Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இறந்தவர்களின் உடல்களை கயிறு கட்டி இழுத்து சென்ற கொடூரம்; கவர்னர் கண்டனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறந்தவர்களின் உடல்களை கயிறு கட்டி இழுத்து சென்ற கொடூரம்; கவர்னர் கண்டனம்

இறந்தவர்களின் உடல்களை கயிறு கட்டி இழுத்து சென்ற கொடூரம்; கவர்னர் கண்டனம்

 

மேற்குவங்காள மாநிலத்தில் இறந்தவர்களின் உடல்களை அலட்சியமாக இழுத்துச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கவர்னர் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
பதிவு: ஜூன் 13,  2020 08:34 AM
கொல்கத்தா: 

டெல்லியில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல், குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட நிலையில், தற்போது மேற்குவங்காள மாநிலத்தில் மற்றொரு அவலம் அரங்கேறியுள்ளது. தெற்கு கொல்கத்தாவில்  13 சடலங்களுடன் ஒரு நகராட்சி வேனுக்கு உள்ளூர்வாசிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

உடல்கள் வேனில் இருந்து தகனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போது  கயிறு கட்டி இழுத்து செல்லப்பட்டது. அப்போது துர்நாற்றம் வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உள்ளூர்வாசிகள் தகன வாயிலுக்கு பூட்டு போட்டனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு  இறந்ததாகக் கூறப்படுபவர்களின் உடல்களை ஊழியர் ஒருவர் கழுத்தில் கயிற்றை கட்டி தர, தர இழுத்துச் சென்று அமரர் வாகனத்தில் ஏற்றும் கொடுமையான காட்சியை, ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார்.  

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்று 21 பேரின் உடல்கள் இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு அதிகாரிகளுக்கு மேற்கு வங்க கவர்னர் உத்தரவிட்டுள்ளார். 
இந்த வீடியோவுக்கு  கவர்னர் ஜகதீப் தங்கர்  இறந்த மனித உடல்களை எப்படி இழிவாக நடத்துவது  மனிதகுலத்தை வெட்கப்படச் செய்கிறது என்று அவர் கூறினார்.

அந்த உடல்கள் கொரோனா நோயாளிகளின் உடல்கள் அல்ல, மருத்துவமனை பிண அறையில் உரிமை கோரப்படாத / அடையாளம் காணப்படாத உடல்கள் என்று மேற்கு வங்க சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து போலி செய்தி  பரப்பும் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று கொல்கத்தா காவல்துறை டுவீட் செய்துள்ளது.

கொல்கத்தாவின் முதன்மையான அரசு மருத்துவமனைகளில் ஒன்றான என்.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் நகர காவல்துறை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் "உரிமை கோரப்படாத 14 உடல்களை கொல்கத்தா மாநகராட்சிக்கு மருத்துவமனை ஒப்படைத்து உள்ளது. உடல்கள் கொரோனா வைரஸ் நோயாளிகள் உடல்கள் அல்.ல வீடியோ போலியானது, போலீசார் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறி உள்ளார்.

தற்போது கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷனை நடத்தி வரும் இயக்குநர்கள் குழுவின் தலைவர் ஃபிர்ஹாத் ஹக்கீம், உரிமை கோரப்படாத சடலங்கள் முன்பு தாபா தகன மைதானத்தில் தகனம் செய்யப்பட்டதாக தெளிவுபடுத்தியுள்ளார். ஆயினும், மே 29 முதல், தாபா கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது மற்றும் உரிமை கோரப்படாத உடல்கள் காரியா தகன மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டன என கூறினார்.

 

 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/06/13083404/Search-your-soul-Bengal-Governor-on-video-of-mistreatment.vpf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.