்னிடம் உறுதி செய்தார். என்ன இருந்தாலும் என் குஞ்சல்லவா? விட்டு கொடுக்க முடியாதே? ஆம், ஆனால் இங்கும் அரச வைத்தியசாலையில் இப்படி ஒரு முழுமையான டெஸ்டை செய்யமாட்டீர்கள்தானே என்றேன். உனக்கு வாயில் கொலஸ்டிரோல் கூட என்பதை போல் ஒரு பார்வை பார்த்து விட்டு, ரிப்போர்ட்டுக்கான வியாக்கியானத்தை ஆரம்பித்த வைத்தியர். 40 நிமிட கன்சல்டேசனின் பின், ஏலவே தெரிந்த விடயங்களை தவிர வேறு ஏதும் கோளாறு இல்லை என்பது நிம்மதியாக இருந்தாலும்…. இவ்வளவு செலவழித்துள்ளேனே…ஒன்றும் இல்லையா என இன்னொரு மனம் மொக்குத்தனமாய் ஒரு கணம் சிந்திக்கவும் செய்தது🤣. கடைசியாக…எனி அதர் குவெஸ்சன்ஸ் க்கு வைத்தியர் வர, என் நெடுநாள் உபாதையான சயாடிக்கா கால் வலியை பற்றி சொன்னேன். அக்கம் பக்கம் பார்த்த வைத்தியர், மெல்லிய குரலில் “இதுக்கு இங்கே உள்ள வெதமாத்தையாதான் சரி” என கூற, யாரையாவது ரெக்கெமெண்ட் பண்ண முடியுமா என நான் அவரை விட மெல்லிய குரலில் கேட்டேன். கன்சல்டேசன் அறையை விட்டு கிளம்பும் போது எனது போனில் ஒரு பிரபல வெதமாத்தையாவின் தொடர்பிலக்கமும், விலாசமும் சேமிக்கப்பட்டிருந்தது. ———————- ஆவலோடு காத்திருங்கள்! பிற்சேர்க்கை IV வெதமாத்தையாவும் ஆவா குரூப்பும்
    • 1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது.  யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார்.  வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார்.  நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார்.  ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’  பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார்.  ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
    • "மாற்றம்" [யாழ்ப்பாணத்து மருத்துவ மாணவனின் கதை]   துடிப்பான நகரமான யாழ்ப்பாணத்தில், இலங்கையின் வடபகுதியில், பரபரப்பான தெருக்களுக்கும், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் [கடற்காயல் அல்லது வாவி] அமைதியான கடற்கரைக்கும் நடுவே, குறளரசன் என்ற இறுதியாண்டு மருத்துவ மாணவர் வாழ்ந்து வந்தான். தீவின் வரலாற்றில் வேரூன்றிய நீண்ட பரம்பரையுடன் ஒரு தமிழ் குடும்பத்தில் பிறந்த குறளரசன், பல நூற்றாண்டுகளின் பாரம்பரியத்தின் எடையையும் 'மாற்றத்திற்காக' ஏங்கும் மக்களின் அபிலாஷைகளையும் [ஏக்கம் கலந்த எதிர்பார்ப்பையும்] தனக்குள் சுமந்தான். குறளரசன் மருத்துவம் படிக்கும் மாணவன் மட்டுமல்ல; அவன் தனது தமிழ் சமூகத்தின் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்திற்காக ஒரு தீவிர சமூக உழைப்பாளியாகவும் இருந்தான். தமிழரின் வாழ்வில் ஏற்பட்ட பின்னடைவுகள் மற்றும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போராட்டத்தின் வரலாற்று கதைகளிலும் மற்றும் இன்று நடைபெறும் அரசியல் அழுத்தங்களிலும் வளர்க்கப்பட்ட அவன், ஒரு அரசியல் 'மாற்றம்' தேவை என்பதை விரும்பியது  மட்டுமல்ல, தனது மக்களின் வாழ்வு மற்றும் செழிப்புக்கு அது இன்றியமையாதது என்றும்  நம்பினான். குறளரசன் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம், இலங்கை வாழ் தமிழ் இளைஞர்களின், சமூகத்தின்  நம்பிக்கையின் விளக்காக நின்றது. இங்குதான் சிங்கள வம்சாவளியைச் சேர்ந்த, அனுராதபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட,  முதலாம் ஆண்டு மருத்துவ மாணவியான ருவனிக்காவை [Ruwanika] அவன் முதல் முதல் சந்தித்தான். அவர்களின் நட்பு இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டி ஆழமான ஒன்றாக மலர்ந்தது. ஆனால் அவர்களின் பாசத்தின் அரவணைப்பில் கூட, குறளரசனால் அவர்களது சமூகத்தை ஆட்கொண்ட ஆழமான வேரூன்றிய பிளவுகளின் நிழலை மறக்க  முடியவில்லை. அவன் அதில் உறுதியாக நின்றான்.  குறளரசன் தனது படிப்பில் ஆழமாக இருந்தாலும், தன் இலங்கை மக்களின் வரலாற்றை சரியாக அறிவதிலும் முழுமையாக தன் கவனத்தை செலுத்தினான். தமிழ் சிறுபான்மை யினருக்கும் சிங்கள பெரும்பான்மை அரசாங்கத்திற்கும் இடையிலான உறவில், அரசாங்க தலைவர்களால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளையும், பின் அவ்வாற்றில் முக்கியமான ஒன்றையேனும் நிறைவேற்றாமல் உடைக்கப்பட்டு கிடங்கில் போட்டத்தையும் மற்றும் ஒவ்வொரு முறையும் தமிழர்களின் சுதந்திரம், கல்வி, உரிமைகள், காணிகள், வழிபாடுகள் மேலும் மேலும் பறிக்கப்படத்தையும், மறுக்கப்படத்தையும் அதனால் ஏற்பட்ட விளைவுகளையும் தொல்லைகளையும்  சிதைந்த கனவுகளையும் பற்றி அவன் அடிக்கடி சிந்தித்தான். 1957 பண்டாரநாயக்கா - செல்வநாயகம் உடன்படிக்கையில் இருந்து தொடர்ந்து பல தசாப்தங்களில் அரசியலமைப்பு சீர்திருத்தத்திற்கான தோல்வியுற்ற முயற்சிகள் வரை, குறளரசன் காட்டிக்கொடுப்பு மற்றும் ஏமாற்றங்களின் தொடர்ச்சிகளைக் கண்டான்.  ஆனாலும், விரக்தியின் மத்தியில், புத்தரின் உண்மையான போதனைகளில் குறளரசன் ஆறுதல் கண்டான். ஞானம் பெற்றவர் போதித்த இரக்கம், சகிப்புத்தன்மை, புரிதல் ஆகிய கொள்கைகளை அவன் நம்பினான். இனம் மற்றும் மதத்தின் தடைகளைத் தாண்டி, இந்த விழுமியங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் ஒரு சமூகத்திற்காக அவன் ஏங்கினான். நீண்ட காலமாக தனது மக்களை ஒடுக்கிய ஒரு மகாவம்சம் என்ற புராண கதையின் கனத்துடனும் போராடினான். குறிப்பாக புத்த சமயத்தை போதிக்கும் துறவிகள், உண்மையில் இலங்கையில் முறையாக பின்பற்றுகிறார்களா என்று தனக்குத் தானே கேள்வி கேட்டான்?   மகாவம்சம், பாளி மொழியில் எழுதிய, புத்தமதத்தை முன்னிலைப்படுத்திய வரலாற்றின் புராணக் கதையாகும். மகாவிஹரா துறவிகள் கி பி 5ம் அல்லது கி பி 6ம் நூற்றாண்டில், புத்த மதத்தை பின்பற்றும் அரசனின் ஆதரவுடன், புத்த மதத்தை பின்பற்றும் வெவேறு இனக்குழுக்களை ஒருங்கிணைத்து ஒரு இனமாக, புராண விஜயனை பின்பற்றுபவர்களாக, சிங்கத்தின் வழித்தோன்றலாக, உருவாக்க முன், இலங்கையில் ஒரு சிங்கள இனம் என்று ஒன்றும் இருக்கவில்லை என்பது வரலாற்று உண்மையாகும். அதனை  முதல் வில்ஹெய்ம் கெய்கர் பாளி மொழியில் இருந்து ஜெர்மன் மொழிக்கும் பின்னர், 1912ல் ஆங்கிலத்திற்கும் மொழிப்பெயர்ப்பு செய்தனர், அதன் பின்பு தான் சிங்கள மொழிபெயர்ப்பு வந்தது, அதுவரை இலங்கையில் சிங்கள - தமிழ் வேறுபாடுகிடையாது, அதன் பின் தமிழருக்கு எதிரான கருத்துக்கள் தீவின் மீது நீண்ட நிழலைப் போட்டு இன்றைய நிலைக்கு இட்டுச் சென்றது. எனவேதான் குறளரசன் மற்றும் தமிழ் சமூகத்திற்கு, மகாவம்சம் ஒரு வரலாற்று புராண நூல் மட்டுமல்ல; அது ஒடுக்கு முறைக்கான ஒரு கருவி, ஓரங்கட்டப்படுதல் மற்றும் பாகுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப் பட்ட ஆயுதம் ஆக அது தென்பட்டது, அதனால் தான் பொய்யான புராண கதையில் இருந்து உண்மையான தொல்பொருள் மற்றும் வரலாறுச் சான்றுகள் கூடிய இலங்கை வரலாறு 'மாற்றம்' காணவேண்டும், உண்மையின் அடிப்படையில், இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் பேசி வாழும் இலக்கை தமிழர்களின் மேல் அரசு கொண்டு இருக்கும் நிலையில் 'மாற்றம்' வேண்டும், எல்லாவற்றுக்கும் மேலாக புத்தரின் போதனைகளை போதிப்பவர்கள், அவர் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைக்கும்  'மாற்றம்' தேவைப்படுகிறது. இந்த மூன்று மாற்றங்களையும் தான் குறளரசன் காணத் துடித்தான்.   சிறுவயதிலிருந்தே, மகாவம்சத்தின் உண்மைத் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் பல வரலாற்று உண்மைகளை கற்றுக் கொண்டான், உண்மையை மறைக்கும் கட்டுக்கதைகள் மற்றும் பிரச்சாரத்தின் அடுக்குகளையும் அது முன்வைக்கும் ஆபத்தான முறையில் தவறாக வழிநடத்தும், வெறும் பக்கச்சார்பான விவரிப்புகளையும் அறிந்தான். இது சிங்கள புத்த  தலைமுறைகளின் மனதை விஷமாக்கும் பொய்கள் என்பதை அவன் உண்மையான சான்றுகளுடன் அறிந்தான். அதனால்த் தான் 'மாற்றம்' உடனடியாகத் தேவை என்கிறான்!  ஆனால் மகாவம்சத்தின் வஞ்சகத்தால் பாதிக்கப்பட்டது தமிழர்கள் மட்டும் அல்ல. இந்த வரலாற்று சூழ்ச்சிக்கு சிங்கள சாமானிய மக்களும் எப்படி பலியாகினர் என்பதை குறளரசன் இலங்கையின் இன்றைய நிகழ்வுகளில் நேரில் கண்டான். மற்ற சமூகங்களின் பங்களிப்புகள் மற்றும் இருப்பை அழிக்கும் அரசியல் மற்றும் மத தலைவர்களின் செயல்களில்! அது தான் 'மாற்றத்துக்காக' ஏங்குகிறான்!  புத்தர், ஞானம் பெற்றவர், இரக்கம் மற்றும் அகிம்சையின் செய்தியைப் போதித்தார், ஆனால் அவரது போதனைகள் அதிகாரத்தில் இருப்பவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு சேவை செய்ய திரிக்கப்பட்டன. உலகளாவிய அன்பு மற்றும் புரிதல் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட ஒரு மதம், மற்றவர்களை ஒதுக்கி வைப்பதையும் ஒடுக்குவதையும் நியாயப்படுத்த எப்படி இன்று ஒத்துழைக்கப்பட்டது என்று குறளரசனால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. குறளரசனும் ருவனிக்காவும்  தங்களின் உறவின் சிக்கல்களை சிலவேளை எதிர் கொள்ளவேண்டி இருந்தது. அவர்கள் தங்களைச் சுற்றியுள்ள தப்பெண்ணங்கள் மற்றும் பாரபட்சங்களை அடிக்கடி எதிர்கொண்டனர். கடந்த காலத்தின் பாவங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டு, திருத்தப்பட்டு, மன்னிப்பு கேட்டு, அனைத்து சமூகங்களும் நல்லிணக்கத்துடனும், பரஸ்பர மரியாதையுடனும் இணைந்து வாழக்கூடிய எதிர்காலத்தை, இவ்வாறான அதி முக்கிய 'மாற்றத்தை' இருவரும் எதிர் பார்த்தனர்.  "இருஇனம் வாழும் ஒரு நாட்டில்  இருக்கையை பிடுங்கி எடுத்து தனதாக்கி இறுமாப்புடன் வரலாற்றையும் திருத்தி எழுதி இதயமற்று நசுக்குவது பெருமை அல்ல? "  "இச்சை படுத்துவதை உணர்ந்து நிறுத்தி  இணக்கம் கண்டு இதயம் பரிமாறி  இன்று நேற்று செய்த அநியாயங்களுக்கு  இனியாவது மன்னிப்பு கேள் நாடுமுன்னேறும்! " இந்த 'மாற்றம்' தான் அவன் சுருக்கமாக எதிர்பார்ப்பது. எது எப்படியானாலும்,  அவர்களின் காதல் ஒரு இணக்கமான சகவாழ்வு சாத்தியம் என்பதற்கு ஒரு சான்றாக இருந்தது, கருத்து வேறுபாடு இலங்கையில் நிலவினாலும், அவர்களின் வாழ்க்கை என்ற கடலில், நம்பிக்கை கலங்கரை விளக்காக இருந்தது. வருடாந்த ஜெனிவா தலையீடுகள் குறளரசனுக்கும் அவரது சமூகத்திற்கும் ஒரு நம்பிக்கையை அளித்தன. இலங்கையில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் அமைப்பு ரீதியான அநீதிகளுக்கு தீர்வு காண சர்வதேச சமூகம் இங்குதான் கூடுகிறது. குறளரசன் அர்த்த முள்ள 'மாற்றத்திற்காகவும்', தனது கடமைகளை மதிக்கும் மற்றும் அனைத்து குடிமக்களின் கண்ணியத்தை நிலைநிறுத்தும் ஒரு அரசாங்கத்திற்காகவும் உருக்கமாக பிரார்த்தனை செய்தான். அவனுடன் அவனின் காதலி ருவனிக்காவும்  இணைந்து கொண்டாள். என்றாலும் குறளரசனும் ருவனிக்காவும் பாவத்தில் இருந்து இலங்கையை மீட்பதற்கான பாதை தடைகள் நிறைந்தது என்பதை உணர்ந்தனர். மேலும் 'மாற்றம்' எளிதில் வராது என்பது  குறளரசக்குத் தெரியும். அறியாமை மற்றும் தப்பெண்ணத்தின் தூக்கத்திலிருந்து ஒரு நாள் முழு சமூகமும் விழித்து, கடந்த கால தவறுகளை உணர்ந்து, நல்லிணக்கம் மற்றும் நீதியை நோக்கி ஒரு புதிய பாதையை உருவாக்குமா? அல்லது அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் கண்ணியத்தையும் அங்கீகரிக்கும் அதிகாரங்களை கட்டாயப்படுத்த சர்வதேச சமூகத்தின் இடைவிடாத அழுத்தம் தேவைப்படுமா?. அவன் மனம் அலை பாய்ந்தது. இந்த கவலையிலும், மற்றும் படிப்பாலும், அவன் சிலவேளை தனிமையை விரும்பினான். இதனால் அவன் ருவனிக்காவை சந்திப்பதும் குறையத் தொடங்கியது. இது அவளுக்கு ஒரு தவிப்பைக் கொடுத்தது.  ஒரு நாள் அவள், அவனின் காதில் விழக்கூடியதாக தன் தவிப்பை ஒரு சிங்கள பாடலை முணுமுணுத்து எடுத்துக் காட்டினாள். 'සිහිනෙන් වගේ ඇවිදින් ආයෙත් සැගවී හිටියේ කොහෙදෝ? මදකින්  පෙනී නොපෙනී ගියේ මේ ආදරේ හැටිදෝ  ?' 'නෙත සනසනා නුඹගේ සිනා මා රැය පුරා එය සිහි කලා නිදි දෙවු දුවත් අද නෑ ඇවිත් ඈතින් ඉදන් සරදම් කලා.'. 'නෙතු වෙහෙසිලා  දහවල  පුරා නුඹ සොය සොයා සිත දුර ගියා  මදකින්  පෙනී නොපෙනී ගියේ මෙ ආදරේ හැටිදෝ  ?'   குறளரசன் மௌனமாக கண்ணீர் சிந்தி, அதே பாடலை தமிழில் முணுமுணுத்தான். "மீண்டும் வருவாயோ கனவில் அணைப்பாயோ? எங்கே மறைந்தாய் ? எந்தத் தொலைவில் ? திடீரெனத் தோன்றுவாய்? சடுதியாக மறைவாய்? உண்மைக் காதலா?, வெறும் நாடகமா?" "சோர்ந்த கண்களுக்கு புன்னகை தைலம் இரவின் மடியில் முகத்தைக் காண்கிறேன்  இரவுதேவதை என்னைத் தழுவ மறுக்கிறாள்?  தூர விலகி கிண்டல் செய்கிறாள்?." "பகலில் கண்கள் சோர்வு அடையுதே  இதயம் அலைந்து உன்னைத் தேடுதே!  கண்ணுக்குள் அகப்படாதா காதலா இது? கணப்பொழுதில் கடக்கும் கனவின் மகிழ்ச்சியா ?" குறளரசன் தனது மருத்துவப் பயிற்சியின் இறுதி நாட்களை நெருங்கிக் கொண்டிருந்தபோது, அவன் நம்பிக்கைக்கும் விரக்திக்கும் இடையே கிழிந்துக் கொண்டு இருந்தான். முன்னோக்கி, செல்லும் நேரிய பாதை சவால்கள் நிறைந்ததாக இருந்தது, ஆனால் அவன் ஒரு சிறந்த நாளைய கனவுகளை என்றும் கைவிட மறுத்துவிட்டான். கல்வி, சுறுசுறுப்பு மற்றும் அன்பு ஆகியவற்றின் சக்தியை அவன் நம்பினான். பிளவு மற்றும் அவநம்பிக்கையால் பிளவுபட்ட சமூகத்தின் குழப்பங்களுக்கு மத்தியில் அவர்களின் காதல் மலர்ந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக முற்றங்களில் மற்றும் மாலை நேர உலாக்களில் அவர்கள் ஒருவருக்கொருவர் கைகளில் ஆறுதலைக் கண்டார்கள், அவர்களின் காதல் வெளியில் வீசும் புயல்களிலிருந்து ஒரு தற்காலிக அடைக்கலமாக இருந்தது.  "மாலை நேர தென்றல் என்ன பாடுதோ என் மன்னன் எங்கே எங்கே என்று தேடுதோ மஞ்சள் வண்ண வெய்யில் என்று தோணுதோ என் மங்கை மேனி தங்கம் என்று நாணுதோ?" "பூ விரிந்த சோலை என்ன எண்ணுதோ இந்த பூவைப்போல மென்மை இல்லை என்றதோ தங்க நிற கலசம் எடுத்து நடக்கும் தேரோடு பக்கம் வந்து மெதுவாய் பதமாய் இதமாய் உறவாடு?" ஒரு சிங்கள குடும்பத்தின் மகளான ருவனிக்காவுக்கு, குறளரசனை நேசிப்பது என்பது பிறப்பிலிருந்தே அவளிடம் சூழ்நிலை காரணமாக வேரூன்றியிருந்த தப்பெண்ணங்கள் மற்றும் பக்கசார்புககளின் தாக்கங்களை கலையத் தொடங்கியது. குறளரசனின் தமிழ் மக்கள் சமூகத்தின் விளிம்புநிலையில் நலிந்தபோது, எழுபத்தி ஆறு ஆண்டுகளாக, சலுகை மற்றும் அதிகாரத்தால் பயனடைந்த ஒரு சமூகத்தைச் தான் சேர்ந்தவர் என்ற குற்ற உணர்வுடன் அவள் சிலவேளை மல்யுத்தம் செய்தாள். ஆனால் குறளரசனிடம், அவள் ஒரு காதலியாக மட்டுமல்ல, நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஒரு பங்காளியாகவும் இருந்தாள். ஒன்றாக, காதல் இனம் மற்றும் மொழியின் தடைகளைத் தாண்டிய எதிர்காலத்தை கற்பனை செய்யத் துணிந்தனர், அங்கு கடந்த கால பாவங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டு பரிகாரம் செய்யப்பட்டன. அவர்கள் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தின் வாசலில் நிற்கும் போது, குறளரசனும் ருவனிக்காவும் ஒருவரையொருவர் ஒட்டிக்கொண்டனர், அவர்களின் காதல் இருள் கடலில் நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக இருந்தது. ஏனென்றால், அவர்களின் கூட்டணியில், மகாவம்சத்தின் எதிரொலிகள் மௌனமாகி, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் புரிந்துணர்விற்காக அழைப்பு விடுக்கும் குரல்களின் சேர்ந்திசையால் [கோரஸால்] பதிலீடு செய்யப்பட்ட எதிர்காலம் பற்றிய வாக்குறுதி இருந்தது. யாழ்ப்பாணத்தின் மையப்பகுதியில், குழப்பமான கடந்த காலத்தின் எதிரொலிகள் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தின் கிசுகிசுக்களின் மத்தியில், குறளரசன் தனது மக்களுக்கு நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக உயர்ந்து நின்றான். மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றிய அவனது அசைக்க முடியாத நம்பிக்கையில், ஒரு நாள், தமிழர்களின் குரல்கள் கேட்கப்படும், அவர்களின் கனவுகள் நனவாகும், 'மாற்றம்' கட்டாயம் நிகழும் என்ற நம்பிக்கை, மற்றும் இரவீந்தரநாத் தாகூரின் கீதாஞ்சலி பாடல் [“Where the mind is without fear and the head is held high; Where knowledge is free;] அவனின் போராட்டத்தைத் தொடர ஊக்கம் & கொடுத்தது.  வலிமையைக் கொடுத்தது. "இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, அறிவு வளர்ச்சிக்கு எங்கே பூரண விடுதலை உள்ளதோ, குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால் வெளி உலகின் ஒருமைப்பாடு எங்கே  உடைபட்டுத் துண்டுகளாய்ப் போய்விட படவில்லையோ, வாய்ச் சொற்கள் எங்கே மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து வெளிப்படையாய் வருகின்றனவோ, விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி பூரணத்துவம் நோக்கி தனது கரங்களை நீட்டுகிறதோ, அடிப்படை தேடிச் செல்லும் தெளிந்த அறிவோட்டம்  எங்கே பாழடைந்த பழக்கம் என்னும் பாலை மணலில் வழி தவறிப் போய்விட வில்லையோ, நோக்கம் விரியவும், ஆக்கவினை புரியவும் இதயத்தை எங்கே வழிநடத்திச் செல்கிறாயோ,  அந்த விடுதலைச் சுவர்க்க பூமியில் எந்தன் பிதாவே! விழித்தெழுக என் தேசம்!" [கீதாஞ்சலி / தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா] நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.